ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
நீதியரசர் பகவதியை அவமதித்த சிங்களர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர். இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமன்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது "சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு" என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை இராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ், முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஒன்றுபடுவதே அவசரத் தேவை [31 - July - 2007] வ.திருநாவுக்கரசு * மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்றால் வாழ்க்கைச் செலவு உயர்வானது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமாக கூடுதலான `செல்போன்' பாவனை மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி போன்ற வளர்ச்சி நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஆளுநர் கப்றால் அரசாங்க கட்சியின் பேச்சாளர் போல் பிரசார வேட்கையுடன் கூடிய அறிக்கைகளை விடுத்து வருவது மிகுந்த கேலிக்கூத்தானதாகும். ஐ.தே.க. மற்றும் ஷ்ரீ.ல.சு.க. (மக்கள் பிரிவு) இணைந்து அமைத்த தேசிய காங்கிரஸ் தனது முதலாவது ஆர்ப்பாட்ட பேரணியையும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தையும் சென்றவாரம் நடத்தியுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள நாட்டைக் காப்பாற்ற மக்க…
-
- 0 replies
- 995 views
-
-
பழைய பூங்கா வீதியில் கிளைமோர் தாக்குதல்: மயிரிழையில் தப்பியது இராணுவ வாகனம் யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது கிளைமோர் தாக்குதலானது சுண்டிக்குளி பகுதியில் பழைய பூங்கா வீதியில் மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் வாகனம் குண்டு தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சிறீலங்காப் படையினர் எவரும் காயமடையவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது -பதிவு
-
- 2 replies
- 1.2k views
-
-
கிழக்கில் இராணுவ ஆட்சிக்கு வித்து தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் கிடுக்கிப் பிடியை இறுக்கி, அவர்களை நசுக்கிவிடுவதற்கான எல்லா வழிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது பல்வேறு வடிவங்களில், கோணங்களில், துறைகளில் வெகு லாவகமாக - கச்சிதமாக - நடைமுறைப்படுத்தப்படுகிறது. மிகக் குறிப்பாக, கிழக்கு, தமிழர்களின் பூர்வீக வாழ்விடம் இல்லை என்று ஆக்குவதற்கான சூழ்ச்சிகள் இன்று நேற்றுத் தொடங்கப்பட்டவை அல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில வருடங்களிலேயே அபிவிருத்தி என்ற போர்வையில், அரசுகளால் - சிங்களப் பேரினவாதத்தால் - நடத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ச்சி நிரலில் முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டன. அதன் பின்னர், அபிவிருத்தியில் அங்குள்ள தமிழர்களின் பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி திருகோணமலை மாவட்டம் சம்பூர் தமிழர் பிரதேசத்தை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக மகிந்த அரசாங்கம் பிரகடனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தை எதிர்த்து சம்பூரைச் சேர்ந்த 4 பேர் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா, இது போன்ற "உணர்வுப்பூர்வமான" விடயங்களை நீதித்துறை முன்பாக கொண்டுவரக் கூடாது என்றும் எச்சரித்த சரத் என்.டி.சில்வா, இத்தகைய மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால் இதுபோன்ற 15 ஆயிரம் மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு விடு…
-
- 2 replies
- 1k views
-
-
கோட்டை ரயில்வே நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் ஆயுதத்துடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்
-
- 1 reply
- 1.5k views
-
-
கடலின் மடியில் கந்தக வாசம்: மலபார் 07 - ஆய்வுக் கட்டுரை பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள அல் கைடா போராளிகளை தாக்குவதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளின் தாக்குதல்களை அடுத்து அல் கைதாவின் முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகள் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளனர். பாகிஸ்தானில் அல் கைதா போராளிகள் தங்கியிருப்பதையும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அமெரிக்க புலனாய்வு துறை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஒசாமா பின் லேடன் தொடர்ச்சியாக விடுத்து வரும் எச்சரிக்ககைளால் அமெரிக்காவின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
தீர்க்கமான காலக்கட்டத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு உள்ளேயே பலர் இருக்கின்றனர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சகோதர நிறுவனத்துடனான அரசாங்கம் இன்றும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம் அதனை மூடி மறைப்பதற்காக பொருட்களின் விலைகளை அதிகரித்து பொருளாதார சுமையை மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சி செய்கின்றது. நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள் ளப் படுகின்ற போது ஆட்சியை கவிழ்ப்பதற்கு அரசாங்கத்திற்குள்ளேயே பலர் இருக்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் செயற்பாடுகளுக்கு அஞ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விலை அதிகரிக்கின்ற போது சிவப்பு சகோதரர்கள் மௌனம் காப்பது ஏன்? ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் பொருட்களின் விலைகள் குறைந்திருந்த போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சிவப்பு சகோதரர்கள் இன்று நிமிடத்திற்கு நிமிடம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்ற போது மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம் பொருளாதாரத்துடன் விளையாடிக்கொண்டிக்கின்றது. பொருளாதார யுத்தத்தில் தோல்வியடைந்தால் சகல யுத்தத்திலும் தோல்வியடைந்து விடுவோம் என்றும் அவர் சொன்னார். எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண…
-
- 0 replies
- 994 views
-
-
கருணாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார் டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
கிழக்கில் ஆயுதக் குழுக்களால் ஆபத்து - மனித நேய அமைப்புகள் அச்சம் தென் தமிழீழத்தில் ஒட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாக, பல உள்ளுர், மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பல பகுதிகளுக்கு செல்வதற்கு சிறீலங்காப் படையினர் விதித்துவரும் தடைகளும், தமது பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இந்த அமைப்புகள் கூறியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது நிலை பற்றி எடுத்துக்கூறிய போதிலும், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் அரசினால் ஆரம்பிக்கப்படவில்லை என தொண்டர் அமைப்புகள் கூறுகின்றன. “வோல்ட் விஸன்” எனப்படும் “உலக…
-
- 0 replies
- 1.1k views
-
-
புவாக்பிட்டியவில் கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்பு அவிசாவளை புவாக்பிட்டியப் பகுதியில் 5 மில்லியன் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வர கடசரனத் மகோதரர் (வயது 27) என்ற தகவல் தொடர்புப் பொறியாளர் கடந்த ஜூலை 15 ஆம் நாள் வெள்ளவத்தையிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பும்போது காணாமல் போனார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துவலப் பகுதியைச் சேர்ந்த கண்ணா மற்று சீலன் ஆகியோரை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததாகவும் இருவரும் மகோதரரை கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புவாக்பிட்டிய றப்பர் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மகோதரரின…
-
- 1 reply
- 698 views
-
-
வடக்கில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் * அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை -ஏ.ரஜீவன்- "இலங்கை அரசாங்கம் வடபகுதியில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் எண்ணத்தை கைவிட வேண்டும், சர்வதேச சமூகமும் இதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்' என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரெத் இவான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். யுத்தம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லும் பட்சத்தில், கடும் மோதல் மூழ்வதுடன், பொதுமக்களுக்கு பேரழிவு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ருவாண்டா, கொசோவோ போன்ற நிலைமை காணப்படாவிட்டாலும் நிலைமை அந்தளவிற்கு மோசமடைவதற்கான சாத்தியக் கூறுகள…
-
- 0 replies
- 692 views
-
-
Posted on : Mon Jul 30 5:50:42 EEST 2007 வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை கிழக்குப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பாதுகாப்புப் படையினர் அடுத்து வன்னிப் பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது. முதற்கட்டமாக இராணுவத்தினர் மேற்குக் கடலோர மன்னாரிலிருந்து கிழக்குக் கடலோர கொக்கிளாய் வரையிலான கடலோரத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சிறிய குழுக்களாக முன்னேறிச் சென்று முல்லைத்தீவு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் படையினர் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நோக்கில் ஏற்கனவே ஓம…
-
- 5 replies
- 2.7k views
-
-
மீள்குடியேற்றத்தின் பேரினால் வீட்டுச் சிறைகளில் தமிழர்கள்": பி.பி.சி. மீள்குடியேற்றப்படும் இடம்பெயர்ந்த தமிழர்களில் சந்தேக நபர்கள் என்ற பேரில் புகைப்படங்கள் எடுப்பதும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கூறி வீட்டுச்சிறைகளில் வைக்கப்படுகின்ற அவலத்தை பி.பி.சி. சிங்கள சேவை வெளிப்படுத்தியுள்ளது. பி.பி.சிங்கள சேவையான சந்தேசியவில் நேற்று திங்கட்கிழமை வெளியான சிறப்புக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாவது: இலங்கையின் கிழக்கில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் தடங்கல் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். தாங்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் ஆனால் தங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாகவும் மட்டக்களப்பு நாவற்குடா…
-
- 1 reply
- 713 views
-
-
சனி 28-07-2007 14:42 மணி தமிழீழம் [மோகன்] முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா - ராகுல் காந்தியுடன் பேச்சு ஸ்ரீலங்காவின் முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவராக கருதப்படும் ராகுல் காந்தியுடன் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாள் அரசு முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நவீன் திஸநாயக்கா இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தி இந்திய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நபர் என்ற வகையில் அவர் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்க அமெரிக்க செனட்டில் பிரேரணை சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவதற்கான பிரேரணயை அமெரிக்க செனட் சபை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான இராணுவ உதவி தொடர்பிலான உத்தேச சட்ட முன்வரைபின் கீழ் சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்கும் பிரேரணையை அமெரிக்க செனட் முன்வைத்துள்ளது. சிறிலங்காவில் சீர்குலைந்து போய்விட்ட மனித உரிமைகளைச் சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சட்ட முன்வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச சட்டமுன்வரைபின் 690 ஆம் பிரிவில் சிறப்பு குறிப்பாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்க…
-
- 5 replies
- 1.9k views
-
-
மகிந்த அரசாங்கத்தைக் கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் எரிபொருள் விலையை திடீரென மகிந்த அரசாங்கம் அதிகரித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று திங்கட்கிழமை முற்பகல் நீர்கொழும்பில் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிலங்காவில் எரிபொருட்களின் விலையை மகிந்த அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உயர்த்தியது. பெற்றோலின் விலை 6 ரூபாவாலும், டீசலின் விலை 4 ரூபாவாலும், மண்ணெண்ணெயின் விலை ஒரு ரூபாவாலும் உயர்த்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு…
-
- 0 replies
- 681 views
-
-
கொழும்பில் மாணவர்கள் போராட்டம்- காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு [திங்கட்கிழமை, 30 யூலை 2007, 16:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்த ராஐரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் கலைத்தனர். லிப்டன் சுற்றுவடத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்க பதாகைகளையும் முழக்கமிட்டு தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பல்கலைக்கழகத்திற்கான போதுமான வளங்கள், விடுதி வசதி ஆகியவற்றைப் பெறுத்தர ராஜரட்டை பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ முன்வரவில்லை என்று கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆமர் பிளேற் இல்லாத இராணுவ வாகனம் குறித்து புலிகளுக்கு தகவல் கொடுப்பது யார்? [30 - July - 2007] [Font Size - A - A - A] இராணுவ வாகனங்களுக்குப் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் உறுதியான உலோகத் தகட்டு உபகரணமே `ஆமர் பிளேற்' என்பதாகும். பொதுவாக இராணுவ வாகனங்களுக்கு ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருக்கும். எதிரிகள் மேற்கொள்ளும் அனைத்து வகையான வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்தும் இந்த ஆமர் பிளேற் பொருத்தப்பட்ட வாகனங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்டுவிடும். 25 வருடங்களாக இந்த நாட்டில் போர் நடந்து வருவதால் பாதுகாப்பு முப்படையினர், பொலிஸார், படையினரின் வாகனங்களுக்கு மேற்படி ஆமர் பிளேற் பொருத்தப்பட வேண்டிய அவசியம் பற்றிக் கூறத்தேவையில்லை. புலிகள் இயக்கத்தினர் துப்பாக்கி மற்ற…
-
- 2 replies
- 2.8k views
-
-
திங்கள் 30-07-2007 02:03 மணி தமிழீழம் [மோகன்] அதிகாரப்பரவல் மூலம் தீர்வு முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும் : ஜே.வி.பி சிறீலங்காவில் சர்வகட்சிக்குழு அதிகாரப்பரவலாக்கம் மூலம் தீர்வு காணலாம் என தீர்வை முன்வைத்தால் இதனை ஜே.வி.பி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஜே.வி.பி யின் பாராளுமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான விஜியஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் தொடரும், ஐதேக வின் தலைவர் ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் ஐதேக அண்மையில் நடத்திய போராட்டம் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பி யே செயற்படுவதாகவும் மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி யே செயற்பட…
-
- 3 replies
- 1.2k views
-
-
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- போதுமான மருந்துகள் இல்லை: துணுக்காய் மருத்துவமனை அதிகாரி கவலை [திங்கட்கிழமை, 30 யூலை 2007, 15:22 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மருத்துவமனையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதுமான மருந்துப் பொருட்கள் இல்லை என்று மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பு.குகதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டதாக உள்ளது. நோயாளர்கள் அனைவருக்கும் சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்பட்டாலும் முடிந்தவரை இருக்கின்ற மருந்து வகைகளைக் கொண்டு நோயாளர்களின் தேவைகளைப் பூர்த்தி …
-
- 0 replies
- 752 views
-
-
திங்கள் 30-07-2007 15:13 மணி தமிழீழம் [சிறீதரன்] மனிதநேய விவகாரங்களுக்கான ஐநா வின் உயர் அதிகாரி சிறீலங்காவிற்கு விஜயம் ஐக்கிய நாடகள் சபையின் மனிதநேய விவகாரங்கள் மற்றும் இடர் அனர்த்த பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு.ஜோன் கொல்மிஸ் அவர்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ல் இருந்து 9 ம் திகதி வரை சிறீலங்கா அரசின் அழைப்பை ஏற்று விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டு ஒருவருடம் பூர்தியாகும் நிலையில் இவரது விஜயம் இடம்பெறுகின்ற போதும் இதற்கும் இவரது விஜயத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது. இதேவேளை பட்டினிக்கு எதிரான அமைப்பு கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தினுள் எதிர்வரும் ஓகஸ்ட் …
-
- 2 replies
- 1k views
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளசு நேற்று யாழ் சென்றுள்ளார். தொடர்ந்து யாழ் நகரில் தங்கியிருக்கும் இவர் எதிர்வரும் திங்கள் முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பலவெறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரச துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்நதவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதும் அமைச்சரின்…
-
- 6 replies
- 1.4k views
-
-
திங்கள் 30-07-2007 16:00 மணி தமிழீழம் [சிறீதரன்] அடையாள அட்டையைப் பெற இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இராணுவ முகாமிற்குச் சென்று பெற்றோர்கள் விசாரித்த போது குறிப்பிட்ட இளைஞர் தமது முகாமிற்க்கு வரவில்லையென இராணுவத்தினர் கைவிரித்துவிட்டார்கள். வடமராட்சி தொன்டமானாறு அரசடியைச் சோந்த குமாரசாமி சிவனேசன் வயது 24 என்பவருக்கே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பெற்றோர்களினால் யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆனைக் குழுவில் இன்று முறையிடப்பட்டுளளது. கடந்த சனிக்கிழமை குறிப்பிட்ட இளைஞரிடம் வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தேசிய அ…
-
- 0 replies
- 980 views
-