ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராபக்சவும் முனைகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 876 views
-
-
பலாலி கூட்டுப்படைத் தளம் யாழ். குடாவில் உள்ள படைத் தளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இன்று காலை முதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளால் பலாலி படைத்தளத்தை நோக்கி கடுமையாக எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்த படையினர் பல்குழல் உந்து கணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிகள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை விடுதலைப் புலிகள் பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்தே தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்து சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகளும் அப்பகுதியில…
-
- 32 replies
- 8.2k views
-
-
தமிழின அழிப்பிற்கு தமிழரின் பணத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது - செ.வ. தமிழேந்தி தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு தமிழ்மக்களின் பணத்தை பயன்படுத்துவதாக தழிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழீழ வைப்பகவியற் கல்லூரியில் வைப்பகவியல் நிதியியல் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத்தெரிவித்ரதள்ளார். தமிழினத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய நிதியை சிறிலங்கா அரசாங்கம் தமிழின அழிப்பிப்பிற்கான யுத்த முன்னெடுகப்பிற்கா பயன்படுத்துவதாக கூறியுள்ளார். யாழ்குடாநாட்டில் இயங்கி வரும் தென்னிலங்கை வங்கியொன்றின் ஊடாக 2000 கோடி உரூபாக்களை திரட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.…
-
- 1 reply
- 1.3k views
-
-
வங்கக் கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு லெப் கேணல் குட்டிசிறி உட்பட்ட பத்து மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் வணக்க நிகழ்வு வடகிழக்கு இலண்டனிலுள்ள (Lloyds Park Theatreல்) 27.01.2008 நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மேஜர் இளங்குமரனின் சகோதரி திருமதி சந்திராதேவி யோகச்சந்திரன் ஏற்றிவைக்க அக வணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பித்தன. ஈகைச்சுடரினை மாவீரன் தமிழ் நம்பியின் சகோதரன் நல்லநாதன் பாலசிங்கம் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தினை லெப்.வண்ணனின் சகோதரன் ஆறுமுகம் யோகச்சந்திரன் ஆரம்பித்து வைத்தார். மேடையில் வடகிழக்கு இசைக் கலைஞர்கள் எழுச்சி கானங்கள் இசைக்க வடகிழக்கு இலண்டன் வாழ் உறவுகள் தமது மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினை செ…
-
- 0 replies
- 859 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கள் 28-01-2008 15:57 மணி தமிழீழம் [தாயகன்] பூநகரியில் மக்கள் குடியிருப்பு மீது விமானக் குண்டுவீச்சு கிளிநொச்சி, பூநகரியில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படை விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : 2008-01-28 காலம் கடந்த ஞானம் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்துக் காலங்காலமாகத் தமது அரசியல் அதிகாரப் போர்களை நடத்தி வரும் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களத் தலைமைகள், குரூர வடிவிலான அரச அடக்குமுறையை சிறுபான்மைத் தமிழர்கள் மீது ஏவிவிடுவதை ஒரு பழக்கமாகவும், அந்தப் பழக்கத்தின் மூலம் தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்வதை ஒரு வழமையாகவும் கைக்கொண்டு வருகின்றன. அந்தத் துன்பியல் போக்கின் மிக மோசமான விளைவுகளையே இலங்கைத் தீவு எதிர்கொண்டு அந்தரித்து நிற்கின்றது. அரை நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்கில். "காலம் கடந்த அரசியல் ஞானம்' தென்னிலங்கைக்குப் பிறப்பதும் ஓர…
-
- 2 replies
- 1.5k views
-
-
அம்பாறையில் பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை அம்பாறையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 4 replies
- 1.3k views
-
-
லண்டனில் இருந்து வந்தவரின் பெறுமதிமிக்க பொருட்கள் மாயம் [28 - January - 2008] லண்டனில் இருந்து விடுமுறையில் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த குடும்பத்தவர் ஒருவரின் பெறுமதிமிக்க பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஈ.கே.26 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் 21 ஆம் திகதி பி.ப.1.30 மணிக்கு முதலில் துபாய்க்கு பயணமானார். ஏழு மணி நேரப்பயணத்தின் பின்னர் துபாய் நேரப்படி 12.55 க்கு துபாய் விமான நிலையத்தையடைந்தார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் ஈ.கே.559 இலக்க விமானத்தில் மாலை 5.30 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்த…
-
- 4 replies
- 1.9k views
-
-
கெப்பித்திக்கொல்லாவ சடலங்களும் மனித உரிமைகள் நிலைவரமும் [28 - January - 2008] இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ என்பதைப்பற்றி கிஞ்சித்தும் ஆராய்ந்து பார்க்காமல் அவற்றைக் கண்டனம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமென தென்னிலங்கையில் ஒரு அரசியல் சக்தி கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தினால் அரசாங்கத்தின் மீது தெரிவிக்கப்படக் கூடிய கண்டன விமர்சனங்கள் குறித்து அமைச்சர்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு முன்னதாகவே இந்த அரசியல் சக்தி முண்டியடித்துக்கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த சக்தியின் பிரதான உறுப்பினர்களாக ஜனதா விமுக்தி பெரமுனை…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 3 இடம்பெயர்ந்த பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளானர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 704 views
-
-
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
மணலாறு, மண்கிண்டிமலை, ஜனகபுரம் ஊடான முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிப்பு. [sunday January 27 2008 07:22:39 AM GMT] [யாழ் வாணன்] மணலாறு மண்கிண்டிமலை ஜனகபுரம் பகுதிகளின் ஊடாக நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 2.00 மணிக்கு சிறிலங்காப் படையினர் பலத்த ஆட்லெறி மோட்டார்களின் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி முன்னேற்ற முயற்சியை ஆரம்பித்தனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்தாக்குதல்களை மேற்கொண்டனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரண்டரை மணிநேரம் கடுமையான சண்டைகள் இடம்பெற்…
-
- 1 reply
- 2k views
-
-
போராளி தூயவனின் "வனத்தாய் மடி" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2008-01-27 புதுடில்லி நிர்வாகத்தை ஏமாற்றவும் மஹிந்தரின் அரசு திடசங்கற்பம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்தும்படி சர்வகட்சி பிரதிநிதி கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிபார்சு செய்திருக்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவ டிக்கையாக அதனைச் செய்யும்படி அது வேண்டியி ருக்கின்றது. இத்தகைய வேண்டுகோளுக்கான காய்நகர்த்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்ட தந் திர வேலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்தக் காய் நகர்த்தலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இந்தியா கருத்து வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கின்றது. இ…
-
- 1 reply
- 994 views
-
-
இடைக்கால நிர்வாக சபையை அமைக்க ஒருபோதும் இடமளியோம் - ஜெ.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க வடக்கில் அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபை மக்களின் தேவைக்காக அமைக்கப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகவே இனவாத அடிப்படையில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது. இடைக்கால நிர்வாக சபையினை அமைக்க ஒருபோதும் இடமளியோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். தேசப்பற்றுள்ள சகல சக்திகளையும் இணைத்து எதிர்த்துப் போராடி இடைக்கால நிர்வாக சபையினை தடுத்து நிறுத்துவோம். இன்று ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்பதை மறந்து சுதந்திரக் கட்சியின் தøலவராகவே செயற்படுகின்றார் என்றும் அவர் கூறினார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள "சத்சிறிபாய" மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்ற…
-
- 0 replies
- 667 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்பு வடக்கில் இடைக்கால நிர்வாக ஆலோசனை சபையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான 5 பேரடங்கிய நிர்வாகக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
13 ஆவது திருத்தம்: ஒரு பொறியா? [27 - January - 2008] [Font Size - A - A - A] -விதுரன்- இலங்கைப் பிரச்சினைக்கு புதுவடிவம் கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முனைகிறார். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட யோசனையொன்றை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வர முயல்கிறார். தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஏமாற்ற முயலும் அவரது நாடகத்திற்கு சில தமிழ் அமைப்புகளை துணைக்கிழுத்துள்ளார். போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த மறுநாளே அரசு தீர்வு யோசனை குறித்து பெரும் ஆரவாரம் செய்தது. போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகியதால் நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்படப்போவதாக உலக நாடுகள் கடுமையாக எச்சரித்த நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து விட்டதாகவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார் 1/27/2008 7:34:39 PM வீரகேசரி நாளேடு - கண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பது மலையக மக்களின் உடனடித் தேவைகளை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் குறிப்பிட்டார். தோட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தளை, கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இலவசமாக பத்து கிலோ அரிசியும் ஒரு கிலோ அரிசி மாவும் வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாள…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் மீதான தடையை நீக்க விடுதலை சிறுத்தைகள் தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 27, 2008 சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு உடனே நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் இன்று நடந்த கருத்துரிமை மீட்புப் பேரணி மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சில இலங்கை தமிழ் எம்பிக்களும் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காகத் தான் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகச் சமுதாயம் ஜனநாயக இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவாதத்தின் கொடுமைக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வரும் தமிழர்களுக்கு …
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய கடவுச்சீட்டு மோசடி: கருணாவிற்கு 24 மாத சிறைத் தண்டனை [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 08:32 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] பிரித்தானியாவிற்குள் இராஜதந்திரிகளுக்கான போலிக் கடவுச்சீட்டுடன் நுழைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணாவிற்கு 24 மாத சிறைத்தண்டனையை பிரித்தானிய நீதிமன்றம் வழங்கவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கருணா, உயிர் தப்பும் நோக்கத்துடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஒடியிருந்தார். அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கி செய்திருந்தது. எனினும…
-
- 27 replies
- 5.3k views
-
-
இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: இந்தியா வலியுறுத்தல் கொழும்பு, ஜன.27-: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதையே இந்தியா விரும்புகிறது என இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார். இலங்கை அரசு அண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இது பிரச்சினையை தீர்க்க உதவாது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் இந்தியாவின் குடியரசு தினத்தையட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தீர்மானமான நம்பி…
-
- 3 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கு உதவுகிறார்களா? வீரப்பன் கூட்டாளிகள் கண்காணிப்பில் 1/27/2008 5:38:10 PM வீரகேசரி நாளேடு - கோவை, விடுதலைப்புலிகளக்கு உதவும் குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறை பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக அண்மைக்காலங்களில் தமிழகத்தில் பலரை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.அகதிகள் முகாமிலும் சந்தேகத்திற்குரிய இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டள்ளது. இந்நிலையில் விடதலைப்புலிகளை ஆதரித்து வரும் அரசியல் கட்சிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சில அபைப்புக்கள் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கியுள்ளன. சந்…
-
- 0 replies
- 2k views
-
-
________________________________________________________________________________ _____
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினது எதிர்வினைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற யுத்தம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரான சிங்களவரான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-