Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன் 16-01-2008 19:33 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - சந்தேகத்தில் டெல்லியில் மூவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான இந்திய கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவரும் டெல்லி காவல்துறை, மற்றும் புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பகர்கான்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள், 29 அகவையுடைய பிரான்சிஸ் ஜான்சன், 28 அகவையுடைய திஸவீரசிங்கம் ரஞ்சித், 22 அகவையுடைய ஜொன் மேரி அகஸ்ரான் என்றும், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்வர் ஐயங்கண்ணு எனவும் அடையாளம் க…

  2. சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு புலிகளின் குரலின் செயற்பாடுகள் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  3. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:20 மணிக்கும் 2:40 மணிக்கும் சிறிலங்கா வான்படையின் கிபீர் மற்றும் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 771 views
  4. அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  5. வங்கக்கடலில் வீரவரலாறான மூத்த தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வேங்கைகளினதும், 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று தமிழீழ மக்களால் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 698 views
  6. போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை 16.01.2008 இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட கால…

  7. கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டுதாங்கிய விமானம் 16.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானநிலையமான கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இன்று குண்டுதாங்கிய விமானம் ஒன்று விமானநிலையத்தில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் சங்கதி

  8. சிறிலங்காவில் உள்ள அரசியல் கட்சிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  10. இலங்கைக்கு பொருளாதார உதவி தொடரும் - ஜப்பான் இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவிகளை வழங்கிவரும் ஜப்பான் அரசு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றது என்று கொழும்பிற்கு மூன்று நாட்கள் அவசர விஜயம் ஒன்றினை முடித்துக்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இன்று தெரிவித்திருக்கிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்ற இலங்கையின் உத்தியோகபூர்வ முடிவுகுறித்து தனது கவலையினையும், இதனால் நாட்டில் ஏற்படக்கூடிய அதிகரித்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற அச…

  11. மட்டு. ஆரையம்பதி கிழக்கு செல்வாநகா கடற்கரைப்பபுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயம் இனந் தெரியாத விஷமிகளால் தாக்கி சேதமாக்கபட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நரசிங்க வைரவர் ஆலயத்தின் தலைவர் பஞ்சாடசரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது : 'கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடி கர்பாலா பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து இப் பகுதியின் எல்லையோரக் கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்தத…

  12. 'விடுதலைப் புலிகளைத் தடை செய்து அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கைவிட்டு சர்வகட்சிகள் ஆனைக்குழுவைக் கலைத்தால் மட்டுமே புலிகளுக்கு எதிரான நடவடிக்ககைளுக்கு தேசப்பற்றாளர்களின் ஆதரவைத் திரட்ட முடியும்'. இவ்வாறு ஜே.வி.பி நேற்று விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் அரிசியல் சபை விடுத்திருக்கும் அறிக்ககையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :- மக்கள் பாரிய சாவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அரச நிர்வாகத்தின் சீர்கேடுகளினால் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. அதிகரிதுச் செல்லும் வாழ்க்கைச் சுமையை குறைக்காவிடின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடியாது. புலிகளைத் தடை செய்வதுடன் …

  13. புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து "கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார். சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானத…

  14. ""தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கான நியாயமான அரசியல் தீர்வை சிங்கள அரசு வழங்கும் என்று சர்வதேச சமூகம் இனியும் நம்பிக்கொண்டிருக்கக்கூடாது. அவர் களின் வெளியக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க சர்வதேச சமூகம் முன்வரவேண் டும்'' இவ்வாறு வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இலங்கைக்கான ஜப்பான் தூத ரகத்தில் நேற்றிரவு 7 மணிமுதல் 8.15 மணி வரை இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, என்.ஸ்ரீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், கே. துரைரட்ணசிங்கம், த.கனகசபை, எம். ஜெயானந்தம…

  15. பெரும்போர் மூளும் அபாயம்! சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்! அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்! - பழ. நெடுமாறன் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர். சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொ…

  16. நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல் தொடர்பான பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் தலைவரும், மேலக மக்கள் முன்னணியினி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  17. வெண் புறா அமைப்பின் பேரில் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் நிதி சேகரிப்பு இலங்கை குற்றச்சாட்டு 1/15/2008 10:12:53 PM வீரகேசரி இணையம் - லண்டனிலும் ஐரோப்பாவிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் சில முன்னணி அமைப்புகள் ஊடாக மறைமுகமாக மில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:புலிகளின் இத்தகைய நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் நடைசெய்துள்ள போதிலும் சில தென் இந்திய திரைப்பட நடிகர்களின் ஆதரவுடன் இந்நிதி சேகரிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை தனது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து லண்டனில…

    • 2 replies
    • 1.3k views
  18. தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  19. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் http://www.yarl.com/videoclips/view_video....18a51b1e1f1b0ba

  20. தசநாயக படுகொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார் நடேசன் விடுதலைப் புலிகளின் பா நடேசன் சமீபத்தில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை அமைச்சர் தசநாயக படுகொலைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று அந்த அமைப்பின் அரசியல் துறை பொருப்பாளர் பா நடேசன் பி பி சியிடம் தெரிவித்தார். பொருளாதார மற்றும் ராணுவம் சாரா இலக்குகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும், ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க முடியும் என்று தாம் நம்புவதாகவும், அதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் பி பி சியிடம் தெ…

  21. பிரணாப் முகர்ஜீ ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் ஒரு பகுதி :- இலங்கை பிரச்சினையை பொறுத்த வரை இந்தியா அதில் அங்கம் இல்லை, எனவே போர் நிறுத்தம் வாபஸ் தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது அதில் அங்கத்தினராக இருக்கவும் விரும்வில்லை, எங்களை இந்த விஷயத்தில் இழுத்து விட முயற்சி நடக்கிறது. வெளிப்படையாகவே இதை தவிர்த்து வருகின்றோம். ஏன் என்றால் இதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம். நன்றி மாலை மலர்.

    • 6 replies
    • 2.6k views
  22. மட்டக்களப்பில் கிளேமோர் தாக்குதல் அதிரடி படை வீரர் காயம் [Tuesday January 15 2008 08:17:22 AM GMT] [யாழினி] மட்டக்களப்பு கல்லடி மின்சார சபை அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தவர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது tamilwin.com

  23. சண்டை தொடர்கிறது தமிழநெற்றில் செய்தி......... Heavy fighting in Mannaar, 30 SLA killed - LTTE [TamilNet, Monday, 14 January 2008, 13:56 GMT] Liberation Tigers of Tamileelam Operations Command in Mannaar has claimed to have thwarted a major push by the Sri Lanka Army launched in Parappaangka'ndal area on Monday. SLA ground forces attempted to advance into LTTE territory with the fire support of Sri Lanka Air Force and heavy Multi-Barrel Rocket and artillery fire. The SLA movement was thwarted after almost 8-hours of stiff resistance. At least 30 SLA soldiers were killed and more than 100 soldiers were wounded, , the Tigers said.

    • 13 replies
    • 6.6k views
  24. லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தி ஆசிரியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை 1/15/2008 11:35:10 AM வீரகேசரி இணையம் - பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குறித்து லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட செய்தி தொடர்பில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் பெனாட் ரூசிங்கவை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் நேற்று மாலை விசாரணைக்குட்படுத்தியுள்ளன

    • 0 replies
    • 1.4k views
  25. மக்களின் முதுகில் சவாரி செய்யும் அரசியல் [15 - January - 2008] [Font Size - A - A - A] கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு திராணியற்றதாக இருக்கும் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை மீண்டும் அதிகரித்ததன் மூலம் மக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும் டீசலின் விலையை 5 ரூபாவாலும் மண்ணெண்ணெயின் விலையை 2 ரூபாவாலும் அதிகரித்திருக்கிறது. இதன் பிரகாரம், ஒரு லீற்றர் (90 ஒக்ரேன்) பெற்றோலின் தற்போதைய வி…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.