Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரு விமானங்கள் வீட்டுக்கு மேலாக சென்று முகாம் மீது இரு தீப்பந்தங்களை போட்டன நேரில் கண்ட பெண் கூறுகிறார். ஜ புதன்கிழமைஇ 24 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இதுவரை கேட்டறியாத சத்தத்துடன் வந்த இரண்டு விமானங்கள் எமது வீட்டுக்கு மேலாக சென்று விமானப்படை தளம் மீது இரண்டு தீப்பந்தங்களை போன்ற பொருளை போட்டன. சிறிது நேரத்தில் பெரும் சத்தங்கள் கேட்டன என்று அநுராதபுரம் விமானப்படைத் தளத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்துவரும் குடும்பப் பெண்ணான தமயந்தி என்பவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த இவர் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து மேலும் தெரிவித்ததாவது, நானும் எனது இரண்டு குழந்தைகளும் வீட்டில் நித்திரையில் இருந்தவேளையில், எமது வீட்டுக்கு மேலாக சில …

  2. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியது யார்?: குழப்பத்தில் சிறிலங்கா படைத்தரப்பு [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 06:02 AM ஈழம்] [அ.அருணாசலம்] அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-212 ரக உலங்குவானூர்தியை படையினரா அல்லது விடுதலைப் புலிகளா சுட்டு வீழ்த்தியது என்ற குழப்பம் தோன்றியுள்ளதாக என்று கொழும்வு ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  3. எங்களுடைய தமிழ் மண்ணில் மானமுள்ள ஒரு தமிழன் இருக்கும் வரை சிங்களப் பேரினவாதிகளுக்கு அடிமையாக மாட்டோம். பதவிக்கும் பகட்டிற்கும் சோரம் போகவும் மாட்டோம். இவ்வாறு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் சூழுரைத்தார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். மாவை தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:- நாட்டில் அமைதி இல்லை. பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. யுத்த சூழ்நிலையில் தேர்தல் நடத்த முடியாது.தேர்தல்கள் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையாளர் கூறியதை தொடர்ந்தே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டன. அப்படியானால் இப்போழு…

  4. http://www.yarl.com/videoclips/view_video....75065399b0d1e48

  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கும் முன்னரே தற்போதைய நிலையைத் தக்க வைத்துக்கொண்டு புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று திங்கட்கிழமை கூறியதாவது: அனுராதபுரம் வான் படைத்தளத்தில் கார்ப் பந்தயப் போட்டி நடைபெற்ற போது புலிகளின் அணி ஊடுருவியுள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்க ஊடகங்களே இன்று நாட்டிற்கு வினையை தேடிக்கொடுக்கின்றன. தொப்பிக்கலவில் அரசு தாக்குதல் நடத்தப்போவதாக அரச ஊடகங்கள் முந்திக்கொண்டு தகவல்களை வெளியிட்டதால் அங்கிருந்த 1,200 புலிகளும் தாக்குதலுக்கு முன்னரே பாதுகாப்பாக வெளி…

  6. யால தாக்குதல்கள் சொல்லும் செய்தி -சி.இதயச்சந்திரன்- 1995 இல் யாழ். குடாவிலிருந்து வெளியேறிய புலிகள் வன்னியில் திரளும் போது, ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் அவர்களை அழித்து விடலாமென கனவு கண்டார் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா. அது நடக்கவில்லை...விபரங்களுக்கு

  7. மகிந்த ராஜபக்சவின் யுத்த மூலோபாயம் சிதைக்கப்பட்டுள்ளது - ரெலிகிராப் நாளேடு ''எல்லாளன்'' நடவடிக்கை மூலம் சிறீலங்கா அரசாங்கம் 20 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான 17 வானூர்திகளை இழந்துள்ளதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ரெலிகிராப் எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.அநுராதபுர வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் 21 கரும்புலிகள் மற்றும் இரு வானூர்திகள் நடத்திய அதிரடித் தாக்குதல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த மூலோபயம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.சிறீலங்கா வான்படை இழந்துள்ள வானூர்திகள்01. பீச் கிராவ் வேவு வானூர்தி - 1 (14 மில்லியன் பிரித்தானியா ஸ்ரேலிங் பவுஸ்)02. எம்.ஜ 24 ரக வானூர்திகள் - 203. எம்.ஜ 17 ரக வானூர்திகள் - 204. ஆளில்லா வேவு வான…

    • 0 replies
    • 1.6k views
  8. அமெரிக்காவின் வேண்டுகோள்: சிறிலங்கா நிராகரிப்பு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்திருந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு செயலாளர் பாலித கோகன்ன அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனுராதபுரம் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 கரும்புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தாலும் இருதசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தில் எதுவித மாற்றமும் இல்லை. அனுராதபுரம் தாக்குதல் ஒரு சிறு இராணுவ நடவடிக்கை. அவ்வளவுதான். அதனால…

    • 0 replies
    • 1.4k views
  9. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்காயிருக்கும் அநுராதபுரம்: ஐ.தே.க. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச அரசின் ஆட்சிக்காலத்திலேயே அனுராதபுரம் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது..விபரங்களுக்கு

    • 3 replies
    • 3.4k views
  10. அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் கரும்புலிகள் அணியினர் ஊடுருவியது எப்படி என்று அத்தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அத்தகவல்கள்: சிங்கள அலைவரிசையான "சிரச" தொலைக்காட்சியில் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:00 மணியளவில் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் "சிரச" சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. வான்படைத் தளத்தைச் சூழ உள்ள காவல் நிலைகளில் தொலைக்காட்சி இல்லாததால் அங்கு பணியில் இருந்த அனைத்துப் படையினரும் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வான் படைத்தளத்தின் பிரதான கட்டடத் தொகுதிக்குள் சென்றிருந்தனர். அதனால் காவல் நிலைகளில் படையினர் இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தை த…

    • 5 replies
    • 3k views
  11. சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயிர்நாடியாக இருந்த அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி நடத்திய அதிரடித் தாக்குதலானது சிறிலங்காவுக்குப் பேரிடியாக கருதப்படுகிறது. அநுராதபுரம் வான்படைத் தளம் வடக்குப் போர்முனையின் பிரதான முதன்மைத் தளமாக உள்ளது. மன்னார்- வவுனியா- மணலாறு முன்தளங்களின் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைக்கான உயிர்நாடியாக அநுராதபுரம் தளம் உள்ளது. 1961 இல் சிறிமாவோ அரசால் குடிசார் வானூர்தி நிலையமாக உருவாக்கப்பட்ட அநுராதபுரம் வானூ…

    • 1 reply
    • 2.9k views
  12. வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கைப்பற்றி வான்படைத் தளத்தினை தாக்கிய புலிகள்: "டெய்லி மிரர்" நாளேடு அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலையை கைப்பற்றி அதனைக் கொண்டும் வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளதாக கொழும்பு நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டெய்லி மிரர்" நாளேடு வெளியிட்ட முக்கிய பகுதிகள்:.விபரங்களுக்கு

    • 0 replies
    • 3k views
  13. புலிகளின் தனிநாட்டுப் பிரகடனம் தாமதம் ஏன்?: க.வே.பாலகுமாரன் விளக்கம் தமிழீழத் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை நீண்டகாலமாக நடத்தி வந்தபோதும் தனிநாட்டுப் பிரகடனத்தை ஏன் தாமதிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார். சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல் .விபரங்களுக்கு

    • 0 replies
    • 2k views
  14. வரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம் -சேனாதி "எனது சிறகுகள் அகலமானவை, ஒடுக்க முடியாதவை" - தேசியத் தலைவர். புலிகளை ஒடுக்கி தமிழர் மீது எதேச்சாதிகாரமான தீர்வொன்றைத் திணிப்பது பற்றிய உரையாடல்கள் முன்னெப்போதையும் விட இப்போது தென்னிலங்கையில் சூடுபிடித்து நிற்கின்றன. தமிழருக்கு சமஷ்டியா பஞ்சாயத்தா போன்ற வாதங்கள், போர்த்திட்டங்களும் இராசதந்திர வியூகங்களும் பற்றிய கருத்துக்கள் என கொழும்புத் தலையாரிகள் வாய்வீசத் தொடங்கிவிட்டார்கள். சிலர் ஒரு படி அப்பாலும் போய் ராஜ் நாராயணன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி பாணியிலான அரசியல் கோமாளித்தனத்தில் சக்கைப்போடு போடுகிறார்கள். புலிகளை நிபந்தனையின்றிய பேச்சுக்கும் அழைக்கிறார்கள். ஊகமும் உள்ளீடும் உண்மையும் சேர்ந்த கலவை மத…

  15. அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிரடித் தாக்குதலை நடத்தியதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக இந்திய இணையதளமான "இந்தியா டெய்லி" செய்தி வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ராடாரின் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணைகளைக் கொண்டு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா தாக்குதல் நடத்தலாம் என்றும் அத்தகைய நவீன தொழில்நுட்ப ஆயுதத்தை பயன்படுத்தும் முன்னர் இப்பிராந்திய நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://puthinam.com/full.php?2e32PCCca3dcd...cJYg52cceQd6W2e

  16. கிழக்கில் விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமோண்டோ அணி ஊருவல்: "லக்பிம" சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற கொமோண்டோ அணியினரை கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரையிறக்கி உள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:விபரங்களுக்கு

    • 2 replies
    • 3k views
  17. கிழக்கில் அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட தொப்பிக்கல் பகுதியை சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் அரசத்தரப்பினால் இரகசியமான முறையில் கனகச்சிதமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொப்பிகல்லில் 2 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தைச் சுற்றிப்பிடித்து வளைத்துப் போட்டு, அங்கு சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை றிறுவி, அதன் மூலம் சிங்களவர்களின் ஆதிக்கத்தை அங்கு வலுப்பெறச் செய்வதற்கு அரச உயர்மட்டத்தினர் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டி வருகின்றனராம். இந்த வர்த்தக வலயத்தில் உள்ளுர் மற்றும வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதற்கான ஊக்குவிப்பு முயற்சியில அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.அங்கு சிங்கள முதலீட்டாளர்களுக்கே அதிக வாய்…

    • 2 replies
    • 1.5k views
  18. சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் - இதயச்சந்திரன் ஐ.நா. சபையின் 62 ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோ

  19. படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.விபரங்களுக்கு

  20. வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் வலிந்த தாக்குதல் நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்வர்: ஐ.நா. இலங்கையின் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கமானது வலிந்த தாக்குதலை நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் நிலைமை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபரங்களுக்கு

    • 0 replies
    • 793 views
  21. புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த இராணுவ நகர்வு எது என்பதில் சிங்களத் தரப்பு கடும் குழப்பமடைந்திருப்பதனை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு களமுனையைச் சுட்டிக்காட்டும் சிங்கள ஏடுகளில் ஒன்றான "லக்பிம" சிங்கள வார ஏடு "புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?" என்று இந்த வாரம் "ஆய்வு" கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாவது:விபரங்களுக்கு

    • 5 replies
    • 2.6k views
  22. ஓமந்தையில் இராணுவத்தினரால் கடத்தபட்ட நோர்வே பிரஜையை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு. - இன்ரப்போலின் தேடப்படுவோர் பட்டியலில் நோர்வே தமிழன். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ ஓமந்தையில் இராணுவ உளவுத்துறையால் கடத்தபட்டு பின்னர் காணாமல் போன நோர்வே பிரஜையைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு மாவட்ட நீதவான் எம்.இளஞசெழியன் உத்தரவு பிறப்பித்துள்ளர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழரான நோர்வே குடியுரிமை பெற்ற ஒருவர் கொழும்பு வந்து கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்று சில தினங்களின் பின்னர் அதே வழியில் திரும்பியுள்ளார். ஆனால் இவர் காணாமல் போயிருப்பதாக சர்…

  23. சிறிய தாக்குதல் பெரிய தாக்கம் -விதுரன்- கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறிவருகையில் புலிகள் தெற்கில் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதுவொரு சிறிய தாக்குதலாயுள்ள போதும் இதன் எதிரொலி தெற்கை பெரிதும் அதிரவைத்துள்ளது. தெற்கில் மேலும் பலதாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தால் அங்கு மேலதிக படையினரை அனுப்பி வரும் அரசு வடக்கிலும் பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெற்கில் இடம்பெற்ற தாக்குதலானது இராணுவ ரீதியில் அரசுக்கு மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ள போதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கிழக்கின் வெற்றியும் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போரும் இனப்பிரச்சினைக்கு அரசு இராணுவத்தீர்வை நாட…

    • 2 replies
    • 2.2k views
  24. உலகத்திலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்: ஐரோப்பிய வல்லுநர் ஜெரார்ட் சாலியண்ட் [சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2007, 02:16 PM ஈழம்] [ப.தயாளினி] உலகத்தில் தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று இனமோதல்கள் தொடர்பிலான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெரார்ட் சாலியண்ட் கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: உலகத்திலேயே தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். வியட்நாமியர்களும் எரித்தியர்களும் இத்தகைய செயற்திறன் மிக்க இயக்கத்தினராக இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை …

  25. திருமலையில் கண் வைத்து காய் நகர்த்தும் இந்தியா! [21 - October - 2007] [Font Size - A - A - A] -கலைஞன்- இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதுடில்லி வருகையும் இந்திய அரசின் இலங்கைக்கான ஆயுத உதவியும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆயுத உதவிக்கு பிரதியீடாக திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி வழங்கி நன்றிக்கடன் தீர்த்துள்ளது இலங்கையரசு. `இந்துஸ்தான் டைம்ஸ்' நடத்திய மாநாட்டில் பங்கேற்கவே இந்தியாவுக்கு வருகை தந்ததாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிக் கொண்டாலும் அவரின் திரைமறைவு நிகழ்ச்சி நிரல்கள் இராணுவ உதவிகள், தமிழர் மீதான யுத்தத்திற்கான ஆதரவு போன்றவற்றையே மையப்படுத்தி இந்திய வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.