ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
அரச சம்பளத் தொகையில் பெரும்பகுதி இராணுவத்திற்கே செல்கிறது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) பெரும்பகுதி பொலிஸ் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு செலவிடப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க மாத்திரம் 33,940 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேர…
-
- 1 reply
- 557 views
-
-
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் தலைமையக கட்டளைத் தளபதிகள், நிலையத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து திணைக்கள கட்டளைத் தளபதிகளை அழைத்து வாய்மொழியாக அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் அந்த சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் தலைமையகம் மற்றும் நிலையத் …
-
- 1 reply
- 433 views
- 1 follower
-
-
அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் – அமைச்சர் நளின் வலியுறுத்தல் அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜா எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும். அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதா…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் அம்பலமாகிறது பிள்ளையானின் படுகொலைகள் மற்றும் ஊழல்கள் - பழிவாங்கப்படும் அரச அதிகாரிகள்! Vhg மார்ச் 25, 2023 தேர்தல் விதிமுறைகளை மீறி சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சந்தனமடு ஆற்றுப்பகுதியை கடப்பதற்கான வள்ளம் ஒன்றினை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் மூவரும் பிள்ளையானுக்கு ஆதரவாக செயல்படும் அரச அதிகாரிகள் இருவருமாகச் சென்று நேற்றைய தினம் கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலைய…
-
- 0 replies
- 763 views
-
-
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டது. ஐக்க…
-
- 0 replies
- 553 views
-
-
வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - சம்பிக்க ரணவக்க Published By: DIGITAL DESK 5 25 MAR, 2023 | 08:10 PM சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மொத்த நிதி தேவையை 13 சதவீதத்திற்கு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தேசிய கடன் அறவீட்டை குறைந்த மட்டத்தில் இரத்து செய்ய நேரிடும். இதனால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் ஏதாவதொரு வழியில் பாதிக்கப்படுவார்கள், ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதையிட்டு பட்டாசு வெடித்து, கொண்டாடுவது அவசியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவி…
-
- 0 replies
- 639 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது முறிந்து விழுந்த மரம் : மயிரிழையில் தப்பிய தாய்மார் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 11:05 AM வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர். நேற்று (24) மாலை வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2225 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகைக்கு மேலே அருகில் இருந்த மரம் ஒன்றின் பாரிய கிளை ம…
-
- 2 replies
- 311 views
- 1 follower
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:18 PM அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர். அனைத்துப் பல்கலைக்கழக மா…
-
- 1 reply
- 724 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி: நிபந்தனைகள் என்ன? இலங்கை விஷயத்தில் இந்தியா, அமெரிக்கா தோல்வி அடையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடனுதவித் திட்டத்தின் முதலாவது தவணை தொகை கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் தெரிவித்தார். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற…
-
- 2 replies
- 359 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து ரூ.10 இலட்சம் பொருட்கள் திருட்டு யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையிலிருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் நீண்டகாலமாக களவாடப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்குள் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள், கட்டுக்கட்டாக காணாமல் போயுள்ளன. இதனை அறிந்துகொண்ட நிர்வாகம் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/246129
-
- 2 replies
- 724 views
- 1 follower
-
-
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/246142
-
- 0 replies
- 421 views
- 1 follower
-
-
வலுசக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:45 PM (எம்.மனோசித்ரா) மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து வெளியேறுங்கள் – ஆளுநர் உத்தரவு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த…
-
- 0 replies
- 700 views
-
-
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்! டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த வழக்குகளிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான துரித இரத்தப் பரிசோதனைக்குரிய உச்சபட்ச கட்டணம் 1200 ரூபாவாகும். எனினும், இதற்காக 3000 ரூபாய் வரை கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. முழுமையான இரத்த பரிசோதனைக்கான …
-
- 0 replies
- 346 views
-
-
சித்தார்த்தனை இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் – சஜித் எச்சரிக்கை! சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தர்மலிங…
-
- 0 replies
- 205 views
-
-
இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள் உணவுபாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் - செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் Published By: Rajeeban 25 Mar, 2023 | 12:25 PM இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் இன்னமும் ஓரளவு அல்லது மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. போதுமான வாழ்வாதார உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் தற்போதைய நிலை 2023 இல் மோசமடையும் எனவும் செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. பொருளாதாரநெருக்கடியின் தாக்கம் தொ…
-
- 0 replies
- 136 views
-
-
மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர Published By: T. SARANYA 25 MAR, 2023 | 08:58 AM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்திற்கு புறம்பாக நியாயமற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் அறிவுறுத்தல் நிபந்தனையாக விதிக்கப்பட்டதா, இல்லையா என்பதை சர்வதேச நாணய நிதியம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்த…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம் சிக்கியிருந்த 24 இலங்கையர்கள் மீட்பு Published By: RAJEEBAN 25 MAR, 2023 | 10:35 AM லாவோஸின் பலவந்த நிதி மோசடி முகாமொன்றில் சிக்குண்டிருந்த 24 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லாவோஸின் பலவந்த நிதி மோசடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மோசடிகளில் ஈடுபடுமாறு துன்புறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் - இவர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நான்கு மாதங்களிற்கு முன்னர் வர்த்தக விசாவில் தகவல்தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக லாவோஸ் சென்ற இலங்கையர்களே இந்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் லாவோஸ் சென்றதும் இவர்களின் கடவுச்சீட்டுகள் தொலைபேசி…
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விரைவில்! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. க…
-
- 3 replies
- 793 views
- 1 follower
-
-
கடந்த இரண்டு வருடங்களில் 25,000 இராணுவ வீரர்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் -சரத் பொன்சேகா கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் தமது பதவிகளை விட்டு விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸார் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தவறான செயல்களை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வெளியேறினர் என்றார். “யுத்த காலத்தில் கூட இவ்வளவு…
-
- 3 replies
- 734 views
- 1 follower
-
-
அலி சப்ரி- விஜயதாச ராஜபக்ஷ தென்னாபிரிக்காவுக்கு பயணம்! வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், இவர்கள் தென்னாபிரிக்காவுக்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறு…
-
- 1 reply
- 263 views
-
-
டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு வழங்க அவதானம் - விமல் வீரவன்ச Published By: Digital Desk 5 24 Mar, 2023 | 09:18 AM இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிலைமை தோற்றம் பெறும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்த…
-
- 2 replies
- 886 views
- 1 follower
-
-
வட மாகாண ஆளுநருக்கு எதிரான மனு குறித்து விசாரணை Published By: NANTHINI 24 MAR, 2023 | 05:52 PM வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் …
-
- 1 reply
- 525 views
- 1 follower
-