ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
கிழக்கு எவ்வாறு மீட்கப்பட்டதோ வடக்கும் அவ்வாறே மீ“ட்கப்படும் வீரகேசரி நாளேடு வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. கிழக்கு வாழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்டதோ, அவ்வாறே வடக்கு வாழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்குரிய உரிமையும் பெற்றுக்கொடுக்கப்படும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தõர். மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படுத்தப்பட வேண்டும். யுத்தம் அரசியல் நோக்குடனோ, அரசியல் இலாபம் கருதியோ முன்னெடுக்கப்படவில்லை. நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் ஜ…
-
- 8 replies
- 2.4k views
-
-
தமிழர்களுக்கு ஆத்திரமூட்டும் செயல் - நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி இருப்பதன் மூலம் அதியுச்ச ஆத்திரமூட்டும் செயலை சிறீலங்கா அரசு புரிந்திருப்பதாக, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரசின் இந்த நடவடிக்கை ஏற்கனவே இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களின் உச்ச கட்டமாக இருப்பதுடன், இனப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும் எனவும் எதிர்வு கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், தமிழ் மக்களை வெளியேற்றி “ஒட்டுமொத்த தண்டனை” கொடுப்பதற்கு, அரசிற்கு எந்தவித உரிமையும் இல்லை எனவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல் - பல அமைப்புக்கள் கண்டனம். கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த சுமார் 800 வரையிலான தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒரு தொகுதியினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடக இயக்கங்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் சிறீலங்கா அரசைக் கண்டித்திருப்பதுடன், ஹிட்லர் பாணியில் தமிழ் மக்கள் அடிமைகள்போன்…
-
- 37 replies
- 4.1k views
-
-
இந்தியாவில் இருந்து ஈ.என்.டி.எல்.எப் தேச விரோத குழுவினர் யாழ் குடாவுக்கு வரவழைப்பு. இந்தியாவில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்கி நின்று சமூகவிரோத தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஈ.என்.டி.எல்.எப் தேசவிரோத ஒட்டுக்குழுவின் உறுப்பினர்கள் பலர் தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் தமிழ் மக்களுக்கு எதிரான நாசகார நடவடிக்கைகளுக்காக இவர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் செய்திகள் இவர்கள் தற்பொழுது சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது. இவர்களின் முக்கியமான ஒட்டுக்குழு உறுப்பினரான பாஸ் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் …
-
- 1 reply
- 1.8k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழருக்கு அரசின் செய்தி என்ன? [08 - June - 2007] [Font Size - A - A - A] தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்ற பெயரில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளவத்தை, புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் தனியார் விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களில் 500 க்கும் அதிகமானவர்களை பலவந்தமாக வெளியேற்றிய பொலிஸார் அவர்களை பஸ்களில் ஏற்றி வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்கியிருக்கும் கொழும்பு விடுதிகளில் முன்னரெல்லாம் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸார் அவர்களை விருப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு. சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். -Pathivu-
-
- 8 replies
- 1.7k views
-
-
கொழும்பில் கிளைமோர் குண்டு - தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை திசை திருப்பும் நடவடிக்கை கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அரசின் நடவடிக்கைக்கு அனைத்துலக ரீதியில் எதிர்ப்புத் தோன்றியுள்ளதால், அரசு சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள சேர் பறோன் ஜயதிலக்க வீதியில் இன்று ஏழு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக, அரசு தகவல் வெளியிட்டுள்ளது, சிங்கள, ஆங்கில பெரும்பான்மை இன ஊடகங்களும் அரசின் இந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பில் தங்ககங்களில் தங்கியுள்ள தமிழர்களால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்ற அரசின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில், …
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல். இன்று இலங்கை விமானப்படையின் ஐந்து விமானங்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதியில் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. SLAF bombs Kilinochchi suburbs, normalcy disturbed Five bombers of the Sri Lanka Air Force flew at low altitude Friday morning and bombed southern suburbs of Ki'linochchi town. The first air raid took place at 7:40 a.m. when children were on their way to schools. Tension prevailed in the town and normalcy was disturbed. Later, the bombers returned around 12:20 p.m. to bomb the same area. No casualties were reported in the air attacks. Tension prevailed in the town. Peopl…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன் [வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 11:37 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழம் உருவாவகுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியதாவது: கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த வெளியேற்றல் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம்…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழர்களை வெளியேற்றியமையை கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் வீரகேசரி நாளேடு சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கொழும்பில் கடந்த ஒருவாரகாலமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பை கண்டித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மேலக மக்கள் முன்னணியும் இணைந்து நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பகல் 12.00 மணிக்கு கொழும்பு லிப்டன் சதுக்க சந்தியில் நடைபெறவுள்ளது. கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி வடக்குகிழக்கிற்கும் தமிழகத்திற்கும் அனுப்பிவிடவேண்டும் என்பது நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுவரும் பேரினவாத சதியாகும். இன்று இந்நடவடிக்கையை இந்த அரசாங்கம் எமது பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் பகிரங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல். வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இல்லம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. உந்துருளியில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், சிவசக்தி ஆனந்தனின் வீட்டில் உள்ள காவல்நிலை மீது இத்தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என்றும் சிறிலங்கா இராணுவ இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. -Puthinam-
-
- 0 replies
- 980 views
-
-
Posted on : Thu Jun 7 7:38:09 EEST 2007 கொழும்பில் பிரபல வர்த்தகரைக் கடத்தி 24 1/2 கோடி பெற்றுக்கொண்டு விடுவிப்பு! கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார் என்பவரைக் கடத்திச் சென்று, அவரிடம் இருபத்திநான்கரைக் கோடி ரூபாவைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு விடுவித்த சம்பவம் ஒன்று கடந்த மாத மத்தியில் இடம்பெற்றுள்ளது. இந்நத விவகாரம் நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தெரிவித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான லக்ஸ்மன் செனவிரட்ண. அவர் வெளியிட்ட தகவலின் பிரகாரம் வர்த்தகர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட சம்பவம் இதுதான். கடந்த மே 16ஆம் திகதி கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார், பக்ஸ் அறிவித்தல் ஒன்றின் மூலம் கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். "டுபாயில் பல ஆயிர…
-
- 6 replies
- 2.9k views
-
-
மகிந்தவின் கொழும்பு நடவடிக்கையில் கேள்விக்குறியாகிப் போன இளம் பெண்ணின் எதிர்காலம் [வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:09 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவின் கொழும்பு நகரில் மகிந்த மேற்கொண்ட தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையினால் திருமணத்துக்கு காத்திருந்த இளம்பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. யாழ். கரவெட்டியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் மற்றும் அவரது 23 வயது மகள் தர்சனி செல்வம் ஆகியோர் வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்தனர். தனது கணவர் மறைந்ததையடுத்து கரவெட்டியில் உள்ள தங்கள் வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டு கொழும்பில் தங்கியிருந்து, மகள் தர்சனியின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை சரஸ்வதி அம்மாள் செய்து வந்தார். லண்டனில் உள்ள ஒருவரைத் …
-
- 3 replies
- 2k views
-
-
கொழும்பில் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது தமிழர்கள் வெளியேற்றப்பட்ட மறுநாள் சம்பவம், தலைகுனிவில் சிறிலங்கா காவல் துறை! பாரிய வீதியோர குண்டொன்றை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து செயலிழக்க செய்துள்ளனர்! 7கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு சோதனை சாவடி ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது! Sri Lanka slammed for deporting Tamils, bomb defused By Simon Gardner COLOMBO (Reuters) - Sri Lankan police defused a big roadside bomb in Colombo on Friday as local and international rights groups slammed the government for rounding up minority ethnic Tamils and deporting them to the war-ravaged north. The military said a 7…
-
- 3 replies
- 1.5k views
-
-
மடுவை கைப்பற்ற சிறிலங்கா இராணுவ தளபதிகள் தயக்கம். மன்னார் மடு பிரதேசத்தை பாரிய இழப்புகளுக்குப் பின்னரும் கைப்பற்ற வேண்டுமா என்ற தயக்கம் சிறிலங்கா இராணுவ தளபதிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி: சிறிலங்கா இராணுவத் தளபதியின் வன்னிப் பயணத்தின் சில மணி நேரங்களுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் விளாத்திக்குளம், மற்றும் முள்ளிக்குளம் இராணுவ நிலைகளை தாக்கியுள்ளர். கல்மடு முகாம் மீது சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் விடுதலைப்புலிகள் 130 மி.மீ பீரங்கிகளினால் தாக்குதலை தொடுத்தனர். அரை மணிநேர தாக்குதலின் பின்னர் 8.30 மணியளவில் பம்பைமடுவில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பீரங்கித் தளத்தின் மீதான பீரங்கித் தாக்குதல் தொடங்கி…
-
- 3 replies
- 1.9k views
-
-
Posted on : 2007-06-08 தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் மற்றொரு கொடூர வடிவம் இது! ஈழத் தமிழர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் வறுத்தெடுத்து வதைக்கும் அரச ஒடுக்குமுறை, இப்போது தலை நகரிலும் அவர்களை கருவறுக்கும் தனது வேலையைக் கனகச் சிதமாக முழு அளவில் ஆரம்பித்து விட்டது. கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நித் திரைப் படுக்கையில் இருந்து உடுத்த உடையோடு கால் நடைகள் போல அள்ளிச் செல்லப்படும் கொடூரம் முழுத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அவமான மாகும். மாற்று இனத்துப் பிச்சைக்காரர்கள் கூட தலைநகர் வீதியோரங்களில் கேட்பாரின்றி விசாரிப்பாரின்றி ஆனந் தமாக, சாவகாசமாகப் படுத்துத் தூங்கி மகிழும்போது தமிழர்கள் மட்டும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த க…
-
- 1 reply
- 1.3k views
-
-
செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் கொலை தொடர்பாக தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் இருவர் கடந்தவாரம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா அறிவித்துள்ளார். சந்தேக நபர்கள் அல்லது பணியாளர்களை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கே இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் தகவல்களை 0112328138 0777633359 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 0112326937 என்ற பக்ஸ் இலக்கங்கள் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் 0112447319 0773679900 என்ற தொலைபேசி இலக்கம் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
மகிந்தவின் கொழும்பு நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் கண்டனம் தமிழ் மக்களை சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பகுதிக்கு திருப்பி அனுப்பியமையானது இனப்படுகொலையின் மற்றொரு செயற்திட்டமும் பாரிய மனித உரிமை மீறலுமாகும். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித …
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடரும் மனித உரிமை மீறல்கள் நாட்டில் ஆட்கடத்தல்கள் இன்று படுமோசமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. அடுத்த நிமிடம் யார் கடத்தப்படுவாரோ என்ற அச்சத்தில் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழ்கின்றனர். படுகொலைச் சம்பவங்களோடு ஆட்கடத்தல்கள் சர்வசாதாரணமாகியுள்ளன. மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது. மக்கள் நிம்மதியிழந்தவர்களாக விரக்தி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து வெளியே போகும் ஒருவர் மீண்டும் வீடு திரும்பும் வரை நிச்சயமில்லாத நிலைமையே தொடர்கிறது. ஆட்கடத்தல்கள் குறித்து எத்தகைய குரல் எழுப்பப்பட்ட போதிலும் அரசு அது குறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இனம் தெரியாதவர்களால்…
-
- 1 reply
- 899 views
-
-
கருணா குழுவுடன் இணைந்து அரசு கடத்தல்களில் ஈடுபடுகிறது: ஐ.தே.க சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுடன் அரச படையதிகாரிகள் பலர் இணைந்தே கொழும்பில் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறிலங்கா காவல்துறையினரின் உதவி காவல்துறை ஆணையாளர் ரொகான் அபயவர்த்தன, வான்படையின் ஸ்குவட்றன் லீடர் நிசந்த கஜநாயக்க ஆகியோர் கருணா குழுவினருடன் இணைந்து படுகொலைகளையும் கடத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நிசந்த கஜநாயக்க "கொலிடே இண்" ஆடம்பர விடுதியில் தற்போது தங்கியுள்ளார். அவரது செலவுகளுக்கான பணத்தை அமைச்சர் ஒருவரின் சகோதரரான கஜடீரா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொலை, கடத்தல்களுடன் அரசிலுள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு - ஐ.தே.க, ஜே.வி.பி குற்றச்சாட்டு சிறீலங்காவில் இடம்பெறும் கொலை, கடத்தி கப்பம் பறித்தல் போன்ற செயற்பாடுகளுடன் அரசிலுள்ள முக்கியமானவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் குற்றம் சாட்டியுள்ளன. சுpறீலங்கா அரசு மனித உரிமைகளை முறையாகப் பேணி, இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும் இந்த இரண்டு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரத்ன, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, கொழும்பு டி..ஐ.ஜி றொஹான் அபயவர்த்தன, வான்படை முன்னாள் அதிகாரி நிஸாந்த கஜநாயக்க ஆகியோர் தற்போதைய கொலை, கடத்தல்களுக்குப் பொற…
-
- 1 reply
- 874 views
-
-
ஜ புதன்கிழமைஇ 6 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழ் மக்களை முட்டள்களாக்கும் வேலையினை தற்போது அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் சந்திரசேகரன் மேற்கொண்டுள்ளார். ஈழத்தமிழர்களின் மேடையில் ஓங்கி முழங்கிய சந்திரசேகரன் அற்ப சலுகைகளுக்காக அமைச்சர் பதவியினை ஏற்று கடந்த 2 வருடத்திற்குள் எந்த ஒரு பயனுள்ள செயலையும் தனது சொந்த மலையக மக்களுக்கு செய்ய தவறிய இவர் அண்மையில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்று மகிந்தவிடம் சந்திக்க செய்தமையானது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகும். கொலைகள் கடத்தல்களில் ஈடுபடும் அரச தலைவர் மகிந்தவிடம் பாதிக்கபட்டவர்களை கொண்டு சென்று சந்திக்க விடுவது மிகவும் வேடிக்கையானதும் கண்டிக்கபடவேண்டியதுமாகும். அவரகாலச்சட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு அரசாங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளின் விமான பலத்தை ஒழிக்க அமெரிக்கா - இந்தியா வழங்கிய அறிவுறுத்தல்கள் [07 - June - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காகவும் அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவும் அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்களும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்களும் புலிகள் இயக்கத்தின் யுத்த பலத்தை ஒழிப்பதற்கு அரசு எடுக்கவேண்டிய உடனடியான நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுப் பட்டியல்களுடன் தமது பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக ஞாயிறு லங்கா தீபவுக்கு அறிவிக்கப…
-
- 6 replies
- 3.5k views
-
-
விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு இலங்கை விமான நிலையத்தில் அடி, உதை ஜூன் 07, 2007 திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர். விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில வ…
-
- 11 replies
- 3.3k views
-
-
சிறிலங்கா இராணுவம் ஏற்க மறுத்த இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் இன்று உரிய மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டுள்ளன.மன்னாரி
-
- 5 replies
- 1.7k views
-