ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
தொடர் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்குவதே சிறிலங்காப் படையினரின் உத்தி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துச் செயற்பட துணை இராணுவக் குழுக்கள் முயற்சித்த போதும் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து அங்குள்ள துணை இராணுவக்குழுக்கள் இரண்டாகப் பிளந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதில்லையென ஹெல உறுமய தீர்மானம் ஐ.தே.க., ஜே.வி.பி. ஆராய்வு [sunday January 06 2008 05:36:26 PM GMT] [யாழினி] கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டால் மாத்திரமே தேர்தல்களில் போட்டியிட முடியும் என்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்படி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் நாளை திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக மேற்படி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தகவல் தரும் போதே மேற்கண்டவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
கொழும்பு கொம்பனித் தெருவில் கடந்த வாரம் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கு முன்னா அப்பகுதியில் நடமாடித் திரிந்த சந்தேத்துக்குரிய பெண் ஒருவர் தொடர்பாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மேற்படி கிளைமோர் தாக்குதலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு ஏதும் உண்டா என்று குறித்து பொலிஸார் துருவி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 39 பேரிடம் இதுவரை வாக்கு மூலம் பெறப்பட்டது என்றும் மூன்று பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர விpசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நன்றி சுடர் ஒளி
-
- 1 reply
- 2.7k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் மத்தியஸ்தம் வகிக்க மலேசியா தயார் [07 - January - 2008] ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய மலேசியா தயாராகின்றது. ஏற்கனவே, பொஸ்னியா ஹரசக்கொவின்னா, முன்னாள் யூகோசிலாவியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தம் செய்த நீண்ட கால அனுபவம் மலேசியாவுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் ஓர் சில நாடுகளின் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக வெளியேறியதையடுத்து, உயிரிழப்புகள் பாரிய அளவில் அதிகரிக்கல…
-
- 8 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைக்கான பாதையை சாள்ஸ் போட்டுச் சென்றுள்ளான் - ச.பொட்டு விடுதலைப் பேராட்ட வரலாற்றில் பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர் கேணல் சாள்ஸ் என தமிழீழ புலனாய்வுப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது... சாள்ஸ் இன்று எம்மை விட்டு மறைந்துவிட்டார் நிலையில் தமிழீழத்திற்கான வரலாற்றிலே, சாள்ஸ் எவ்வாறு நினைவு கூரப்படுவார். அல்லது எவ்வாறு நினைவு கூரப்படுவதற்கு பொருத்தமானவனாவான், தமிழீழம் எவ்வாறு அவனை நினைவு கொள்ளும் என்ற எண்ணம், கேள்வி என்முன்னே எழுந்து நிற்கிறது. எனது மனதில் எ…
-
- 2 replies
- 2.1k views
-
-
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். …
-
- 32 replies
- 5.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....677c739ee173448 புத்தாண்டும் போராண்டும் - அவசிய அறிக்கை 16 04.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 2k views
-
-
முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும் சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன. இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலி…
-
- 10 replies
- 4.6k views
-
-
திங்கள் 07-01-2008 20:03 மணி தமிழீழம் [தாயகன்] யாழ், மணலாறு, வவுனியாவில் நேரடி மோதல்கள் யாழ் முகமாலை, வவுனியா நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 அளவில் முகமாலையிலும், 8.00 மணியளவில் நாவற்குளத்திலும் இரு தரப்பிற்கும் இடையில் திடீர் மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இதேவேளை, மணலாற்றிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வே நாட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான "முன்னணியில் 10" (Top 10) பட்டியலில் தமிழரான ஊடகவியலாளர் இராஜன் செல்லையா தெரிவாகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
மன்னார் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் சாள்சின் வித்துடல் இன்று தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் ஆகியோர் விடை கொடுக்க முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். முகமாலை முன்னரங்க நிலைகள் ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து படையினரை அவர்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 913 views
-
-
02.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....85ca5b5690ee529
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. -பாரிமகன் செய்தி மூலம் : http://www.sooriyan.com/ விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்
-
- 46 replies
- 10.7k views
-
-
போர் நிறுத்தத்தை நிராகரித்து அரசு சர்வதேச வெறுப்பைத் தேடியுள்ளது கடுமையாகக் கண்டிக்கிறது ஐ.தே.க போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் பொறுப்பை ஒருதலைப்பட்சமாகத் தனது தோளில் போட்டுக்கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு எஞ்சியிருப்பது சர்வதேச வெறுப்பாகும். இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசின் முடிவை கடும் விசனத்துடன் கண்டித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் தீர்மானம் குறித்து ஐ.தே.கட்சி நேற்று விடுத்த விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 3.7k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய சிறிலங்கா அரசாங்கம் அடுத்த சில நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவும் தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன் வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார். வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது நெடுமாறன் பேட்டி உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு; கேள்வி: இந்தியா…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்துடன் தான் கொண்டுள்ள முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியேறவுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு -விதுரன்- போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தன் மூலம் முழு அளவிலான போருக்கு அரசு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு அடியோடு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இதனால் அரசின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகளும் முழுஅளவில் தயாராக வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது. வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளை கண்காணிக்கவும் அவர்களின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் 100 விஷேட கமாண்டோக்களைக் கொண்ட நவீன போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை இராமேஸ்வரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு போர்நிறறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும் விடுதலைப்புலிகள் கடல் வழியாக இராமேஸ்வரம் கடற்பகுதியில் எந்த நேரத்திலும் ஊடுருவும் ஆபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளை இந்திய கடற்படை உஷாராக…
-
- 0 replies
- 2.6k views
-