ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மாகாண சபைத் தேர்தல் மூலம் இந்தியாவின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சொற்படி கேட்டு நடக்கும் முதலமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வளங்களை கொள்ளையடிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று ஜே.வி. பி தெரிவித்துள்ளது. தொடர்ந்து படிக்க...
-
- 2 replies
- 975 views
-
-
2552ம் ஆண்டு புத்தஜயந்தியை முன்னிட்டு நேற்றிலிருந்து எதிர்வரும் 24ம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. தொடர்ந்து படிக்க...
-
- 0 replies
- 648 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சட்டவிரோதமாக பணம் கொடுத்து பயண ஆவணங்களைப் பெறும் தமிழர்களை மிரட்டியும் கடத்தியும் கப்பம் பெற்று வந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் சிறப்பு காவல்துறைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணையையும் மூடிமறைக்க முயற்சி வீரகேசரி நாளேடு 5/19/2008 9:41:22 AM - மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை மூடிமறைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணைகளையும் மூடிமறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களினதும் அதேவேளை பொலிஸாரினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசியல் கட்சியென்ற ரீதியில் எமது கடப்பாடாகும். இதற்காக மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து தொடர் போராட்டங்களை நடத்த கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரள்வோம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒத்து…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப்போவதில்லையென மிரட்டிவந்த ஹிஸ்புல்லா, அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவியைப் பெறுப்பேற்கத் தற்பொழுது இணங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லாவை அலரிமாளிகையில் சந்தித்து, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த ஹிஸ்புல்லா, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்கவு…
-
- 2 replies
- 2.1k views
-
-
கிழக்கு மகாண சபைக்கான தில்லு முல்லு தேர்தலும்! வடக்கில் நடாத்தபடும் கொலைக்கான அரசின் அங்கிகாரமும்! May 18,2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ, எல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, புலனாய்வு துறையினர் ஆகியோர் இணைந்து தீட்டிய சதித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளனர் பிள்ளையான், ஐயா கொசுரு ஞானம், கோவணம் இழந்த குமாரதுரை தாத்தா. அதன்படி கள்ள வாக்குகளும் வன்முறைகளும் நிறைந்த தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண சபை தேர்தலில் அதிக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதை கட்டுப்படுத்தி அதன் ஊடாக தமிழர்களின் பெரும்பான்மையை குறைப்பதும் தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடி…
-
- 0 replies
- 934 views
-
-
தலதா மாளிகையில் பிள்ளையான் தரிசனம்! May 18,2008 பிள்ளையானை கிழக்கின் முதலமைச்சராக்கி, தமிழினத்தைக் கேவலப்படுத்திய ராஜபக்சே தலதாமாளிகைக்கு அனுப்பி தலைமைக் குருவின் காலில் விழச் செய்து பிள்ளையான் தமிழனல்ல, வார்த்தெடுக்கப்பட்ட சிங்களவன் என்று தமிழுலகக்கு அறியப்படுத்தியுள்ளார் அம்பாந்தோட்ட காடையர் ராஜபக்சே! கொலை, கொள்ளை, ஆள்க் கடத்தல், பழி தீர்த்தல் போன்றவற்றினை கடந்த 3 ஆண்டுகளாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து திறம்பட செயற்பட்டு, கொள்ளைப் பணங்களை புலனாய்வு, மற்றும் ராணுவ சி;ப்பாய்களுடன் பங்கு போட்டது பிள்ளையான்தான் என்பது இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். இப்படியான ஒரு நபர்தான் தமிழர்களின் முதலமைச்சராகத் தகுதியுட…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் விவகாரத்தில் அப்பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சர்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவைத் தான் நியமிக்க வேண்டுமென்ற முஸ்லிம் அமைச்சர்களின் வற்புறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென்றும் அதற்கு மேலும் அவர்கள் அதே நிலைப்பாட்டில் இருந்தால் பாரளுமன்று கலைக்கப்படுமென்றும் மஹிந்த எச்சரித்துள்ளார். கிழக்கு மாகாண முதலலைச்சராக நியமிக்கப்படப் போவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவனான பிள்ளையானா அல்லது ஹிஸ்புல்லாவா என்ற போட்டி சூடு பிடித்திருந்த தருணத்திலேயே ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படாமல், பிள்ளையான் நியமிக்கபட்டால், தங்களது பதவிகளை இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பசி எனக்கூறி வீடொன்றுக்கு சென்ற முதியவர் ஒருவர் அங்கிருந்த தம்பதியருக்கு கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி கொடுத்து விட்டு பணம் மற்றும் சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவமொன்று புத்தளம் பகுதியில் இட்மபெற்றுள்ளது. புத்தளம் மேற்கு உப்பளம் வீதி இரண்டாம் ஒழுங்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது இப்பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சென்ற சுமார் 75 வயது மதிக்கதக்க முதியவரொருவர் தமக்கு மிகவும் பசியென கூறி உணவு கேட்டார் என்றும் பரிதாபப்பட்ட வீட்டாரும் அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது உணவு உண்டு முடிந்த முதியவர் சற்று உடல்நலக் குறைவான மேசன் தொழிலாளியிடம் நான் உங்களுக்கு மருந்து செய்து…
-
- 3 replies
- 2.5k views
-
-
கிழக்கு முதலமைச்சர் பதவி நியமனம் தொடர்பாக அரசுத் தலைமையுடன் முரண்பட்டு, அரசுக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனி வழி போகத் தீர்மானித்துள்ள ஹிஸ்புல்லா அணியினரை சமரசம் செய்து தம் வழிக்கு கொண்டுவரும் பகீரதப் பிரயத்தனத்தில் அரசத் தலைமை ஈடுபட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக ஹிஸ்புல்லாவை மஹிந்த நேற்று அலரிமாளிகைக்கு அழைத்தது அவருடன் பேச்சு நடத்தினார். இதேசமயம் கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையானும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹிஸ்புல்லாவுடன் பேசினார். மஹிந்த விடுத்த அழைப்பை ஏற்று ஹிஸ்புல்லா நேற்று அலரிமாளிகைக்கு சென்று மஹிந்தவைச் சந்தித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மற்றும் சிலரும் இந்தச் சந்திப்பில் பங்கு கொண்…
-
- 0 replies
- 787 views
-
-
க.நித்தியா தமிழ் மக்களின் திருப்தி நிலை எட்டப்படாத வரை போருக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்தேயாக வேண்டும் என்று "உலக அரசியல் கண்ணோட்டம்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை (15.05.08) அந்த இணையத்தளத்தில் வெளிவந்த இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பான ஆய்வுப் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்து வரும் போருக்கு அரசாங்கத்தின் மாறுபட்ட உபாயங்கள் பயன் அளித்ததாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரட்டங்களில் ஆரம்ப கட்ட வெற்றிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் : http://puthinam.com/
-
- 1 reply
- 959 views
-
-
பி.கெளரிஸ சிறிலங்கா கடற்படைத் தளபதிஇ தனது தனிப்பட்ட நலன்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளே திருகோணமலை துறைமுகத்தில் "இன்வின்சிபிள்" விநியோகக் கப்பல் மூழ்கிப் போவதற்கு காரணம் என்று "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு: நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் சோனார் கருவிகளை (SLPA sonar system) துறைமுக அதிகார சபை கொள்வனவு செய்த போதும் அது நிறுவப்படாது தற்போதும் பெட்டியில் தான் உறங்கி கிடக்கின்றது. இந்நிலையில் கடற்படை எம்வி இன்வின்சிபிள் என்ற விநியோகக் கப்பலை இழந்துள்ளது. எக்ஸ்- ரைப் ('X-Type' diver detection sonar system) எனப்படும் நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கைக்குக் கடிதம் ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்புக! எஸ்.எம்.ஜி. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்ற குரல் மீண்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலு மிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் சிங்கள ஆதிக்க சக்திகள் எந்தக் காலத்திலேயுமே இனப்பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு விரும்பியதில்லை. தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற ஜனநாயக வழியில் தமிழ் பேசும் மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பெரும்பான்மை ஜனநாயகத்தினரால் ஒடுக்கப்பட்டன. தமிழ் அரசுக் கட்சிக்கு முன்னர் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இலங்கையில் நாடாளுமன்ற நாயகம் நாட்டில் செயல்படுவதற்கு முயற்…
-
- 0 replies
- 563 views
-
-
சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடி உலக நாடுகளின் போக்கில் மாறுதல் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காககச் சிங்கள அரசுமீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கியுள்ளன. நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளாதார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கிவந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப் படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசா…
-
- 0 replies
- 620 views
-
-
சீனத்தின் மாணவர்கள், சிங்களரின் பங்காளிகள் - மருதமுத்து ஈழப்பிரச்சினையிலும், இலங்கையு டனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக் கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கிவரும் இந்திய அரசு தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத் துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம். 2006, செப்டம்பரில் திருகோணமலையில் சிங்களப்படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நட…
-
- 0 replies
- 521 views
-
-
கடற்படையின் செயற்பாட்டை சீர்குலைக்கும் கடற்புலிகள் [18 - May - 2008] விதுரன் நாட்டில் துறைமுகங்களினதும் கடற்படைத் தளங்களினதும் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கப்பல்கள் மீதான கடற்கரும்புலிகளின் இரு தாக்குதல்களையடுத்தே கடற்படையினர் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் இந்தப் பாதுகாப்பையும் மீறி கடற் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி விடலாமென்ற அச்சமும் அவர்களுக்குள்ளது. கடந்த வருடம் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து அழித்து மூழ்கடித்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர். இதில் உண்மையில்லாமலில்லை. கடற்படையினரின் இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சவாலாயிருந்த நிலையில் புலிகளின் ஆயுதக…
-
- 0 replies
- 973 views
-
-
அலரி மாளிகையில் பிள்ளையான் இருந்த போதே ஹிஸ்டன் முன்பாக குண்டு வெடித்தது Sunday, 18 May 2008 கொழும்பு கோட்டை ஹில்டன் ஹொட்டலுக்கு முன்பாக நேற்று முன்தினம் காவல்துறையின் பேரூந்துகளை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது அரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் விஷேட பிரமுகர்களுக்கான அறையிலேயே பிள்ளையான் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சர் பதவியேற்புக்காக கொழும்பு வந்திருந்த அவர் அரசுத் தலைவருடனான சந்திப்புக்காக அப்போது காத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக உருவாகியுள்ள சர்ச்சை தொடர்பாக தனியான அறை ஒன்றில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அப்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் அப்போது பேச…
-
- 1 reply
- 1.1k views
-
-
"வெசாக்' தின சிந்தனை 19.05.2008 இன்று வைகாசி விசாகம். வெசாக் பண்டிகையை அனுஷ்டிக்கும் தினம். இலங்கைத்தீவின் இரு பெரும் மதங்களான பௌத்தத்துக்கும், இந்து சமயத்துக்கும் போற்றுதற்குரிய மிக உயரிய திருநாள் இது. பௌத்த சீலத்தை உலகுக்குப் போதித்த கௌதம புத்தர் அவதரித்ததும், அரச மரத்தடியில் ஞானோதயம் பெற்றதும், அன்பு மார்க்கத்தைப் போதித்து பரிநிர்வாணம் அடைந்ததும் இந்த வைகாசிப் பௌர்ணமி நாளில்தான். சித்தார்த்த கௌதமரின் சிந்தனையில் இத்தினத்தில் சிறு ஒளிப்பொறியாக்கப்பட்டுத் தெறித்துத் தெளிந்த ஞானோதயம் உலகெங்கையும் ஆட்கொண்டது. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த அறிவியல் அதிர்வு இன்று வரை உலகை வளப்படுத்தி, வழிப்படுத்தி, வலுப்படுத்தும் ஓர் உயரிய…
-
- 0 replies
- 900 views
-
-
கடலடிக் கண்காணிப்புக் கருவிகளை வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலை! துறைமுக அதிகார சபைக்கு இப்படி இக்கட்டு கடலுக்கு அடியில் இடம்பெறும் செயற்பாடுகளைக் கண்டறிந்து கண்காணிக்கக்கூடிய "சோனார்' கருவிகளை கொழும்புத் துறைமுகத்தில் பொருத்துவதற்காகத் துறைமுக அதிகாரசபை கொள்வனவு செய்துள்ள போதிலும், கடற்படையின் ஒத்துழைப்பு இல்லாததால் இதனைப் பயன்படுத்த முடியாத இக்கட்டு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் கடற்படையின் விநியோக கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட சோனார் கருவி இலங்கையை வந்தடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ள ஆங்கில வார இதழ் ஒன்று எனினும்கடற்படையினர் இதனைப் பயன்படுத்துவதற்குத் துறைமுக அதி…
-
- 0 replies
- 807 views
-
-
யாழ் மாணவன் என்றால் அகதியா? வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்। இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்। இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் …
-
- 0 replies
- 985 views
-
-
கிழக்கு மண் தமிழருக்கு உரியதோ முஸ்லிம்களுக்கு உரியதோ அல்ல. இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே உரியது. கிழக்கு சிங்களவருடையதே. கிழக்கில் சிங்களவரின் உரிமை பறிக்கப்படுமானால் உரிமைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் நாம் தயார் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சங்கைக்குரிய எல்லாவள மோதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது. திகவாபிக்கு 12,000 ஏக்கர் காணி இருந்தது. இதை 560 ஏக்கர் காணியாக குறைத்தார் அஸ்ரப். அதற்கு எதிராக அப்போது நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்தோம். இப்போது அவரது மனைவி பேரியல் அஸ்ரப் வீடமைப்பு திட்டமொன்றை உருவாக்கி முஸ்லிம்களுக்கு மேலும் காணிகளை பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்துள்ளார். ஒரு பௌத்த புண்ணியத்தலத்துக்…
-
- 2 replies
- 937 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.9k views
-
-
கிழக்கின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரியா மஹாநாயக்க தேரர்களை இன்று பிற்பகல் 2.00 மணியளவில் (வைகாசி 18) சந்தித்து, ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, அபிவிருத்தியை ஆரம்பிக்க போவதாக பிள்ளையான் நாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளார். பின் மலையகத் தலைநகரில் இருந்து நீங்க முன் கிஷ்வுல்லாவிற்கு தொலைபேசியளைப்பை மேற்கொண்டு தன்னுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து கிழக்கை அபிவிரித்து செய்ய ஒத்துளைப்பை வளங்குமாறும் கேட்டுக்கொண்டார்!!! …
-
- 4 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் மன்றத்தின் தமிழ் விழா நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 549 views
-
-
மண் மீட்கும் போர் போன்று மொழி மீட்கும் போரிலும் வெல்வோம் என்று தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 940 views
-