ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் இடம்பெற்று ஓரு வாரம் கடந்துவிட்ட நிலையில் இழக்கப்பட்ட வானூர்திகளுக்கு மாற்றீடாக புதிய வானூர்திகளைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அநுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதான எல்லாளன் நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான விருதுகளை தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வழங்கி மதிப்பளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் இன்று பிற்பகல் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் அழுக்கு நீரை விசிறியும் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 966 views
-
-
யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற மூவர் காணாமல் போய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
யாழ். நல்லூரில் சிறிலங்காப் படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினரால் திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. நேற்றும், நேற்று முன்நாளும் பல வீடுகளில் திருட்டுக்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 990 views
-
-
காந்தரூபன் அறிவுச்சோலையின் 14 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 780 views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்று உலக வங்கியின் முகாமையாளர் கிரேமி வீலெர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 935 views
-
-
முகமாமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் கைவிரல் ரேகை அடையாளம் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.ஜீ.தர்மதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சோமாலிலாந்து என்று இன்று அழைக்கப்படும் சோமாலியின் வடபகுதி சோமாலியாவில் இருந்து பிரிவதற்கான போராட்டத்தை 1988 இல் ஆரம்பித்திருந்தது. சோமாலிலாந்து சர்வதேச அங்கீகாரங்களைப் பெறாத ஒரு நடைமுறை அரசைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது சோமாலியாவின் தென்பகுதிகளில் அதிகரித்துள்ள யுத்தம் அதில் எத்தியோப்பியாவின் மற்றும் அமெரிக்காவின் ஈடுபாடுகள் யாவரும் அறிந்ததே. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள சோமாலியாவில் இருந்து மக்கள் தற்பொழுது ஆயிரக்கணக்கில் சேமாலியாவில் இருந்து பிரிந்து சர்வதேச அங்கீகாரம் இல்லாதிருந்தும் வெற்றிகரமாக இயங்கும் சோமாலிலாந்தினுள் பாதுகாப்பு புகலிடம் தேடிச் செல்கிறார்கள். சோமாலிலாந்தின் இந்த வெற்றியின் இரகசியத்தைப் பற்றி அல்ஜசீரா ஆங்கில சேவையின் விவரணம் People &…
-
- 2 replies
- 1.9k views
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னணி நிலைகள் ஊடாக ஊடுருவ முற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதல் ஏற்பட்டதாகவும், இம் மோதலில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3.6k views
-
-
முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் ஸ்ரீலங்கா விமானப்படையின் சுப்பர் சோனொக் விமானங்கள் இன்று காலை முல்லைத்தீவு பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.இன்று காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் இவ்வாந்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. .விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமொன்றின் மீது இவ்வாந்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் போது ஏற்பட்ட சேதவிபரம் இது வரை வரவில்லை.
-
- 0 replies
- 924 views
-
-
முக்கியமான ஒரு கேள்வி [01 - November - 2007] ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைக் கையாளுவதற்கு கொழும்பில் பொலிஸ் தகவல் நிலையம் ஒன்று கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இத்தகைய நிலையமொன்று இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் இருந்தபோதிலும், அங்கு சென்று முறைப்பாடுகளைத் தெரிவிப்பதில் எதிர்நோக்கப்பட்ட நெருக்கடிகள் குறித்து பொதுமக்கள் முறையிட்டதையடுத்து புதிய தகவல் நிலையம் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பணிப்பின் பேரில் பொலிஸ் நலன்புரி நிலைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் தகவல் நிலையத்தை திறந்துவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய இரகசிய பொலிஸ் பிரிவுத் தலைவர் பிரதி பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாபசிங்க பெருமளவில் மன…
-
- 0 replies
- 1.8k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள அனுராதபுரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மனைவியும் 6 பிள்ளைகளும் வெளிநாட்டில் வீட்டில் தனித்திருந்த முதியவர் கடத்தப்பட்டார் *ஏழாலைப் பகுதியில் வெள்ளைவான் அட்டகாசம் வலி. வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் தங்கியிருந்த வயோதிபர் ஒருவர் நேற்று புதன்கிழமை காலை வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குப்பிளான் வடக்கு ஏழாலையில் அதிஉயர் பாதுகாப்பு வலய எல்லையருகில் வசித்த சிவகுரு பஞ்சலிங்கம் (66 வயது) என்பவரே நேற்றுக் காலை 6.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நோயாளியான இவர் தனிமையிலே வாழ்ந்து வந்தார். இவரது மனைவியும் 6 பிள்ளைகளும் வெளிநாடொன்றில் வசிக்கின்றனர். நேற்றுக் காலை இவரது வீட்டிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று இவரை வீட்டுக்கு வெளியே அழைத்து கதைத்துக் கொண்ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலனாய்வுத் தகவலைப் பரிமாற ஆசியான், சார்க் நாடுகள் இணக்கம் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடமிருந்து கிடைத்த மிக முக்கியமான புலனாய்வுத் தகவல்களே, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கை கடற்படையினர் தாக்கியழிப்பதற்கான பிரதான காரணங்களாயிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசியான் மற்றும் சார்க் பிராந்திய நாடுகளுக்கு தற்போது கடல் வழிப் பயங்கரவாதச் செயற்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பதால் இவை தொடர்பாக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக் காலங்களில் இலங்கை கடற்படையினர் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கெதிராக மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல்கள் பற்றிக் கூறுகையிலேயே இதுபற்றி அந்த வட்ட…
-
- 0 replies
- 777 views
-
-
சுவிற்சர்லாந்து இராணுவ அதிகாரி குடாநாட்டுக்கு செவ்வாயன்று விஜயம் சுவிற்சர்லாந்து நாட்டின் இரா ணுவத் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் போல் ரெய்லின் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்குள்ள நிலை மைகளைப் பார்வையிட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இராணுவத் தளபதி நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்த ஹெலிக் கொப்டர் மூலம் பலாலி சென்றடைந்தார். அவரை யாழ். மாவட்ட இரா ணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வரவேற்றார். அதன் பின்னர் பலாலி கூட் டுப்படைத்தளத்தில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியு டன் குடா நாட்டின் நிலைமைகள் குறித்து அவர் கலந்துரையாடினார். இதனையடுத்து யாழ். மாவட் டத்தில் உள்ள 51 ஆவது படைப்பிரிவின் 512 பிரிகேடியர…
-
- 0 replies
- 851 views
-
-
வியாழன் 01-11-2007 06:01 மணி தமிழீழம் [மயூரன்] அம்பாந்தோட்டைக்கு 1000 படையினர் நகர்த்தப்பட்டுள்ளனர் சிறீலங்காப் படையினரில் ஒரு தொகுதியினர் அம்பாந்தோட்டைக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அம்பாறை கச்சிகுடிச்சாறுப் பகுதிக்கு மூவாயிரம் படையினர் நகர்த்தப்பட்ட நிலையில் அம்பாறையிலிருந்து ஆயிரம் படையினர் அம்பாந்தோட்டைக்குகு நகர்த்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும் இப்படையினர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நன்றி பதிவு.
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சினையை இதயசுத்தியுடன் அணுகிய ஆட்சியாளர்கள் இதுவரை இலங்கையில் இல்லை * வடக்கில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள்; தெற்கில் கட்டவிழ்த்துவிடப் பட்டிருக்கும் பிரசாரப் போர் வ.திருநாவுக்கரசுதொடர்ந்து
-
- 0 replies
- 1k views
-
-
வியாழன் 01-11-2007 04:46 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐநா விசேட பிரதிநிதி சிறீலங்கா மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கைக்கு கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் சிறீலங்காவில் கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற மனித உரிமைகள் நிலமை மோசமடைந்து வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, மனித உரிமைகள், கலாச்சார கூட்டத் தொடரில் அல்ஸ்ரன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்காவில் ஐநாவால் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்றை நிறுவுவது மனித உரிமைகள் மீறப்படுவதை குறைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நன்றி…
-
- 3 replies
- 803 views
-
-
கரும்புலிகளில் நால்வர் ஓமந்தை சோதனை நிலையம் ஊடாகவே வந்தனர். ஜ வியாழக்கிழமைஇ 1 நவம்பர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ அநுராதபும் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொடைக் கரும்புலிகளில் முக்கியமான நால்வர் சிறீலங்காப் படையினரின் ஓமந்தை சோதனை நிலையம் ஊடாகவே சென்றிருப்பதாக சிறீலங்காப் படைத்தரப்பு தெரிவிக்கின்றது. அத்துடன், அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 14 பேர் வான் படை அதிகாரிகளின் சீருடை போன்ற சீரூடையில் வான் படைத்தளத்திற்கு அருகில் உலாவியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் குழுவிடம் பிரதேச மக்கள் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
‘ஆபரேஷன் எல்லாளன்!’ புலிகளின் ராணுவ பேச்சாளர் இளந்திரையன் பேட்டி அக்டோபர் 22&ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை.... விடுதலைப்புலிகளின் சிறப்பு கமாண்டோ படையின் 21 கரும்புலிகள், இலங்கை அரசின் அநுராதபுரம் படைத்தளத்தை தரைப்படையாலும் விமானப்படையாலும் தாக்கி அழித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் புலிகள் வைத்த பெயர் ‘எல்லாளன் நடவடிக்கை’. எல்லாளன் என்பவன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். நாற்பத்தி நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த இந்த எல்லாளனை போரில் வெல்ல முடியாமல் சூதில் வென்றிருக்கிறான் சிங்கள மன்னன் துட்டகைமுனு என்பவன். இந்த தமிழ் மன்னனை கவுரவிக்கும் விதமாகத்தான் புலிகள…
-
- 2 replies
- 4.1k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவில் இராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிரடியாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் இரு புளொட் உறுப்பினர்கள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-