ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்'' -வேனில்- விடுதலைப்புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் (33 நாட்களில்) மூன்று தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் வானூர்திகள் சிறிலங்காவின் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளன. வன்னி வான்பரப்பில் வட்டமிட்டு தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளையில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றும் விடுதலைப்புலிகளின் வான் எதிர்ப்பு அணிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது முதற் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை சிறிலங்கா படைத்துறை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதன்பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும் -அருஸ்- வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவசரமாக பிரித்தது ஏன்? வலிந்த தாக்குதல்களின் மூலம் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் என்ற முயற்சிகளை முடக்கியது ஏன்? விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை இல்லாதொழிக்கப்போகின்றோம் என கங்கணம் கட்டிக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில் கடந்த ஏப்பிரல் 30 ஆம் நாள் வெளிவந்துள்ளது. அன்று நடைபெற்ற மேதின பேரணியின் போது அரசின் பிரதான அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அதில் தற்போதைய மாகாண சபைகள் கூட மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதாவது இருந்த உலக்கையும் தேய்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில்; வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விவரிக்கப்படும் அமைச்சர் போகொல்லாகம சொல்கிறார் கிழக்கில் திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங் கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல் லாகம தெரிவித்தார். மல்வத்தை பீடாதிபதியை நேற்றுச் சந் தித்துக் கலந்துரையாடுகையில் அவர் இப்படிக் கூறினார். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதனை வெளிநாட்டுத் தூதர்களுக்கு நாளை விளக்கிக் கூற உள்ளதாகவும் அமைச் சர் மேலும் தெரிவித் தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் மீட்கவேண்டும் என்று மல்வத்தை மகா நாயக்கர் அமைச்சருக்கு எடுத் துரைத்தார். மாகாண சபைத்திட்டம்…
-
- 6 replies
- 2.7k views
-
-
காரைநகர் படைமுகாமில் இருந்து பாரிய குண்டு வெடிப்புச்சத்தம். காரைநகர் படையினரின் முகாமிற்குள் இரவு பாரிய குண்டுச்சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளது. முகாமினுள் இருந்த ஆயுதக் களஞ்சியம் வெடித்திருக்காலாம் என பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10.00 மணியளவில் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள படைமுகாமில் ஒரு மணித்தியாலயம் வரை கேட்ட பாரிய குண்டுச்சத்தங்கள் யாழில் பல பிரதேசங்களிலும் கேட்டதுடன் பாரிய அளவில் வெளிச்சம் தென்பட்டதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் பதட்டம் நிலவியதாகவும் படைமுகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியங்களில் ஒன்று வெடித்துச் சிதறியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் இப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவதினம்…
-
- 4 replies
- 3.9k views
-
-
லண்டன் கோயிலுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு பிரிட்டனில் அறக்கட்டளைகளுக்காகத் திரட்டப்படும் நிதி விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அனுப்பப்படுவதாக பிபிசிக்கு கிடைத்த கசியவிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பிபிசிக்கு கசிந்த ஆவணம் ஒன்றின் மூலம், இங்கு லண்டனில் டூட்டிங் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணைக்காக, இந்த ஆலயத்தின் வங்கிக் கணக்குகளை பிரிட்டனின் அறக்கட்டளைகளை ஒருங்கிணைக்கும் ஆணைக்குழு முடக்கியுள்ளது. அத்துடன் அந்த ஆலயத்தின் ஸ்தாபகரான நாகேந்திரம் சீவர…
-
- 15 replies
- 4.1k views
-
-
ன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 5 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 19:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியமடித்து 5 இராணுவத்தினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடுவுக்கு தெற்காக உள்ள தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை பெரும் படை பலத்துடன் மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை நீண்ட இம்மோதலில் படைத்தரப்பினருக்கு விடுதலைப் புலிகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி முன்நகர்வை முறியடித்தனர். இதில் 5 இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் ஆயு…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா உளவுத்துறையின் முக்கிய அதிகாரியான எஸ். எச். நிலாம், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கடந்த மாதம் 23ந் தேதியில் இருந்து இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ளனர்.. இவர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இந்தோனேசிய உளவுத்துறை மூலம் பெற்று ஆயுதக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் அழிக்கப்பட்டமைக்குக் காரணமாக இருந்தவர். அத்துடன் "மில்லேனியம் சிற்றி"யில் உளவுத்துறையினரின் பதுங்குவீட்டிற்குப் பொறுப்பாகவும் இருந்தவர்! Intelligence officer Nilam missing By Sunil Jayasiri A top intelligence officer of the Sri Lanka Army, Captain S.H. Nilam, who was the defence attaché at the Sri Lanka Embassy in Jakarta, has gone missing since last mo…
-
- 16 replies
- 4.7k views
-
-
கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்…
-
- 1 reply
- 841 views
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு விசேட அதிரடிப் படையினர் பலி. மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப்பகுதியில் ஞாயிறு காலை 9 மணியளவில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணம் செய்த உழவு இயந்திரம் கிளைமோர் தாக்குலுக்கு உள்ளாகியதில் இரு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த ஐவரையும் வைதியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் எனினும் காயமடைந்தவர்களில் ஒருவர் அதன்போது இறந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியா நாவற்குளத்தில் படையினரின் முன் நகர்வு முறியடிப்பு. வவுனியா நாவற்குளத்தில் சிறிலங்காப் படையினர் முன் நகர முற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர். ஓமந்தைக்கு மேற்காக உள்ள நாவற்குளம், நெல்லிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிமுதல் எறிகணை, பல்குழல் வெடிகணைகளின் செறிவான சூட்டாதரவோடு படையினர் முன் நகர்வை மேற்கொண்டனர். முன் நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களுடன் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளால் படைத்தரப்பினர் கைவிட்டுச் சென்ற ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. -Put…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டன் முத்தரப்பு உச்சி மாநாடு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை அமைச்சர் ரம்புக்வெல லண்டனில் எதிர்வரும் ஜூலையில் நடைபெறவிருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளஅரசு விடுதலைப் புலிகள் நோர்வே அரசு உச்சி மாநாடு குறித்து உத்தியோகபூர்வ மான தகவல் எதுவும் அரசுக்குக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல இத னைத் தெரிவித்தார். பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, அரசு விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பு ஆகிய முத்தரப்புகளையும் கொண்ட உச்சி மாநாட்டை ஜூலை மாதம் நடத்தப்போவதாக பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து கேட்டபோது இதுவரை உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் அரசுக்கு கிட…
-
- 0 replies
- 1.4k views
-
-
வான்பாதுகாப்பு சாதனங்களைக் கொள்வனவு செய்ய மூவர் குழு விரைவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு விடுதலைப் புலிகளின் வான்தாக்கு தல் அச்சுறுத்தலை தவிர்க்கும் பொருட்டு வான் பாதுகாப்புச் சாதனங்கள் மற்றும் நவீன ரக ராடர்களை கொள்வனவு செய் வதற்காக உயர் மட்டக் குழு ஒன்று வெளி நாடு செல்ல இருக்கிறது. மூவர் அடங்கிய இக்குழு ஆகப்பிந் திய தொழில்நுட்பத்துடன் கூடிய வான் பாதுகாப்புச் சாதனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆராய உள்ளது. அத்துடன் மிக் 29 ரக விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் இக்குழு ஆராயவிருக்கின்றது. வான்பாதுகாப்புமுறைச் சாதனங்கள், ராடர்களை இந்தியாவிலிருந்து அல்லது பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய் வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இக்குழு அந்த இரண்டு நாடுகளுக்கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று இரவு மோதல் முல்லைத்தீவு கடற்ப்ரப்பில் நேற்று வெள்ளி இரவு 11:30 மணியளவில் கடற்புலிகளிற்கும் கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல்லில் 10 கடற்புலிகள் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு புல்மோட்டையிலிருந்து முல்லைதீவு நாயாறு நோக்கி புலிகளின் படகுகள் முன்னகர்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 4 தற்கொலை தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 12 replies
- 4.6k views
-
-
சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு. சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் சிறிலங்கா அமைச்சர் பி. சந்திரசேகரன், முதல்வர் கருணாநிதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும் ஆனால் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை சுட்டிக்காட்டி சந்திரசேகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரை சந்திக்க விரும்பாததால்தான் மலையக கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. -Puthinam-
-
- 0 replies
- 1.1k views
-
-
காலத்தின் தேவையே உண்மையான சேவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கற்பதற் குத் தேவையான சகல வளங்களும் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகப் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கல்விச் செயற் பாடுகள் சீராக நடைபெறமுடியவில்லை என்ற நிலை யைப் பேரவையின் அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. பல்கலைக்கழகக் கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பினால் இத்தகைய நிலை தோன்றியுள்ளது என்றும் பேரவையின் அறிக்கை எடுத்துரைக்கிறது. தாய்ச் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவித்துத் தாம் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கல்விச் செயற்பாடுகள் பாதிப்புறாதிருக் கும் வகையில் தாம் தொண்டர் சேவையில் ஈடுபடுவர் எ…
-
- 0 replies
- 773 views
-
-
[02 - Mஅய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான உத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளை விடுதலைப்புலிகள் முழுமையாக நிராகரித்துள்ள அதே சமயம், அரசியல் ஆய்வாளர்கள் இந்த தீர்வுத் திட்ட யோசனைகள் வெற்றியளிப்பனவாக இல்லையென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சியில் இருக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மட்டத்தில் அதிகளவு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் சிவில் யுத்தத்துக்கு தீர்வு காணும் யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் இவ்வுத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால…
-
- 0 replies
- 663 views
-
-
அதி காலை உட்புகுந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் யாழ் பல்கலைக்கழக காவலர் தாக்கப்பட்டார். அதி காலை1-00 மணியளவில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த குழுவினர் பல்கலைக்கழக காவலரை ஆயுத முனையில் இருத்தி விட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று பல மணி நேரம் தேடுதல் நடத்தியுள்ளனர். பத்துக்கு மேற்பட்டவர்களை கொண்ட இந்த ஆயுதக் குழுவினரால் பல்கலைக்கழக காவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். Armed men in civil, attack JU security officer A gang of more than ten armed men in civil clothes, forcibly entered and searched Jaffna University (JU) campus, holding the security officer at gun point, Saturday around 1:00 a.m, sources in Jaffna said. Th…
-
- 4 replies
- 1.7k views
-
-
கருணா ஒட்டுக் குழு சிறுவர் கடத்தலை நிறுத்தவில்லை - யுனிசெப் கிழக்கில் கருணா குழு நாளாந்தம் சிறுவர்களை தமது ஆயுதக் குழுவில் இணைத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஐ-நா சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பேச்சாளர் கோர்டன் வீஸ், கருணா குழுவுடன் தாம் மேற்கொண்டுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாகக் கூறினார். சிறுவர்களை படையில் இணைப்பதை நிறுத்துவதாகவும், ஏற்கனவே இணைத்த சிறுவர்களை விடுதலை செய்வதாகவும் ஒப்புக்கொண்ட கருணா ஒட்டுக்குழு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி இருப்பதாகவும், நாளாந்தம் மேலும் சிறுவர்களைப் படையில் இணைத்து வருவதாகவும் கோர்டன் மேலும் கண்டித்தார். கர…
-
- 1 reply
- 932 views
-
-
புலிகளின் நிர்வாகப் பகுதியை பார்வையிடுகிறது பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:44 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை செப்ரெம்பர் மாத இறுதியில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெய்த் வாஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான மூன்று மணிநேர விவாதத்தின் போது கெய்த் வாஸ் கூறியதாவது: இனப் பிரச்சனை தொடர்பில் நாம் மூன்றுவிதமான செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். முதலாவதாக அனைத்துக்கட்சி குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இறுதியில்…
-
- 24 replies
- 5.1k views
-
-
புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. …
-
- 11 replies
- 2.3k views
-
-
இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும்: சென்னையில் ரணில். இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த 18 நாட்களாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரணில் இன்று சனிக்கிழமை காலை துபாயில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் சென்னை வந்தார். இன்று காலை வானூர்தி நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சென்னை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறிலங்காவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தற்போது ஆட்சி…
-
- 4 replies
- 1.3k views
-
-
திருமலையில் 3 குடியேற்றவாசிகள் சுட்டுப் படுகொலை. திருமலை வடக்கு திரியாய் கல்லாறு, சலப்பையாறு ஆகிய பகுதிகளில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று தென்னிலங்கை குடியேற்றவாசிகள் தலத்தில் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு குடியேற்றவாசிகள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தமிழிலும் சிங்களத்திலும் சரளமாக உரையாடக் கூடியவர்கள் என்றும் அண்மையில் திரியாய் பகுதியில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது -Pathivu-
-
- 0 replies
- 960 views
-
-
சிறீலங்கா விமானப் போக்குவரத்து வருமானமும் வீழ்ச்சி வான் புலிகளின் தாக்குதலின் எதிரொலி காரணமாக சிறீலங்கா அரசு விமானப் போக்குவரத்து மூலம் பெற்றுவந்த வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று மாலை விமான நிறுவன அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை விமான சேவையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வான் புலிகளின் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை மூடுவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் முடிவு செய்திருந்தது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை மூலமும் பெற்றுவந்த நிதிகள் தடைப்படுவதால், சிறீலங்காவின் பொருளாதார…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரிட்டனின் முடிவு: இலங்கை கவலை அதன் பின்னணி குறித்து அரசு ஆராயுமாம் கொழும்பு, மே 5 இலங்கைக்கான நிதி உதவியை பிரிட்டன் முடக்கி யமை தொடர்பாக இலங்கை அரசு ஆராயவுள்ளதாக அர சின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கை யில் அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. நாட்டில் பயங்கரவாதம் நிலவுகின்றபோது, அப்பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். அதைத்தான் அரசு தற்போது செய்துகொண்டிருக்கின்றது. நாம் முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குப் …
-
- 4 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தம் [வியாழக்கிழமை, 3 மே 2007, 16:24 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை ஏற்றுக்கொண்டு, இராணுவச் செலவீனங்களைக் குறைக்கும் வரை பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரக பேச்சாளர் கூறியதாவது: அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் நிராகரித்த நிலையில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தபடுகிறது. சிறிலங்காவுக்கு 2005 ஆம் ஆண்டு 41 மில்லியன் பவுண்ட்ஸ் (81.6 மில்லியன் டொலர்) கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டது. இதன் அடிப்படையில் …
-
- 18 replies
- 3.3k views
-