ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
சிறிலங்கா அரசின் செயற்பாடுகளில் தமிழ்மக்களுக்கு நம்பிக்கையில்லை. - சம்பந்தன். 17.07.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வினைக்காணும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ்மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மல்லோ பிரவுணிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ராஜாங்க அமைச்சரை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்து சுமார். 40 நிமிடங்கள் சம்பந்தன் எம்.பி.பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தன் எம்.பி தெரிவிக்கையில். பல்லிலன பல்கல…
-
- 0 replies
- 613 views
-
-
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணு வத்தினருக்கும் இடையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற கடுஞ்சமரில் இராணு வத்தினர் 10 பேர் உயிரிழக்க 19 பேர் வரை படுகாயமடைந்தனர் என்று புலிகள் தரப் பில் அறிவிக்கப்பட்டது. பாலமோட்டை நோக்கி நேற்று முன்தி னம் மதியம் 12.30 மணியளவில் கடும் பிற் களச் சூட்டாதரவுடன் இராணுவத்தினர் முன்னேற முயன்றனர் என்றும் அதற்குத் தாங்கள் மேற்கொண்ட 5 மணிநேர முறியடிப்புச் சமரில் இராணுவத்தினர் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர் என்றும் புலிகள் தரப்பில் மேலும் கூறப்பட்டது http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 604 views
-
-
சார்க்' மாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள 200 வீடுகளை இடித்துத்தள்ளி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஐக் கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளது. ""வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வந்து இரண்டு நாள்கள் ஆடிவிட்டுப் போவதற்காக 60 வருடங்களாக வசித்துவரும் கொம்பனித்தெரு மக்களை விரட்டியடிக்கும் அரசின் நடவடிக்கையை ஒருபோதும் நாம் ஏற்கமாட்டோம்'' என்று அக்கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: இலங்கையில் "சார்க்' …
-
- 0 replies
- 632 views
-
-
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச் சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதை மட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு இலங்கை அரசு செயற்படுகின்றது. ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைப்ப டுத்துவதைத் தவிர மஹிந்த அரசிடம் வேறு எந்த மாற்றுத் திட்டமும் கிடையாது. * இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான முறையில் தீர்வு காண்பது குறித் தும், நியாயமான தீர்வு ஒன்றைத் தமிழர்க ளுக்கு வழங்கப் போகின்றமை பற்றியும் அரசுத் தரப்பில் வெளியிடப்படுகின்ற அறிவிப்புகள் எல்லாம் சர்வதேசத்தையும் ஏமாற்றும் வெறும் பம்மாத்து நடவடிக்கை களே. இவற்றுக்கு சர்வதேசம் எடுபட்டு இலகுவில் விலைபோய் விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன், இலங்கைக்கு விஜயம் செய்திருக…
-
- 0 replies
- 548 views
-
-
Posted on : 2008-07-17 சூடான் வழியில் இலங்கை இனப்பேரழிவும், மனித குலத்துக்கு எதிரான கொடூரங் களும் பாரதூரமாக இடம்பெறும் சூடான் நாடு தொடர்பாக சர்வதேச நீதி ஆயத்தின் முன்னால் இப்போது எடுக்கப்பட் டிருக்கின்ற நடவடிக்கை, இன ரீதியாக மோசமான கொடூரச் செயற்பாடுகளைத் தமது ஆட்சி அதிகாரம் மூலம் முன்னெடுக் கும் பல உலக நாடுகளின் தலைவர்களைத் திடுக்குற வைத்திருக்கின்றது. சூடானின் டார்பூர் பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டு களாக நீடித்துவரும் மோதல்களைப் பயன்படுத்தி இனவழிப்புப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான நாசங்கள் போன்றவற்றை இழைத்தமைக்காக சூடான் ஜனா திபதி ஒமர் அல் பஷீரைக் கைது செய்வதற்கான உத்தரவு ஒன்றை விடுக்குமாறு, சர்வதேச நீதிமன்ற ஆயத்திடம், அந்த ஆயத்தின் பி…
-
- 0 replies
- 701 views
-
-
"இந்தியா கொதித்தெழ வேண்டாமா?" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன் காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இ…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பில் இடம் பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க(சார்க்) உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்ககாக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகிறது. இந்தியப் பிரதமருக்கும் அவருடன் வருகை தரும் தூதுக் குழுவினருக்கும் போதிய பாதுகப்பை வழங்குவதற்காக ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த இரு கப்பல்கள் உட்பட மூன்று யுத்தக் கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்துவதற்கு இந்தியா திட்டமிடுவதாக 'ரைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிக மட்டத்திலான அச்சுறுத்தல் இருக்கலாமெனக்கருதி தவறுகள் எதுவும் இடம்பெறாமல் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாது…
-
- 1 reply
- 983 views
-
-
இலங்கைக் கடற்படையின் ரத்த வேட்டை - செங்கடலாகச் சிவக்கும் வங்க்கடல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு. நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறைக்கு அப்பால் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே கடல்பகுதியை இருட்டு ஒரு போர்வை போல போர்த்தியிருந்தது. தமிழக மீனவர்களின் இன்றைய நிலைமையைச் சொல்வது போல இருந்த அந்தக் கும்மிருட்டில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன், நாராயணசாமி, முரளி ஆகியோர். நட்டநடுநிசி. இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று சத்தமில்லாமல் இவர்களது மீன்பிடிப் படகை அணுகியது. இந்தியக் கடல் பகுதியில், அதுவும் சேதுக்கால்வாய் தோண்டப்பட்டு வரும் பகுதியில் இலங்கை ரோந்துப் படகா? என்று இவர்கள் திகைத்து திக்குமுக்காடிய வேளையில், ரோந்துப் படகி…
-
- 1 reply
- 873 views
-
-
இலங்கை தூதரகம் முன் சிபிஐ ஆர்பாட்டம் சேலம்: தமிழ மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து அந்நாட்டுத் தூதரகம் முன்பு வரும் 30 ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் துவக்க விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியாதவது: தமிழக மீனவர்களை மட்டும் இன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும். இந்திய குடி மகன் மீது தாக்குதல் நடத்துவது இ…
-
- 0 replies
- 749 views
-
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் இந்தியாவிற்கு தாரைவார்ப்பதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை சம்பூர் அனல் மின்னிலையம், மன்னார் கடலடிப்படுக்கை எண்ணை அகழ்வாய்வு என்பன சிறீலங்கா அரசினால் இந்திய அரசுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் மத்தியில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்ற இந்த நிலையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும், இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்க வைப்பது என்ற போர்வையில் நடைபெறும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் பல்வேற…
-
- 0 replies
- 704 views
-
-
வடபோர் முனைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் விரைவில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர் என்று இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1k views
-
-
ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு Wednesday, 16 July 2008 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உளவு பார்ப்பதற்காக யு.ஏ.வி. எனப்படும் ஆட்களின்றிச் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாகவே இது கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள உளவு விமானம் வடபகுதி யுத்த முனையில் புலிகளின் நடமாட்டம் மற்றும் படையினருக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை கண…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு 7/16/2008 11:29:35 PM - இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வினைகாணும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மல்லோ பிரவுணிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய ராஜாங்க அமைச்சரை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் சம்பந்தன் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தன் எம்.பி.மேலும் எடுத்துக் கூறியதாவது: பல்லின, பல்கலாசார, பல்சமய மக்க…
-
- 0 replies
- 560 views
-
-
-
- 1 reply
- 961 views
-
-
நெடுங்கேணியில் ஆழ ஊடுருவும் அணியினரால் பாலம் குண்டு வைத்து தகர்ப்பு [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் பாலம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி - ஒட்டுசுட்டானை இணைக்கும் முதன்மை வீதியில் இத்திமடுச் சந்திக்கு அருகாமையில் உள்ள முதன்மைப் பாலமே இன்று புதன்கிழமை அதிகாலை 5:10 மணியளவில் ஆழ ஊடுருவும் அணியினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் உள்ள சமளங்குளம் மக்கள் குடியிருப்பில் அமைந்துள்ள இப்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதனால் புதுக்குடியிருப்பு நோக்கி வந்த பயணிகள் பேரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான விடத்தல் தீவு பகுதியை அண்மித்த இடங்களில் இருந்து உயிரிழந்த 05 தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுடைய சடலங்களை படையினர் மீட்டு நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://puspaviji.blogspot.com/2008/07/5.html
-
- 4 replies
- 1.9k views
-
-
சார்க் மாநாட்டை முன்னிட்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு மாற்றியமைத்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் நான்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள், ஹில்டன் சுற்றுவட்டத்திலிருந்து ஜோர்ஜ் வீதி, செரமிக்ஸ் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற வீதி, துறைமுகம் வரையிலான வீதி, இன்டர் கொன்டினென்டல், கலதாரி ஹோட்டல், செலிங்கோ கட்டடம், எச்.என்.பீ. வங்கி, கடற்படை மற்றும் பொலீஸ் தலைமையக பிரதேசம், கொள்ளுப்பிட்டி முதல் பழைய பாராளுமன்ற கட்டிடம் வரையிலான காலிவீ…
-
- 0 replies
- 738 views
-
-
சார்க் நாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் எத்தகைய சிரமங்களுமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக இலங்கை ஊடகவியலாளர்கள் ஐம்பது பேருக்கு முதற்கட்டமாக பொது விசா வழங்கப்படவுள்ளதாக தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் இலங்கைக் கிளைத் தலைவர் லக்ஸ்மன் குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த பொது சார்க் விசாவினை ஊடகவியலாளர்களுக்க வழங்குவதற்காக தெரிவுமுறை கட்டமைப்பொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பான சப்மாவின் வருடாந்த மாநாடு கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுமாலை இலங்கை மன்றக் கல்லு}ரியில் நடைபெற்றது. இத…
-
- 0 replies
- 672 views
-
-
சார்க் மாநாட்டை முன்னிட்டு கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள 34 பாடசாலைகளை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய கொழும்பில் 10 பாடசாலைகளும் கட்டுநாயக்க முதல் கொழும்பு வரையுள்ள 24 பாடசாலைகளும் மூடப்படவுள்ளன. இம்மாநாட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களுக்குப் பாடசாலைகளில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இம்மாதம் 26 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மூடிவடைந்தது முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை இப்பாடசாலைகள் இப்பணிகளுக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவும் இலங்கை கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. நிருபர்: சிறிதரன் http://www.tamilseythi…
-
- 0 replies
- 699 views
-
-
ஜனநாயகம் மற்றும் மனித உரிமையைப் பேணுவதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள வெற்றிகரமான நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய நாடுகள் என்பவற்றிற்கான பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் மலக் பிறவுண் தெரிவித்துள்ளாராம். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரதி அமைச்சர் பிறவுண் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளை தோல்வியுறச் செய்து ஜனநாயகத்தை அரசாங்க…
-
- 0 replies
- 699 views
-
-
வீரகேசரி இணையம் 7/16/2008 8:39:44 AM - மன்னார் விடத்தல் தீவு பகுதியை இராணுவத்தினர் இன்று காலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இப்பகுதியிலேயே கடற்புலிகளில் பிரதான தளம் அமைதுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 15 replies
- 3.1k views
-
-
சிறிலங்கா கடற்படையின் படுகொலையைத் தடுக்காத இந்திய அரசைக் கண்டித்து ஜூலை 27-இல் உண்ணாநிலைப் போராட்டம்: வைகோ [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:03 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா கடற்படையைத் தடுக்காத இந்திய மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் நாள், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நமது கடல் எல்லையி…
-
- 2 replies
- 680 views
-
-
தமது ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல்கட்டமாக 200பேர் திருகோணமலையில்; இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும
-
- 9 replies
- 2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு வீரகேசரி நாளேடு 7/16/2008 6:21:34 PM - இலங்கை வந்துள்ள பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் மலொக் பிரவுண் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து பேசியுள்ளார். கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பிரித்தானிய அமைச்சர் சந்திப்பில் தற்போதைய நாட்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார். பிரித்தானியா ஜனநாயக நாடாகும் அங்கு வெட்டிக்கொல்லும் சம்பவங்கள், படுகொலைகள் இடம்பெறுவதில்லை. நாட்டின் தற்போதைய ந…
-
- 0 replies
- 628 views
-
-
அளவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். அளவெட்டி அம்பனையில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அம்பனை மேற்கைச் சேர்ந்த இ.ரவீந்திரன் (வயது 48) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். அம்பனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர், மறுநாள் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அம்பனையில் இவர் விவசாயம் செய்து வந்தவர் என்றும் இவரது கொலைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெர…
-
- 0 replies
- 599 views
-