ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படுகிற பிள்ளையான் தனது மூத்த ஆலோசகர் டொக்ரர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கலாநிதி விக்னேஸ்வரன் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகப் பதவி வகித்தவர். கிழக்கிற்கான மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் முதல் மூன்று மாதங்களுக்கு அதன் செயலாராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விக்னேஸ்வரன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பில் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க்pறார். கலாநிதி; விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அவருடைய பதவிக்காலம் நீடிக்கப்படக் கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படு…
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. வவுனியா கண்டி வீதியில் அமைந்திருக்கும் கூட்டுப்படை முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் மும் முனைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் ராடார் உட்பட இராணுவ தளபாடங்கள் சேதமடைந்தன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த கூட்டுப்படை தலைமையகம் இயங்கி வருகிறது. பல நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த முகாமிற்குள்ளே விமானப்படை தளமும் ஓடு பாதையும் உள்ளன. வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது க…
-
- 2 replies
- 1.2k views
-
-
2006 ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 11,000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 4,000 பேரே எஞ்சியுள்ளனர் எனவும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் நான்கு முனைகளில் வன்னிப்பகுதியில் படையினர் முன்னேறுவதாகவும், பூநகரியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு தரைப்பாதை திறப்பதுதான் முக்கிய நோக்கம் எனவும் கூறியுள்ளார்.. கொல்லப்பட்ட சிங்களப் படையினரின் தொகையைக் கூற மறந்துவிட்டார் போலுள்ளது (இன்னமும் எண்ணி முடியவில்லையோ!) 11,000 Tiger cadres killed, 4,000 remain: Army Chief About 11,000 Tiger guerrillas have been killed since the military launched its campaign to secure the Mavil Aru anicut in July…
-
- 10 replies
- 2.7k views
-
-
செப்டம்பர் 13,2008, ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர். சேலம், பழநி, திருவண்ணாமலை, கோவை, மானாமதுரை முகாம்களில் இருந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 13 அகதிகள் செப்.,11 ம் தேதி காலை மண்டபம் வந்தனர். அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்வதற்காக மண்டபம் அண்ணாநகரைச் சேர்ந்த ஏஜென்ட் முருகனை சந்தித்தனர். இவர்களிடம் தலா ஆறாயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட முருகன், மண்டபம் தோனித்துறை கடற்கரையிலிருந்து, இரவு 9 மணிக்கு ஒரு நாட்டுப்படகில் 13 பேரையும் இலங்கைக்கு ஏற்றிச்சென்றார். இரவு முழுவதும் வழி தெரியாமல் நடுக்கடலில்…
-
- 8 replies
- 1.7k views
-
-
பிரி"கேடி"யன் உதய நாணயக்காரனின் மிரட்டல்....... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இந்தியாவுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை போர் முனையில் உள்ள இந்தியர்களை உடனடியாகத் திருப்பியழைக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது அணுகு முறையினை மாற்றவேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர். ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருந்த தமிழக முதல்வர் இனியாவது மௌனத்தை கலைக்கவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் நெல்லைக்கு வந்தார். …
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரச படைகள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வன்னிப்பிரதேசத்தின் மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அனைத்துலக நிறுவனங்களின் வெளியேற்றம் மோசமான செயல் என்று முல்லைத்தீவு மேற்கு பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில் மீன்பிடிப்படகு முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 480 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா வான்படை இடம்பெயர்ந்த மக்கள் மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் உயிரிழ்ந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
இந்தியக் கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் காசி மேடு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த 7 மீனவர்களும் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியாளர், இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதன் பின்னர், இன்று காலை இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e
-
- 0 replies
- 949 views
-
-
படை நடவடிக்கை காரணமாக தென் தமிழீழத்தின் மூதூர் கிழக்கில் உள்ள கட்டைப்பறிச்சான்இ சேனையூர் கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து ஜன்னல்கள்இ கதவுகள்இ ஓடுகள் போன்ற பொருட்களை சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்துச்செல்வதாக மக்கள் முறையிட்டுள்ளனர். குறித்த கிராம சேகவர் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக திருகோணமலை செயலக அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்இ துரைரட்ணசிங்கம் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ வீடுகள் …
-
- 1 reply
- 662 views
-
-
தமிழனத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியிலிருந்து ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியின் மூலம் இது தெளிவாகியுள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றத்திற்கு எதிராக வன்னிச் சிவிலியன்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னிச் சிவிலியன்கள் பல்வ…
-
- 0 replies
- 963 views
-
-
யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீடி.எம்.ஏ.தொலைபேசிச் சேவைகள் பகுதி பகுதியாக வழமைக்குத் திரும்பியிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி பெற்ற சீ.டி.எம்.ஏ.தொலைபேசிப் பாவனையாளர்களின் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டிருப்பதுடன், சில பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலை காணப்படுவதாக குடாநாட்டு மக்கள் கூறுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெறச் செல்லும்போது பொலிஸார் நாட்களை இழுத்தடிப்பதாக சீ.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர் ஒருவர் கூறினார். எந்தவித முன்னறிவுப்புக்களும் இன்றி யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுவந்த சீ.டி.எம்.ஏ.தொலைபேசிகள் யாவும் துண்டிக்…
-
- 1 reply
- 647 views
-
-
யாழ் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு விரைவில் கோரப்படும் - டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மாநகரசபை உள்ளிட்ட சகல உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்த இம்மாதம் வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களைப் பகுதி பகுதியாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகப் பிரச்சார பிரிவுத் தலைவர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 464 views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
யுத்தம் காரணமாகப் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸார் மக்கள் தொடர்பைப் பேண வேண்டியது மிகவும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டில் கௌரவமான பொலிஸ் சேவை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகப் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e
-
- 0 replies
- 571 views
-
-
மொனராகலை காட்டுப் பகுதிகளுக்குச் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவித்துள்ளார். மொனராகலை கொட்டியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த சில பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதுள்ள பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் மொனராகலைக் காட்டுப் பகுதிக்குச் செல்லக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 685 views
-
-
இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்... கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன்…
-
- 74 replies
- 7.8k views
-
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறிலங்காவில் தமிழ் ஈழம் மலரும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. சார்பில் சென்னை வியாசர்பாடியில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எங்களை போல் எந்த கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை. தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். வன்முறை கலாசாரம், கட் அவுட் கலாசாரம், காலில் விழும் கலாச…
-
- 8 replies
- 2.2k views
-
-
கஸ்டத்தை எதிர்நோக்கி உள்ள மிஹின் லங்கா விமான சேவையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக விமான சேவை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். அதேவேளை மிஹின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹேமலால் தல்கஸ்வத்த, இலங்கை பூமிபுத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவர் சரத் சில்வா, விமானப்படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, ஸந்தன லியபட்டபெந்தி, நிதியமைச்சின் சார்பில் கலாநிதி சமரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்…
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கையின் தென் பகுதிகளில் நாணயமாற்று சேவைகளை நடத்தி வருவோர் விடுதலைப்புலிகளின் பணத்தை பெருமளவில் மாற்றம் செய்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் நாணயமாற்றுனர்கள் ஊடாகவே தமக்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. கொழும்புக்கு வரும் விடுதலைப்புலிகள் தமக்குப் பணம் தேவையென கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு அறிவிப்பதுடன், கிளிநொச்சியில் உள்ள புலிகள் வெளிநாட்டில் உள்ள பிரதிநிதி ஊடாக நாணயமாற்றுனர்களுக்கு பணத்தை அனுப்பி, அதனுடாக பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள முஸ்லீம் பதாள உல…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறியிருப்பதானது மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாதிக்கும் அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பு இடங்களையும் இல்லாமல் செய்திருப்பதாக வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறக்கூடாதெனக் கூறி அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திப் பகுதியிலுள்ள யு.என்.எச்.சீ.ஆர். அலுவலகத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மக்கள் வாகனங்கள் எதுவும் வெளியில் செல்லமுடியாதவாறு நுழைவாயிலில் மறியல்களையிட்டு வீதியில் அமர்ந்திருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, வன்…
-
- 0 replies
- 747 views
-
-
வன்னியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம் முன்பாக மக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் பின்னர் அவர்களின் நேற்றைய பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-