Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காப்படையினரின் தாக்குதல்களால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் பத்தாயிரம் வரையான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என கிளிநொச்சி வலையக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பூநகரியின் வடக்குப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகள் பூநகரியின் தெற்குப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தன. தற்பொழுது பூநகரி கல்விக்கோட்டத்தில் உள்ள 19 பாடசாலைகள் முழுமையாக இடம்பெயர்ந்துள்ளன. இதனால் 6500 வரையான மாணவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர். இதனைவிட கிளிநொச்சி கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட வன்னேரிக்குளம்இ nஐயபுரம்இ ஐயனார்புரம்இ அக்கராயன் ஆகிய பாடசாலைகளின் இடப்பெயர்வால் 3500 வரையான மாணவர்கள் என பத்தாயிரம் வரையான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் தவணைக்…

  2. இடம்பெற்றுவரும் மேதலினால் வன்னியில் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொடுமையால் துன்பப்படும் மக்களின் துயரங்களைப்போக்க சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் பொது அமைப்புக்களும் உடனடியாக முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வன்னிப் பெருநிலப்பரப்பை கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் போரின் காரணமாக சாதாரண போர் நடவடிக்கைகளோடு நேரடித் தொடர்பு அற்ற பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகவுள்ளது. நிச்சயமற்ற இருப்பு நிலையோடும் மிரட்சியும் அச்சமும் கலந்த வாழ்வோடும் வறுமையோடும் போராடும் …

  3. சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள் -ப.தெய்வீகன்- வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதாக உள்ளது. போகிற போக்கில் கிளிநொச்சியும் படையினர் வசம் போய் விடுமா? புலிகளின் தற்காப்பு நிலைக்கு ஒரு வரையறை வேண்டாமா? படையினரின் அறிக்கைப்படி இந்த வருடத்துக்குள் புலிகளை அழித்து விடுவார்களா? - இப்படி பல்வேறு சந்தேகங்கள் இந்த அதிருப்தியாளர்கள் மத்தியில் முளைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்கள் நடந்து முடிந்த பின்னர் வென்…

  4. யாழ் முகாமாலையில் முன்னரங்கில் நேற்று மாலை 5:30 முதல் அரை மணி நேரத்திற்கு இடம்பெற்ற எறிகணை மோதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு படை உறுப்பினர் பலாலி படைத்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நாகர்கோவில் முன்னரங்கில் காலை 8:30 அளவில் இடம்பெற்ற எறிகணை மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்று மாலை நாகர்கோவிலில் விடுதலைப் புலிகளின் பொறி வெடிகளில் சிக்கிய படையினரில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறவித்துள்ளது. http://isoorya.blogspot.com/2008/08/9.html

  5. முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீள இணைந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 997 views
  6. வன்னியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்களை வவுனியாவிற்கு கொண்டு வந்து இராணுவத்திடம் கைய்யளிக்குமாறு அரசாங்கம் பணிப்பு? தென்றல் இரவுச் செய்தி

  7. கொழும்பில் இரு தமிழ்குடும்பஸ்தர் கடத்தப்பட்டனர். 19.08.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பின் இரு பகுதியில் தமிழர் இருவர் வெள்ளைவான் கும்பலினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியிளவில் வத்தளை குணுப்பிட்டிய சந்திக்கிடைப்பட்ட ஜயந்திமாவத்தையில் வைத்து கிறிதோதரன் பிரன்ஸிஸ் (49) என்பவரின் வீட்டுக்கு வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் இவரைக் கடத்திச்சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு புதுச்செட்டித்தெரு பகுதியில் இதே நாள் அதிகாலை பொலிஸ் சீருடையில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை கடத்திச்சென்றுள்ளனர். கடத்தப்பட்டவர் செல்வராசா பாலகுமார் (33) என்ற குடும்பஸ்தரே இ…

  8. வி.புலிகளின் இராணுவபேச்சாளர் திரு இராசையா இளந்திரையன் அவர்களுடனான நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  9. பிரான்சில் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு" நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்நாள் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 676 views
  10. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ருவான்வெல்ல பிரதேச கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படும் என்ற உறுதிமொழியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டதக கூறப்படுகிறது. ருவான்வெல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பளரின் ஆலோசனைக்கு அமைய தோட்டங்களில் இருந்து இந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்களை ஏற்றிச் செல்ல இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் உறுதியளிக்கப்பட்டவாறு உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள், சுதந்திரக்கட்சியின் சார்பில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை தூ…

  11. பிரான்சில் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாற்று" நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்நாள் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 596 views
  12. திருகோணமலை மூதூரில் ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா தரைப்படைகள் அங்கிருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. வன்னியில் படைகளுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகள் காரணமாக உருவாகியுள்ள ஆளணி வெற்றிடத்தை இடை நிரப்பு செய்வதற்காகவே இந்த படை நகர்த்தல் இடம்பெற்றுள்ளது. தரைப்படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சிறீலங்கா கடற் படையினர் மூதூரை ஆக்கிரமித்துள்ளனர். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_1094.html

    • 4 replies
    • 2.6k views
  13. திருமாவுடன் தொடர்புபடுத்த முயன்றார்கள் -கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம் புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தக…

    • 9 replies
    • 2.6k views
  14. இன்று எமது இராணுவ வீரர்கள் பெறக்கரிய வெற்றிகளை குவித்து இந்தத் தேசத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வெற்றி பெறுகின்றார்கள் என்றால் அந்த வெற்றிக்கு பின்புலத்தே நின்று அவர்களை கௌரவித்து அவர்களை உற்சாகமூட்டி கேட்பதெல்லாவற்றையும் வழங்கி கொண்டிருந்த எந்த அரசாங்கமோ தலைவர்களோ செய்யாதவற்றை இன்று எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களும் எமது அரசாங்கமும் செய்துள்ளது. எனவே வெற்றியின் உச்சத்தில் உள்ள எமது படையினர் இந்த இரண்டு மாகாணசபைத் தேர்தல்களின் முன்னரே கிளிநொச்சியை கைப்பற்றி சொல்லத்தக்க செய்தியை கொண்டுவருவர் என சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். குருவிட்ட பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்ச…

  15. 8/19/2008 3:36:41 PM - எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமத்திய மற்றும் சப்ரகமுவமாகாண சபை தேர்தல்களில் அரசு மக்களை பயமுறுத்தி வாக்குகளை பெற முயல்கிறது.ஆனால் சப்ரகமுவ மாகாண மக்கள் இதை அனைத்தையு பொறுமையுடன் அவதானித்து கொண்டு இதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.மக்களது சுதந்திரமான வாக்களிக்கும் உரிமையை அரசு தடுத்து நிறுத்த முயல்கிறது.அனுராதபுரம் பிரதேசங்களில் காணப்படும் மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஆகிய வற்றுக்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள் அரசு ஆதரவாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என ஜே.வி.பியின் வடமத்திய மாகாண வேட்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். தேர்தல் செலவினங்கள் மக்களின் மேல் சுமத்தப்படுகின்றது அதைபோல் பெற்றோல் போன்ற ஏனைய செலவினங்களும் மக்…

  16. வடபகுதியில் உணவுப் பொருட்களுக்கோ, அத்தியாவசியப் பொருட்களுக்கோ எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதெனத்தெரிவித்த இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச உள்நாட்டு ஊடகங்கள் சிலவற்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மரங்களுக்கடியில் வசிப்பதாகக்கூறிய செய்தியில் உண்மை எதுவும் கிடையாதெனவும் கூறினார். அதேசமயம் வட பகுதிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றரை மாதங்களுக்குப் போதுமான தொகை கையிருப்பில் இருப்பதாகவும் வடக்கு மீட்கப்பட்டதும் முழுமையான இயல்பு நிலையை உடனடியாக கொண்டுவர முடியுமெனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை மாலை இடர் முகாமைத்து…

  17. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரைத் துடைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைதிப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஒன்றுகூடிய பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் 15 நிமிடம் அமைதிப் (மெளனம்) பிரார்த்தனையை மேற்கொண்டனர். யுத்த முன்னெடுப்புகளால் வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களுக்கு அனைத்துலக மற்றும் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்கள் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த அமைதிப் பிரார்த்தனையின் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையி…

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்ட போதிலும் அதனை அவர்கள் மறுதலித்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு விளங்கக்கூடிய யுத்த மொழியில் தற்போது வெற்றிகரமாகப் பதிலளித்து வருகின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவான்வெலவில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு அங்குலம்கூட காணி உரிமையற்ற படைவீரர்கள் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வதன் மூலம் படைவீரர்களின் கரங்களை வலுப்படுத்த முடியும் என அவர் சுட்…

  19. விமானப் படையில் புதிதாக 2500 பேர் [19 - August - 2008] விமானப் படையின் தரைமார்க்க நடவடிக்கைக்கு புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. விஷேட கொமாண்டோக்களாகச் சேர்க்கப்படவுள்ள இவர்கள் அதிகாரிகளின் பாதுகாப்பு, குண்டுகளைச் செயலிழக்க வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளனர். நேற்று முதல் ஏக்கல, அநுராதபுரம், அம்பாறை, பாலாவி, இரத்மலானை விமானத் தளங்களில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. க.பொ.த. (சாதாரண) பரீட்சையில் குறைந்தது ஆறு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென விமானப் படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். http://www.thinakkural.com…

  20. இராணுவப்படையினரால் வடக்குப் பிரதேசத்தில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு ஒப்பீட்டளவில் குறைந்தளவானதே என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றி தொடர்பான அரசாங்கத்தின் காலக்கெடு அடிக்கடி மாறும் தன்மையினை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான எதிர்கால யுத்தம் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதே யதார்த்த நிலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில் வன்னிப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதும…

    • 0 replies
    • 1.5k views
  21. இந்தியாவுடன் எதைப் பற்றிப் பேசுவது?: 'நிலவரம்' ஏடு [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 05:01 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை சிறிலங்கா இல்லாமற் செய்தபோது அதுபற்றிக் கவலைப்படாமல் இந்தியா உள்ள நிலையில் இந்தியாவுடன் பேசுவதற்கு என்னதான் இருக்கிறது? என்று சுவிசிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் 'நிலவரம்' ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயாமான அரசியல் தீர்வு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட்டுவரும் இந்தியா மீண்டுமொருமுறை ஈழப் பிரச்சினையில் மூக்கை நுழைக்க ஆ…

  22. வறுமை காரணமாக இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மலையக யுவதி (ருத்ரன்) 8/19/2008 9:49:29 AM - குடும்ப வறுமை காரணமாக தலவாக்கலைப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம் யுவதி இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தலவாக்கலை சென்கிளயர் பகுதியைச்சேர்ந்தவர் எனத்தெரியவருகிறது.இச்சம்பவம

  23. உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா, உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக சனிக்கிழமை தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்றது. இம்மாநாடு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றது. மதுரை மாநகரில் உள்ள அரசடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் பங்கேற்று உரையாற்றினர். தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்களான தி.க. சிவசங்கரன், கி. இராஜநாராயணன், எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.), ஜே.வி. கண்ணன், வே. தங்கவேலு (நக்கீரன்) ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவ…

  24. வன்னியின் சகல முனைகளிலும் கடும் தாக்குதலை ஆக்கிரமிப்பாளர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவரும் அதே வேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபாகளை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஐ.நா அமைப்புகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் செல்வதை முடிந்த வரை தவிர்க்குமாறு அவற்றுக்கு படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்து மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருவார்களென அரசும் படைத்தரப்பும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்த்த போதும் மக்கள் எவருமே ஆக்கிரமிப்பாளரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை. மா…

    • 3 replies
    • 2.1k views
  25. வன்னியில் முன்னெடுக்கப்படுகின்ற படை நடவடிக்கைள் காரணமாக இடம் பெயரும் மக்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அரசு அதியுச்ச கட்டமான கரிசனையை செலுத்திவருகிறது என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வன்னியில் இடம் பெயர்வால் அவல வாழ்க்கையை வாழ்வதாக சர்வதேசத்தின் முன் பிரசாரம் மேற்கொண்டு படைநடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் சர்வதேச இராணுவத்தை வரவழைப்பதற்கும் சூழ்சிசிகள் மேற்கொள்ளப்படு:கின்றன. இடம் பெயர்பவர்களுக்கு சாவதேச நிறுவனங்கள் உதவுவதாயின் எம்முடன் கைகோர்த்துக் கொள்ளலாம்' என்றும் அவர் சொன்னார். இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.