ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வட்டக்கச்சிப் பிரதேசத்தில் மேஜர் ஜொனி நினைவுத்தூபியும் கப்டன் திலகன் நினைவுப் பூங்காவும் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வட்டக்கச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 899 views
-
-
கொட்டேகொட புத்த கோவிலிலிருந்து புனித யானைத் தந்தங்களை ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறீ மனகே திருட முயற்சித்ததாக அக்கோவிலின் தலைமை பிக்கு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 763 views
-
-
சிறிலங்காவின் வானூர்தித் தாக்குதல்களால் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிறார்களின் உளவுறன் எத்தகைய பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். வடமராட்சியில் இருவரைக் காணவில்லை என்று யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 596 views
-
-
மன்னாரின் மடு மாந்தை மேற்குப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்த 267 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 533 views
-
-
கிளிநொச்சியில் அனைத்துலக உளநல நாள் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 771 views
-
-
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம் வீரகேசரி இணையத்தளம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்க்கான ஆனையாளர் லூயிஸ் ஆர்ப்பர் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.பல்வேறு மனித உரிமைகள் ஆமைப்புக்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.இது தொடர்பான உண்மை நிலைகளை அரியும் பொருட்டு ஆர்பரின் இவ்விஜயம் அமையவுள்ளது. இலங்கை விஜயம் செய்யும் ஆர்ப்பர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்,மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க .ஐக்கிய தேசிய கட்சி, ஜாதிக ஹெல உறுமைய, சிலங்கா முஸ்கிம் காங்கிரஸ், தமிழரசு கட்சி மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்களை சந்திக்கவுள்ளார்.வெள்ளிக்கி
-
- 11 replies
- 1.9k views
-
-
அரசு, எதிரணியின் அழைப்புகளில் குளிர்காயும் ஜே.வி.பி. தலைவர்கள் [09 - October - 2007] ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு புறத்தில் அரசாங்கமும் மறுபுறத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், ஜே.வி.பி. இருதரப்பினரிடமும் கிறாக்கி காட்டிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்தவாரம் நிக்கவரெட்டியவில் நடைபெற்ற ஏர்பூட்டுவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆதரவைத் தருமாறு ஜே.வி.பி.யிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று முன்தினம் கடித மூலம் பதிலளித்திருக்கிறார். தங்களிடம் ஆ…
-
- 0 replies
- 714 views
-
-
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்.. வீரகேசரி இணையத்தளம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இளைஞ்சரொருவர் மின்சாரம் தாக்கி இறந்துளார் .நேற்று இரவு 7.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பாட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.முறையற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட மின்சார உபகரணத்தை பயன்படுத்திய வேளை உயிரிழந்த இளைஞர் குடிவரவு குடியகழ்வு சட்டத்தைனை மீறியமைக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார பிரேத பரிசோதனைகள் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன...
-
- 0 replies
- 852 views
-
-
கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் - தேசிய பிக்குகள் முன்னணி போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்து எறிந்துவிட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு தேசிய பிக்குகள் முன்னணி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி பா.ஜ.க. வகுக்கும் புதிய வியூகம் -கலைஞன்- இராமரை வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசை கலக்கிவரும் பாரதீய ஜனதாக் கட்சி தற்போது ஈழத் தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதால் மீண்டும் தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பக்கோரி தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் வீடு வீடாக நிவாரணப் பொருள் சேகரிக்கும் நடவடிக்கை, ஈழத் தமிழருக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு கோரி புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் பேரணியென தமிழகமே சூட…
-
- 3 replies
- 1.9k views
-
-
புலிகளின் தாக்குதல் திட்டத்தை குழப்ப முனையும் படையினர் -விதுரன்- வன்னியில் கடந்த இரு வாரங்களாக கடும் சமர் நடைபெற்று வருகிறது. வவுனியா - மன்னார் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளுக்கப்பால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைய படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல் அந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றது. வடக்கில் பருவமழை பொழியத் தொடங்கிவிட்டது. மழை வீழ்ச்சி கடுமையாக இல்லாத போதும் ஆங்காங்கே பரவலாக ஓரளவு மழை பெய்து வருகிறது. கடும் மழை பொழிய முன்னர் வவுனியா மற்றும் மன்னாரில் விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் முடிந்தவரை நுழைந்துவிட படைத்தரப்பு முயலுகின்றது. எனினும் அது சாத்தியப்படுவதாகத் தெரியவ…
-
- 2 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சி அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தில் மூதாளர் மதிப்பளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் அரசியல் கருத்தூட்டல் நிகழ்வு நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6358eb576b8912c
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சிறிலாங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு ஆலங்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளைக் கட்ட சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 800 views
-
-
திங்கள் 08-10-2007 17:11 மணி தமிழீழம் [சிறீதரன்] மிருசுவில் காவலரண் மீது தாக்குதல்: படைச் சிப்பாய் பலி! தென்மராட்சி மிருசுவில் பகுதியில் உள்ள சிறீலங்கா படையினரின் காவலரண் ஒன்று இனம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் படுகாயமடைந்த நிலையில் பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட நேரம் இவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
மன்னார் முன்னரங்கில் மோதல் வீரகேசரி இணையம் மன்னார் உயிலங்குளம் வடக்கு பாதுகாப்பு முன்னரங்கில் இன்று காலை விடுதலைப் புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . உயிலன் குளம் முன்னரங்கு நோக்கி முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளதாகவும் இதில் இரு விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இத் தாக்குதலில் இராணுவத்தினரிற்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையென பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்பாறையில் கிளேமோர் தாக்குதல் இருவர் பலி வீரகேசரி இணையம் அம்பாறை பக்கிமிட்டியாவை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ஊர்காவர்படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒரு அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை வீரர்களை இலக்கு வைத்து இக் கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அம்பாறை பக்கிமிட்டியாவ மற்றும் கொடுறுஹெலவிற்கும் இடையில் இக் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் தலைவரான கருணாவை அக்குழுவிலிருந்து நிதி முறைகேடுகளுக்காக "இடைநீக்கம்" செய்திருப்பதாக அதன் "மத்திய குழு" முடிவு செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 2.2k views
-
-
திங்கள் 08-10-2007 05:10 மணி தமிழீழம் [மயூரன்] ஒரு வருடம் ஒத்துழைப்பை வழங்குமாறு ஜேவிபிக்கு மகிந்த அழைப்பு ஒரு வருடம் காலம் தமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஜேவிபியிடம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக்கு ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கடித மூலம் பதிலை வழங்கியுள்ளார். அக்கடித்தில்... இந்த அழைப்பை விடுப்பதற்கு முன்னர் தேர்தலின் போது வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படும் அரசியல் நபர்களுக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் அரசியல் தவறுகளை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்த ஜேவிபி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்க…
-
- 0 replies
- 816 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரை விமர்சித்தால் அவர்கள் துரோகிகளாக கருதப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2007-10-08 மனித உரிமை மீறல் விவகாரம்: அம்பலமாகும் உண்மைகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைத் தீவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சம் பந்தமாக அமெரிக்கத் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி வந்திருக் கின்றது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்திருக்கின்றன. ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல், படுகொலைகள், கப்பம் அறவிடல் எனத் திட்டமிடப்பட்ட வன் முறைகள் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. இத்தகைய மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுத் தலைமை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது என்பதையும் தாண்டி இத்தகைய மீறல்களின் பின்னணிச் செயற்பாடுகளுக்கும் அரசுத் தலைமைக்…
-
- 0 replies
- 732 views
-