ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
சிறிலங்கா அரசு கூறிவந்த பொய்களை உடைத்த விடுதலைப் புலிகள்: ரணில் விக்கிரமசிங்க. பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான்தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக ஊடக நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியியுள்ளார். இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரப் பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களை அரசாங்கம் பொய்களைக் கூறி த…
-
- 1 reply
- 1.1k views
-
-
பலாலித் தளம் மீதான தாக்குதல் - கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள். பலாலி பெருந்தளம் மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை பாபு கேற்றிங் என்ற உணவகம் கேக் வெட்டி நாள் முழுவதும் வந்த வாடிக்கையாளர்களிற்கு கேக் வழங்கி கொண்டாடியுள்ளது. -Sankathi-
-
- 0 replies
- 985 views
-
-
தமிழன் என்றோர் இனம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?" தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான். இடி அமீனின் கொடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:55 ஈழம்] [ந.ரகுராம்] தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம்: பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி: இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள…
-
- 19 replies
- 3k views
-
-
பயங்கரவாத அமைப்பு அறிவித்தலுக்கு எதிராக புலிகள் வழக்குத் தொடரலாம் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் தீர்மானத்தின் விளைவு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப் படுத்தப்பட்டதற்கான காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் அவ்வமைப்புக்கு அறிவிக்கவுள்ளது. லக்ஸம்பேர்க்கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கர வாத அமைப்புகளாக பிரகடனப்படுத்தப் பட்டுத் தடை செய்யப்பட்ட 30 இயக்கங் கள் (மற்றும் 30 தனிப்பட்டவர்கள்) ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்ற காரணங்களை அவற்றுக்கு அறிவிப்பதென நேற்றைய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தக…
-
- 1 reply
- 2k views
-
-
மரியா படகின் மர்மம் (கலைஞன்) *ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தமிழக மீனவர்கள் மீது தொடரும் இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் போலவே குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற மரியா படகின் மர்மமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் தமிழக ஊடகங்களில் வெளியான மரியா படகு சிறைப்பிடிப்பு குமரி மீனவர்களைக் கொன்ற 12 சிங்களவர்கள் கைது என்ற செய்திகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இச் செய்திகள் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து தமிழக மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. தமது சக பாடிகளைக் கொன்ற அந்த 12 சிங்களவர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும்…
-
- 10 replies
- 3.8k views
-
-
வெள்ளவத்தையில் வர்த்தகர் கடத்தல் கொழும்பு,ஏப். 24 வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து பிரபல புடைவை வர்த்தகர் ஒருவர் நேற்று வெள்ளைவானில் கடத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 252 7285 என்ற இலக்கமுடைய வெள்ளை வானில் வந்த சிலர் இந்த வர்த்தகரைக் கடத்திச் சென்றனர் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட் டுள்ளது எனவும் கூறப்படுகிறது. (சி) உதயன்
-
- 1 reply
- 1k views
-
-
ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சி பயணம் இரத்து. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரத்து செய்யப்பட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கு நோர்வேத் தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வன்னிக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஆலோசனையை அடுத்து இந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாதானப் பேச்சுக்களை தொடர வேண்டும் எனில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் என்ற அடிப்படையில் பேசலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்து வரும் நிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக நோர்வேத் தரப்பிடம் விடுதலைப் புலிகள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
Three dead in Sri Lanka bus blast At least three people have been killed and 35 injured by a bomb that hit a passenger bus in northern Sri Lanka, the country's defence ministry says. The attack, in Vavuniya district, about 250km (155 miles) north of the capital, Colombo, happened late on Monday night. Vavuniya is the last government-held garrison town before territory held by the separatist Tamil Tigers, blamed for the attack by Sri Lankan officials. It is the third bombing of a civilian bus so far in April. Military officials said the blast was probably caused by a mine planted by the side of the road to target the bus, which was travelling …
-
- 3 replies
- 1.3k views
-
-
மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை என்கிறது சர்வதேச நீதி வல்லுனர் ஆணையம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை கடந்த ஆகஸ்டு மாதம் விடுதலைப்புலிகள் கைப்பற்றியதை அடுத்து நடந்த மோதல் சம்பவங்களின் போது, பிரெஞ்சு உதவி நிறுவனமான ஆக்ஷண் கொந்த்ர லெ பேர்ம் (ஏசிஎப்) என்ற நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்த சர்வதேச நீதி வல்லுநர்கள் குழு, (ஐ.சி.ஜே) இந்தச் சம்பவம் குறித்து இன்று ஜெனீவாவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், இந்த கொலைகளை யார் செய்தார்கள் எ…
-
- 3 replies
- 970 views
-
-
வாழ்வாதாரங்களைத் தொலைத்து அல்லலுறும் மட்டக்களப்பு மக்கள் ` தமிழர் தாயகத்தின் தேசிய வாழ்வுக்கு ஆதார மாக இருக்கும் அத்தியாவசிய அடித்தளங்களைப் படிப்படியாகத் தகர்த்துவிடும் சதித் திட்டத்தை தென்னிலங்கை அரச அடக்குமுறையின் குரூர வன்முறை வடிவம் நோக்காகக் கொண்டது என் பதை இப்பத்தியில் திட்டவட்டமாகவும் தெளிவாக வும் பல தடவைகள் அம்பலப்படுத்தியுள்ளோம். ஒரு தேசிய இனக்கட்டமைப்பாகத் தமிழர்கள் தலை நிமிர்ந்து உறுதியோடு நிற்பதற்கு என்னென்ன மூலங்கள் அவசியமோ அத்தியாவசியமோ அவற்றையெல்லாம் பல்வேறு மட்டங்களில் பல்வேறு பரிமாணங்களில் தாக்கி அழித்து, தமி ழரின் தனித்துவ இனம் என்ற ஸ்திரத்தன்மையைத் தகர்ப்பதே பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்கின் நீண்டகால நோக்காகும். மொழி உரிமை முதல், வாழிட உரிம…
-
- 0 replies
- 658 views
-
-
சிறிலங்கா காவல்துறையினரின் அதிகாரங்கள் முப்படையினரிடமும் கையளிப்பு. சிறிலங்காவில் காவல்துறையினரிடம் இருந்த பொதுமக்களுக்குரிய அதிகாரங்கள் தற்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எல்லா சமயத்திலும் காவல்துறையினரால் ஒத்துழைக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள போதும் பொதுமக்களுடன் சம்பந்தப்படும் சட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் காவல்துறையினரின் உதவியையே நாடி வந்துள்ளனர். ஆனால் புதிய விதிமுறையின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு படையினர் காவல்துறையினரின் உதவியை நாடவேண்டிய தேவையில்லை. …
-
- 1 reply
- 865 views
-
-
புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு [23 - April - 2007] இலங்கை வான் பரப்பின் மேலாக காணப்படும் சந்தேகத்திற்கிடமான விமானங்களை கண்டுபிடிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய படைப்பிரிவிற்கு நவீன ராடர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்னியின் முன்னணி காவலரண்களில் பணி புரியும் படைப்பிரிவினரிடம் இவை கையளிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான விமானங்களை காணும் பட்சத்தில் அவர்களது பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு மேற்படி ராடர் சாதனங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் ஆர்வமாகவுள்ளது. இந்தப் புதிய படைப…
-
- 9 replies
- 3.1k views
-
-
விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு: கனடிய பாராளுமன்ற உறுப்பினர் Written by Pandara Vanniyan - Apr 24, 2007 at 12:26 AM விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு என்றும் கனடா நடுநிலைமையையும் சமத்துவத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஸ்காபுரோ கிழக்கு, கில்வூட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ மிரர் ஏப்ரல் 19ஆம் நாள் வெளிவந்த இதழுக்கு கருத்து வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தடைசெய்து ஒருபக்கம் சார்ந்து, ஒரு பகுதியை பயங்கரவாதிகள் என அறிவித்ததன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ கிழக்கு - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் டான் மக்ர…
-
- 2 replies
- 1.4k views
-
-
த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல்- அரசாங்கம் அலட்சியம்: மாவை சேனாதிராசா குற்றச்சாட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அரசாங்கம் அலட்சியமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம்சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.07) வெளிவந்த கொழும்பு ஆங்கில வார ஏடான நேசனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டு …
-
- 0 replies
- 546 views
-
-
விமான நிலையத்தில் பயணிகளுடன் வருவேரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வரும் வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுக்கோள் பயணியொருவருடன் ஒருவர் வறுமாறு விமான நிலைய அதிகாரிகள் பொதுமக்களஒ கேட்டுக்கொண்டுள்ளனர். பயணியொருவருடன் பெருந்தொகையானோர் விமானநிலையத்திற்கு வருவதால் விமான நிலைய நிர்வாகம் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் விமான நிலைய நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ தலைவர் செனரத் ஹெட்டிராய்ச்சி தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமையடுத்து விமானநிலையத்துனுள் பயணிகளுடன் வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. -வீரகேசரி
-
- 0 replies
- 805 views
-
-
சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர் [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:16 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இனப்பிரச்சனை என்பது இல்லை. நாட்டின் ஒரு பகுதியை ஒரு குழு கோருவதால் பயங்கரவாதப் பிரச்சினையே தோன்றியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் சியம் நிகாயா பிரிவைச் சேர்ந்த உடுகம சிறீ புத்தரகித தேரர் தெரிவித்துள்ளார். இத்தாலிய தலைநகர் ரோமில் மகிந்த ராஜபக்சவும் இதனை ஒத்த கருத்தை தெரிவித்ததை தேரர் வரவேற்றுள்ளார். விழா ஒன்றில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டு உடுகம சிறீ புத்தரகித தேரர் பேசியதாவது: இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், அவர்களுக்கு எந்த சமூகம், எந்த மதம் என்ற பிரச்சனைகள் இருப்பதில்லை. இந்துக்கள் நாட…
-
- 9 replies
- 1.9k views
-
-
இஸ்ரேலின் எண்டப்பே வானூர்தி நிலைய தாக்குதலைப் போன்றது புலிகளின் வான் தாக்குதல்: சிங்கள ஏடு. கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல், இஸ்ரேலிய அதிரடிப்படையினர் என்டப்பே வானூர்தி நிலையம் மீது நடத்திய தாக்குதலைப் போன்றது என்று 'திவயின' சிங்கள ஏட்டின் படைத்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். சிங்கள இனவாதத்தை கக்கும் இந்த ஆய்வாளர், சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் எத்தகைய உத்தியைப் பயன்படுத்தி நடத்தினர் என்பது பற்றி எழுதிய ஆய்வில், என்டப்பே வானூர்தி நிலையத்தில் இஸ்ரேலிய அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலைப் போன்றே நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். என்டப்பேயில் இஸ்ரேலிய படையினர் இரகசியமாக வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 3 தமிழ் தேசவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து இன்றுஒரே குரலில் தமிழ் மக்களுக்காய் ஒப்பாரி வைக்கப்போகின்றனராம் அதிலும் ஒருவர் 1000 பணத்தை தபாலில் அனுப்பி பணத்தாசை காட்டியும் வெல்லமுடியாமல் போன தமிழர் விடுதலைக்கூட்டணியின் நிர்வாக குழு தலைவர் எல்லாமான ஒரு தனிமனித கட்சியின் தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்கள் அவரை பற்றி நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை பெண்பித்தரான இவருக்கு உத்தியோக பூர்வமற்ற பலர் மனைவியாக இருப்பது யாவருமறிந்ததே பெண்களை பாலியல் கண்கொண்டு பார்க்கும் பாலியல் நோயாளியான இன்றைய நடைபிணம் ஆனந்த சங்கரி அடுத்தது புளட் கும்பலின் தலைவர் சித்தார்த்தன்.வவுனியாவில் கொள்ளை கொலை தொழிலை தன் கொம்பனியான வரயறுக்கபடாத கொலைகார புளட் நிறுவனத்தின் ம…
-
- 8 replies
- 3.4k views
-
-
கொழும்பு சென்ற பத்மினி, கஜேந்திரன் வாகனங்களில் இராணுவத்தினர் தீவிர சோதனை [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரது வாகனங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தீவிர சோதனைக்குள்ளாக்கினர். செ.கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இரண்டு ஊர்திகளில் கொழும்பு நோக்கி இன்று திங்கட்கிழமை சென்று கொண்டிருந்தனர். தம்புள்ளப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் இருவரது வாகனங்களை மறித்துள்ளனர். தாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- தம்மை சோதனையிட முடியாது என்று இருவரும் தெரிவித்தனர். ஆனால் சோதனையிட தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பத்மினி சி…
-
- 0 replies
- 981 views
-
-
இலங்கைக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் ஆறரைக்கோடி தமிழரையும் இந்தியா உதாசீனப்படுத்தி விட்டது [23 - April - 2007] * டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் இலங்கையரசுக்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியுள்ளதை கடுமையாகக் கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டியவேளை வந்துவிட்டதெனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இராணுவத் தாக்குதல்களை நிறுத்துங்கள்; மனித உரிமைகளை மதித்து நடவுங்கள்; ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் முத…
-
- 7 replies
- 2.3k views
-
-
அளவையில் அதிகாலை ரயில் விபத்தில் தந்தையும் மகளும் பலி [23 - April - 2007] -கே.பி.மோகன்- அளவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு செல்வதற்காக ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த தந்தையும் மகளுமே ரயிலில் மோதி இறந்துள்ளதாக அளவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் நிமல் பண்டார தெரிவித்தார். டானியல் வேதமாணிக்கம் (வயது 61) நிலந்தி ரொஷானி வேதமாணிக்கம் (வயது 35) ஆகிய இருவருமே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இருவரும் அலுவலக தேவையொன்றுக்காக வீட்டிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்டு ரயில் பாதை வழியாக அளவை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரில் ரயில் வண்டியொன்று வருவதை அவதானித்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் எம்.பிக்கள் மட்டக்களப்புக்கு செல்ல பாதுகாப்பு உத்தரவாதம் கோருகின்றனர் ஹெலிக்கொப்டர் வசதி தருமாறு கேட்டு அரசுக்குக் கடிதம் கொழும்பு,ஏப்ரல் 23 மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கள் அரசிடம் கோரியுள்ளனர். தற்போது கொழும்பில் தங்கி இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் அங்கு செல்வதற்கு ஹெலிக்கொப்டர் வசதி செய்து தருமாறும் கேட்டி ருக்கின்றனர். மட்டக்களப்பில் தாங்கள் எதிர்நோக்குகின்ற பாது காப்புப் பிரச்சினையை விளக்கி, கூட்டமைப்பு எம்.பிக் கள் நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்திற்கு…
-
- 2 replies
- 765 views
-
-
சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது. சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. அந்த ஆயுதங்களின்…
-
- 19 replies
- 3.4k views
-
-
குடாநாட்டுக்கு அனுப்பிய பொருள்களுக்குரிய பணத்தைத் தருமாறு அரசு அவசரப்படுத்துகிறது யாழ்ப்பாணம்,ஏப்.23 அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தினால் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருள்களுக்குரிய பணத்தை விரைவாக செலுத்த வேண்டும் என்று யாழ்.அரச அதி பர் ப.நோ.கூ.சங்கங்களைக் கேட்டுள்ளார். உணவுப் பொருள் விநியோகம் தொடர்பாக யாழ்.செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. குடாநாட்டில் இயங்குகின்ற ப.நோ.கூ.சங்கங்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால் அனுப்பப்பட்ட பொருள்களுக்கான கொடுப்பனவை இன்னும் முழுமையாகச் செலுத்தவில்லை. கொடுப்பனவுகளை செலுத்தினால் மட்டுமே எதிர் காலத்தில் பொருள்களை, கொள்வனவு செய்யமுடியும் என்று அரச அதிபர் சங்க முகாம…
-
- 0 replies
- 765 views
-