ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
சமஷ்டி பற்றி வாய் திறக்காதீர்கள்! – தமிழ்த் தலைவர்களை எச்சரிக்கிறார் சாந்த பண்டார “தயவுசெய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என்று தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் . ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வடக்கு – கிழக்குதமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்குச் செல்கின்ற போது தமிழ் மக்கள் அரசியல் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. …
-
- 0 replies
- 688 views
-
-
13 ஆவது திருத்தம் எலும்புக்கூடு க.அகரன் நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அது ஓர் எலும்புக்கூடு எனவும் அதில் எதுவும் இல்லை என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்தது. “13ஆவது திருத்தத்தை நீக்குமாறு பிக்குகளும் பல சிங்கள அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதையும் இது காட்டுகிறது. 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் 2/3 பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈகைப்பேரொளி…
-
- 0 replies
- 221 views
-
-
13ஆவது திருத்தத்தை வலியுறுத்த இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என்கின்றார் சரத் வீரசேகர 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு அமுல்படுத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், அடிப்படை பிரச்சின…
-
- 0 replies
- 606 views
-
-
சீனா நெருங்கிய நண்பன், இந்தியாவின் உறவையும் சீர்குலைக்கோம் – வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவுடன் எப்போதும் கைகோர்த்து செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை சீர்குலைக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார். கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாகரீகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான பிணைப்பு காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்…
-
- 0 replies
- 232 views
-
-
மார்ச் 9 க்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் – எச்சரிக்கும் பீரிஸ் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்த பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதோடு அதன் முடிவுகள் பெரிய அலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் மிக…
-
- 0 replies
- 143 views
-
-
நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள். விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்க…
-
- 4 replies
- 965 views
-
-
தனித் தமிழ் கட்சியில் தான் இனி தேர்தல்களில் போட்டியிடுவேன் -வியாழேந்திரன் கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தனித் தமிழ்க் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில்…
-
- 3 replies
- 531 views
-
-
தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்ன? உலகத்தமிழர் மாநாட்டை கூட்டி தீர்மானிக்க வேண்டும் - இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சிறிதரன் எடுத்துரைப்பு Published By: Nanthini 12 Feb, 2023 | 01:29 PM ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள், தென்னிந்திய தமிழ் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட தலைமைகள் ஒன்றிணைந்து ஆராய வேண்டும். இது குறித்த மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த த…
-
- 2 replies
- 238 views
-
-
கிழக்கு மக்களை ஏமாற்றிய இந்திய அரசியல்வாதிகள்..! இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய அரசியல் வாதிகள் வட மாகாணத்துக்கு மட்டும் சென்று அங்குள்ள பிரச்சினைகளை கேட்டு அறிந்து சென்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை முன் வைப்பதற்காக பாரிய எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர். ஆனாலும் இந்திய குழுவினர் வடக…
-
- 1 reply
- 806 views
-
-
தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி!! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 411 views
-
-
197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபாய் காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை பூர்வீக மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காசோலைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. …
-
- 1 reply
- 453 views
-
-
மீண்டும் பிரதமராகின்றார் மஹிந்த ராஜபக்ஷ ?? இரண்டு முறை ஜனாதிபதியும் மூன்று முறை பிரதமருமாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 77 வயதான அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வினவியபோது, கட்சி எடுக்கும் முடிவு இறுதியானது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டில் வன்முறை மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார். இதேவேளை இந்த வார தொ…
-
- 1 reply
- 491 views
-
-
'யாழ்ப்பாண கலாசார நிலையம்' ஜனாதிபதியினால் திறந்து வைப்பு 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' ஜனாதிபதியினால் திறந்து வைப்பு. "கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்" "வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்" - 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' திறப்பு விழாவில் ஜனாதிபதி நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
-
- 1 reply
- 372 views
-
-
கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் அமைதியின்மை ஏற்படும் – சரத் வீரசேகர எச்சரிக்கை கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்ட…
-
- 1 reply
- 721 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன - வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா Published By: Nanthini 12 Feb, 2023 | 11:43 AM (நமது நிருபர்) மறுமலர்ச்சியை நோக்கி வட மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவ்விதமான அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (11) நடைபெற்ற இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலைய கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவா…
-
- 0 replies
- 261 views
-
-
Published By: Digital Desk 5 11 Feb, 2023 | 04:19 PM யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) …
-
- 3 replies
- 566 views
-
-
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல என்பதால் சமஷ்டி, அல்லது 13ஐ முழுமையாக செயல்படுத்தும் பொலிஸ், காணி அதிகாரம் வழங்குதல் போன்ற முயற்சிகளை கைவிட்டு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுபற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் ஏற்பட்ட அரகலய போராட்டம் என்பது நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கும்படியான போராட்டம் அல்ல. மாறாக கோட்டாபயவின் கர்வமிக்க, ஆலோசனையற்ற பிழையான ஆட்சி காரண…
-
- 8 replies
- 492 views
-
-
கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள் ! கடலோர நகரமான புத்தளம் கற்பிட்டியில் கரையொதிங்கிய 14 பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்றும் பாரிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் மூன்று திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எஞ்சிய 11 திமிங்கலங்களை மீட்பதற்கான முயற்சிகள் இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2023/1323884
-
- 2 replies
- 574 views
-
-
(எம்.மனோசித்ரா) சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டத…
-
- 3 replies
- 565 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும். வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.பொருளாதார பாதி…
-
- 2 replies
- 795 views
-
-
Feb, 2023 | 07:06 PM இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையடல் இன்று (பெப் 11) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/147970
-
- 5 replies
- 823 views
-
-
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (11) தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரி…
-
- 3 replies
- 703 views
-
-
இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: T. Saranya 11 Feb, 2023 | 10:09 AM வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறத…
-
- 8 replies
- 454 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது,சமஷ்டி முறைமையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகைய…
-
- 5 replies
- 726 views
-
-
Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்! புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323770
-
- 22 replies
- 1.8k views
-