ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
பேரினவாத சகதிக்குள் புதையுண்ட இடதுசாரிகள் "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்' என்பதுபோல "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதை' என்பது போல காலங்கடந்த பின்னர் பிறந்த ஞானம் குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரண விசனம் தெரிவித்திருக்கின்றார். இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சிபார்சுகளைச் செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சிக் குழுவின் தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷ அரசில் இடம்பெற்றிருக்கும் இடதுசாரிகளுள் முக்கியமானவராகத் தம்மை அடையாளப்படுத்துபவருமான திஸ்ஸ விதாரண, பழம்பெரும் இடதுசாரியும் அரசியல் மேதை என வர்ணிக்கப்படுபவருமான கொல்வின் ஆர் டி சில்வா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்கூறிய கருத்துக்களை இப்போது நினைவு கூர்கின்றார். 1956ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 995 views
-
-
பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கும் யாழ். படையினர் தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் அற்றதனால் யாழ். குடாநாட்டுக்கான படையினரின் போக்குவரத்துக்கள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் விடுமுறையில் செல்லும் படையினரும், காவல்துறையினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஏறத்தாழ 1,600 படையினர் பலாலி வான்படைத் தளத்தில் காத்திருந்ததாகவும், அவர்களில் பலர் பல நாட்களாக அங்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிறிலங்கா வான்படையினர் கடந்த வியாழக்கிழமை பலாலிக்கு இரு வானூர்தி சேவைகளையே நடத்தியிருந்தனர். ஆனால் மறுநாள் எந்த வானூர்தி சேவையும் நடைபெறவில்லை. வான்படையினரிடம் தற்போது உக்ரேய்ன் தயாரிப்பான ஒரு அன்ரனோவ்-3…
-
- 1 reply
- 984 views
-
-
இரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம் தமிழ் மக்களுடைய அரசியல் ஒழுங்கிலே இப்பொழுது வாய்ப்பாட்டு மாற்றமொன்று நிகழ்கின்றது என்பதும் அதற்கு மகிந்தருடைய ஆட்சியே காரணமென்பதும் மிகத் தெளிவு. இணைக்கப்பட்ட மகிந்த சமாசம் (சிங்களத்தில் சமாகம) என்றே அவரது முச்சோதரர் குடும்ப ஆட்சி அழைக்கப்படுகின்றது. மிகுந்த மயக்கத்தையும் குழப்பத்தையும் பிறருக்குத் தரத்தக்க வகையில் மகிந்த சகோதரர் ஆட்சி அரங்கேறுகின்றது. எவ்வித தயக்கமுமின்றி சாம,பேத,தான,தண்டங்களை முக்கூட்டு கையாள்கின்றது. எத்தகைய முடிவுகளையும் எதுவித கூச்ச நாச்சமுமின்றி எடுக்கின்றது. எத்தகைய கொலை, ஆட்கடத்தல் போன்ற நாசகாரச் செயல்களைச் செய்யவும் இவர்கள் ஆயத்தமாகவுள்ளார்கள.; எவரையும் பற்றிக் கவலைப்படாமலும் எத்த்தகைய தார்மீக பொறுப்…
-
- 1 reply
- 1k views
-
-
ஏ- 9 மூடப்பட்டிருப்பதால் 5 நோயாளர்கள் மரணம்; தரைவழிப்பாதை திறக்க 3 நாட்களுக்கு அனுமதி வன்னிக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டிருப்பதால், அவசர சிகிச்சைக்காக வெளியிடங்களுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் வன்னியில் ஐந்து நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளிலிருந்து வவுனியா மருத்துவ மனைக்கு மேலதிக சிகிச்சைக்காக இவர்களைக் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்தான் இந்த ஐவரும் மரணமடைந்ததாக கிளிநொச்சி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் எஸ்.சதானந்தன் தெரிவித்தார். கடந்த ஒருவார காலமாக வன்னிக்கான அனைத்துத் தரைவழிப் பாதைகளும் மூடப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக்கூட வன்னிக்குக் கொண்டுவர முடியாத நிலைம…
-
- 0 replies
- 884 views
-
-
விடுதலைப் புலிகளும் படையினரும் பெரும் சமருக்கு தயாராகின்றனர்: கொழும்பு ஊடகம் சிறிலங்காப் படையினரும், விடுதலைப் புலிகளும் வடக்கில் மிகவும் அதியுச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இருதரப்பு உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாகவும், பெரும் மோதல் ஒன்று ஏற்படலாம் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பல வாரங்களாக வடக்கில் விடுதலைப் புலிகள் மிகவும் அதியுச்ச நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் கடந்த இரு நாட்களாக களநிலைமைகள் அமைதியாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். எனினும் வன்னி மீதான தமது இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறுவதா…
-
- 0 replies
- 918 views
-
-
இலங்கையுடன் கடலில் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது. [Tuesday May 29 2007 12:31:02 PM GMT] [bbc.com] தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியில் சந்தித்துப் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலைத் தெரிவித்தார். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இலங்கையுடன் கூட்டு ரோந்து மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஒருங்கிணைந்த ரோந்துப்பணியில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு இலங்கையின் கருத்தையும் அறிந்துகொள்ள வே…
-
- 12 replies
- 2.2k views
-
-
தமிழர்கள் நாட்டின் ஒரு இனமேயல்ல அவர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை வீரகேசரி நாளேடு தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல. தமிழர்கள் ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. சிங்கள மக்களுக்கே நாட்டின் அனைத்து விதமான ஏகபோக உரிமைகளும் இருக்கின்றன என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தயாரித்துள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. வடகிழக்கு தமிழர்களின் தயாகம் என்பதை தமிழ் மக்கள் ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
புதன் 30-05-2007 04:53 மணி தமிழீழம் [தாயகன்] கருணா குழுவுடன் முரண்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுட்டுக்கொலை அம்பாறை கல்முனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் உந்துருளியில் சென்ற இரண்டு இனம் தெரியாதோரால் நேற்று காலை 7.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கல்முறை அம்மன்கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய இளையதம்பி சாந்தகுமார் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் இவர் முன்னர் நேரடியாக முரண்பட்டிருந்தவர் எனவும், கருணா ஒட்டுக் குழுவினரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்…
-
- 0 replies
- 768 views
-
-
ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 29.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....d33c36b1b5fc2cb 22.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....3afe57c2e008bc8 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....8ef4c628eba0259 நிலவரம் - ஆய்வு நிகழ்வு 27.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....9bbe3554a4fdf6f 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....b2374f342be9ed4 காலக்கணிப்பு 23.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....25f8597834fa83a
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Tue May 29 5:59:54 EEST 2007 நாட்டைப் பாதுகாப்பதற்காக "இறைவனிடம் வேண்டுதல்' வழிபாடு நாடு முழுவதும் ஐ. தே. கவின் சமய வழிபாடுகள் மனித உரிமை மீறல்கள் உட்பட அர சின் செயற்பாடுகளில் இருந்து நாட்டைக் காக்கும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி "இறைவனிடம் வேண்டுதல்' என்ற பெயரில் நாடு முழுவதும் சமய வழிபாடுகளை நடத்தவுள்ளது. நாட்டில் இடம்பெற்றுவரும் ஆட்கடத் தல்கள், கொலைகள், கப்பங்கோரல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள், விலைவாசி அதிகரிப்பு, யுத்தம், அரசில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் ஊழல் மோச டிகள் போன்றவற்றை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் எதிர்ப்பு நிகழ்வுகளில் ஒன்றாக "இறைவனிடம் வேண்டுதல்' என்ற தலைப் பில் சமய வழிபாட்டுப் போராட்டத்தைத்…
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் வீட்டின் கிணறு அருகில் குண்டு வெடித்ததில் மூவர் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கிணற்றுக்கு உள்ளேயும், மற்றொன்று கிணற்றடியிலிருந்து 50 மீற்றர் தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி சுரேஸ்குமார் (வயது 32), சந்திரன் தனுசன் (வயது 26), சதீஸ்குமார் ஆகியோர் பலியானோர் எனத் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் ஒட்டிசுட்டானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வழமை போல் கொல்லப்பட்டவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
விமான நிலையம், துறைமுகங்களில் சர்வதேச காப்புறுதியை இலங்கை இழக்கும் சாத்தியம் [29 - May - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்து உலகில் யுத்த அச்சுறுத்தலுக்குள்ளாகிய நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவையும் சேர்த்து யுத்த அபாய நாடாகத் தரப்படுத்தி அறிவிப்பதா இல்லையா என்பது பற்றி சர்வதேச காப்புறுதி அமைப்பும் பிரிட்டனில் தலைமையகத்தை உடையதுமான லோயிட்ஸ் சர்வதேச காப்புறுதி நிறுவனம் விரைவில் அறிவிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இவ்வாறு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கிடையில் மேற்படி பிரதான சர்வதேச காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா பற்றிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவும் யுத்த அபாய நிலைமை காரணமாக அதன் விமான நிலைய…
-
- 2 replies
- 1.8k views
-
-
புஷ்ஷை அடியொற்றி யுத்தத்தை முன்னெடுத்தால் `படுகுழிதான்' [29 - May - 2007] * தமிழ் மக்களோடு அதிகாரத்தை பங்கிட்டு அபிவிருத்தியில் அவர்களை பங்காளியாக்கினால் நாட்டுக்கு விடிவு தொலைவில் இல்லை அண்மையில் ஜோர்தானில் இடம்பெற்ற எ11 உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பாக விளக்கமளித்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேணுவதில் தனது அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இலங்கை ஒரு மிகக் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடு (LDC) அல்ல என்ற வகையில் சலுகை அடிப்படையில் வெளிநாட்டு நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்பு கிடையா…
-
- 0 replies
- 1.7k views
-
-
நாம் நாமாக, நாம் தமிழர்களாக இருப்போம் `எங்கள்', `உங்கள்' என்று பிரித்துப் பேசாதீர் [29 - May - 2007] * உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கருணாநிதி வேண்டுகோள் தமிழ் நமது மொழி, அதுவே நமது வழி. எனவே `எங்கள்`, `உங்கள்' என பிரித்துப் பேசாதீர்கள். நாம் நாமாக இருப்போம். நாம் தமிழர்களாக இருப்போமென இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மகாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்றுவந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 2.6k views
-
-
கொடிகாமம் ஏ-9 பாதையில் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல். ஏ-9 பாதையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா படையினர் மீது திங்கட்கிழமை மாலை 4.30ற்கும் 5.30 ற்கும் இடையில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு சென்றதை பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து படையினர் ஏ-9 வீதியை கொடிகாமத்திற்கும் சாவகச்சேரிக்கும் இடையில் மாலை 4.30 மணியில் இருந்து மூடியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஐந்து நாட்களில் நிகழ்ந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈ.பி.டி.பி.யினரை இராணுவத்தில் சேர்த்தோம் என்பது உண்மை. சீருடையும் உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. - முன்னாள்இராணுவ தளபதி சரத் முனசிங்க! ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது மிக மிக கடினமான நடவடிக்கை. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞனிடம் உளவியள் ரீதியாகவும், அதன் பின்னர் அரசியல் தீர்வையும் முன்வைக்கும் போது பயங்கரவாதம் ஒருநாள் இல்லாமல் போகும். ஆனால் இது இரண்டாம் நிலைதான். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி வலுவைத் தோற்கடிக்க வேண்டும். எதிரியை வீழ்த்துவதற்காக எது கிடைக்கிறதோ அதனை அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன. கருணாவை அரசாங்கம் பயன்படுத்துகிறது எனில் நாம் நல்ல முடிவை எட்டுவோம். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இர…
-
- 1 reply
- 920 views
-
-
புலிகளிடமிருந்து 32 ஆயிரம் இராணுவத்தினரை காப்பாற்றியது இந்தியாதான்: முன்னாள் தளபதி ஜனக பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த ஆனையிறவுச் சமரின் போது யாழ். குடாநாட்டுக்குள் சிக்கிக் கொண்ட 32 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரை இந்தியாதான் காப்பாற்றியது என்று யாழ். தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணமும் விடுதலைப் புலிகளும் சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் நாள் படையினர் முன்நோக்கி பாய்தல் நடவடிக்கையை ஜெனரல் தளுவத்தை, ஜெனரல் வீரசூரியா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். அதனை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர். இது…
-
- 1 reply
- 1.1k views
-
-
~இது அல்ல போர் தர்மம், ஆமாம் ஊடக தர்மமும் இதுவல்ல| -பரணி கிருஸ்ணரஜனி- கன்னியாகுமரி மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரமும் பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் தமிழ்த்திரைப்படங்களில் வரும் திரைக்கதையை விஞ்சும் அளவிற்கு திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. ஏற்கனவே ஐந்து மீனவர்கள் படுகொலை, 'மரியா" என்ற படகில் வைத்து ஐந்து புலிகள் கைது செய்யப்பட்டமை, கடத்தப்பட்ட ஒரு மீனவர் மாலைதீவிற்கு அருகில் ஒரு மர்மக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டமை என்று பல உதிரிக்கதைகளாலும் கிளைக்கதைகளாலும் பல திருப்புக் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைக்கதையின் சிருஸ்டிகர்த்தாக்களான சிங்கள அரச புலனாய்வுத்துறையினருக்கும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையினருக்கும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஸ்பைன் அரசின் நிதியுதவியுடன் மூன்று பாலங்கள் புனரமைப்பு வீரகேசரி நாளேடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய பாலங்களைப் புனரமைப்புச்செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் திருகோணமலை கச்சேரி ஆளுநர் விடுதியில் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் டீ.டீ.ஆர்.டி. சில்வா தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத், வீதி அபிவிருத்திச்சபை உயர்அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். யான்ஓயா, புல்மோட்டை, புடைவைக்கட்டு ஆகிய பாலங்கள் புனரமைப்பு செய்வது சம்பந்தமாகவே இவ் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது. இப்பாலங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் வேலைத்திட்டக்காரியாலயம் (யுனொப்ஸ்) அமுல்படுத்தவுள் ளது. இதற்கான நிதிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் ரணில் வீரகேசரி நாளேடு இலங்கையின் அரசியல் வரலாற்றில் நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் அரசியல்வாதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று ரணில் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி பொறுப்புடன் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாட்டை அழித்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்க்ணடவாறு கூறினார். இவ்விடயம் குறித…
-
- 0 replies
- 1.3k views
-
-
இரத்மலானையில் குண்டு வெடிப்பு ஒன்று நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
-
- 21 replies
- 5.3k views
-
-
Posted on : Tue May 29 5:55:01 EEST 2007 மட்டு. விமானப்படைத் தளத்தினுள் நுழைய முயன்ற பெண் மீது சூடு! மட்டக்களப்பில் உள்ள விமானப்படையினரின் முகா முக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத் தின் பாதுகாப்பு வேலியைக் கடந்து குறிப்பிட்ட பெண் உள்ளே நுழைய முற்பட்ட வேளை யிலேயே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய இந்தப் பெண் எதற்காக முகாமுக்குள் நுழைய முற்பட்டார் என்பதுகுறித்து எதுவித தகவல் களும் வெளிவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் படையினர் விசாரணை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
உளுத்துப் போன திட்டங்கள் தீர்வு யோசனை வடிவத்தில்! இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசுப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே தத்தமக்கு இராணுவ வெற்றி கிட்டும் என்பதில் அதீத நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதனால் இலங்கையில் வரும் வாரங்களில் வன்முறை கட்டவிழ்ந்து, போர் வெடித்து, இரத்த ஆறு ஓடுவது நிச்சயம். இலங்கை நிலைவரம் குறித்து இராஜதந்திரிகள் இவ்வாறு கணிப்பீடு செய்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. ஒரு பக்கத்தில் போர் முரசம் அறையப்படுகையில், மறுபக்கத்தில், அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சர்வதேச சமூகத்துக்குக் காட்டும் ஏமாற்று நாடகமும் அரங்கேறுகின்றது. இந்த அபத்த நாடகத்தின் ஓர் அங்க…
-
- 0 replies
- 862 views
-
-
புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர்: சரத் பொன்சேகா. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்த விகாரையில் மல்வத்த மகாநாயக்கர் திப்படுவவெ சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் கூறியதாவது: 150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக…
-
- 7 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி உண்மையானது என்று கருணாவுடன் முரண்பட்டுத் தனிக்குழுவாக இயங்கத் தொடங்கியிருக்கும் பிள்ளையான் அணி உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணா, தமது குழுவுக்குள் மோதல்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்களில் எமது அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிள்ளையான் தமது குழுவுக்குள் மோதல்கள் தீவிரமடைந்திருப்பது உண்மையே என தெரிவித்துள்ளார். சிலர் கருணா குழுவை பிரிக்…
-
- 0 replies
- 1k views
-