Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவில் யுத்த முன்னெடுப்புளால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு 15 மில்லியன் யூரோக்களை ஜரோப்பிய ஒன்றியம் வழங்க முன்வந்துள்ளது. இத்தகவலை ஜரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய பொறுப்பதிகாரி பீட்டர் பர்ஜஸ் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். 15 மில்லியன் யூரோக்கள் இந்தவாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நியுதவிகள் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வுதவியில் ஒரு பகுதி தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கும் வழங்கப்படும் எனத் பீட்டர் பர்ஜஸ் குறிப்பிட்டுள்ளார். 15 மில்லியன் யூரோக்களும் அவரசகால தங்குமிடங்கள், குடிநீர் சுகாதாரம், உணவுப் பொருள்க…

    • 1 reply
    • 830 views
  2. சம்பூர் அனல் நிலையம் தொடர்பில் ஆராய இந்திய உயர்மட்டக் குழு அடுத்த வாரம் வருகை. திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள அனல் மின்னிலையத் திட்டம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு இந்திய மின் வலுத்துறை அமைச்சர் தலைமையிலான உயர் மட்ட குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை செல்லவுள்ளது. இந்திய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தானம் இலங்கை மின்சார சபையுடன் திருகோணமலையில் அனல் மின்னிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள அனல் மின உற்பத்தி நிலையத்தில் இந்திய நிபுணர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் அமைப்பதற்கு திட்…

    • 1 reply
    • 1k views
  3. கோட்டபாய ராஜபக்சவினால் தொப்பிக்கலையில் கிழக்கின் வெற்றி நினைவுக் கல் திறப்பு. ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று சனிக்கிழமை தொப்பிகலை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த கோட்டபாய ராஜபக்ச அங்குள்ள படைத்தளபதிகளுடன் விரிவான பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளார். கிழக்கு மாகாண வெற்றியை குறிக்கும் நினைவுக் கல்லினையும் இலுப்பையடிச் சந்தியில் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கோத்தபாய ராஜபக்சவுடன் கூட்டுபடைத் தளபதி ஏயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா உடன் இருந்தார…

    • 4 replies
    • 1.9k views
  4. கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது. ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும். ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம…

    • 2 replies
    • 2k views
  5. மலையின் உச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கு ஜே.வி.பி முயற்சி மூதூர் பகுதியில் இனக்கலவர பீதி!! திருமலையில் கூடி வாழும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்த ஜே.வி.பி அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூர் 3ம் கட்டை கல்லுமலைப் பகுதியல் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக-தூபமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கும் அப்பகுதி முஸ்லிம் மக்கள், அது தொடர்பில் பீதியடைந்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜே.வி.பி யின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஜயசேகர தலைமையிலான பிக்குமார் அடங்கிய குழுவொன்று குறித்த கல்லுமலைப்பகுதிக்கு 'திடீர்" விஜயமொன்றை ம…

    • 17 replies
    • 3k views
  6. ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2007இ 20:58 ஈழம் சி.கனகரத்தினம் ஆட்சேர்ப்பில் சிறிலங்கா இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது என்றும் இதற்காக முன்னைய விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: சிறிலங்கா இராணுவத்தில் ஆட்சேர்ப்புக்காக ஜூலை 1 ஆம் நாள் 7,500 பேருக்கான தேர்வை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நடத்தியது. இராணுவத்தினரின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் மொத்தம் 1,800 பேர்தான் சேர்க்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தெரிவுக்குப் பின்னர் தெரிவு செய்யும் விதிமுறைகள் இலகுவாக்கப்பட்டன. சிங்க ரெஜிமெண்ட்டுக்கு கேகாலை பகுதியிலிருந்…

    • 0 replies
    • 1.1k views
  7. ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 20:41 ஈழம் பி.கெளரி கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பலம் சிறிலங்கா இராணுவத்துக்கு கிடையாது என்றும் வெளியேறி வரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக பேராறு காட்டுப்பகுதியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூரிய எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: குடும்பிமலை மீதான சிறிலங்கா அரசின் இராணுவ நடைவடிக்கையை அடுத்து வடபோர் முனையை நோக்கி போர் நகர்ந்துள்ளது. இது சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவை அல்ல. அங்கு போர் முனைகள்…

    • 0 replies
    • 1.1k views
  8. மீண்டும் அதே அபத்தம்! [ உதயன் ] - [ Jஉல் 29, 2007 04:00 GMT ] வரலாற்றுச் சக்கரம் மீளச் சுழலத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. கிழக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்து விட்டதாக அறிவித்திருக்கும் அரசு அங்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தத் தயாராகி வருவதாகவும் அறிவித்திருக்கின்றது. 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அதற்கு அமையக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் 1988 இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தம் வலியுறுத்திய ஏற்பாடுகளுக்கு அமைய தமிழர் தாயகம…

    • 1 reply
    • 1.3k views
  9. வடக்கில் தாக்குதலை ஆரம்பிப்பதா? கிழக்கை தொடர்ந்து தக்கவைப்பதா? -விதுரன்- தெற்கில் அரசியல் நிலைமை மோசமடைகிறது. கிழக்கை கைப்பற்றி பாரிய வெற்றிக் கொண்டாட்டத்தை அரசு நடத்திய போதிலும் தெற்கில் அரசுக்கெதிராக பெரும் உணர்வலைகள் எழுந்துள்ளதை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணி காட்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை படையினர் கைப்பற்றியதற்கு அரசியல் ரீதியாக வழங்கப்படும் முக்கியத்துவமானது, குடும்பிமலையின் (தொப்பிகல) வீழ்ச்சியானது இராணுவ ரீதியில் புலிகளுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தவில்லையென்பதை தெளிவுபடுத்துகிறது. அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் கிழக்கை இழந்தது புலிகளுக்கு பின்னடைவுதானென்றாலும் குடும…

    • 3 replies
    • 1.5k views
  10. பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் * பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் இலங்கையில் உள்ள அரசியல் நிலை காரணமாக பிரித்தானிய நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களைத் திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதியுள்ள அவசர கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இலங்கையின் போர்ச் சூழல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் அகதிகள் அந்தஸ்து கோரி காத்திருக்கின்றார்கள். யுத்த சூழலினால் பாதிக்கப்…

  11. ஞாயிறு 29-07-2007 00:35 மணி தமிழீழம் [மோகன்] மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் மோதல் மன்னார் விடத்தல்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடற்சமர் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் விடத்தல்தீவு கடற்பரப்பில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் இரு படகுகளைத் தாக்கியழித்து 6 கடற்புலிகளைக் கொன்றுள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. pathivu

  12. வேண்டவே வேண்டாம் யுத்தம்: முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்து [சனிக்கிழமை, 28 யூலை 2007, 15:14 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கைத் தீவில் யுத்தம் வேண்டமே வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கள வார ஏடான "ராவய"வுக்கு மூவரும் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் ஹரி குணதிலக்க: முழு உலகும், எமது நாட்டின் பெரும்பான்மையினரும் இந்தப் பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றுதான் கூறுகின்றனர். எனினும் எமது நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சிறு பிரிவினர் இந்தப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனக் கூறுகி…

  13. தென்தமிழீழத்தில் அமெரிக்காவின் சிறப்பு கடல் அதிரடிப்படை அதிகாரிகள் குழு சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் தமிழீழதிற்கு அமெரிக்காவின் உயர்மட்ட படை அதிகாரிகள் குழு விஜயம் செய்துள்ளது. அமெரிக்காவின் சிறப்புக் கடல் அதிரடிப் படையைச் சேர்ந்த நான்கு படை அதிகாரிகளே தென் தமிழீழம் சென்றுள்ளனர். இக்குழுவுக்கு கேணல் தர அதிகாரி தலைமை வகிக்கின்றார். ஆக்கிரமிக்கப்பட்ட தென்தமிழீழப் பகுதிகளுக்குச் சென்ற இவர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளைச் சந்தித்ததுடன் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு இராணுவ உயர்வலயப் பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். சம்பூர், மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, வாகரை, படுவான்கரை, கொக்கட்டிச் சோலை, வவுணதீவு ஆகிய இடங்களுக்குச…

    • 4 replies
    • 1.8k views
  14. போர் அறிவியலும் தமிழ்த் தேசிய ஊடகங்களும்: குடும்பிமலை இழப்பையும் மாமனிதர் சிவராமையும் முன்வைத்து சில வரைபுகள் -பரணி கிருஸ்ணரஜனி- '......கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்;சாறு, தரவை, வாகரை, சம்பூர், சேனைய+ர் பகுதி திருமலை வடக்கில் பேராரு, திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்காப் படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்ற வகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்ப…

    • 0 replies
    • 1.2k views
  15. யேர்மனியை விமர்சிப்பதா? மோசடிப் பேர்வழிகள் அமைச்சர்களா? 50 வாக்குகள்கூட வாங்க இயலாத டக்ளசை வைத்து தீர்வா?: கொதிக்கிறார் அமைச்சர் அனுரா [சனிக்கிழமை, 28 யூலை 2007, 20:29 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவில் அரசியல் நிலைமைகள் குறித்தும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடைமுறைகள் குறித்தும் மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரான அனுரா பண்டாராநாயக்க மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஓன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்: இரண்டு பிரதான கட்சிகளின் ஐக்கியம் இல்லாமல் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகளிடையேயான ஒப்பந்தத்தை பாழடித்தது ஒரு தேசியக் குற்றமாகும். 50 வாக்குகள் கூட வாங…

  16. வீரச்சாவடைந்த சிறுத்தைப் படையணி மாவீரர்கள் இன்று நினைவு கூரப்பட்டனர் வன்னியில் விடுதலைப் புலிகளின் விசேட படையணியான சிறுத்தைப் படையணியின் மாவீரர்கள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளனர். மணலாறு கொக்குத்தொடுவாயில் 1995ம் ஆண்டு யூலை 28ம் நாள் தாக்குல் ஒன்றில் வீரச்சாவடைந்த 57 பெண் சிறுத்தப்படை மாவீர்களின் வீரச்சாவடைந்தனர். சிறுத்தைப் படையணியின் 57 பெண் மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் தமிழர் வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து சிறுத்தைப் படையணி மாவீரர்களும் நினைவு கூரப்பட்டுள்ளனர். pathivu

  17. 'கிழக்கின் உதயம்' கொண்டாடுமாறு பாடசாலைகளை பலவந்தப்படுத்தியதற்கு திருச்சபைகள் கண்டனம் அண்மையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை கொண்டாடுமாறு பாடசாலைகளை அரசாங்கம் பலவந்தப்படுத்தியமையை கத்தோலிக்க திருச்சபைகள் கண்டித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு யுத்த வெறியூட்டி எதிரிகளை கொல்லும் மனோ பாவத்தையே இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுத்தும் என கிறிஸ்தவ ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கம் கொண்டுள்ள போரியல் திட்டங்களை பாடசாலை மட்டத்தில் விஸ்தரிப்பதே அரசாங்கம் கிழக்கின் உதயம் வெற்றி விழாவை பாடசாலைகளில் நடத்துமாறு பணித்தமைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu

  18. மிகின் லங்கா என்னும் மகிந்த குடும்பத்தின் நிறுவணம் இவ்வளவு காலமும் தமிழ் மக்களிடம் கடத்தி சம்பாதித்த பணத்திலும் நாட்டில் கொள்ளை அடிச்ச பணத்திலும் தென் மாகாணம் வீரவில என்னும் இடத்தில் விமான நிலையம் மற்றும் கடத்தொகுதியை கட்ட முன்மொழிந்த திட்டத்தின் வரை படங்கள்.

  19. சனி 28-07-2007 00:31 மணி தமிழீழம் [மயூரன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ரணில் கைச்சாத்திட்டது சட்டவிரோதமானது - பிரதம நீதியரசர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டமை சட்டவிரோதமானது என ஸ்ரீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் பிரதமர் தன்னிச்சையாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் பிரதம நீதியரசர் இன்று அறிவித்துள்ளார். ஜே.வி.பி ஜாதிக ஹெல உருமய மற்றும் சிங்கள தேசிய சங்கம்…

  20. வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்! தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர். இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர். இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூ…

  21. மகிந்தவின் தேயிலைப் பரிசை உதாசீனம் செய்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயருக்கு பரிசாகக் கையளித்த தேயிலையை அவர் ஊதாசீனம் செய்து உத்தியோக இல்லத்தில் விட்டுச் சென்றுள்ளார். 140 பிரித்தானியப் பவுண்டுகளுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை பிரித்தானிய அமைச்சர்கள் பரிசாகப் பெற்றால், பதவி விலகும்போது அவற்றை அவர்களே கொள்வனவு செய்ய வேண்டும், அல்லது பொதுச்சொத்தாக விட்டுச்செல்ல வேண்டும். ரொனி பிளேயர் விட்டுச்சென்ற பொருட்களில் அமெரிக்க ஆளுநரும், பிரபல ஹொலிவூட் நடிகருமான சுவாசெனீக்கர், குவைத் மன்னர் வழங்கிய நாணயம், சிறீலங்கா அதிபர் கொடுத்த தேயிலைப் பொதி என்பன அடங்குகின்றன. -பதிவு

  22. ஆட்சிக் கதிரையை கைப்பற்ற, தக்கவைக்க.... [28 - July - 2007] * இதுவொரு அதிகாரப் போட்டி மட்டுமே -காலகண்டன்- கொழும்பில் நேற்று முன்தினம் ரணில், மங்கள தலைமையிலான அரசியல் கூட்டணி `மக்கள் அலை' என்னும் ஆர்ப்பாட்டப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தின. பல ஆயிரக் கணக்கானோர் கலந்த இப் பேரணியும் கூட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) க்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கி இருப்பதாகவே அவதானிக்க முடிகிறது. அதேவேளை, இம்மக்கள் அலைப்பேரணி ஒன்றரை வருடகால மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மிகப் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது. "நாடு அழிகிறது - தடுக்க முன…

  23. பயங்கரவாதத்தை முறியடிக்க பயங்கரவாதத்தையே பயன்படுத்துவது முட்டாள்தனம் [28 - July - 2007] -எம்.ஏ.எம். நிலாம்- * சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீர கூறுகிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அன்று 90 சதவீதமானோர் மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை. நானும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் சந்திரிகா பண்டாரநாயக்காவை இணங்கவைக்க இரவு பகல் பாராது பாடுபட்டோம். மகிந்த பசுத்தோல் போர்த்திய புலியென்பதை காலம் கடந்தே நாம் புரிந்துகொள்ள நேரிட்டதென முன்னாள் அமைச்சரும் சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளருமான மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு ஹைட் பார்க் திடலில் நடைபெற்ற "மக்கள் பேரலை" பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார். …

  24. அரசாங்கம் பதவிவிலக வேண்டும் என்பதே மக்கள் வெள்ளம் பறைசாற்றியுள்ளது வீரகேசரி நாளேடு மங்களவுடன் இணைந்து ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம் என்கிறார் ரவிகருணாநாயக்க தூரநோக்கற்று செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதையே கொழும்பில் ஒன்று கூடிய மக்கள் வெள்ளம் பறைசாற்றியுள்ளது. தமது அபிலாஷைகளை இந்த அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை என்பதனை மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தை ஜனநாயக வழிமுறையில் வீழ்த்தி, பாரா…

  25. சனி 28-07-2007 04:31 மணி தமிழீழம் [சிறீதரன்] திலக் கருணாரட்ண ஐதேக பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சிறீலங்காவின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் திலக் கருணாரட்ண தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பல காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாக எதிர்கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஜாதிககெல உறுமிய தொடர்பில் கூறிய கருத்துக்களும், சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றனவும் பதவிவிலகும் காரணங்களுள் அடங்குவதாக தெரியவருகிறது. அண்மையில் சிறீலங்கா இராணுவம் தொப்பிக்கலவில் பெற்ற வெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.