ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வியாழன் 05-07-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] அவலநிலை தொடருமானால் இலங்கையை மீளவும் கட்டியெழுப்ப 100 ஆண்டுகள் தேவை தற்போதைய அவலநிலை தொடருமானால் இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்று 100 ஆண்டுகள் தேவைப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தென்னிந்திய திருச்சபையின் முதல் எஸ்.ஜே.ஜெபநேசன் கருத்து வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊறணி பகுதியில் உள்ள அமெரிக்க மிசனில் நேற்று நடைபெற்ற சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் கடந்த 10 வருடங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சோந்த மக்களில் 60 சதவீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில்…
-
- 1 reply
- 988 views
-
-
வியாழன் 05-07-2007 17:36 மணி தமிழீழம் [கோபி] வவுனியா பூவரங்குளத்தில் படையினரின் வலிந்த முன்னேற்ற முயற்சி முறியடிப்பு வவுனியா பூவரசங்குள முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் பூவரங்குள முன்னரங்க நிலைகள் ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோதே இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றைய மோதலில் இரு படையினர் கொல்லப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக சிறீலங்காப் படைத்தரப்பு அறிவித்துள்ளது. எனினும் இன்றைய மோதலில் படைத்தரப்புக்கு பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேந…
-
- 2 replies
- 1.4k views
-
-
நோர்வேயை அழைக்கவேயில்லை - அழைக்கத் தேவையும் இல்லை: சிறிலங்கா அரசாங்கம். இலங்கை அமைதி முயற்சிகளை மீளத் தொடங்க நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று புதன்கிழமை சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அமைதி முயற்சிகளை மீளத் தொடங்குமாறு நோர்வேயை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கவில்லை. நோர்வேயை அழைக்க வேண்டிய தேவை சிறிலங்காவுக்கு தற்போது இல்லை. அமைதி முயற்சிகளைத் தொடங்குமாறு ஜோன் ஹன்சன் பௌயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் பொய்யானவை. இந்த நாட்டின் பகுதிகளில் இறைமையை தொடர்ந்தும் செலுத்துவதற்கான நடவடிக்கைக…
-
- 4 replies
- 1.8k views
-
-
இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரை உடனடியாக திரட்ட நடவடிக்கை [05 - July - 2007] *நேர்முகப் பரீட்சை இடம்பெறுகிறது எம்.ஏ.எம்.நிலாம் இராணுவத்துக்கு உடனடியாக 25 ஆயிரம் பேரைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள இராணுவ முகாம்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அறிவித்துள்ளார். இராணுவம் பெற்றுவரும் வெற்றிகளை உறுதி செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டே இந்த ஆட்திரட்டல் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதம் இரண்டாம் திகதியன்று 18 வயதைப்பூர்த்தி செய்த 24 வயதைத் தாண்டாத இளைஞர்களே இராணுவத்துக்குச் சேர்த்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்நகரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தலையாட்டிகள் முன் நிறுத்தப்பட்டு விசாரணை [05 - July - 2007] *நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்தது யாழ் நகரில் மானிப்பாய் வீதிக்கு மேற்குப் பக்கமாக நேற்று புதன்கிழமை பிற்பகல் இராணுவத்தினர் பாரிய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில், ஓட்டுமடம் சந்தியிலிருந்து அராலி வீதி,பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் அதையண்டிய பகுதிகளும், வண்ணைச் சந்திக்கு மேற்குப் புறமாக ஐந்து சந்தி, சிவன்பண்ணை வீதி, வெள்ளாந்தெரு, கொட்டடி மற்றும் அதனையண்டிய பகுதிகளுமே சுற்றிவளைப்புத் தேடுதல்களுக்குள்ளாக்கப்பட்
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை காலத்தை வீணடிக்கும் முயற்சி: இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டில் கருத்து வெளியீடு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் தீர்வு யோசனைகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என இணைத்தலைமை நாடுகளின் மகாநாட்டில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தெளிவு படுத்துவதற்கு வாய்பளிக்கப்படாமை குறித்து அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன விசனம் தெரிவித்துள்ளன. வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை உள்வாங்காத தீர்வு திட்டத்தை தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.1k views
-
-
சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முடியாது என ஜே.வி.பி அறிவிப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முடியாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் ஜே.வி.பியினருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணி இன்று காலை பேச்சுவார்தை நடத்தியது. இதன் போது ஜே.வி.பி ,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிரான முன்னணி ஒன்றை தோற்றுவிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எந்த ஒரு அரசியல் வேலைத் திட்டதிலும் தமது கட்சி ஈடுபடாது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க திட்ட…
-
- 0 replies
- 805 views
-
-
கிழக்கில் அரசின் சாதனைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு? பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் இளந்திரையன் கிழக்கில் சாதிப் பதாக ஸ்ரீலங்கா சொல் லும் விடயம் எவ் வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப் போம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இரா சையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட் டுத்தாபன வானொலியில் (ATBC) செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ""செய்தி அலைகள்'' நிகழ்ச்சிக்கு அவர் அளித்த செவ்வியில் கூறியுள்ளதாவது: கிழக்குப் பகுதி என்பது ஒரு வித்தியா சமான தரையமைப்பைக் கொண்ட தனித் துவமான நிலம். கெரில்லா வகை போராளி களின் தாய்மடியாகும். கடந்த 25வருட காலமாக அங்கு எங்களுடைய படைகள் பல நடவடிக்கைகளைக் கரந்தடிப்படை யாக ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்தில் இணையாவிட்டால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்: அமைச்சர் ஜெயராஜ் பகிரங்க எச்சரிக்கை "கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்" என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகத்தில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள சிலர் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளின் அச்சுறுத்தலே இதற்குத் தடையாகவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர்…
-
- 0 replies
- 799 views
-
-
தொப்பிகலவை கைப்பற்றப்போன அரசாங்கம் இன்று தனக்குத்தானே தொப்பியை போட்டுள்ளது [05 - July - 2007] *ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவிப்பு டிட்டோகுகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் சமாதானம் மூலமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதும் யுத்தத்தின் மூலம் சமாதானத்தை கொண்டு வருவதாகக் கூறிய அரசாங்கம், இன்று சகலதையும் தவறவிட்ட நிலையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் எனக் கூறி தடுமாறி வருவதாக ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான…
-
- 0 replies
- 2k views
-
-
தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை இன்றுவரை கையாண்ட எல்லாத் தரப்புகளுமே தமது பொறுப்பற்ற போக்கினால் எழக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், குறுகிய எண்ணப் போக்கில் இவ்விட யத்தை அணுகி, அதன் மூலம் அதனை மென்மேலும் சிக் கலாக்கியிருக்கின்றன என்பதே நிதர்சனம். இப்பிணக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிங்களத் தலைமைகளில் இருந்து, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியா முதற்கொண்டு, சர்வதேச சமூகம் வரை இத்தவ றுக்கு விதிவிலக்கல்ல என்பதே அனுபவப் பாடம். இவ்வாறு தவறுகளை இழைத்தோருக்கு காலம் கடந்து தான் அத்தவறுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி மோசமான பட்டறிவை தந்த பின்னர்தான் அவற்றின் தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
இறுதித்தீர்வை முன்வைக்குமாறு யசூசி அகாசி வேண்டுகோள் வடக்கு - கிழக்கு பிரச்சினைக்கான இறுதித் தீர்வை அனைத்துக் கட்சிக் குழுவினூடாக முன்வைக்குமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரிடம் ஜப்பானின் அமைதி முயற்சிகளுக்கான சிறப்புப் பிரதிநிதி யசூசி அகாசி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தை தொடர்ந்து இரு தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அகாசி விரைவாக இறுதித் தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: அன்று நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலனாய்வுப் பிரிவினரால் மரண அச்சுறுத்தல் பாதுகாப்பு வழங்க கோருகிறார் ஜயலத் எம்.பி. குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதற்கு முற்படுவதாகவும் அது தனது சிறப்புரிமை மீறல் எனவும் ஜயலத் எம்.பி. சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. எம்.பி.க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தபோதே அவர் …
-
- 1 reply
- 906 views
-
-
இலங்கை மோதல்-அகதிகள் வருகை அதிகரிப்பு இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மீண்டும் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. புலிகளை தாக்குவதாகக் கூறி தலைமன்னார், திரிகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர். வவுனியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் பைபர் கிளாஸ் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள நம்பிப்பாடு கடற்கரை வந்தனர். மேலும் 3 ஆண்கள் அகதிகளாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸார் விசாரித்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அகதிகள் கூறுகையில், எங்கள் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வருகி…
-
- 0 replies
- 935 views
-
-
எம் கே நாராயணனைச் சந்தித்தார் இலங்கை வெளியுரவு அமைச்சர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், புதன்கிழமை பிற்பகல் புதுடில்லியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்துப் பேசினார். காத்மாண்டுவில் இருந்து கொழும்பு திரும்பும் வழியில், செவ்வாய்க்கிழமை இரவு புதுடில்லி வந்த இலங்கை அமைச்சர், நாராயணனைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக் குறித்து, எம்.கே. நாராயணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலைகள், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இலங்கை அமைச்சர் தன்னுடன் விவாதித்ததாக தெரிவித்த…
-
- 0 replies
- 906 views
-
-
மட்டக்களப்பில் 6 மாதங்களில் 150 பேர் காணமல்போயுள்ளனர் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 150 பேர் கடத்தப்பட்டும், காணாமலும் போயுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகளிடமிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்துடன் ஒப்பிடும் போது இது 3 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 51 பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 18 வயதிற்கு உட்பட்ட 74 பேர் உட்பட 175 ற்கும் மேற்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் …
-
- 0 replies
- 735 views
-
-
அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்க முடியாத பாரிய நிதி நெருக்கடியில் சிறிலங்கா: பொருளியல் வல்லுநர் ஹர்சா டி சில்வா சிறிலங்காவின் அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்க முடியாத பாரிய நிதி நெருக்கடியில் சிறிலங்கா அரசாங்கமானது சிக்கிவிட்டதாக பொருளியல் வல்லுநர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் "த மோர்னிங் லீடர்" வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: மகிந்த அரசாங்கம் தற்போது நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. நிதியைப் பொறுத்த வரையில் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் நிலை மிகவும் மோசமானது. அது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனால் சில பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளது. மனித…
-
- 0 replies
- 712 views
-
-
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 17 ஹலோ ரஸ்ட் உத்தியோகஸ்தர்கள் வேலை நீக்கம். யாழில் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த 17 உத்தியோகஸ்தர்களை பலாலி சிறீலங்கா கட்டளை மையத்தின் உத்தரவின்பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாசார்பற்ற நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இப் பணி நீக்கம் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துப்படி இவர்கள் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இவ்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் இவர்கள் தமது வேலைக்காலத்தில் எதுவித தவறும் இழைக்கவில்லை எனவும் தெரியவருகிறது. எனினும் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தினர் இதுதொடர்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதேவேளை பலாலி கட்டளை மையம் புதிய வேலையாட்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 9 replies
- 1.8k views
-
-
வியாழன் 05-07-2007 00:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கொம்பாந்துறை சிறீலங்கா இராணுவ முகாமருகே துணை ஆயுதக்குழுக்களிடையே மோதல் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் கொம்மாந்துறை இராணுவ முகாமருகே கருணா கூலிக்குழுக்களுக்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுக்களுக்கும் இடையே புதன்கிழமை மாலை 5 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கருணா கூலிக்குழுவினர் ஈ.பி.டி.பி குழுவினரை துன்புறுத்தியதாகவும் ஐந்து கருணா கூலிக்குழு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழுவின் கட்டடத்தொகுதிக்குள் பிரவேசித்து கைக்குண்டுத் தாக்குதலையும் துப்பாக்கிபிரயோகத்தையும் மேற்கொண்டதாகவும். இதன்போது ஈ.பி.டி.பி குழு உறுப்பினர்களான 23 அகவையுடைய சிவஞானம் சுதர்சன், 21 அ…
-
- 11 replies
- 2k views
-
-
செஞ்சிலுவை சங்க பணியாளர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் வன்னிப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர்: ரம்புக்வெல. இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை பொலிசார் இனம் கண்டுள்ளதாகவும் எனினும் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளார் மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங் கட்டுப்பாடற்ற வன்னி பிரதேசத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகுவம் அதனால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் எனினும் ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
மகிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றது. Written by Ravanan - Jul 04, 2007 at 04:24 PM மகிந்த ராஜபக்ஸ பதவியேற்றதன் பின்னர் 12 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களின்போது ஜனாதிபதியுடன் 640 பேர் சென்றுள்ளதுடன் இந்த பயணங்களுக்கென மொத்தமாக 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருப்பதாகவும் கபீர் ஹாசிம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் மற்றும் விஷேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை என்பன மீதான விவாதத்தில் பேசும்போதே கபீர் ஹாசிம் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையி…
-
- 0 replies
- 1k views
-
-
புதன் 04-07-2007 18:36 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் அவசர மீள்குடியேற்றத்தால் மக்கள் பெரும் அவதி மட்டக்களப்பில் அண்மைக்கால் அசம்பாவிதங்கள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக மீளக் குடியமர்தியதால் அந்த மக்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் மீள் குடியேற்றத்திற்காக கொண்டு செல்லப்பட்ட மக்கள் தங்குவாற்கு உரிய இருப்பிடங்கள் இன்றி மர நிழல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்தாகவும் இதனால் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருவதாகவும் பிரதேசவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து மீள் குடியேற்ற நடவடிக்கைகளு…
-
- 0 replies
- 832 views
-
-
புலிகளின் தமிழக பரப்புரைக்கு முகம் கொடுக்க சென்னை துணை தூதரகத்தை மேம்படுத்த வேண்டும்: ஜே.வி.பி. கோரிக்கை [புதன்கிழமை, 4 யூலை 2007, 18:59 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பரப்புரைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணை தூதரகத்தை மேம்படுத்த வேண்டும் என்று என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம் சந்திரசேகரன், பிமல் ரட்ணநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த இருவரும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர். இது தொடர்பில் மூன்று நாட்களில் உரிய பதில் அளிப்பதாக ஜே.வி.பி.யினருக்கு ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பதில் அளித்துள்ளார். …
-
- 2 replies
- 1k views
-
-
கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு கோருவதா?: அமெரிக்காவுக்கு பெர்னாண்டோ புள்ளே கண்டனம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு அமெரிக்காவின் இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் விடுத்துள்ள கோரிக்கையானது பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டதாக சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியதாவது: கருணா குழுவினர் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாத…
-
- 5 replies
- 1.7k views
-