ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
இலங்கையின் உண்மையான வரலாறு புரியாது பிதற்றிக்கொண்டிருக்கிறது ஜாதிக ஹெலஉறுமய' இலங்கையின் உண்மையான வரலாறு தெரியாது பிதற்றுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கண்டியிலிருந்து ஆட்சி புரிந்த தமிழகம் இருந்து வந்த தமிழர்கள் யார் என்பது சம்பிக்க ரணவக்க அறியாதது ஏன்? ஹெல உறுமய இந்நாடு பௌத்தர்களுக்குரிய நாடாக மட்டும் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும் எனப்பகற்கனவு காண்கின்றது. வடக்கு கிழக்கு இந்நாட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியென்பது வரலாற்று சான்று கொண்டது போல மேலகம் வாழ் தமிழர்களுக்கும் இங்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியே இந்தியாவின் அழுத்தம் இலங்கை இனநெருக்கடிக்கு இந்தியாவை பகைத்துக் கொண்டு தீர்வு காண முடியாதென தெரிவித்திருக்கும் ஐ.தே.க.; சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை இலங்கை பெறக்கூடாதென இந்தியா அழுத்தம் கொடுத்திருப்பது அரசின் வெளிவிவகார கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியெனவும் வர்ணித்துள்ளது. இது பற்றி ஐ.தே.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்: இந்தியா எமது அயல் நாடாக மாத்திரமன்றி பிராந்தியத்தில் வல்லரசாகவும் விளங்குகின்றது. அவர்களின் பங்களிப்பின்றி இனநெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிட முடியாதென்பதில் ஐ.தே.க. உறுதியாகவுள்ளது. இதன் காரணமாகவே ஐ.தே.க. ஆட்சியிலிருந்த சமயம் ஏற்படுத்தப்பட…
-
- 0 replies
- 915 views
-
-
தெற்கில் இனம்தெரியாத நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு Sunday, 03 June 2007 சனிக்கிழமை சிறீலங்கா காவல்துறையினரால் நான்கு இனம்தெரியாத உடலங்கள் சிறீலங்கா தெற்குபகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இரு உடலங்கள் சப்பிரகமுவ மாகாணம் வெலிஓயா பகுதியிலும் மற்றொரு உடலம் வெலிகண்டி மாத்தளை பிரிவில் மத்திய மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 710 views
-
-
மட்டக்களப்பிலுள்ள அகதிமுகாம்களில் தொற்றுக்காய்ச்சல், இருவர் உயிரிழப்பு [03 - June - 2007] [Font Size - A - A - A] மட்டக்களப்புமாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே வேகமாகப் பரவி வரும் தொற்றுக்காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். கன்னன்குடா காயான் மடுவிலிருந்து இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பிலுள்ள தற்காலிக முகாமில் வசித்து வந்த எஸ்.இராசமாணிக்கம் (வயது 33) என்பவரே வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் திராய்மடு அகதிமுகாமில் வசித்துவந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தரும் உயிரிழந்துள்ளார். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்…
-
- 0 replies
- 792 views
-
-
சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்…
-
- 6 replies
- 2.7k views
-
-
சனிக்கிழமை 2 யூன் 2007இ 07:41 ஈழம்[.அருணாசலம்] எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயரட்ன இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணனின் கருத்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தொடக்கம் படை அதிகாரிகள் வரை கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கு ஆயுதம் வாங்க வேண்டும் என்ற முடிவை எமது அரசே எடுக்கும் இந்தியா அல்ல என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும்இ சுதந்திரக்கட்சியின் வலிமையான உறுப்பினருமான டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தனது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சரியான ஆயுதங்களையே நாம் கொள்வனவு செய்ய வேண்டும். எனவே யார் அதனை சிறிலங்காவுக்கு வழங்குவார்கள் எ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 19:54 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம…
-
- 11 replies
- 2.7k views
-
-
ஞாயிறு 03-06-2007 06:30 மணி தமிழீழம் [முகிலன்] யசூசி அகாசி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறீலங்கா வருகிறார் யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி எதிர்வரும் செவ்வாய்கிழமை சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாட்கள் தங்கியிருக்கும் அகாசி அரதரப்பினரையும் விடுதலைப் புலிகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு
-
- 0 replies
- 671 views
-
-
இது ஒரு சிங்கள களத்தில் பதியப்பட்டிருந்த துவேச கருத்துக்கள் இன்னும் இருகின்ரன ஆனால் அவை சிங்கலத்தில் இருப்பதாலும் இங்கு பதியபடமுடியாத வார்த்தை பிரயோகங்கள் இருப்பதாலும் பதியவில்லை இந்த இணைப்புக்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள் நீ உயிர் தப்ப வேண்டுமென்றால் நாட்டைவிட்டு ஓடடாம் தாம் யாழ்பானத்தில் இருக்கும் அனைவரையும் கொல்லுவீனமாம் :angry: :angry:
-
- 6 replies
- 2.3k views
-
-
இலங்கை இந்திய கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு ரோந்துப் பாதுகாப்பு பணியிகளில் ஈடுபட இந்தியா தனது சம்மதத்தை தெரிவிக்க உறுதியளித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பின்ணணியில், இலங்கை வெளிநாட்டமைச்சர் போகித்த போகல்லாகம தலைமையிலான இலங்கையின் உயர் பாதுகாப்பு குழு ஒன்று, இன்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி தலைமையிலான உயர்குழுவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு ரோந்து நடவடிக்கையின் ஏற்பாடுகள் குறித்து விரைவில் இருத்தரப்பும் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாகவும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : Sat Jun 2 7:16:13 EEST 2007 தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வு குறித்து சீனப் பிரதிநிதிகள் குழு பிரதமரிடம் கேள்வி இடையூறுகள் இல்லை என்கின்றார் அவர் தென்பகுதியில் தமிழர்கள் நிம்மதி யாக வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்பது பொய்யானகருத்து. நீங்கள் நம்ப வேண்டாம் இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க சீனப்பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள் ளார். பிரதமரை நேற்று அவரது அலுவலகத்தில் சீனப்பிர திநிதிகள் குழு ஒன்று சந்தித்த வேளை சீனப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கொழும்புக்கு வரும் தமிழர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது: எத்தகைய பாரபட்சமும் இன்றி இந்த நாட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்றைய நகைச்சுவை! - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்றாலும் பயப்படத் தேவையில்லை: சிங்கப்பூரில் ரோகித போகல்லாகம [சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:36 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா, பிரச்சினையான நாடல்ல, தொழிலுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற சிறந்த நாடு என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றிருக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தெற்கு ஆசியக் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்த உரை நிகழ்வில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வர்த்தகர்களிடம் உரையாற்றினார். சிறிலங்காவில் இனப்பிரச்சினை இருக்கிறது என்றாலும் பயப்படத் தேவையில்லை. வடக்குப் பகுதியைத் தவ…
-
- 4 replies
- 1.8k views
-
-
பேச்சுக்கு அரசு தயார் என்கிறார் மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 2 யூன் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் வேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மகிந்தவின் பேச்சாளரான சந்திரபால லியனகே அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் சம்மதித்தால் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச்சுக்களை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இன்றுகூட பேச்சுக்களை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். நான் ஒரு ஜனநாய…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பில், மருதானை பகுதியில் நேற்று வெள்ளிகிழமை இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். தமது கடைகளுக்காக பொருட்களை வாங்கச் சென்ற காதர் பக்கீர் நௌபர் மற்றும் முகமட் சதாத் ஆகிய இருவருமே இனந்தெரியாத நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் பொலிஸாரிடமும், காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். இவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியே சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்களைக் கடத்தியதாக காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.sht…
-
- 0 replies
- 1k views
-
-
VIDEO: Tamil men walk to correct 'errorism' Group plans to arrive in Ottawa June 11 May 25, 2007 By Stefanie Swinson More from this author DURHAM -- A group of eight Tamil men are taking their fight for social equality to the streets walking to Ottawa from Toronto to "stop errorism." Errorism, as described by walk organizer Mayuran Rhaashivam, is when "a majority community uses stigmatized terms to bully a minority community for its own self interests." The walk began on May 22 from Nathan Phillips Square and is due to be completed June 11 on Parliament Hill. "We want to raise awareness about the Sri Lankan confli…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: மாவடி ஓடைப் பாலத்திருந்து சிறீலங்காப் படைகள் பின்வாங்கல். மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓ…
-
- 0 replies
- 1.4k views
-
-
தனது குப்பைகளை வாங்க இந்தியா சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது: கொழும்பு ஊடகங்கள் சனிக்கிழமை 2 யூன் 2007 20:07 ஈழம் [அ.அருணாசலம்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள் படை அதிகாரிகள் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குப்பைகளை வாங்க இந்தியா அரசு சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. எம்.கே.நாராயணனின் கருத்து தொடர்பாக கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த டெய்லி மிரர் நாளேடு 'இந்தியாவால் தனது குப்பைகளை வாங்க சிறிலங்…
-
- 0 replies
- 712 views
-
-
Posted on : Sat Jun 2 7:17:01 EEST 2007 காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம் காணாமற் போனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று அழுது புலம்பிக் கெஞ்சிக் கேட்டுள்ளனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான நட வடிக்கையை தாம் தீவிரப்ப டுத்துவார் என்றும் அடுத்தவாரமளவில் 5 பேர் அடங்கிய விசேட குழு வொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும் கொழும்பில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இக்குழு வின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அந்த உறவினர் களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். விட…
-
- 3 replies
- 1.5k views
-
-
Posted on : Sat Jun 2 7:09:22 EEST 2007 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை கண்காணிப்புக் குழு அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக எந்த விதமான மாற்றமும் தம்மைப் பொறுத்தமட்டில் இல்லை என்று இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதனையா வது கொண்டுவருவதா அல்லது ஒப்பந் தத்தை ரத்துச் செய்வதா என்பது குறித்து அரசு தமக்கு எந்தவித அறிவுறுத்தல்களை யும் இதுவரை விடுக்கவில்லை என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்க ளுக்கு அமைய போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது என்றும் அது தெரிவித் துள்ளது. (சி) ந…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஓமந்தை முன்னரங்க நிலைகளில் மோதல்: படைத் தரப்பில் ஒருவர் பலி! மற்றவர் படுகாயம். வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் உறுதி செய்துள்ளது. -Pathivu-
-
- 0 replies
- 994 views
-
-
சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம…
-
- 22 replies
- 3.6k views
-
-
அன்று “புலிகள் அமைதியை (பேச்சுக்களை) புறக்கணிக்க முடிவெடுப்பேயார்களானால், அவர்கள் மிக வலிமைமிக்க, அதிக செயற் திறனுள்ள, மிக உறுதியுள்ள சிறி லங்கா படையை எதிர் கொள்ள நேரிடும். போரை விரும்பினால் அதற்குரிய விலை மிக அதிகமாகும்.” அன்றைய சிறி லங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜெவ்றி லண்ஸ்ரெட் 14.01.2006 http://www.wsws.org/articles/2006/jan2006/sril-j14.shtml இன்று “புலிகளுக்கு நான் தற்போது தெரியப்படுத்துவதாக இருக்கும் செய்தி என்னவென்றால் அவர்களின் வாழ்வு இன்னும் அதிக நெருக்கடிக்குள்ளாகும் என்பதே!” சிறி லங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஒ ப்லேக் 1.06.2007 ஐலண்ட் பத்திரிகையில் 2.6.2007ல் வெளிவந்த நேர்காணலின் போது The message that I would send to the LTTE now …
-
- 0 replies
- 691 views
-
-
'இருமுனைப் போரை தமிழினம் இன்று சந்திக்கின்றது': சு.ப.தமிழ்ச்செல்வன் [சனிக்கிழமை, 2 யூன் 2007, 09:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் பேராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்" என்று தமிழீழ விடுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
Date: 2007-06-02 சமத்துவத் தகைமையை மறுத்து சமரசத்துக்கான பாதை மறிப்பு ஜனாதிபதி மஹிந்தர் தலைமையிலான அரசின் போரியல் முனைப்புப் போக்குப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊசலாடியபடி மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு செத்துச் செயலிழந்து, உக்கி, உருக் குலைந்து வெற்றுத் தாளாகிப் போயுள்ள போர் நிறுத்த உடன் படிக்கைக்கு நிரந்தரமாக இறுதிக் கிரியைகள் நடத்தி, அதை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட அரசு தயாராகிவிட்டது என் பதும் செய்தி. இவ்விடயம் தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கட்டியம் கூறப்பட்டுவிட்டது. இதேசமயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகம் மேற்கொண்ட "சமாதானத்துக்கான …
-
- 0 replies
- 850 views
-
-
லொஜ்களில் தங்கிய தமிழர்களை வெளியேற்ற உத்தரவிடப்படவில்லை - காவல்துறை மா அதிபர் சனி 02-06-2007 05:07 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு லொஜ்களில் எதுவித காரணங்களும் இன்றி நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்படுவர் என சிறீலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் எதுவித காரணங்களுமின்றி லொஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதே தவிர அவர்களை வெளியேற்ற புறக்கோட்டை காவல்துறையினர் உத்தரவைப் பிறப்பிக்கப்படவில்லை எனவும் காவல்துறை மா அதிபர் குறிப…
-
- 1 reply
- 823 views
-