ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
http://www.nesohr.org/files/Lest_We_Forget-II.pdf தகவல்களை இலகுவாக கைய்யாள MS Excel வடிவில் http://www.nesohr.org/files/Victims_of_Violence-post_CFA.xls
-
- 0 replies
- 942 views
-
-
வன்னி மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் நெதர்லாந்து நாடாளுமன்றிற்கு முன்பாக, கவனஈர்ப்பு நடவடிக்கை ஒன்றுகூடல் இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் 10ஆம் நாள் பிற்பகல் 2:00 மணியில் இருந்து 4:00 மணிவரை டென்ஹாக்கிலுள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காப்பாற்றுமாறு கூடிக்குரல் கொடுக்க அனைத்து மக்களையும் அணி திரளுமாறு, நெதர்லாந்து தமிழ் பெண்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 646 views
-
-
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறல் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ரகசிய காவற்துறையினர் விசாரணை நடத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது. 1155035 என்ற கடவூச்சீட்டு இலக்கத்தைக் கொண்ட ரோஹண என்பவரை தனது உதவியாளர் எனக் கூறி ஜப்பானுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் அவரது உதவியாளர் என கூறப்பட்ட நபரும் கடந்த 29 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து ஜப்பானின் நரினா விமான நிலைத்தை சென்றடைந்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் ஜப்பானுக்கு சென்றமைக்கான காரணம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்த…
-
- 0 replies
- 802 views
-
-
சிறீலங்கா கடற்படையின் பிரதான போர்க்கப்பல்களில் ஒன்றான 'Sagara' கப்பலில் இரவு வேளையில் தீ ஏற்பட்டுள்ளதாகவும்.. குறிப்பாக ஜெனரேற்றர் அறையில் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. கொழும்புதுறைமுகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துக்கு குறும் மின்சுற்றுக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று பொலீஸ் தரப்புக் கூறினும்.. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அழிக்கப்படுவதில்.. இந்தப் போர்க்கப்பல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது. Fire onboard Navy vessel A fire broke out in the generator room of the navy boa…
-
- 4 replies
- 2.6k views
-
-
"ஈழத்தமிழர்களின் முழு விடுதலையே நம் கோரிக்கை" கம்யூனிஸ்டுத் தலைவர் சி.மகேந்திரன் திட்டவட்ட அறிவிப்பு வாழ்த்தரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சி.மகேந்திரன் ஆற்றிய உரை. ஓர் மாற்றத்திற்கான போர்க் குணத்தை நாம் எங்கிருந்து பெறுவது என்ற உணர்வோடு இருக்கிறோம். தமிழர் களாய் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் ஒரு தொன் மையான பண்பாட்டைக் கொண்டவர்கள்; ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்றவர்கள் - இலங்கையில் அந்த காலம் முதல் ஆதி குடிகளாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர் கள் - பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐயா நெடுமாறன் அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால தமிழக வரலாற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
டென்மார்க் அதிகாரிகளின் முக்கிய வேண்டுகோள்!! டென்மார்க் கேணிங் நகரில் உள்ள "பிள்ளையார் ஸ்ரோஸ்" கடையில் வாங்கிய பொருட்கள் இருந்தால் உடனடியாக அவற்றை வீட்டில் இருந்து அகற்றி பொருட்கள் வைத்திருந்த இடத்தையும் உங்கள் கைகளையும் வடிவாக துப்பரவு செய்யவும் என பொருட்கள் வாங்கியவர்களுக்கு நுகர்வோர் அமைச்சு அதிகாரிகளால் விடப்பட்ட வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடை கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகளால் வழமையான சோதனை செய்யப்பட்ட பொழுது பல மாதங்களாக அங்கு எலிகளின் நடமாட்டம் இருந்தமை தெரியவந்ததால் உடனடியாக கடை அதிகாரிகளால் முடப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட பகுதியல் 10 இருந்து 15 செ மீ உயரத்திர்க்கு கழிவு நீர் இருந்தமையும் கண்டுபிடிக…
-
- 3 replies
- 2.5k views
-
-
வன்னியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்கான பாதையொன்று உள்ளது எனத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எனினும், அந்தப் பாதை பற்றி இப்பொழுது மக்களுக்கு அறிவிக்கப்போவதில்லையெனக் கூறினார். மக்கள் வெளியேறுவதற்கான பாதையைக் கூறினால் விடுதலைப் புலிகள் அவற்றை அறிந்துகொண்டு மக்களை வெளியேறவிடாது தடுத்து விடுவார்கள் எனவும் அதன் பின்னர் மக்கள் விடுதலைப் புலிகளால் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை வவுனியாவுக்கு வருமாறு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவி…
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்காப் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் வழங்குவதற்கு உள்ளுர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தேவையில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவத்துக்கும் மனித உரிமைகளுக்குமான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
மிகச் சிறப்பாக செயற்பட்ட இம்ரான் - பாண்டியன் படையணி போராளிகள் தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு [திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2008, 11:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] களமுனைகளில் மிகச்சிறப்பாக செயற்பட்ட லெப். கேணல் இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தாயக களமுனைகளில் தாக்குதல் நடத்த வந்த எதிரிக்கு எதிராக தாக்குதலை நடத்தி அழிவுகளை கொடுத்து முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சமர் ஆய்வு மையத்தின் ஊடாக சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை சிறப்பாக …
-
- 0 replies
- 1.5k views
-
-
8 மாத காலப்பகுதியில் 1000 பேர் கடத்தப்பட்டுள்ளனர் 01.09.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இந்த வருடத்தின் முதல் 8 மாத காலப்பகுதியில் ஆயிரம்பேர் கடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2007 ஆம் ஆண்டு 1229 பேரும், 2006 ஆம் ஆண்டு 1190 பேரும் கடத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாகவும் அங்கு 118 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இரண்டாவதாக மட்டக்களப்பில் 105 கடத்தல் சம்பவங்களும் கொழும்பில் 75 கடத்தல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை இரத்தினபுரி 68, நுகேகொடை 56, திருமலை…
-
- 0 replies
- 561 views
-
-
"நல்லாட்சி'யை நடத்துவதற்கு மஹிந்த வழிப்படுத்தப்படுவாரா? 01.09.2008 "நல்லாட்சி' (good governance) என்றால் என்ன? கொழும்பு பல்கலைக்கழகச் சட்டப் பீடாதிபதி நா. செல்வக்குமாரன், கடந்த சனியன்று கொழும்பில் தாம் நிகழ்த்திய பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய நிறுவுநர் தின நினைவுப் பேருரையில் இதுகுறித்து விளக்கியிருக்கின்றார். "நல்லாட்சி' என்பது பல்வேறு அம்சங்களையும் கூறுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவது. அவற்றுள் முக்கியமானவற்றை அவர் வரிசைப்படுத்துகின்றார். ஓர் ஆட்சி முறைமையானது * சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாக இருத்தல் வேண்டும். * தனது மக்களின் காத்திரமானதும் அறிவுபூர்வமானதுமான பங்குபற்றலை உள்ளடக்க வேண்டும். * ஒளிவு மறைவற்றதாக வெளிப்படையாக செயற்படுவதாக இ…
-
- 0 replies
- 694 views
-
-
திருகோணமலை நிலாவெளியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலியான முஸ்லிம்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரஸ்தாப துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயம் அடைந்து குருணாகல் பெரியாஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த முப்பது வயதான ஜெய்லாப்தீன் பௌசர் என்பவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்த ரவூப் ஹக்கீம் எம்.பி. ஜனாஸாவை உறவினர்களிடம் கையளிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, வெல்கம்விஹார என்ற கிராமத்திற்கும், நிலாவெளி பிரதேசத்தில் இக்பால் நகருக்கும் இடைய…
-
- 0 replies
- 537 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் விவகாரங்களைக் கையாழ்வதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்கவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைப்பது பற்றிய கோரிக்கையடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதிக்கு தாம் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த போதும், உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் பெரும் எண்ணிக்கையான மக்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து, அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்குத் தயாராகவிருப…
-
- 0 replies
- 561 views
-
-
நிலாவெளிப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் மீது விடுதலைப் புலிகளே தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றபோதும் இத்தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த மாதம் 20ஆம் திகதி திருகோணமலை நிலாவெளிப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றபோது தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் பலியானார். இக்பால் நகரைச் சேர்ந்த பௌசர் (30) என்ற இளைஞர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்தார். குருநாகல் வைத்தியசாலைக்குச் சென்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம் உயிரிழந்த இளைஞரின் சடலங்களை வைத்தியசாலையிலிருந்து பெற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் கடத்தப்பட்டதாகப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு 1229 பேரும், 2006ஆம் ஆண்டு 1190 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அத்தகவல் தெரிவிக்கின்றது. 2007 காலப்பகுதியில் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற பிரதேசமாக யாழ்ப்பாணம் விளங்குகிறது. அங்கு 118 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகமாக மட்டக்களப்பில் 105 சம்பவங்களும் கொழும்பில் 75 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதைவிட இரத்தினபுரியில் 68 சம்பவங்களும், நுகேகொடையில் 56 சம்பவங்களும், திருமலையில் 54 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன இதேபோல களனியி;ல் 43 சம்பவங்களும் கேகாலையில் 42 சம்பவங்களும் அம்பாறையில் 41 சம்பவங்களும் …
-
- 0 replies
- 660 views
-
-
இலங்கையில் வருடாந்தம் சுமார் இரண்டு லட்சம் கருக்கலைப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அது பாரிய சுகாதார பிரச்சினை எனவும் இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சித்ராமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். முக்கியமாக கல்வியறிவு பெற்றவர்களும் இவ்வாறான சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அனைத்துப் பிரதேசங்களிலும் குடும்பக் கட்டுபாடு தொடர்பாக விழிப்புணர்வுகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான குடும்பத்திட்ட நடவடிக்கைகள் காரணமாக கருக்கலைப்பு நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்பான் சென்ற நிலையில் ஜப்பானிய விமான நிலைய அதிகாரிகளினால் திருப்பியனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினருடன் அந்தக் கட்சியின் சில உறுப்பினர்களும் சென்றுள்ளனர். இவர்கள் ஜப்பானிய விமான நிலைய அதிகாரிகளினால் ஜப்பானுக்கு விஜயம் செய்ததற்கான காரணத்தைக் கோரி பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளமைக்கான சரியான காரணத்தை தெரிவிக்காததால், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் அங்கிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளனர். ஜே.வீ.பீயினர் திருப்பியப்பபட்டமைக்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை என்ற போதிலும் ஜே.வீ.பீயினர் ஜப்பானில் மேற்கொள்ளும் சட்டவிரோத நிதிதிரட்டல், அவர்கள்…
-
- 0 replies
- 853 views
-
-
வன்னிக்களமுனையில் 9 படையினர் பலி; 34 பேர் காயம் [திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2008, 05:29 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிக்களமுனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வன்னேரிப் பகுதியில் நேற்று முற்பகல் 7:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 மணிவரை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பத்து படையினர் காயமடைந்துள்ளனர். இது தவிர காலை 7:50 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர். வன்னேரியில் நேற்று பிற்பகல் 5:20 மணிக்கு விடுதலைப் பு…
-
- 0 replies
- 909 views
-
-
திருகோணமலை சிறிலங்கா கடற்படைக் கட்டிடங்கள் சேதம் அடைந்த படம் சண்டே டயிம்ஸில் இருந்து
-
- 16 replies
- 4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தலைநகரமாகவும் உள்ள கிளிநொச்சி நகரை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் கைப்பற்றிவிடுவர் என்று தான் முழுமையாக நம்புவதாக சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையான ரைம்ஸ் பத்திரிகைகக்கு தற்போதைய படை நவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது எமது படையினர் வன்னியில் நாளாந்தம் பெரும் வெற்றிகளை பெற்றவண்ணம் முன்னேறிக்கொண்டு செல்வதாகவும், இந்த வருட முடிவுக்குள் அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய நடுவ நகரமான கிளிநொச்சிநகரை கைப்பற்றிவிடுவர் என …
-
- 7 replies
- 1.8k views
-
-
www.uthayan.com புதியதாய் www.puspaviji.net
-
- 2 replies
- 3k views
-
-
By RAVI NESSMAN,Associated Press Writer AP - 29 minutes ago COLOMBO, Sri Lanka - People in the poor, mainly Tamil neighborhood in Colombo described it as a harrowing day. ADVERTISEMENT It was 5 a.m. on a Wednesday when police started knocking on doors. They searched hundreds of homes, then forced thousands of men, women and children to get dressed and walk through the narrow streets lined with soldiers to a nearby sports field. Over the next six hours, authorities questioned, photographed and videotaped the neighborhood's inhabitants. Still, few of those rounded up expressed surprise at the intrusion. Members of Sri Lanka's minority Tamil communi…
-
- 1 reply
- 2.1k views
-
-
இலங்கை பயங்கரவாத அரசு இடம்பெயர்ந்த மக்களை நோக்கி செல்வீச்சு 5 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து புதுமுறிப்பு கிராமத்தில் தங்கி இருந்த பொது மக்களை நோக்கி இன்று சனிக்கிழமை பிற்பகல் இலங்கை பயங்கரவாத அரசு நடத்திய செல்வீச்சில் 5 பேர் கொல்லப்பட்டும் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துளள்ளனர். நன்றி தமிழ் நெட்
-
- 5 replies
- 1.1k views
-
-
ஒரு இராணுவ நடவடிக்கையின் போது குறித்த காலவரையொன்றினுள் முடிந்துவிடும் என காலம் வகுப்பது முட்டாள்தனமானதாகும். வன்னி முற்றுகைக்கு பதிலடியாகவே திருமலையில் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் அமைந்துள்ளது. புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்று அண்மையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார். அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிபோது புலிகளின் எதிர்ப்பு குறைந்தது. அச்சமயம் வன்னியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புலிகள் தந்திரோபயமாக பின்வாங்கிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது என்ன நடக்கின்றது? இராணுவ ஆய்வாளர்களும், …
-
- 5 replies
- 2.4k views
-
-
யாழில் இரு மாணவர்கள் சுட்டுக்கொலை திங்கள், 01 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 787 views
-