ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
Posted on : Sat Jun 30 7:04:52 EEST 2007 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நல்லூர் கோயில் வீதியில் சுட்டுக் கொலை நல்லூர் கோயில் வீதியில் கைலாசபிள் ளையார் கோவில் சந்திக்கும் செஞ்சிலு வைச் சர்வதேசக் குழு அலுவலகச் சந்திக் கும் இடையில் நேற்றுப் பிற்பகல் 4 மணி யளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகளி லிருந்து அவர்கள் ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயிலடியைச் சேர்ந்த சிங்காரவேலு லோகேந்திரா (வயது 29), ஆனைக் கோட்டை வடக்கைச் சேர்ந்த சுப் பிரமணியம் அம்பிகைபாகர் (வயது 39) ஆகியோரே உயிரிழந்தவர் என இனங்கா ணப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக யாழ். ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக் களில் வந்து கொண்டிருந்தவேளை, மோட் டார…
-
- 1 reply
- 1.6k views
-
-
Posted on : Wed Jun 27 6:35:13 EEST 2007 மடுமாதா திருவிழாக் காலத்தில் போர்நிறுத்தம் செய்யக் கோரிக்கை ஜூலை 2ஆம் திகதி ஆரம்பமாகும் மடு மாதா திருவிழாக் காலத்தில் பக்தர் கள் அமைதியாக கலந்துகொள்ள உத வும் வகையில் தற்காலிகமாக போர் நிறுத் தத்தைக் கடைப்பிடிக்கும்படி போரில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகளிடம் மன் னாரிலுள்ள கத்தோலிக்க தேவாலயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். போர்ச் சூழ்நிலை இருந்த போதி லும் மடுத் திருவிழா நடைபெறும் என் றும், பக்தர்கள் அதில் அமைதியாகக் கலந்துகொள்ளும் வகையில் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் தேவாலய பேச்சாளர் ஒருவர் தெரி வித்தார். இதேவேளை வன்னி மாவட்ட ஐ.தே. கட்சி அமைப்பாளர் டாக்டர் ஜயலத் ஜய வர்தன செஞ்சிலுவைச் சர்வதேச குழு வு…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசுக்கு பல்வேறு நிலைகளில் சவால்களை தோற்றுவிக்கக்கூடிய அரசியல் நிகழ்வுப் போக்குகள் [30 - June - 2007] * அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்ற போதிலும் மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிர, பங்காளிகளாக இல்லை. ஐ.தே.க. ஆட்சிக்கால அனுபவங்களே அதற்குக் காரணம் * அரசியலில் மங்கிப்போன மூன்றாவது அணிக்கு மீண்டும் சாயம் பூசும் முயற்சிகளில் ஜே.வி.பி. இந்த வாரத்தில் இடம்பெற்ற சில அரசியல் நிகழ்வுகள் நாட்டில் உருவாகப்போகும் முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய சமிக்ஞைகளைக் காட்டியுள்ளன. இவற்றின் வளர்ச்சியானது மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு பல்வேறு நிலைகளிலான சவால்களைத் தோற்றுவிக் கவே செய்யும். ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட…
-
- 1 reply
- 1.3k views
-
-
"சிங்களப் புலி" தலைவர் சியாமல் மூலம் என்னைக் கொல்ல கோத்தபாய சதி: காவல்துறையிடம் சிறிபதி முறைப்பாடு [சனிக்கிழமை, 30 யூன் 2007, 11:42 ஈழம்] [சி.கனகரத்தினம்] "சிங்களப் புலிகள்" எனப்படும் அழைக்கப்படும் குழுவின் தலைவர் சியாமல் மூலம் தன்னைக் கொலை செய்ய சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதி செய்கிறார் என்று கடவத்த காவல்நிலையத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவைச் சேர்ந்த சிறிபதி சூரியராச்சி முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் "சிங்கள புலிகள்" என்றழைக்கப்படும் குழுவினர், கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் 16ஆம் நாள் என்னை குண்டுவெட…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Sat Jun 30 7:03:23 EEST 2007 மூதூர், சம்பூர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு எதிராக நேற்று உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் மூதூர், சம்பூர் பகுதியை உயர் பாது காப்பு வலயமாக வர்த்தமானி மூலம் பிர கடனப்படுத்தி, அங்கிருந்த மக்களை மீளக் குடியமர விடாது தடுத்தமைக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக் கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு மனுவை மாற்றுக் கொள்கைகளுக் கான மையம் மற்றும் பாக்கியசோதி சரவண முத்து ஆகிய தரப்பினரும் மற்றைய மனுவை மூதூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர வைக்கப்பட்டுள்ள அப்பிரதேச வாசிகள் நால்வர் சேர்ந்தும் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களில் பாதுகாப்பு அமைச் சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, பாதுகாப…
-
- 0 replies
- 790 views
-
-
வெள்ளி 29-06-2007 03:33 மணி தமிழீழம் மயூரன் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை தலைவர் சுட்டுப்படுகொலை அம்பாறையில் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் உதயகுமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணியளவில் விநாயகபுரம் அக்கரைப்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்தே சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது வீட்டி…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாகப்…
-
- 1 reply
- 1.5k views
-
-
காணாமல் போன 355 பேரின் நிலைமை என்ன?- அமெரிக்காவின் கேள்விக்கு சிறிலங்கா மழுப்பலான பதில் இலங்கையில் காணாமல் போன 355 பேரின் பட்டியலை சிறிலங்காவிடம் கொடுத்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இதற்கு தற்போது சிறிலங்கா அரசாங்கம் மழுப்பலான பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் தமிழ் வடிவம்: அமெரிக்க பிரதிச் செயலாளர் ஸ்டீபன் மான் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்தபோது காணாமல் போனதாகக் கூறப்படும் 355 பேரின் பட்டியலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுவோர் தொடர்பாக உரிய அரச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
முடிந்தவர்கள் இதனைக் கண்டியுங்கள். இவன் ஒரு தமிழின விரோதி. இந்த ஒலிபரப்பு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது இவரது நோக்கம் போல் தெரிகிறது. http://www.tamilmedianz.com/
-
- 0 replies
- 2.6k views
-
-
புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலே அரசியல் தீர்வு சாத்தியம் - கோத்தபாய ராஜபக்ச இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தும் வரை நீண்ட காலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒரு போது தீர்வு காணப்படுவது சாத்தியம் இல்லை என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனையே கடந்த கால வரலாறு கட்டியம் கூடி நிற்பதாக தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச இதனை அடிப்படையாக வைத்தே கிழக்கில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் படை நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தமும் அபிவிருத்தியும் சமநேரத்தில் முன்னெடுக்கப்படும்: மகிந்த ராஜபக்ச. யுத்த முன்னெடுப்புக்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமநேரத்தில் முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஊடகவியலாளரிடம் மகிந்த ராஜபக்ச இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக தமது அரசு ஒருபோதும் செயற்படமாட்டாது எனவம் எந்தவொரு வகையிலும் தமிழர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலே அரசியல் தீர்வு சாத்தியம்: கோட்டபாய ராஜபக்ச. இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தும் வரை நீண்ட …
-
- 4 replies
- 1.6k views
-
-
காணாமல் போனவர்களை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரை அழைத்தாலும் கண்டுபிடிக்கமுடியுமா என்பது சந்தேகமே! வீரகேசரி நாளேடு 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2007 பெப்ரவரி மாதம் வரையிலான ஐந்து மாதங்களுக்குள் 430 பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் 307 பேர் கடத்தப்பட்டுள்ளனர்,1713 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதியரசர் மஹாநாம திலகரத்ன தெரிவித்தார். கடத்தல், காணாமல் போதல் மற்றும் படுகொலைசெய்தல் போன்ற சம்பவங்களால் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. எனது தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை திறம்பட மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் படுகொலைகளும் மட்டக்களப்பில் கடத்தல்களும் அதிகர…
-
- 2 replies
- 1.4k views
-
-
மகிந்த அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து ரணில் - மங்கள ஆலோசனை. மகிந்த அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் இன்று வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். ரணிலின் அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, கருணாநாயக்க, ருக்மன் சேனநாயக்க மற்றும் ஜோசப் மைக்கல் பெரெரா ஆகியோரும் மங்கள சமரவீர தரப்பில் சிறீபதி சூரியராச்சி மற்றும் ரிரான் அலெஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் தனது க…
-
- 2 replies
- 1.4k views
-
-
புளியங்குளத்தில் புலிகளின் சோதனை நிலையம் மீது எறிகணைத் தாக்குதல். வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சோதனை நிலையத்தை அண்மித்த பகுதி மீது சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் வெடிகணைத் தாக்குதலை செறிவாக நடத்தியுள்ளனர். ஓமந்தை சோதனைச் சாவடி இன்று வெள்ளிக்கிழமை போக்குவரத்துக்கு திறந்திருந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு இராணுவத்தினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த வெடிகணைகள் புளியங்குளம் விடுதலைப் புலிகளின் சோதனை நிலையத்தை சூழ வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் போக்குவரத்துக்காக நின்ற மக்கள் அவலப்பட்டு சிதறி ஓடினர். இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவிற்கான இணக்கப்பாட்டு…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும்: டெக்கான் ஹெரால்ட் [வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007, 06:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] இந்தியாவின் "பாதுகாப்பு பொருளாதார" கொள்கையைக் கருத்தில் கொண்டு சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் வெளியாகும் டெக்கான் ஹெரால்டு எனும் ஆங்கில நாளேடு வலியுறுத்தியிருக்கிறது. அந்நாளிதழில் பிதந்த எம். செங்கப்பா எழுதியுள்ள கட்டுரை: சீனாவிடமிருந்து ஆயுதக் கொள்வனவு செய்ய கொழும்பு மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து இந்தியா-சிறிலங்கா உறவு கீழ்நிலைக்குச் சென்றது. "இந்தப் பிராந்தியத்தில் நாங்கள் பெரும் சக்தி. சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் சிறிலங்கா ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை நாம் விரும்பவில்லை…
-
- 5 replies
- 1.8k views
-
-
சித்தாண்டியில் 16 அகவையுடைய சிறுவன் சுட்டுக்கொலை மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் சிறுவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : Fri Jun 29 6:15:02 EEST 2007 தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு போதும் செயற்படமாட்டாது - ஜனாதிபதி அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படப் போவ தில்லை. இப் படிக் கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மகாசங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அங்கு வைத்து ஜனாதிபதி தெரிவித்ததாவது: நாட்டில் யுத்தம் இடம்பெறுகின்ற அதேவேளை, அபிவிருத்தியும் முன்னெடுத் துச் செல்லப்படும். நாட்டின் பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு முன்னின்று உழைத்த வர்கள் மகா சங்கத்தினர். மக்கள் முன்வைக்கப் படும் முரண்பாடான கருத்துக்களின் உண்மை நிலையை மகா நா…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சதி உள்ளது: மகிந்த ராஜபக்ச. சிறிலங்கா அரசாங்கம் மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டில் சதி உள்ளது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜ்பாக்ச குற்றம் சாட்டியுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மகா சங்கக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 1989-90 காலப் பகுதிகளில் மனித உரிமை மீறல் விடயங்களை வெளிப்படுத்தியவன் நான். தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் அத்தகைய மனித உரிமை மீறல்களை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டேன். அரசாங்கம் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சதி உள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையில் உள்ளது. எமது தேசத்துக்கு நாம் துரோகம் செய்ய முடியாது. எந்த …
-
- 1 reply
- 908 views
-
-
காரைநகரில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு. காரைநகர் கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையிலுள்ள ஆணின் சடலமொன்றை ஊர்காவற்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருப்பதால் சடலத்தை அடையாளம் காண்பது சாத்தியமில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -Tamilnet-
-
- 0 replies
- 883 views
-
-
கருணா குழுவை கலைக்க வேண்டும்: ரிச்சர்ட் பௌச்சர். சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும் கருணா குழுவை கலைக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் வலியுறுத்தியுள்ளார். இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோ சென்றிருந்த ரிச்சர்ட் பௌச்சர், நோர்வே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காண்லில் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் புலிகளும் அரசாங்க படையின் ஆதரவு பெற்ற கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை படையணிகளில் சேர்ப்பதாக யுனிசெஃப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சிறார்களை படையணிகளில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் கருணா குழு தொடர்ந்து ஈடுபட்டு வருவதை அமெரிக்கா அவதானித்து வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
Posted on : Mon Jun 25 6:59:07 EEST 2007 இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் இன்று கூடுகின்றன இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது. நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியன தொடர் பாக இன்றைய மாநாட்டில் விரிவாகவும் முன்னுரிமை கொடுத்தும் ஆராயப்படவுள்ளது. சமாதான முயற்சிகள் தொடர்பாக நாளைய மாநாட் டில் ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் முடிவில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளி யிடும் சாத்தியம் இல்லை என்றும் தீர்மானங்கள் இரு தரப்புகளுக்கும் அன…
-
- 7 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் கிளைமோர் வெடிப்பு - 6 பேர் காயம் [ த.இன்பன் ] - [ யூன் 29, 2007 - 06:04 AM - GMT ] செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேரூந்து இன்று காலை 8.05 மணியளவில் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதன்போது பொது மக்கள் ஆறு பேர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இரு மாணவர்களும், இரு பெண்களும் அடங்கவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதி்ர்பார்க்கப்படுகிறது. - ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-06-29 ஊடக அடக்குமுறைச் சட்டத்தை மீளக் கொண்டுவரும் கபடத்தனம் இலங்கைத் தீவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்த காலம் தொட்டு, இங்கு அடிப்படை மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவது குறித்து தேசிய, சர்வதேச மட்டங்களில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. நாட்டின் உயர் சட்ட வேதமான அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை நாசூக்காக மீறும் ஏற்பாடுகள் ஏற்கனவே அவசரகாலச் சட்டத்தின் கீழ்அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு ஒழுங்கு விதிகள் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டாயிற்று. போதாக்குறைக்கு மோசமான வன்முறைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபடக்கூடிய படையினரு…
-
- 0 replies
- 684 views
-
-
முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை: 8 மாத அவலம் தொடர்ந்தும் நீடிப்பு முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை செய்யப்பட்டதால் கடந்த 8 மாத காலமாக பாரிய அவலங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவ பொறுப்பதிகாரி வீரகத்தி சண்முகராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: முல்லைத்தீவு மாவட்டம் என்பது நவீன வசதிகளைப் பெறுவதற்கு முடியாத அளவிற்கு மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. அரசின் வசதிகள் இம் மக்களுக்குக் கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மருத்துவமனை அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.…
-
- 0 replies
- 659 views
-
-
இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அந்தச் செவ்வியின் முழு விபரம்: செய்தியாளர்: இராமேஸ்வரம் அருகே ஜூன் 17ம் திகதி சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் குண்டு வீசி தாக்கப்பட்டதாக அறிகின்றோம். அதை பற்றி விபரங்களை கூற முடியுமா? கோமஸ்: கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினை…
-
- 3 replies
- 2.6k views
-