ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
வியாழன் 31-05-2007 05:37 மணி தமிழீழம் [மயூரன்] உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111வது இடத்தில் சிறீலங்கா உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111 இடத்தில் சிறீலங்கா வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. ஜி-8 நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சமாதான சுட்டெண் வரிசையில் அல்ஜீரியா தொடக்கம் சிம்பாவே வரையான 121 நாடுகள் பட்டியலிடப்பபட்டுள்ளன. நோர்வே 1வது இடத்திலும்இ அமெரிக்கா 96வது இடத்திலும்இ இந்தியா 109வது இடத்திலும்இ சிறீலங்கா 111வது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன. வரிசை நாடுகள் மதிப்பெண் 1 Norway 1.357 2 New Zealand 1.363 3 Denmark …
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தல்: தூதரகங்களில் முறைப்பாடு. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்படுவது தொடர்பாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டதன் தொடர்ச்சியாக முஸ்லிம் வர்த்தகர்களும் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாட்டு தூதரகங்களை அணுகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், அந்த நாடுகள் தமது அழுத்தங்களை அரசு மீது பிரயோகித்து இதனை உடனடியாக நிறுத்த முன்வரவேண்டும் என கேட்டுள்ளனர். இது தொடர்பாக அதிக கவனங்களை செலுத்துவதாக இ…
-
- 4 replies
- 1.4k views
-
-
மண்முனை, பட்டிப்பளை பகுதிகளில் மக்களை குடியேற்றும் பணி நாளை ஆரம்பம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்படி நாளை 1 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்ற…
-
- 0 replies
- 632 views
-
-
கட்டுநாயக்க வான்பரப்பில் விமானப்படையினர் ஒத்திகை வீரகேசரி நாளேடு கட்டுநாயக்க வான் பரப்பில் நேற்றிரவு விமானப்படையினர் விமானத் தாக்குதல் எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட விமானங்களை வானில் பறக்கவிட்ட விமானப்படையினர், படைத்தளத்திலிருந்து வானை நோக்கி விமான தாக்குதல் எதிர்ப்பு கருவிகளை இயக்கினர். இதனால், வான் பரப்பில் பெரும் வெளிச்சம் தென்பட்டதுடன், பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்டன. இதன்காரணமாக கட்டுநாயக்க உட்பட அதனையண்டிய பிரதேங்களில் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து, விமானப் படையினர் ஒத்திகையில் ஈடுபடுவதாக மக்களுக்கு பொலிஸார் தெரியப்படுத்தினர். முன்னறிவிப்பு செய்யப்படாமல் ஒத்திகையில் ஈடுபட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புறக்கோட்டையில் குண்டுப்புரளி வீரகேசரி நாளேடு புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தையில் உள்ள பௌத்த விஹாரைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது. நடைபாதை வியாபாரிகள், ஊழியர்கள், பயணிகள் எனப் பலரும் அச்சம் காரணமாக பதறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அதில் குண்டுக்குப் பதில் செங்கல்லே இருந்தது. இதனையடுத்து, புறக்கோட்டை பிரதேசம் வழமைக்குத் திரும்பியது. எனினும், சன நடமாட…
-
- 0 replies
- 909 views
-
-
வியாழன் 31-05-2007 01:30 மணி தமிழீழம் [சிறீதரன்] உயிலங்குளம் சோதனைச் சாவடி மீளதிறப்பு மன்னார் மாவட்டத்திற்கும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கும் இடையேயான சோதனைச்சாவடி புதன்கிழமை காலை 9 மணிக்கு மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒருவாரகாலமாக இவ்சோதனைச்சாவடி சிறீலங்கா படையினரால் மூடப்பட்டிருந்தமையும் இதனால் பெருமளவிலான பொதுமக்கள் பலநெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தமை தெரிந்ததே. இதேவேளை இச்சோதனைச்சாவடியானது வாரத்தில் திங்கள்;, புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாத்திரமே திறந்திருக்கும் எனவும் தெரியவருகிறது. பதிவு
-
- 0 replies
- 780 views
-
-
இன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....6c3f678819b6e05
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்ராண்டட் பத்திரிகையின் உரிமையாளர் கைது [புதன்கிழமை, 30 மே 2007, 18:44 ஈழம்] [க.திருக்குமார்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிதித் தொடர்புகளை வைத்திருந்ததாகக் கூறி கொழும்பில் இருந்து வெளிவரும் ஸ்ராண்டட் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரான ரிரான் அலஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபரான ரிரான் அலசிடம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பின்னர் சுகவீனம் காரணமாக நவலோக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சுற்றிவர 15-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நிற்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. puthinam
-
- 0 replies
- 944 views
-
-
புதன் 30-05-2007 20:03 மணி தமிழீழம் [மயூரன்] மடு முன்னரங் நிலைகளில் மோதல் - 5 படையினர் பலி இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் சிறீலங்கா படையினர் வவுனியா மன்னார் முன்னரங் நிலைகளில் இருந்து மடுநோக்கி மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.இதன்போது சிறிலங்கா படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& தம்பனை ஊடான இராணுவ முன்னகர்வு முறியடிப்பு Written by Ellalan - May 30, 2007 at 06:52 PM மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
படையினரின் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் இயக்கச்சியில் பொதுமகன் பலி. இன்று காலை 7 மணியளவில் இயக்கச்சிப் பகுதி நோக்கி படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் பாலசுப்ரமணியம் என தெரியவந்துள்ளது. Civilian killed in SLA artillery attack in Iyakkachchi A civilian was killed Wednesday morning around 7:00 a.m. in Iyakkachchi, north of the Elephant Pass (A:naiyi'ravu) as Sri Lanka Army (SLA) intensified artillery shelling hitting the houses in the village, civilians who fled the area said. The victim, a male, was identifed as Balasubramaniam. Iyakkachchi, located 6 km north of the Elephant Pass (EPS) in Pachchilaippa'…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன்கிழமை, 30 மே 2007, 08:19 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைவிட கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மேலும் 62 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையின் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், 20 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இரத்மலானைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப…
-
- 1 reply
- 918 views
-
-
இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா! இந்தியாவின் தலைநகர் புதுடெல்கிச் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஆயுத தளபாட உதவிகளை தந்துதவுமாறு கோரியுள்ளார். இந்தியாவிடமிருந்து நவீனரக வான் கண்காணிப்பு கருவிகளையும், நடமாடும் மூன்று வான் கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் சிறிலங்கா அரசு தற்போது பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. புதுடெல்கியில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், செயலாளர் சேகர் டத், முப்படைகளின் தளபதிகளான ஜெனரல் ஜே.ஜே.சிங், அட்மிரல் சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி ஃபாலி ஹோமி மேஜர் ஆகியோரையும் கோதபாய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். …
-
- 5 replies
- 1.3k views
-
-
புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழக…
-
- 3 replies
- 1.5k views
-
-
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் புனரமைப்புகளுக்கும் சேர்த்தே இலங்கைக்கு நிதி வழங்கப்படுகின்றது: ஜப்பான் அரசு. இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை எவையும் வழங்கவில்லை என்கிறது ஜப்பான். மனிதாபிமான நடவடிக்கைகள், புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். இராணுவ ரீதியான உதவிகளையோ, ஆயுதங்களையோ இலங்கைக்கு ஒருபோதும் வழங்கவில்லை. எனவே, இலங்கைக்கான நிதியுதவிகளை குறைப்பதில்லை என்ற நிலையில் நாம் உறுதியாக உள்ளோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்தவாரம் ஜப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
புதன் 30-05-2007 06:04 மணி தமிழீழம் [தாயகன் சிறீலங்காவிற்கான இராஜதந்திர அலுவலகம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பலஸ்தீனத்தில் அமைக்கப்பட இருப்பதாக, துணை வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா தெரிவித்துள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு பலஸ்தீன அரசிடம் இருந்து தமது வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்திருப்பதாகவும், றமாலாவில் அமைக்கப்படவுள்ள முதலாவது அலுவலகத்தின் இராதந்திரியாக ரி. ஜயசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் பைலா கூறினார். பலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக தூதரகம் அமைக்கும் எண்ணம் தற்பொழுது இல்லை எனவும், துணை வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா தெரிவித்தார். முதலில் அமைக்கப்படவுள்ள இராஜதந்திர அலுவலகத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் அதி…
-
- 0 replies
- 855 views
-
-
திடீர் வெள்ளப் பெருக்கு - ஒரு அபசகுனம் கொழும்பு, தமிழ் போராளிகளின் விமானங்கள் கடந்த வாரம் இலங்கையின் தேசிய தலைநகருக்கு மேலான வான்பரப்பை முற்றுகையிட்டுப் பறந்த வேளையில் தரையில் தோன்றிய மோசமான இயற்கை அழிவான திடீர் வெள்ளப் பெருக்கிலிருந்து அரசியல் தலைவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. காலநிலை மாற்றமே இந்த திடீர் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதிகரித்து வரும் வெப்பம், உயர்ந்து வரும் கடல்மட்டம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து இதே வாரத்தில் ஐக்கிய நாடுகள் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது துரிதமாக செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனங்களாலோ பூமி வெப்பமடைவதை தடுப்பது குறித்…
-
- 4 replies
- 2.3k views
-
-
புதன் 30-05-2007 04:35 மணி தமிழீழம் [தாயகன்] இளைஞர்களைக் கைது செய்வதற்காக இராணுவத்தினரே கண்ணிவெடியைப் பொருத்தினர் யாழ் தென்மராட்சி வரணிஇ மந்துவில் பகுதிகளை கடந்த திங்கட்கிழமை சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினர்இ கிளைமோர் கண்ணிவெடி பொருத்தியதாகக் கூறி இரண்டு இளைஞர்களைக் கைது செய்திருந்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் நேற்று முன்னிறுத்தப்பட்டபோதுஇ இளைஞர்களைக் கைது செய்வதற்காக படையினரே கிளைமோரைப் பொருத்தியதாக நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கூறப்பட்டுள்ளது. வறணி இயற்றாளையைச் சேர்ந்த 18 வயதுடைய குமாரு தயாநந்தன் மந்துவிலைச் சேர்ந்த 19 வயதுடைய ஆறுமுகம் கமலதீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர். நன்றி பதிவு
-
- 1 reply
- 992 views
-
-
ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் மூன்று நாள்கள் திறக்கப்பட்டிருக்கும் அரசின் யோசனைக்கு விடுதலைப் புலிகள் இணக்கம் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த, ஓமந்தைச் சோதனை நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் சோதனை நிலையத்தை திறந்து போக்குவரத்துக்கு வகை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக அரசாங்கம் தெரிவித்த யோசனைக்கு விடுதலைப் புலிகள் நேற்று இணக்கம் தெரிவித்தனர். இந்த இணக்கப்பாடு, வன்னியில் ஏற் பட இருந்த பெரும் மனிதாபிமானப் பிரச் சினைகளைத் தவிர்த்துள்ளதாக அரச சார் பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் தரப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளனர். இம் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் …
-
- 1 reply
- 1k views
-
-
யுத்த முன்னெடுப்பை நிராகரித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம் [30 - May - 2007] பி.ரவிவர்மன் யுத்தத்துக்கு எதிராக நாடு பூராவுள்ள அனைத்து மக்களையும் அணிதிரட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள இடதுசாரி முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான வீ.திருநாவுக்கரசு, நீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஊழல் நிறைந்த இடமாக கொழும்பு மாநகர சபை பல்வேறு ஊழல் மோசடிகளில் ஆணையாளர் [30 - May - 2007] * முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றச்சாட்டு அருளானந்தம் அருண் கொழும்பு மாநகர சபை மோசமான ஊழல்கள் நிறைந்த இடமாக தற்போது மாறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக செயற்படுபவர் பல்வேறு ஊழல்களையும் மேற்கொண்டுவரும் ஊழல் பேர்வழி என்றும் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, அவரின் நிதி, ஊழல்கள் உட்பட்ட பல ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அந்த ஆணையாளர் ஊழலற்ற மனிதரென நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகவும் தான் தயார் எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தி…
-
- 0 replies
- 914 views
-
-
வட பகுதி தமிழ் இளைஞர் காலியில் கைது [30 - May - 2007] காலி கோட்டைப்பகுதியில் தனது சிங்களக் காதலியுடன் உல்லாசமாகத் திரிந்த வடபகுதி இளைஞன் ஒருவரை காலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அம்பலாங்கொடையைச் சேர்ந்த தனது காதலியுடன் காணப்பட்ட இவரிடம் இருந்து புகைப்படம் எடுக்கக்கூடிய கையடக்கத் தொலைபேசியை கண்டெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காலி இராணுவ களஞ்சியசாலையை இவர் புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்த போது அவரை விடுவிக்கும்படியும், அவரை விடுவிக்காமல் தான் போக மாட்டேன் என்றும் அந்த யுவதி அடம்பிடித்து பின்னர் பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியதாகவும் …
-
- 0 replies
- 999 views
-
-
எவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத்தனத்தில் அரசாங்கம் [30 - May - 2007] * கடுமையாக சாடுகிறது ஐ.தே.க. அருளானந்தன் அருண் இன்று சகல வழிகளிலும் தோல்வியடைந்ததொன்றாக மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். முக்கியமாக நாட்டில் எவருக்கும் பாதுகாப்பு அற்ற நிலை நிலவுவதாகவும் கடத்தல், கப்பம் பெறல் போன்ற புதுமையான கலாசாரத்தை உருவாக்கியுள்ள அரசாங்கமாக இது உள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த…
-
- 0 replies
- 905 views
-
-
`ஹியூமன் றைற்ஸ் வோச்' கோரியதற்கு மாறாக நிதியுதவியை அதிகரித்தது ஜப்பான் [30 - May - 2007] சிறிலங்காவிற்கு நிதி உதவிகளை வழங்கவேண்டாமென்று அமெரிக்காவில் இயங்கும் `ஹியூமன் றைற்ஸ் வோச்' (Human Right Watch) அமைப்பு அண்மையில் விடுத்த கோரிக்கையை ஜப்பான் அரசு நிராகரித்துள்ளது.அதுமட்டுமன
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன் 30-05-2007 07:04 மணி தமிழீழம் [மயூரன்] வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை - இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வடக்கைக் கைப்பற்ற ஜயசிக்குறு போன்று பாரிய படைநடவடிக்கையை ஒன்றை மேற்கொள்ளும் திட்டம் தமக்கு இல்லை என சிறீலங்காவுக்கான தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றி பின்னர் வடக்கில் புலிகளைப் பலவீனமடையச் செய்து அதன்பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு இழுப்பதே தமது மூலோபாயம் என சரத்பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற 5 தொடக்கம் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன. இதேநேரம் வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை. வடக்கில் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
புதன் 30-05-2007 05:29 மணி தமிழீழம் [மயூரன்] ஒருகிணைந்த கடல்ரோந்து தொடர்பில் நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை - கருணாநிதி சிறீலங்காப் படையினருடன் ஒருங்கிணைந்த கடல்ரோந்து நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்கள் தமிழக மீனவர்களின் பாக்கு நீரிணையில் மீன்பிடியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள் தொடர்பிலே தன்னுடன் உரையாடியதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார் நன்றி பதிவு
-
- 3 replies
- 1.3k views
-