ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
முல்லைத்தீவு பகுதியில் உள்ள விடுதலைபுலிகளின் பயிற்சி முகாம் மீது விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 7/22/2008 10:59:39 AM - இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் இன்று காலை 8.15 மணியளவில் முல்லைத்தீவு உடயார்கட்டுக்குளம் பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் பயிற்சி தளங்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. உடயார்கட்டுக்குளம் பகுதியிலேயே விடுதலைப்புலிகளின் முக்கிய பயிற்சி தளங்கள் அமைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மையில் சிறிலங்காவின் நிதிஅமைச்சு 2008ம் அண்டின் முதல் 5 மாதங்களிற்கு சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ள நிதி உதவி தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்து. அந்த அறிக்கையின் பிரகாரம் அதிக உதவி வழங்கும் நாடாக ஈரானும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் இடம்பெற்றிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சிறிலங்காவிற்கு உதவிசெய்யும் முதலாவது நாடாக டென்மார்க் இருப்பதாக சிறிலங்காவின் அறிக்கை கூறுவதை தமிழ்வொயிஸ் இணைத்தளம் செய்தியாக்கியிருந்தது. இதை அடுத்து டென்மார்க் தேசிய வானொலியும் “சிறிலங்கா தொடர்பாக மேற்குலகம் கண்மூடித்தனமாகவுள்ளது” என்ற தலைப்பில் ஒரு ஆய்வையும் செய்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியல் சிறிலங்காவின் அறிக்கை தவறானது என டென்மார்க் வெளிநாட்டமைச்சு கூறியிருப்பதாகவும் கூறப்பட்டது. …
-
- 1 reply
- 910 views
-
-
கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் கடற்சமர் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நாயாற்றிலிருந்து புல்மோட்டை நோக்கி வந்த ஐந்து வேகப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகு தொகுதி மீது கடற்படையின் அதிவே பீரங்கிப் படகுகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும், இதன்போது கடற்புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டதாகவும் வேறு இரு படகுகள் சேதமாக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் படகுளிற்கோ அல்லது கடற்படையினருக்கோ பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.7k views
-
-
வெற்றியின் விளிம்பில் இருக்கும் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக் குறித்து அரசாங்கம் கவனம்செலுத்தவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 701 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் பெற்றுவரும் வெற்றிகளைத் திசைதிருப்பும் நோக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற தென்னிந்தியத் தலைவர்கள் செயற்பட்டுவருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று (22-07 -2008) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 575 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்: புலம்பெயர் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி வேண்டுகோள் நன்றி:- தமிழ்நாதம் இந்தச் செய்தியை யாராவது பார்த்தீர்களா??? கண்ணில் பட்டதா??? ஏதாவது யோசித்துள்ளீர்களா??? மக்கள் இன்னல்படுகின்றார்கள் என எழுதுவோர் கவனத்துக்கு...................
-
- 10 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கிருலப்பன பகுதியில் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட உந்துருளி மற்றும் அதனுடன் இணைந்த வெடிமருந்து தொகுதி குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 586 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவுப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் ஓரிரு நாள்களில் விடத்தல்தீவிலிருந்து வடக்கே 12 கிலோ மீற்றர் தூரம் சடுதியாக முன்னேறி நேற்று இலுப்பைக்கடவையையும் இராணுவம் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அரசாங்கத் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மிகவும் வேகமாக பெரிதாக எதிர்ப்புகளோ, தடைகளோ இன்றி முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் படையினருக்கு ஆதரவாக, பின்புறம் இராணுவ நிலைகளிலிருந்து பொதுமக்கள் குடியிருப்புகளை நோக்கிச் செறிவான ஷெல் வீச்சுகள் நடத்தப்படுகின்றன. இதனால் இலுப்பைக்கடவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போக்கிடம் தெரியாமல், இடம்பெயர்ந்து அந்தரிக்கின்றனர் என்று அங்கிருந்…
-
- 0 replies
- 863 views
-
-
தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பன்னிரண்டு வயது மகள் விரக்தியுற்று தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த துயர சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. இச்சிறுமியின் மரண விசாரணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நகர மரண விசாரணை அதிகாரி எட்வேட் அகங்கம முன்னிலையில் நடைபெற்ற போது இத்தகவல் தெரியவந்தது. இறந்த சிறுமி தீக்காயங்களுடன் முதலில் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமானார். கடல்கோளினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தில் 16 வயதுடைய மூத்த மகள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரையும் தனது கணவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கிருலப்பன பகுதியில் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட உந்துருளி மற்றும் அதனுடன் இணைந்த வெடிமருந்து தொகுதி குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 744 views
-
-
மன்னார் - வவுனியா கள முனையூடு முன்னேறிச் செல்லும் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே துணுக்காய்ப் பகுதியில் சண்டை நடை பெற்றுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 படையினர் பலியாகி ஒருவர் காணாமல் போயுள்ளார். விடுதலைப்புலிகளின் 3 உடலங்களை தாம் மீட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. துணுக்காய், மாங்குளம் - மல்லாவி வீதியில் உள்ள துணை நகராகும். இப்பாதையை படையினர் கைப்பற்றின் மேற்கே பூநகரி - மன்னார் வீதியில் வெல்லாங்குளம் நோக்கியும்.. கிழக்கே மாங்குளம் நோக்கியும் மேலும் வடக்கு நோக்கியும் பல முனைகளில் நகர முடியும்.
-
- 68 replies
- 8.2k views
- 1 follower
-
-
கச்சதீவும் இந்திய மீனவர்க்ள குறித்த விடயமும் ஒன்றொடோன்று தொடர்பு படாதவையெனத் தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித Nhஹன, கச்சதீவு இலங்கiயின் ஒரு பகுதியயென்றும் அதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாதென்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இணையதளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியிலலேயே இவர் அதனைத் தெரிவித்துள்ளார். 1974 இலேயே கச்சதீவு இலங்கையினுடையது என இந்தியா அங்கீகரித்து விட்டது.மேலும் பேசத் தேவையில்லை எனத் தான் கருதுகிறார் என்றும் பாலித தெரிவித்துள்ளர்ர். 'சார்க்' மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகையில் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் கச்சதீவு குறித்து புதிய சர்ச்சை உருவாகி வருவது குறித்து பாலித கவலை வெளியிட்டார். 'இந்திய மீனவர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டின் பெயரால் கொழும்பிலுள்ள ஏழை மக்களின் வீடுகளை அழித்தமை இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் கொள்கைக்கும் வெட்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என தெற்காசிய மக்கள் அரங்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் தொழில் கட்சியின் பேச்சாளர் பாரூக் தாரிக் குற்றம் சாட்டினார். இவ்விடயத்தை தெற்காசிய மக்களின் பிரதிநிதிகளான தாம் உலகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு கொம்பனி வீதியில் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி உடைத்து அழிக்கப்பட்ட பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேல…
-
- 0 replies
- 838 views
-
-
நோர்வேயின் அனுசரணையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: விடுதலைப் புலிகள் [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:34 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஜஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்…
-
- 0 replies
- 791 views
-
-
கரவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:05 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி கரவெட்டி மேற்குப்பகுதியில் அடையாளம் தெரியாதோரால் நேற்று முன்நாள் இரவு குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 626 views
-
-
இளவாலையில் இளைஞன் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 04:58 மு.ப ஈழம்] [க.நித்தியா] யாழ். இளவாலை போயிட்டிப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞனொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆட்களற்ற வீடொன்றில் தங்கியிருந்த இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் சுற்றுக்காவல் சென்ற போது அவர்களைக் கண்டு இந்த இளைஞன் ஓடியபோதே படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது முகம் மற்றும் வலது கைப்பகுதி சிதறிய நிலையில் உடலம் அப்பகுதியில் கிடந்துள்ளத…
-
- 0 replies
- 677 views
-
-
அழுத்துக http://puspaviji.blogspot.com/2008/07/blog-post_9131.html
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 17 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 11:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள குஞ்சுக்குளம் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கபட்டுள்ளது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். குஞ்சுக்குளம் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் கனரகசுடுகலன் தாக்குதல் சூட்டாதரவுகளுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப…
-
- 11 replies
- 1.7k views
-
-
Posted on : 2008-07-22 ஈழத் தமிழர் விவகாரத்தில் பாரதீய ஜனதாவின் ஈடுபாடு இந்திய அரசியலில் இன்று முக்கியமான நாள். மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவை இழந்துள்ள அல்லது தனது செயற்பாடு மூலம் அந்த ஆதரவை உதறித் தள்ளியுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, ஏனைய உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்து, அதை நாடாளுமன்றத்தில் நிரூபித்து, ஆட்சியைத் தொடருமா? அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அந்த அரசு கவிழுமா? அப்படி அரசு கவிழ்ந்தால் உடனடியாக மாற்று அரசு ஒன்று பதவி ஏற்குமா? அல்லது பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உடன் அறிவிப்பு விடுக்கப்படுமா? இவை குறித்தெல்லாம் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய கண்டத்தில் காங்கிரஸ் அரசு தப…
-
- 0 replies
- 957 views
-
-
ஜே.வி.பி.யின் தொழிற்சங்கப் பலமும் மகிந்தவிடம் எடுபடவில்லை -வேலவன்- சிறிலங்காவின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தன்னைக் கருதிக்கொண்டும் தன்னிடமுள்ள தொழிற்சங்கப் பலத்தை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களை தாம் விரும்பியபடி ஆட்டிப்படைத்து விடலாம் எனவும் நம்பிவந்த ஜே.வி.பி. கடந்த 10 ஆம் திகதி தனது தொழிற்சங்கப் பலத்தைக் காட்டி மகிந்த ஆட்சிக்கு எச்சரிக்கை செய்ய விரும்பியது. தாங்க முடியாத வாழ்க்கைச் செலவைச் சுமந்துகொண்டும் மகிந்த ஆட்சியின் ஊழல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்ற உழைக்கும் வர்க்கம் ஜே.வி.பி.யின் இந்த முயற்சிக்கு துணையாக இருக்கும் என நம்பிய ஜே.வி.பி. தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகியது. மகிந்த பலமுறை அழைத்தும் பேச்சுக்குச் செல்லாத …
-
- 0 replies
- 585 views
-
-
மகிந்த செல்லப்போவது யாரிடம்!-ஜெயராஜ்- இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு என்ற நிலைப்பாட்டில் மகிந்த அரசாங்கம் மிகவும் உறுதியாகவுள்ளது. யுத்தம் தவிர்ந்த எந்த ஒரு வழிமுறையையும் அது பரிசீலிக்கவும் தயாராக இல்லை. இதற்குச் சிங்கள மக்களின் ஆதரவும் குறிப்பிடும்படியாக உள்ளதெனக் கூறினும் மிகையாகமாட்டாது. இதேசமயம், யுத்தத்திலும், சிறிலங்கா இராணுவத்தரப்பு குறிப்பிடத்தக்கதான சில நகர்வுகளை மேற்கொள்வதை நிராகரித்துவிட முடியாது. வடக்கில் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் யுத்தத்தில் மன்னார்க் களமுனையில் இராணுவத்தரப்பு குறிப்பிடத்தக்கதான அனுகூலங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால், இதனைப் பெறுவதற்காக இராணுவம் எடுத்துக்கொண்ட காலம், இராணுவ ரீதியில் ஏற்பட்ட ஆளணி மற்றும்…
-
- 0 replies
- 1k views
-
-
பகுதி | செய்திகள் கொழுப்பில் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொலை திங்கள், 21 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] கொழும்பு மெசன்ஜர் வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் சிறீலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்து சந்தேக நபரை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தனர். குறித்த நபர் மறைத்து வைத்திருக்கப்பட்ட ஆயுதங்களை காண்பிப்பதற்கா சிறீலங்கா காவல்துறையினருடன் சென்ற போது அங்கிருந்த நபர் தனது கைத்துப்பாக்கியால் காவல்துறையினர் நோக்கி சுட்டபோது காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அதேநேரம் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா காவல்துறைப்…
-
- 0 replies
- 734 views
-
-
காணித்தகராறு காரணமாக இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக இடம் பெற்ற அசிட்வீச்சு சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட ஏழுபேர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஏழு பேரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவ
-
- 0 replies
- 717 views
-
-
சார்க் நாடுகளின் உச்சி மாநாடு ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் செல்கிறார். மாநாட்டின் இடைவெளியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்திக்கிறார். பின்னர், இருநாட்டு அதிகாரிகள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-இலங்கை இடையே பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 587 views
-