ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
நாசீசம் இறந்துவிடவில்லை. சிறிலங்காவில் அது தத்துவ ரீதியாக உயிர் வாழ்ந்து வருகிறது என்று அமெரிக்காவின் "தி என்குயரர்" பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பு பல்கலைக்கழக மாணவர் மத்தியில் மோதல்; விஞ்ஞானபீடம் மூடப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமும் கணினி தொழில்நுட்பப் பிரிவும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதலையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியினையடுத்து இரு மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே விஞ்ஞான பீடமும் கணினி தொழில் நுட்பப் பிரிவும் மூடப்பட்டுள்ளன. மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டி மூலமாகத் தீர்வு காணவேண்டும் என்று ஐ.தே.க ஒருபோதும் கூறவில்லை. மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு மூலமே தீவுர் அமைய வேண்டும் என்பது தான் ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு. சமஷ்டி தான் ஐ.தே.க நிலைப்பாடு என்று ஊடகங்கள் தான் கூறிவருகின்றன. நாம் ஒரு போதும் அப்படிக் கூறவில்லை.இவ்வாறு ஐ.தே.கவின் நா.உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றறுகையில் கூறினார். அவர் தொடர்ந்தும் கூறியவை :- 'தேசிய பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை முன்வைக்க இந்த அரசு தயாரில்லல. யுத்தத்தையே அது நம்பியுள்ளது.'யுத்தம் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பது இந்த…
-
- 1 reply
- 1k views
-
-
புலிகளை பாதுகாப்பதாக அமையும் நோர்வேயின் புதிய சட்டமூலம் அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் நீதி அமைச்சினால் பயங்கரவாத அமைப்புகளையும் செயற்பாடுகளையும் தடை செய்வதற்காகத் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (Anti-Terrow Laws) சம்பந்தமாக ஷ்ரீலங்கா அரசும் ஐக்கிய அமெரிக்க அரசும் அவற்றின் எதிர்ப்பை நோர்வே அரசுக்குத் தெரிவித்துள்ளன. இதற்குக் காரணம் நோர்வே நீதி அமைச்சின் மேற்படி சட்டமூலத்தில் கூறப்பட்டிருக்கும் சட்டவிதிகளும் சட்ட நடைமுறைகளும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் அங்கத்தவராக இருந்து செயற்படுவது நோர்வேயில் சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் அவ்வாறே பயங்கரவாத நடவடிக்கையில் குறித்த பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஈடுபட்ட…
-
- 1 reply
- 1.9k views
-
-
இவ்வருட இறுதிக்குள் தீர்வு: இந்தியாவிடம் மகிந்த உறுதி இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிடம் உறுதியளித்துள்ளார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஆராயந்து வருவதாகவும், இக்குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று மகிந்த கூறியிருக்கின்றார். நியூயோர்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்தபோது, இவ்வாறான உறுதிமொழியை வழங்கியிருப்பதாக, சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித போகொல்லகம கொழும்பின் பத்திரிகை ஒன்றிற்கு இன்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில…
-
- 3 replies
- 1.5k views
-
-
அனைத்துலகத்தின் முன் வலிய அம்பலப்படும் சிறிலங்கா சுவிஸ் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் பாரிய அழுத்தங்களுக்கு சிறிலங்கா உள்ளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி, தனியான சந்திப்புக்களையும் அரங்கக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ஐ.நா. உறுப்பு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அவர் தனியே சந்தித்து வருகிறார். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பல்வேறு தரப்பினரது அழுத்தங்களினால் இப்போது ஏதேனும் ஒரு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையை இலங்கையில் ஏற்படுத்துவது குற…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேசம் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது: ஐ.நாவில் மகிந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அந்த மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சவின் முக்கிய பகுதிகள்: http://www.eelampage.com/?cn=33567
-
- 10 replies
- 2.3k views
-
-
10 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள். ஜ புதன்கிழமைஇ 26 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலி மற்றும் மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 10 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1. கப்டன் இசையறிஞன் என்ற ஆனந்தராசா கன்சிலீன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: ராதிகா புவனேஸ்வரன், திருவையாறு, கிளிநொச்சி)2. கப்டன் நித்தியராஜ் என்ற கோபாலகிருஸ்ணன் பிரதீபன் (மட்டக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
புலம் பெயர் தமிழர்களின் பலமும், பலவீனமும் “தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரத்திற்கான தமது இலட்சியத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளார்கள். சிங்கள அரசுகள் தம்முடைய சிங்கள பௌத்தப் பேரினவாதக் கொள்கையிலும், செயல்களிலும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளார்கள். மேற்குலகமும் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டு, உள்ளுரத் தெளிவாகத்தான் உள்ளது. ஆனால், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் எமது நாட்டின் விடுதலைக்கான இலட்சியத்தில் ஒட்டுமொத்தமாகத் தெளிவாகவும், விழிப்பாகவும், சஞ்சலம் எதுவும் இல்லாமலும் இருக்கிறோமா என்ற மிக முக்கியமான கேள்விக்கு நாம் இதயசுத்தியுடன் பதில் அளிக்க வேண்டிய நேரம் இது! இந்தச் சுய விமர்சனத்தின் ஊடாக, எமது குறைகளைக் களைந்து, தமிழீழத் தேசியத் தலைமையின் கர…
-
- 2 replies
- 1k views
-
-
1987ஆம்ஆண்டு ஈகைக்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவைத் தழுவியபின்னர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரை http://astra.lunarpages.com/~tamiln2/VOTRA...dar%20urai.smil நன்றி: புலிகளின்குரல்
-
- 0 replies
- 1.2k views
-
-
23.09.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் பதிவு
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன் 26-09-2007 00:46 மணி தமிழீழம் [மயூரன்] அம்பாறையில் எறிகணை வீச்சு பரிமாற்றம் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் செவ்வாய்கிழமை மதியம் 2.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதி முகாமிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிநோக்கி எறிகணைவீச்சு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து விடுதலைப்புலிகளும் பதில் எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதலானது மதியம் 3 மணிவரை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகள் தரப்பில் எதுவித இழப்புகளும் ஏற்படவில்லை எனத்தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் இன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
கிளிநொச்சிப் பகுதியில் சிற்றூர்தி ஒன்று தடம்புரண்டதில் 27 பேர் பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
ஊடகங்களுக்கு எதிராக அவரசரகாலச் சட்ட விதிகள்? அரசு ஆயுதங்களைச் சுவீகரிப்பது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவசரகாலச்சட்ட விதிகள் வரையப்பட்டிருக்கின்றன என்றும், அவை விரைவில் வர்த்தாமானி அறிவித்தல் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகு கருத்து வெளியிடும் சுதந்திம் , ஊடக சுதந்திரம் போன்ற அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், ஆயுத சுவீகரிப்புத் தொடர்பான நிதிக் கையாள்கை விடயங்கள் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பு கூறும் நிலைமையையும் மோசமாகப் பாதிக்கச் செய்கின்றது என்று சுயாதீன ஊடக இயக்கம் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. இராணுவ விமானங்களைக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 25-09-2007 01:43 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் சட்டவாளர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டவாளர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இன்று முதல் சட்டவாளர்கள் தமது பணிகளுக்குச் செல்லவுள்ளனர். நேற்று திங்கட்கிழமை யாழ் நீதியாளர் விக்கினராஜா, பருத்தித்துறை நீதியாளர் அரியநாயகம், மல்லாக நீதீயாளர் சரோஜினி இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்ட ஒன்றுகூடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை சந்தித்த போது இவர்களுக்கு வழங்கி உறுதி மொழியைத் தொடர்ந்து இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது எனத் தெரிவிக…
-
- 1 reply
- 896 views
-
-
செவ்வாய் 25-09-2007 01:36 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 7 பேர் சரண் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களில் ஆறு பேர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப் படுகின்றது. சரணடைந்தோர் 24 அகவை தொடக்கம் 56 அகவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி பதிவு.
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
தமிழ் இறைமை அடிப்படையில் சமாதான பேச்சு இடம்பெறவேண்டும் விடுதலைப்புலிகளின் அரசியல் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையில் 62 ம் கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் இறைமை அடிப்படையில் தமிழ் மக்களின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகள் அவ் அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கிழக்கு தீமோர் மற்றும் கொசோவோ ஆகிய பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்பங்கள் போன்று தமிழ் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என கேட்க்கப்பட்டிருந்தது. சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறை, இனச்சுத்திகரிப்பு, கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தடுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாராளுமன்றச் சாப்பாடு [24 - September - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. தங்களது வருமானத்திற்குள் வாழமுடியாத சாதாரண மக்கள் அன்றாடம் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. நாட்டின் நன்மைக்காக வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் நாட்டு மக்களில் அரைவாசிப்பேர் வறுமையிலேயே வாழ்கிறார்கள். 25 சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலைச் சிறார்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது. பட்டினியுடன் படுக்கைக்குச் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், மக்களின் இந்தத் துன்பங்களில் எதுவுமே அவர்களின் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
எடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிது - க.வே.பாலகுமாரன் வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றியும் பல வேளைகளில் மீட்டல்களாக அமைவதை வாசகர்கள் அவதானித்திருப்பர். எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். இவ்வாசகத்தைக்கூட இப் பத்தியில் மீண்டும் எழுதவேண்டியுள்ளது. "நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊர்க்கின் உணர்க்கு இறுதியாகிவிடும்" இக்குறளைக்கூட சந்திரிக்கா + ரத்வத்தைக் குழுமம் ஆட்டம்போட்ட பொழுது 1998களில் தலைப்பாக இட்டோம். இப்போது அதே வார்த்தைக்கு மீளவும் உயிர் கொடுத்து அவரையும் இணைத்து "அவர் ஏறி விழுந்த அதே மரத்தின் நுனிக்கொம்பர்" ஏறும் இராசபக்ச சோதரர் பற்றி எழுதவும்…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிங்களப் படைகள் ஆரம்பித்துள்ள வன்னி மீதான பெரும் போர் வன்னி நிலப்பரப்பு மீது பெருமெடுப்பில் சமரொன்றைத் தொடுத்து அதை ஆக்கிரமிக்கவேண்டும் என்பது மகிந்த அரசின் கனவாக உள்ளது. இந்தச் சமருக்கு ஜே.வி.பி மற்றும் கெலஉறுமய போன்ற அதிதீவிர இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இப்போது வன்னி ஆக்கிரமிப்பு சிங்களக் கட்சிகளின் பொதுக்கனவாகிவிட்டது. சிங்கள மக்களும் அத்தகையதொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவளித்துள்ளனர். சமாதான விரும்பிகளாகக் காட்டிக்கொண்ட சிங்களப் புத்திஜீவிகளும் வன்னி மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள ஊடகங்களில் கருத்துரைகள் எழுதி வருகின்றனர். வன்னி மீதான படையெடுப்பு முயற்சிகளுக்கு சர்வதேச மன…
-
- 0 replies
- 1.8k views
-
-
மக்கள் மீது ஏவப்படும் எழுத்து வன்முறை -சி.இதயச்சந்திரன்- பற்றைக்குள் பாம்பு இருக்கிற நேரம் இல்லையோ, தொடர்ந்து தடியால் பற்றையை அடித்தவண்ணம் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். வெற்றுப் பற்றைக்கு தடியால் அடிக்கும் திருப்பணியை ஊடகவியலாளர் கூட்டமொன்று இந்தியாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுக்கொண்டுள்ளது. பேரினவாதத்தால் அழிக்க இயலாத விடுதலைப் புலிகள் தமக்குள் முட்டி மோதியாவது அழிந்து போக வேண்டுமென சாபமிடுவதே சிலரின் எழுத்தாகி விட்டது. தமக்குப் பொருத்தமான வாரிசு அரசியலை புலிகள் மீது பொருந்திப் பார்ப்பது அவர்களின் எண்ணப்பாட்டிற்கு இசைவானதுதான். இலங்கையில் நடக்கும் குடும்ப அரசியல் இதற்கு ஒரு நல்ல சான்று பகர்கிறது. சேறு பூசும் ஊடகச் சமரின் பிதாம…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....5bf8d78622277c4
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "த சென்ரினெல்" ஏடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-