Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 09-12-2007 23:41 மணி தமிழீழம் [மகான்] வவுனியா ஈச்சம்குளம் மாவீரர் துயிலுமில்லம் சேதமாக்கப்பட்டுள்ளது வவுனியா ஈச்சம் குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல மதில்கள் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாவீரர் துயிலுமில்ல சமாதிகளும் சிதைவடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  2. மகனின் பட்டமளிப்பில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த லண்டன் செல்வார் வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய றோயல் கடற்படை கல்லூரியில் நடைபெறவுள்ள மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 12 ஆம் திகதியளவில் லண்டன் செல்லவுள்ளார். மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் ஜப்பானை சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு லண்டன் செல்லவுள்ளார். பிரித்தானிய றோயல் கடற்படை கல்லூரியில் ஒருவருட பயிற்சியை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறும் ஜனாதிபதியின் மகன் யொசித்த ராஜபக்ஷவின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணா…

  3. புதுடெல்லி, டிச.9- விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொல்ல தூதர் உத்தரவிட்டார் என்று அமைதிப்படை தளபதி கூறியதை, ராஜீவ்காந்தியின் செயலாளராக இருந்த ஜி.பார்த்தசாரதி மறுத்து உள்ளார். அமைதிப்படை தளபதி சொல்வதில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்தார். தளபதி திடுக்கிடும் தகவல் மறைந்த ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படை தளபதியாக மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் இருந்தார். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் ஹர்கிரத் சிங், "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில், கடந்த 1987-ம் ஆண்டில் இந்திய அமைதிப்படைக்கு நான் தலைமை…

  4. வடக்கில் போரைத் தீவிரப்படுத்துவதா? தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதா? [09 - December - 2007] -விதுரன்- தெற்கில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வடக்கில் புலிகளின் கடும் சவால்களை படையினர் சந்தித்து வருகையில் கொழும்பிலும் தெற்கிலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலானது வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து விடலாமென்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கில் தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்க முனைகிறது. விமானக் குண்டுவீச்சுக்கள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள், ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களென வடபகுதி தினமும் சின்னாபின்னமாகின்றது. அச்…

  5. வன்னி மீதான இராணுவ முற்றுகையும் தெற்கில் அதிகரிக்கும் நெருக்கடிகளும் -அருஸ் (வேல்ஸ்)- கொழும்பில் தங்கியிருந்த தமிழ் மக்களை இலங்கைப் படையினர் ஆயிரக்கணக்கில் கைது செய்ததும், நூற்றுக்கணக்கில் தடுத்து வைத்திருப்பதும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகள் கூட மதிக்கப்படாத இந்த நடவடிக்கை குறித்து தங்களை ஜனநாயகத்தின் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதனை உலகில் வாழும் தமிழ் இனம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. கண்டனங்கள், கவலைகள் ஒரு போதும் அரசின் இதே போன்ற எதிர்கால நடவடிக்கைகளை தடுக்கப் போவதில்லை. இலங்கை அரசைப் பொறுத்த வரையிலும் த…

  6. சிறிலங்காவின் பொலநறுவப் பிரதேசம் கதிரவெளியில் சிறிலங்கா இராணுவத்தினரால் 122 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 916 views
  7. பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற நிலைப்பாட்டில் அனைத்துலகத்தின் முன் சந்தி சிரித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இப்போது உள்நாட்டில் ஊடகங்களால் "வறுத்தெடுக்கப்பட்டு"க் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 978 views
  8. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது வேண்டுமென்றே சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. துடுப்பாட்டத்தில் அனைத்துலக சாதனை புரிந்த முத்தையா முரளிதரன் என்ற முரளிக்கு சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்ச அன்பளிப்பாக வாகனத்தின் சாவியை வழங்கும் புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.6k views
  10. கிழக்கில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் அரசின் துணை ராணுவக் குழுவான "துரோகி பிள்ளையான் குழு" நாளை மட்டக்களப்பில் ஊர்வலம் ஒன்றை நடத்தப் போகிறதாம். புலிகளை கண்டிக்கும் மகஜர் ஒன்றை அரச செயலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல். இதற்காக துப்பாக்கி முனையிலும், துன்புறுத்தல்களினூடாகவும் சில பொதுமக்களை திரட்டி வருவதாக அதன் பேச்சாளர் என்று கூறிக்கொள்ளும் ஒரு வால் கூறியிருக்கிறது. நன்றி-பதிவு.

  11. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியான பிரசாத் காரியவம்சம் நியமிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 876 views
  12. லண்டனிலிருந்து வந்தவரை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு வவுனியா சென்ற வான் மூவருடன் கடந்த வியாழக்கிழமை இரவு காணாமல் போய் உள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  13. தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழக உறவுகள் கிளர்ந்தெழுவதை சகிக்க முடியாத இந்திய மத்திய உளவுத்துறை, தமிழக காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு வருவதை தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் பிரபல ஏடான "ஜூனியர் விகடன்" அம்பலப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 16 replies
    • 2.5k views
  14. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலமானது சிறிலங்காவின் சிறுபான்மை கட்சிகளிடம் உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 788 views
  15. மன்னாரில் டிசம்பர் மாதம் முதல் வார காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 33,964 பேர் இடம்பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 761 views
  16. மனோகரன் எழுதிய "சிறீலங்காத் தலைமைகளை இயக்கும் சிங்களச் சிந்தை மையம்" முற்றிலும் மாறான வகையில் போரை நடத்தக்கூடியவாறான விதத்தில் சிறீலங்காவின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளிருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலிருந்த மாதிரியான ஒரு அரசியல் இராஜதந்திர பொறிமுறையை மகிந்த ராஜபக்சவின் அரசுக்கும் "சிங்களச் சிந்தனை மையம்" வழங்கி வருகிறது என்றும் அவர் மேலும் சொன்னார். சிங்களச் சிந்தனை மையம் இலண்டனை தளமாகக் கொண்டியங்குகிறது. உலகின் பல திசைகளிலுமுள்ள சிங்கள சமூகத்தின் ஆய்வாளர்களும் அறிஞர்களும் இந்த இலண்டன் தளத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த மையத்தில் தங்களின் சிந்தனையைக் குவிக்கிறார்கள். சிறீலங்காவின் அரசியல் மற்…

  17. யுத்த நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட தாக்கம் -ஜெயராஜ்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த மாதத்தின் இறுதியில் ஒரேநாளில் காலையும் மாலையும் என இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்கள் சிறிலங்கா அரசியல், இராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அநுராதபுரத்தில் ஒக்ரோபர் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலின் பின்னர் இக்குண்டு வெடிப்புக்கள் மகிந்த அரசிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன என்பது சந்தேகத்திற்கு இடமற்றதொன்று. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சில விடயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தது. இதில் கொழும்பின் பாதுகாப்புப் பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டதென்பதொ

  18. "டிசெம்பர் 14இல் மகிந்த அரசு தோற்கடிக்கப்படுமா?" - வேனில்- எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14ம் திகதி சிறீலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மூன்றாம் நிலை வாசிப்பிற்கு விடப்படும் போது அது தோற்கடிக்கப்படும் என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கூறி வருகிறது. இரண்டாம் தடைவையாக இவ்வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படுவதற்கு முன்பும் ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாறே எதிர்வு கூறியது. ஆனாலும் பதினாறு மேலதிக வாக்குகளில் அது வெற்றிபெற்று விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவிய உறுப்பினர்கள் மற்றும், ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் கொங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ், நு.ஆ, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஈபிடிபி, மலையக மக்கள் முன்…

  19. ஞாயிறு 09-12-2007 05:19 மணி தமிழீழம் [மயூரன்] கலைகள் ஊடாக அரசியல் பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் - க.வே.பாலகுமாரன் கலைகள் ஊடாக மக்களுக்கான அரசியல் பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என, க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை வன்னியில் இடம்பெற்ற, விளக்கேற்றும் நேரம்| எழுச்சிப்பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றிய, தமிழீழவிடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன், துயரத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவர்களை ஆற்றுப்படுத்தும் தன்மையை கலைகள் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வகையில் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களை,கலைகள் ஊடாக இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும க.வே.பாலகுமாரன் அவர்க…

  20. சிறிலங்கா குறித்த பிரித்தானியா மற்றும் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படக்கூடும் என்று மேற்குலக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 809 views
  21. இ.தொ.கா.வின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு [08 - December - 2007] [Font Size - A - A - A] * விடுவிக்கப்படாதோர் விபரத்தை சமர்ப்பிக்க பிரதம நீதியரசர் உத்தரவு த.தர்மேந்திரா கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை ஆட்சேபித்து இ.தொ.கா.வால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று வெள்ளிக் கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் சக நீதியரசர்களான நிஹால் காமினி அரமரதுங்க, ஜகத் பாலபட்ட பெந்தி ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவே சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகளின் கீழ் இ…

  22. நெதர்லாந்தில் காணாமல் போதலிற்கு எதிரான அனைத்துலக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (07.12.07) நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 520 views
  23. பயங்கரவாதி என்றால் அவர் பயங்கரவாதியேயாகும். அவரின் மதமோ பூர்விகமோ விடயத்திற்கு எடுக்கக்கூடடிதொன்றல்ல என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மலேசியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய சமூகத்தவர்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளேன மலேசிய அரசு தெரிவித்திப்பது தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருக்கிறார். இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹிதவுடன் தான் ஆரயவில்லை என்று முகர்ஜி கூறியுள்ளார். சார்க் அமைச்சர்கள் பேரவை மாநாட்டுக்காக புதுடில்லி சென்றிருக்கும் அமைச்சர் ரோஹித முகர்ஜியை வெள்ளி அன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். …

    • 3 replies
    • 1.4k views
  24. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முழுமையான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும் அதற்கான அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பலத்தை முழுமையாக அழித்து விடுவதற்காக யுத்த தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சி வழங்க செக் குடியரசு தமது படையினரை அனுப்ப முன்வந்துள்ளதாக "லக்பிம" சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.