Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமக்காய் உரத்துக் குரல் கொடுங்கள் உறவுகளே......: நெளரு தீவு தமிழ் அகதிகள் கண்ணீர் வேண்டுகோள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 15:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஐக்கிய நாடுகள் சபையால் அனைத்துலக அகதிகள் நாள் கடைபிடிக்கப்படும் இன்றைய நாளில் நெளரு தீவில் (அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு) "இலங்கை அகதிகள் தடுப்பு முகாம்"-இலிருந்து தமிழீழ உறவுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கண்ணீர் வேண்டுகோள்: இலங்கை அகதிகள் தடுப்பு முகாம், நெளரு 20.06.2007 எமது உறவுகளுக்கு, நீங்கள் எங்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை நாம் அறிவோம். அதற்காக முதலில் உங்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களுக்கு எழுதிக்கொள்…

  2. கடந்த 10 வருடங்களின் பாதுகாப்புச் செலவு 1,404 பில்லியன் ரூபாய்கள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 17:54 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசானது கடந்த 10 வருடங்களில் பாதுகாப்புக்கு 1,404 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: 1996 ஆம் ஆண்டில் இருந்தான 10 வருட காலத்தில் அரசுகள் 1,404 பில்லியன் ரூபாய்களை பாதுகாப்புக்கு செலவிட்டுள்ளன. இதில் அதிகளவான தொகை கடந்த வருடமே செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான மொத்த பாதுகாப்புச் செலவு 244 பில்லியன் ரூபாய்கள். 2005 ஆம் ஆண்டுக்கான…

    • 1 reply
    • 1.1k views
  3. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் அரசியல்வாதிகளின் அணுகுமுறையும் [20 - June - 2007] -இஸ்மாயில் பி.ம ஆரிஃப்- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் கொண்டு வருவதற்கான இலங்கையின் அரசியலமைப்பு 1977 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் நான்காம் திகதி நிறைவேற்றப்பட்டது. ஏனைய பல அரசமைப்புகளிலிருந்து பல சிறப்பம்சங்கள் உள்வாங்கப்பட்டன. அன்று ஐ.தே.க. தம்மால் பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தேர்தல்களுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே அறிந்திருந்தது. ஆனால், இஷ்டப்படியும் சுதந்திரமாகவும் எதனையும் நிறைவேற்றத்தக்க மிகப்பெரிய ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலம் தம்மீது உதயமாகும் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. 1977 ஆம் ஆண்டில் ஐ…

  4. சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு [19 - June - 2007] தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கல…

  5. மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது. அரசாங்கம் அமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 17 பேருக்கான அமைச்சகங்களை அமைக்க 65,756,100 ரூபாவுக்கான கூடுதல் நிதி நிலை அறிக்கையை மகிந்த அரசாங்கம் நாளை தாக்கல் செய்ய உள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இந்த கூடுதல் நிதி நிலை அறிக்கைக்கு எதிராக வாக்களிக…

    • 11 replies
    • 2.1k views
  6. Posted on : 2007-06-20 தமிழர்களின் தனித்துவ உரிமைகளை ஏற்காத தீர்வினால் பயனே இல்லை ""நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாவட்ட மட்டத்திலேயே பகிர்ந்தளிக்கலாம் என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து பிரதான ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விட்டுக்கொடுத்து இறங்க வேண்டும். பெரும்பாலான கட்சிகள் முன்வைத்துள்ள மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சி முறிந்துபோகும்.'' இப்படித் தெரிவித்திருக்கின்றார், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா சுத…

  7. தொடரும் சிங்களப் பாசம்: தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் "இந்து" தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழ் தனது சிங்களப் பாசத்தை வெளிக்காட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தி காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது. இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடந்த ஜூன் 17 ஆம் நாள் சிங்கள மீனவர்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக மீனவர்களின் படகு தகர்க்கப்பட்டு 4 பேர் படுகாயமடைந்தனர். சிங்கள மீனவர்கள் நடத்திய இந்த வெறியாட்டத்தில் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பிரவீன்குமார் (வயது 20), பாலமுருகன் (வயது 35), சூசை(வயது 45), போதகராஜ் (வயது 30) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா அரசாங்…

    • 2 replies
    • 1.3k views
  8. அதிகாரப்பகிர்வு யோசனையை அமுல்படுத்த விடமாட்டோம் அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துவோம். இந்த நாட்டில் ஒருபோதும் அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று ஜே. வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடப்படும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை…

  9. "சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வசித்து வந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி, வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசின் செய்கையை, அமெரிக்க அரசு உட்படப் பலரும் கண்டித்துள்ளனர். ஜே.வி.பி உட்படப் பல சிங்கள அரசியல் கட்சிகளும், சிறிலங்கா அரசின் இச்செயலைக் கண்டித்துள்ளன. ~இச் செயல், தமிழர்களை நாடு கடத்துவதற்கு ஒப்பானது| - என்கின்ற வகையில் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ~வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள், தமிழர்களின் தாயகப்பகுதி என்ற உண்மையை, இந்த வெளியேற்றம், நிரூபணம் செய்து விட்டது| என்ற தர்க்கமும் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது. ~நாடு கடத்தல், தமிழர் தாயகத்திற்கான நிர…

    • 0 replies
    • 918 views
  10. குடும்பிமலை பாலமடு நோக்கிய படைநகர்வு முறியடிப்பு மட்டக்களப்பு குடும்பிமலை பாலமடு நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த படைநகர்வு இன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் பாலமடு நோக்கி பெருமளவு சிறீலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோது போராளிகள் படையினரை வழிமறித்து சமராடி படையினரை விரட்டியடித்துள்ளனர். 6 மணி நேர சமர்களின் பின்னர் பலத்த இழப்புக்களுடன் சிறீலங்காப் படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இன்றைய மோதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இன்று மாலை 6 மணியளவில் குடும்பிமலை திருமாவடி எனும் மற்றொரு பகுதியில் சிறீலங்க…

    • 0 replies
    • 1.3k views
  11. போர் நிறுத்த மீறல்கள், கள நிலைமைகளை உள்ளடக்கிய விசேட அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துச் செல்லும் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் கள நிலைமைகளின் உண்மைத் தன்மையை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினோர் மேர்ஸன் மேலும் கூறியதாவது: நோர்வே தலைநகர் , ஒஸ்லோவில் எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பரிசீலிப்பதற்க…

    • 0 replies
    • 976 views
  12. வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற…

    • 6 replies
    • 2.1k views
  13. மகிந்தவின் கட்சி உடைந்தது: மங்கள - சிறீபதி இணைந்து புதிய கட்சி தொடக்கம். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள் இணைந்து "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். மகிந்தவினால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" சார்பில் மங்கள சமரவீரவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்: 1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பி…

  14. நோர்வேயை வெளியேற்ற வேண்டும் டொனி பிளேயரை இணைத்துக்கொள்ளக்கூடாது: ஜே.வி.பி. சமாதான செயற்பாடுகளில் இந்தியா, ஜப்பான் உட்பட எந்த நாடும் தலையிடக்கூடாது என்கிறது ஜே.வி.பி. பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் மத்தியஸ்தராக செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வெளிநாட்டவர்கள் இலங்கையின் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டமையின் காரணத்தினாலேயே நாடு இன்று இக்கட்டான நிலையில் உள்ளது என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நோர்வேயையும் சமாதான செயற்பாடுகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் …

  15. செவ்வாய் 19-06-2007 15:19 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் கப்பம் கேட்கும் காவல்துறை யாழ்ப்பாண மருத்துவமனையில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் பொது மக்களிடம் கப்பம் கேட்டு துன்புறுத்திவருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவமனையில் வளாகத்தில் ஒரு காவல்துறை நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது குறிப்பிட்ட காவல் நிலையம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படும் திடீர் மரணங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் கூடிய காணம் அடைந்தவர்களின் நலனுக்காக இந்த காவல் துறை நிலையம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் கூட தற்போது யாழ் குடா நாட்டில் இடம் பெறும் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் மற்றும் தற்கொலைகள்…

  16. அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்? [19 - June - 2007] * அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம் "அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜ…

  17. Posted on : Tue Jun 19 9:01:07 EEST 2007 சீனாவிலிருந்து யுத்த உபகரணங்கள் கொள்வனவு செய்ய அரசு ஏற்பாடு சீனா நிறுவனம் ஒன்றிடமிருந்து யுத்தத்திற்கான உப கரணங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் செய்து கொள்ளப்பட்டதெனவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பத்திரிகைத் தகவலில் மேலும் தெரியவருவதா வது: இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தேவையான யுத்த உபகரணங்களை 37 கோடி60 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது. இந்த ஆயுதக் கொள்வனவிற்கான பணத்தின் 25 வீதத்தை முதலில் செலுத்தி மிகுதியைப் 10 மாதத் தவணையில் செலுத்துவதற்கு உடன்படிக்கை செய்துகொள்ள…

    • 2 replies
    • 1k views
  18. `புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…

    • 1 reply
    • 1.2k views
  19. இன நெருக்கடி தீர்வு யோசனை 6 வாரத்துக்குள் பூர்த்தியாகும் [19 - June - 2007 * பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை எதிர்வரும் 6 வார காலத்திற்குள் வெளியிட முடியுமென சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஒற்றை ஆட்சி முறையினையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சமர்ப்பித்துள்ள யோசனைகள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை…

  20. மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம் [19 - June - 2007] * ரிரான் அலஸ் கூறுகிறார் கே.பி.மோகன் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தா…

  21. Posted on : Tue Jun 19 8:23:28 EEST 2007 புலிகளின் இறுவட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பான வீடியோ இறுவட்டுக்களை டோகா கட்டாரில் இருந்து இலங்கைக்கு எடுத்துவந்ததாகக் கூறப்படும் இரு தமிழர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய் யப்பட்டனர். டோகா கட்டாரில் தொழில் புரியும் இவர்கள் நேற்று இலங்கை திரும்பினர். கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களது உடைமைகள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. இதன்போது அவர்கள் எடுத்துவந்த பொருள்களில் விடுதலைப் புலிகள் அமைப் புத் தொடர்பான பொருந்தொகையான வீடியோ இறுவட்டுக்கள் இருந்தமை பொலி ஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட இரு தமிழர்களும் மன்னார் மற்றும் கற்…

  22. இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்பு இலங்கை அரசாங்கம் மீது பிரிட்டன் எவ்வித நிர்ப்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை. ஆனால் உலகமயமாக்கலின் கீழ் எந்தவொரு நாடும் தனியான தீவாக இயங்க முடியாது என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நாம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றோம் என்றும் சில்கொட் கூறினார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் பிரிட்டனின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டொமினிக் சில்…

    • 1 reply
    • 1.3k views
  23. Posted on : Tue Jun 19 8:52:31 EEST 2007 வன்னி நிலைமை அறிய ஐ.தே.கட்சிக் குழு பயணம் வன்னி மக்களின் நிலைமையைக் கண்டறிவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று அடுத்தவாரம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளது. இந் தக் குழுவிற்கு அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை வகிப்பார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் இக்குழு, அங்குள்ள நிலைமையை ஆராயும், பல பொது அமைப்புகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறுகையில், தற்போது வன்னி நிலைமை மிக மோசமாகிவருகிறது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையை ந…

  24. சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார் சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட…

  25. முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார்?: ஆளுநர் அலவி மௌலானா சிறிலங்காவில் முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அலாவி மௌலானா கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக ஆட்கடத்தல் சம்பவங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெரிதாக்குகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினரே முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களில் கடத்தப்போவதாகவும் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிக் கொள்ளுமாறும் தகவல்கள் அனுப்புகின்றனர். அதேபோல் இந்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் பெரிய இரைச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் எனப் புரியவில்லை. ஒன்றிரண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.