ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மன்னார் கடலில் பொதுமக்கள் படகு மீது சிறிலங்காக் கடற்படை தாக்குதல் Written by Seran - Oct 18, 2007 at 03:00 PM மன்னார் நாச்சிக்குடாவில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் சென்று கொண்டிருந்த அகதிகள் மீது பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கோரத்தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சிறிலங்கா கடற்படையின் இத்தாக்குதலுக்கு நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்கள் இலக்காகியிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் புஸ்பமலர் அகவை -34 என்ற தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புஸ்பமலர் மருத்துவர் ஒருவரிடம், தனது கணவர், இர…
-
- 4 replies
- 1.3k views
-
-
வியாழன் 18-10-2007 13:24 மணி தமிழீழம் [நிலாமகன்] இரு யப்பானிய பொறியியலாளர்கள் உட்பட தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் காணவில்லை திருகோணமலை பன்குளப் பகுதியில் யப்பான் நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் உட்பட தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று புதன்கிழமை காலை நெழுஓயா நீர்த்திட்டதைப் பார்வையிடச் சென்ற அனைத்துலக ஒத்துழைப்பு நிறுவனத்தின் பணியாளர்களே காணாமல் போயுள்ளனர். வாகனத்தில் நெழுஓயா அணைக்கட்டுக்கு சென்ற இவர்கள் 7 கிலோமீற்றர் தூரம்வரை சென்ற ஆய்வுகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1k views
-
-
வீரச்சாவு விபரம். Written by Seran - Oct 18, 2007 at 01:11 PM வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் 10போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ்.முகமாலை கண்டல் பகுதியில் கடந்த 15,ம் நாள் ஸ்ரீலங்காப்படையினருடனான மோதலின்போது போராளிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழவிடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். கப்டன் சாரங்கன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை நிரந்தர முகவரியாகவும்,சுதந்திரபுரம் உடையார்கட்டை தற்போதய முகவரியாகவும் கொண்ட முருகேசு- விஜயகுமார். 2,ம்லெப். கலையமுதன் என்று அழைக்கப்படும் செல்வபுரம் பூனகரியை நிரந்தர முகவரியாகவும்,09,ம் கட்டை ஆனைவிழுந்தான் வீதி அக்கராயனை தற்போதய முகவரியாகவும் கொண்ட தங்கராசா- சிவதாஸ். லெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஓமந்தைசோதனைச் சாவடி மூடப்பட்டது. Written by Seran - Oct 18, 2007 at 01:14 PM வவுனியா ஓமந்தை சிறிலங்காப் படைச் சோதனைச் சாவடி இன்று காலை முதல் மக்கள் போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வன்னி ஊடாக வவுனியாவிற்கும் வவுனியா ஊடாக வன்னிக்கும் போக்கு வரவில் ஈடுபடுவதற்கென மக்கள் சோதனைச் சாவடியை வந்தடைந்தபோது சோதனைச்சாவடி திறக்கப்படாமல் படையினரால் மககள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக வவுனியா படை நிலைகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிகள் மீது எறிகணைத்தாக்குதல்களை நடாத்திவந்த படையினர் சோதணைச் சாவடி ஊடாக வன்னியிலிருந்து பயணம் செய்த மக்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியும் வந்தன…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகின் கருத்தக்களை செவிமடுக்காத மகிந்த அரசு வே.தவச்செல்வன் குடும்பம் குடும்பமாக மக்கள் சரணடைவதால் தாங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இவர்களைத் தடுத்து வைக்கின்ற சிறைச்சாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அங்கு தொற்றுநோய் கள் பரவியுள்ளதாகவும் தங்களால், யாழ்ப்பாணத்தில் உருவாகிவரும் நிலைமைகளைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய நிலைமை எங்கே போய் முடியப்போகிறது எனவும் இவர் கவலை வெளியிட்டுள்ளார். நிலைமை இவ்வாறு குடாநாட்டில் இருக்கையில், மூன்று மாதங்களிற்குள் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவோம் எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் பலனடையும் விதத்தில் செயற்படுபவராக ஆர்பர் மாறிவிட்டார் *அரச சமாதான செயலகம் கூறுகிறது பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும் விதத்தில் செயற்படும் ஒருவராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ் தானிகர் லூயிஸ் ஆர்பர் மாறிவிட்டதாக அரச சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான லூயிஸ் ஆர்பரின் வருகை தொடர்பாக அரச சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் ஐ.நா.கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன. தமிழ்நெற் இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
இராணுவத்துக்கு ஆயுத தளபாடங்கள் ஏற்றிச்சென்ற "கொன்ரெயினர்' விபத்து! கொழும்பிலிருந்து அதன் புறநகர்ப் பகுதி யான பனாகொட இராணுவத்தளம் நோக்கி ஆயுதத் தளபாடங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த படையினரின் கொன்ரெயி னர் வாகனமொன்று பத்தரமுல்ல கொஸ் வத்த சந்தியில் விபத்துக்குள்ளானது. நேற்று விடிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்துச் சம்பவத்தால் எந் தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இரா ணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கொட்டாவ வீதியில் பயணித்துக் கொண் டிருந்த குறித்த "கொன்ரெயினர்' கொஸ்வத்த சந்தியால் திரும்பிய தருணத்தில் நிலைதடு மாறியது என்றும், ஆயுதங்கள் ஏற்றப்பட்ட "கொன்ரெயினர்' அசையாமல் அப்படியே நிற்க, வாகனத்தின் இயந்திரம் மாத்திரம் விலகி உருண்டு புரண்டது என்றும் சம்பவ இடத்தி…
-
- 1 reply
- 1.5k views
-
-
பயங்கரவாத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரோஹிதா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பங்களதேஷ், பெல்ஜியம், சீனா, செக்கஸ்லோவோக்கியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, வியட்னாம், அமெரிக்கா, உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித இதனை நேற்றுத் தெரிவித்தார். "பயங்கரவாதம், ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படட்ட அரசுகளுக்கு ஒரு சவால்" என்ற தலைப்பிலேயே இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ரோஹித்த ஊடகங…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனித உரிமை ஆணையாளரின் வருகையால் விளைந்த, மனித உரிமை மீறல்கள்! -சபேசன் - அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அவர்களின் இலங்கை விஜயம், மிக நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்கிப் பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்து, முறையிட்டு, தமது கவலைகளைத் தெரிவிக்க முயன்ற பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், லூயிஸ் ஆர்பர் அம்மையாரை முறையாகச் சந்திக்க முடியாதவாறு பல தடைகளைச் சிறிலங்கா அரசு உருவாக்கியது. கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மேற்கொண்ட விஜயங்களின்போது, பாரிய கெடுபிடி நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது. ஓர் இரா…
-
- 0 replies
- 965 views
-
-
மன்னாரில் பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்: நிமல்கா பெர்னாண்டோ குற்றச்சாட்டு மன்னாரில் பலவந்தமாக தமிழர்களை சிறிலங்கா இராணுவம் வெளியேற்றி, உள்ளக இடம்பெயர்ந்தோர்-களாக்கியது என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சரின் அழைப்பின் பேரில் அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவில் நாங்கள் இடம்பெற்றோம். இந்த நாட்டில் நிகழ்கின்ற மனித உரிமை மீறல்களானது மக்களினது நாளாந்த வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. சிறிலங்காவில் இதுவரை தடுத்து வைக்கப்பட்டோரின் பட்டியலை சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் மகிந்த ச…
-
- 0 replies
- 940 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0e71943adc8015c
-
- 0 replies
- 1.6k views
-
-
புதன் 17-10-2007 19:01 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] போரே மகிந்தவிற்கு இலாபம் தரும் முதலீடாகிவிட்டது இதற்கான பிரதான காரணம் அவருக்கு உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஆதரவுத்தளம் வரவரக்குறைந்து வருகிறது. பதிலாக நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உள்ளூரில் அவருக்கு எதிரான தரப்புகள் அதிகரித்தும் பலம் பெற்றும் வருகின்றன. இதற்கெல்லாம் பிரதான காரணம், அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையும் போக்குமே ஆகும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏறியுள்ள விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்குக்காரணம் அரசாங்கத்திடம் பொருளாதாரம் இல்லை. கிடைக்கின்ற சகல உதவிகளையும் அரசாங்கம் போருக்கு செலவு செய்கிறது. இலங்கை பொருளாதார வளர்ச்சியைப்…
-
- 0 replies
- 950 views
-
-
புலிகள் மற்றும் கருணா குழுவினர் கட்சியாக பதிவு செய்து உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடலாம் அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்களை மீண்டும் கோருவதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்தன் பின்னர் விடுதலைப்புலிள் மற்றும் கருணா குழுவினர் கட்சிகளாக பதிவு செய்துகொண்டு தேர்தல்களில் போட்டியிடலாம் என்று அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபை தேர்தல் நடத்துவதற்கான வேட்பு மனுக்கள் ஏற்கவே கோரப்பட்டிருந்த நிலையில் புதிய கட்சிகளை பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கில் உள்ளுராட்சி ச…
-
- 1 reply
- 1k views
-
-
புதன் 17-10-2007 21:15 மணி தமிழீழம் [தாயகன்] ஜால சரணாலயத்தில் மற்றொரு குண்டுவெடிப்பு - மூவர் காயமடைந்தனர் ஜால சரணாலயப் பகுதியில் சிறீலங்காப் படையினர் தேடுதல் நடத்திவரும் நிலையில் மற்றொரு குண்டு வெடித்து சரணாலய அலுவலர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்றைய குண்டுவெடிப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை என அரச தரப்பு கூறுகின்றது. ஜால சரணாலயப் பகுதியில் அமைந்திருந்த சிறீலங்காப் படையினரின் முகாமொன்று கடந்த திங்கட்கிழமை விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதில் 6 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை மீட்கச்சென்ற அணியினரின் வாகனம் நேற்று அம…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 17-10-2007 14:27 மணி தமிழீழம் [மகான்] படுவான்கரை மக்கள் அதிரடிப்படை முகாமில் கையெழுத்திடுமாறு தெரிவிப்பு சிறீலங்காப் படையினரால் ஆக்கிமிக்கப்பட்ட படுவான்கரைப் பகுதியில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் இராணுவ நெருக்கடியினால் மிகவும் பாதிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிரடிப் படைமுகாம் சென்று தமது காவல்துறையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் காண்பித்து கையெழுத்து இட வேண்டும் என தெரிவித்துள்ளனர். படுவான்கரையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களை அழைத்து பொதுக்கூட்டத்தை நடத்தி இவ்வறிவித்தலை படையினர் விடுத்துள்ளனர். இங்குள்ள ஆண்களின் அடையாள அடைகளைப் பறித்துச் செல்லும் படையினர் சிறீலங்கா…
-
- 0 replies
- 731 views
-
-
புதன் 17-10-2007 17:40 மணி தமிழீழம் [தாயகன்] கருணா குழுவை குறிவைத்துள்ள பிள்ளையான் அணி கருணா ஒட்டுக்குழுவினரைத் தேடியழிக்கும் நடவடிக்கையில் பிள்ளையான் ஒட்டுக்குழு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவை ஒட்டுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ள பிள்ளையான், தற்பொழுது கருணா அணி உறுப்பினர்களை அழிப்பதில் தீவிரம்காட்டி வருவதாக அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே திருகோணமலை பாலத்தோப்பூரில் பிரியசீலன் என்ற கருணா குழு உறுப்பினர் பிள்ளையான் அணியினால் நேற்றிரவு 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவரது உடலம் தற்பொழுது மூதூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக…
-
- 5 replies
- 2.6k views
-
-
புதன் 17-10-2007 18:10 மணி தமிழீழம் [தாயகன்] திருகோணமலையில் படையினரும், விடுதலைப் புலிகளும் மோதல் திருகோணமலை, பாலம்பாட்டாறு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று நேரடி மோதல் இடம்பெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலிலால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார் வீரகேசரி இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாக பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: தமிழீழத்தை விரைவில் பிரகடணப்படுத்த வேண்டிய தேவையில் புலிகள் இருக்கின்றனர். இதனடிப்படையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி, தமீழழம் பிரகடனம் தொடர்பான அறிவித்தல…
-
- 8 replies
- 2.2k views
-
-
அரச அதிபர் அவமதிப்பு Written by Seran - Oct 17, 2007 at 12:11 PM முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் ஓமந்தை ஸ்ரீலங்காப்படை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் அவமதிக்கப்பட்டுள்ளார் ஓமந்தை படை சோதனைச்சாவடியில் நின்ற படையினர் சுமார் ஒன்றரை மணிநேரங்களாக அவரைத்தடுத்துவைத்ததுடன் அவர் தனது சொந்தப்பாவனைக்காக எடுத்துவந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். படைத்தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து கவலைதெரிவித்துள்ள அரச அதிபர் அவர்கள் தான் அரசஅதிபர் எனத்தெரிந்தும் படையினர் தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாகவும். படையினரின் இவ்வாறான நடவடிக்கையால் தம்மால் முல்லைமாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப்பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் ஆற…
-
- 0 replies
- 1.7k views
-
-
தாயக விடுதலைக்காய் வித்தாகிய மூன்று போராளிகளின் விபரங்கள் அறிவிப்பு [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:12 AM - GMT ] மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய மூன்று போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். லெப். ஈழவன் என்று அழைக்கப்படும் வேலாயுதபிள்ளை சரவணபவ (யாழ். மாவட்டம்) லெப். புவியரசன் என்று அழைக்கப்படும் ஆனந் வினோஜன் (நிலையான முகவரி: மன்னார் மாவட்டம், 17 ஆம் வீதி, சாந்தபுரம், கிளிநொச்சி) 2 ஆம் லெப். நீரருவி என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகர் மகிந்தன் (பழையகாமம், முரசுமோட்டை)ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.லெப்.ஈழவன் என்ற ம…
-
- 0 replies
- 900 views
-
-
ஊடக சுதந்திரசுட்டியில் இலங்கை 156வது இடத்தில் வீரகேசரி இணையத்தளம் எல்லையற்ற ஊடகவியலாளர் வெளியிட்ட உலக ஊடக சுதந்திர சுட்டி அறிக்கையில் இலங்கை 169 நாடுகளில் 156 வது இடத்தில் உள்ளது. 20 நாடுகள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 7 நாடுகள் ஆசிய நாடுகள் பாகிஸ்தான்,இலங்கை,லாவோஸ்,விய
-
- 1 reply
- 836 views
-
-
Posted on : Wed Oct 17 11:45:00 2007 ஆயுதம் தரித்த குழுக்களின் நடமாட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த வண்ணமுள்ளது கண்காணிப்புக்குழு அறிக்கையில் தெரிவிப்பு கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் தரித்த குழுக்களின் நடமாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளதுடன் கருணா குழுவினரால் ஆள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பான முறைப் பாடுகளும் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. கண்காணிப்புக் குழுவின் ஆகப்பிந்திய வாராந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மட்டக்களப்புக்கு வடமேற்கில் 12 கிலேõ மீற்றர் தொலைவில் உள்ள விநா யகபுரத்தில் ஒக்ரோபர் 4ஆம் திகதி படைத்தரப்பினர் இரண்டு மனித சடலங்களைக் கண்டெடுத்தனர். கண்கள் கட்டப…
-
- 1 reply
- 875 views
-
-
Posted on : 2007-10-17 தொடரும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்தின் பதில்தான் என்ன? இலங்கையில் அரசுப் படைகளின் பின்புலத்தில் அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான ஈடுபாடு கிடையாது என்பது தொடர் பான அரசின் "பொட்டுக்கேடு' மீண்டும் ஒரு தடவை அம்பலமாகி யிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட தரப்புகளே இது விடயத் தில் அரசின் உள்ளார்த்தங்களை அம்பலமாக்கும் விவகாரம் மீண் டும் அரங்கேறியிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் இலங்கையில் மனித உரிமை மீறல் கள் மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்றன. இது தொடர்பாகத் தேசிய ரீதியிலும்,…
-
- 0 replies
- 729 views
-
-
2 ஆம் லெப். முகிலவன் வித்துடல் தூய விதைகுழியில் விதைப்பு [ புதினம் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:04 AM - GMT ] முகமாலைப் பகுதியில் 13.10.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். முகிலவன் என்ற போராளியின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற இரணைப்பாலை வட்டப் பொறுப்பாளர் செம்பருதி தலைமையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பொதுச்சுடரினை வடபோர் முனைக்கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான வேந்தன் ஏற்றினார். ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையை பெற்றோர் சூட்டினர். வட போர்முனைக் கட்டளைப் பணியகத் தளபதி…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவில்லை: இந்திய ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை எவரும் ஆதரிக்கவில்லை என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். புதுடில்லி ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியுள்ளதாவது: லூய்ஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் குறித்து நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தோம். மனித உரிமைகள் தொடர்பாக அங்குள்ள நிலைமைகளை அவர் ஓரளவிற்கு சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். அனைத்துலகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக் கால தாமதமாவதனை வைத்து மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிலங்காவின் சட்டத்துறை…
-
- 0 replies
- 1.1k views
-