ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் http://www.yarl.com/videoclips/view_video....18a51b1e1f1b0ba
-
- 1 reply
- 1.4k views
-
-
வெண் புறா அமைப்பின் பேரில் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் நிதி சேகரிப்பு இலங்கை குற்றச்சாட்டு 1/15/2008 10:12:53 PM வீரகேசரி இணையம் - லண்டனிலும் ஐரோப்பாவிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் சில முன்னணி அமைப்புகள் ஊடாக மறைமுகமாக மில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:புலிகளின் இத்தகைய நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் நடைசெய்துள்ள போதிலும் சில தென் இந்திய திரைப்பட நடிகர்களின் ஆதரவுடன் இந்நிதி சேகரிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை தனது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து லண்டனில…
-
- 2 replies
- 1.3k views
-
-
மனித உரிமைகளைப் பேண வேண்டும் - லூயிஸ் ஆர்பர் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக சிறீலங்கா அரசு விலகியுள்ள நிலையில், மனித உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துலக சட்டத்தை சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் மதித்து நடக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வலியுறுத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.1k views
-
-
தசநாயக படுகொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார் நடேசன் விடுதலைப் புலிகளின் பா நடேசன் சமீபத்தில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை அமைச்சர் தசநாயக படுகொலைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று அந்த அமைப்பின் அரசியல் துறை பொருப்பாளர் பா நடேசன் பி பி சியிடம் தெரிவித்தார். பொருளாதார மற்றும் ராணுவம் சாரா இலக்குகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும், ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க முடியும் என்று தாம் நம்புவதாகவும், அதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் பி பி சியிடம் தெ…
-
- 1 reply
- 2k views
-
-
தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.6k views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தி ஆசிரியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை 1/15/2008 11:35:10 AM வீரகேசரி இணையம் - பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குறித்து லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட செய்தி தொடர்பில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் பெனாட் ரூசிங்கவை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் நேற்று மாலை விசாரணைக்குட்படுத்தியுள்ளன
-
- 0 replies
- 1.5k views
-
-
மக்களின் முதுகில் சவாரி செய்யும் அரசியல் [15 - January - 2008] [Font Size - A - A - A] கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு திராணியற்றதாக இருக்கும் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை மீண்டும் அதிகரித்ததன் மூலம் மக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும் டீசலின் விலையை 5 ரூபாவாலும் மண்ணெண்ணெயின் விலையை 2 ரூபாவாலும் அதிகரித்திருக்கிறது. இதன் பிரகாரம், ஒரு லீற்றர் (90 ஒக்ரேன்) பெற்றோலின் தற்போதைய வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் கிளேமோர் தாக்குதல் அதிரடி படை வீரர் காயம் [Tuesday January 15 2008 08:17:22 AM GMT] [யாழினி] மட்டக்களப்பு கல்லடி மின்சார சபை அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தவர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது tamilwin.com
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு முகத்துவாரத்தில் கடற்படையினரால் வெடிபொருட்கள் மீட்பு 1/15/2008 11:34:30 AM வீரகேசரி இணையம் - கொழும்பு முகத்துவாரம் பிரதீபா மண்டபத்திற்கும் காக்காதீவிற்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து வெடிப்பொருட்களை கடற்படையினர் நேற்று இரவு மீட்டுள்ளனர். சி4 ரக வெடி பொருட்கள் எட்டு கிலோ கிராம், சைக்கில் சில்லுகள் போன்றவை இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். இப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனைக்குட்படுத்தியபோது இவை மீட்கப்பட்டதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2008-01-15 இனி பொங்கலா? போரா? இன்று தைத் திருநாள் முதல் தினம். தைப் பொங்கல். இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தைப் புரிந்த தமிழர்கள் அதன் தெளிவாய்த் தேர்ந்து போற்றும் திருநாள் இது. அவனியின் அசைவியக்கத்திற்கு மூலமும் முதலும் ஆதவன். அவனின்றி அணுவும் அசையாது. சக்தியின் உறைவிடம் அவன்; ஊற்றுக்கண்ணும் அவனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் காரணம் அவன். ஆதவனின் அந்த சக்தியை உலகில் பதிக்கும் பணி பச்சைத் தாவரங்களுக்குரியது. சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை தாவரவர்க்கங்கள். உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித்தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது விஞ்ஞானம். இந்த அறிவியல் அறிவையும் தாண்டி மெஞ்ஞானமும் உணர்ந்திருந்த தமி…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவுக்கு தொடர்ச்சியாக யப்பான் உதவிகளை வழங்கும்: அகாசியின் உறுதிமொழி சிறீலங்காவுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க, யப்பானின் சிறப்பு சமாதான தூதுவர் அகாசிக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. நாற்பத்தைந்து நிமிடம் அகாசிக்கும் சிறீலங்கா அதிபருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது. சிறீலங்கா ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தில் இருந்து விலகியதற்கான நியாயங்களை மகிந்த ராஜபக்ச அவர்கள், அகாசிக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிய வருகின்றது. வருகிற சனவரி 23ம் திகதி மகிந்த ராஜபக்ச அவர்கள், அனைத்துக் கட்சி குழுவின் ஒத்துழைப்புடன் அதிகாரப் பகிர்வுத் திட்டத் தீர்வை சமர்ப்பிப்பார் என அகாசி அவர்கள் மீண்டும் தனது நம்பிக்கையை வெளிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரணாப் முகர்ஜீ ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் ஒரு பகுதி :- இலங்கை பிரச்சினையை பொறுத்த வரை இந்தியா அதில் அங்கம் இல்லை, எனவே போர் நிறுத்தம் வாபஸ் தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது அதில் அங்கத்தினராக இருக்கவும் விரும்வில்லை, எங்களை இந்த விஷயத்தில் இழுத்து விட முயற்சி நடக்கிறது. வெளிப்படையாகவே இதை தவிர்த்து வருகின்றோம். ஏன் என்றால் இதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்து விட்டோம். நன்றி மாலை மலர்.
-
- 6 replies
- 2.6k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்துக்கான அமைத்தித் தீர்வு இன்னது தான் என்று புதுடில்லி வெளிப்படுத்தாது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக அந்த மக்கள் ஜனநாயக ரீதியில் தமது முடிவைத் தெரிக்கக்கூடிய காலம் கனியும் வரை வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், உத்தேச அதிகாரப் பகிர்வுத் திட்டம் அரசமைப்பின் 13வது திருத்ததுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதையும், புதுடில்லி இராஜதந்திர ரீதியிலும் மட்டத்திலும் தொடர்ந்த வலியுறுத்தும். விடயமறிந்த வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டன. இந்தியத் தரப்பு இலங்கை இனப் பிரச்சினை விவகாரம் தொடர்பாகத்த தமிழர் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருடனும் தொடாந்து கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 635 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விள்ககமளித்திருப்பதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை இரத்துச் செய்யக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 581 views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 952 views
-
-
13.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....35d7baf04342e1c
-
- 0 replies
- 1.5k views
-
-
சண்டை தொடர்கிறது தமிழநெற்றில் செய்தி......... Heavy fighting in Mannaar, 30 SLA killed - LTTE [TamilNet, Monday, 14 January 2008, 13:56 GMT] Liberation Tigers of Tamileelam Operations Command in Mannaar has claimed to have thwarted a major push by the Sri Lanka Army launched in Parappaangka'ndal area on Monday. SLA ground forces attempted to advance into LTTE territory with the fire support of Sri Lanka Air Force and heavy Multi-Barrel Rocket and artillery fire. The SLA movement was thwarted after almost 8-hours of stiff resistance. At least 30 SLA soldiers were killed and more than 100 soldiers were wounded, , the Tigers said.
-
- 13 replies
- 6.6k views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படையினர் இருவர், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் நான்கு முனைகளில் நகரும் படையினரின் உத்திகள் காகிதங்களில் எழுதப்படும் போது மிகவும் இலகுவானதாக தெரியலாம். ஆனால் களத்தில் அப்படியல்ல என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
குழந்தைகள் கடத்தல் [14 - January - 2008] [Font Size - A - A - A] ஆட்கடத்தல், படுகொலைகள், கப்பம் அறவிடுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை ஒருபுறமிருக்க, பச்சிளம் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் குரூரத்தனமான நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்பட்ட செல்வந்தப் பெண் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் ஒத்தாசை புரிவத…
-
- 1 reply
- 1.8k views
-
-
அயர்லாந்திற்கான விசாவிணை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 1/14/2008 12:56:20 PM வீரகேசரி இணையம் - எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் அயர்லாந்து விசாவிற்கு இலங்கையர்கள் இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியுமென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பப்டிவத்தினை இணையம் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் www.inis.gov.ie என்ற இணையத்தள முகவரி மூலம் விசா விண்ணப்பபடிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என அயர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது
-
- 1 reply
- 3.6k views
-