ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
புலிகள் மீதான தடை சரியா? தவறா? -சோ.ஜெயமுரளி- இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம். `இலங்கைத் தம…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கூடமுன் வைக்க முடியாத நிலையில் அரசு -(பீஷ்மர்) சென்ற வாரத்து மழை வெள்ள `புதினத்தினால்' அரசாங்கத்துக்கு சில நன்மைகள் கிடைக்காமலில்லை. கொழும்பின் வெள்ளப் பிரச்சினை காரணமாக சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனை பற்றிய ஆழமானதொரு விவாதம் நடக்காமலேயே போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கஜேந்திரன் எம்.பி. பாராளுமன்றத்துக்குள் காட்டிய எதிர்ப்பைத் தவிர தமிழ் மக்களின் நிலைபாடு பற்றி எதுவுமே அறிய முடியாது போய்விட்டது எனலாம். சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் பற்றிய போதாமையும் நிச்சயமின்மையும் பற்றிய அம்சங்களை மீளமீள பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிங்களத்துவ குரலின் நிச்சயமான பிரதிபலிப்புகளிலொன்று என…
-
- 0 replies
- 669 views
-
-
மக்கள் முன்னுள்ள இருவேறு தெரிவுகள் அருஸ் (வேல்ஸ்) பொருளாதாரமே இன்றைய உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய காரணி. மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய்வளங்களை தேடி அமெரிக்காவும், ஆபிரிக்க நாடுகளில் தனது சந்தை வாய்ப்பை தேடி சீனாவும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகளவு அணுகுண்டுகளைக் கொண்ட சோவியத்து ஒன்றியம் உடைந்து சிதறியதும் அதன் பொருளாதார கட்டமைப்பை பேணத் தவறியதனால் தான். போரின்போதுகூட ஒவ்வொரு நாட்டின் படையினரும் எதிரியின் இராணுவ இலக்குகளுக்கு நிகராக பொருளாதார இலக்குகளையும் தாக்கி அழிக்கத் தவறுவதில்லை. வான்குண்டு வீச்சுக்கள் உச்சம்பெற்ற இரண்டாம் உலகப்போரில் இருந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் இஸ்ரேல் போர் வரைக்கும் வான்படையினர் தாக்கி அழித்தவற்றில் …
-
- 1 reply
- 998 views
-
-
உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் புதுடில்லி விரைவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் புதுடில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதி
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பால் இலங்கை சீற்றம் இலங்கை கடற்படையினர் 1991 ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை 77 இந்திய மீனவர்களை கொலை செய்திருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி அந் நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விவகாரம் தொடர்பாக கொழும்பு புதுடில்லியுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேநேரம், இவ்வாறான மிகைப்படுத்தலுடனான அறிக்கையை விடுத்ததன் மூலம் அந்தோனி நேர்மையற்று நடந்து கொண்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளும் ஏனைய தனி நலன் சார்ந்தவர்களுமே …
-
- 2 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர்கள் தொடர்பாக விவாதம் நடத்தியமைக்காக பிரித்தானியாவை எதிர்க்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச, தான் வைத்திருக்கும் பிரித்தானிய குடியுரிமையயைக் கைவிட தயாரா? என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளதாவது: பிரித்தானிய தலையீட்டை எதிர்த்துக் குரல் எழுப்புவதோடு தேசப்பற்றுள்ளவர்களாகத் தம்மை அடையாளம் காட்டும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் அவரது பிள்ளைகளும் பிரித்தானிய குடியுரிமையை கைவிடத் தயாரா என்பதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஆனால், ஒருபோதும் அவர் அதனைச் செய்ய மாட்டார். ஏனெனில் ஆட்சி மாறினால் நாடு மாற வேண்டும். அதுதான் அவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் பல லட்சம் ரூபா நகை, பணம் கொள்ளை இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று சனிக்கிழமை அதிகாலை பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை ஒரு மணியளவில் கோவில் தெற்கு வாசலை உடைத்துக் கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்த கொள்ளையர்களே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முதலில் களஞ்சிய அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அதன் பின் மூலஸ்தானத்திலிருந்த மூல விக்கிரகத்தை புரட்டி அதற்குள்ளிருந்த பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், ஆ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தாக்குதல்கள்: இக்பால் அத்தாஸ் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 மே 2007இ 18:16 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும்இ அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்புஇ பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைக…
-
- 0 replies
- 719 views
-
-
மனித உரிமை மீறல் தீவிர யுத்த முனைப்பு - இலங்கை மீது கவனத்தை திருப்ப காரணமென்கிறார் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பும் மீண்டும் முனைப்பெடுத்திருக்கும் யுத்தமும் சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஸ்தம்பித நிலையுமே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் பக்கம் தமது கவனத்தை திருப்பவும் கரிசனையுடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் காரணமாக அமைந்தது என்று அந்த நாட்டின் உயர் ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எவ்வளவு தூரத்திற்கு கவலையடைந்துள்ளனர் என்பதன் வெளிப்பாடே அங்கு நடத்தப்பட்ட விவாதம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை நிலைவரம் தொடர்…
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 மே 2007இ 17:43 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். …
-
- 0 replies
- 785 views
-
-
தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. ரிச்சட் பௌச்சர். றுசவைவநn டில நுடடயடயn - ஆயல 13இ 2007 யவ 02:40 Pஆ தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. என கூறியுள்ள தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட்பௌச்சர். முறையான ஆட்சி நடக்கும் ஏழைநாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட் பௌசர் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இலங்கை விஜயம் குறித்து தெரிவித்தபோது மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயம் குறித்தும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் அமெரிக்க உ…
-
- 0 replies
- 749 views
-
-
இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும் *மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகிறார் இனப்பிரச்சினையை பணம் சேர்க்கும் கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக கவலை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், நாட்டின் நிலைவரம் ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் நிலைவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென அரசியல்வாதிகள் கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, இனங்கள் மத்தியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் அதிபர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறி துண்டுப்பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளோர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதனைக் கைவிடாத நிலையில் அவர்கள் கொல்லப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது. இலங்கையைப் பாதுகாக்கும் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரினால் இந்தத் துண்டுப்பிரசுரம் வெள்ளிக்கிழமை விநிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் படைநகர்வு; முறியடித்தனர் புலிகள் கிளிநொச்சி,மே13 மன்னார் மாவட்டத்தில் விளாத்திக் குளம் பகுதி ஊடாக பரசங்குளம் பகுதியை நோக்கி நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் முன்னேறிய படையினரின் நகர்வை முறியடித்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதலுடன் முன்னே றிய படையினருக்கும் தமது அணியின ருக்கும் இடையில் மோதல் இடம்பெற் றது என்றும் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட் டது என்றும் விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து அரச தரப்பில் இருந்து இச்செய்தி எழுதப்படும் வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. உதயன்
-
- 1 reply
- 1.2k views
-
-
துரையப்பா பொதுவிளையாட்டு மைதானம் படையினரின் பயிற்சி தளமாகியுள்ளது. யாழ். கோட்டைப்பகுதி துரையப்பா பொதுவிளையாட்டு மைதானப்பகுதியில் அதிகாலை 5.00 மணித்தொடக்கம் காலை 8.00 மணிவரை படையினர் குவிக்கப்பட்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கனரக வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்படும் நூற்றுக்கணக்கான படையினர் இப்பகுதியில் பயிற்சி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதுடன் 53 ஆம் பிரிகேட் படையினரே தலையில் சிகப்பு ரிபனை கட்டி கொமாண்டோ பயிற்சிகளை எடுக்கின்றனர். இவர்கள் பெரும்சத்தம் இட்டுகத்தி பயிற்சியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களின் பாவனைக்குரிய துரையப்பா விளையாட்டு மைதானம் யாழ். நூலக முன்வீதி மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்டு பட…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் பிந்திய விமானத் தாக்குதலால் "ஷெல்' நிறுவனத்துக்கு 70 மில்லியன் டொலர் நட்டம் கொழும்பு,மே13 விடுதலைப் புலிகளின் விமானங்கள் கடந்த 28ஆம் திகதி முத்துராஜவெலப் பகுதியில் அமைந்துள்ள "ஷெல் காஸ்' நிறுவனத்தின் மீது மேற்கொண்ட தாக்குத லினால் அந்த நிலையத்தின் தீயணைப்பு வசதிகள் முழுமையாக செயலிழந்துவிட் டன. இதனால் அந்த நிறுவனத்துக்கு சுமார் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அந்த நிறுவனத்தின் ஸ்ரீலங்கா இயக்குநர் ஹசான் மடானி தெரி வித்தார். நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தி யாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்ததாவது ஆரம்ப கணக்கெடுப்பின்படி குண்டுத் தாக்குதலால் ஏற…
-
- 0 replies
- 847 views
-
-
விடுதலைப் புலிகளை வெளியேற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல்: கிழக்கு இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றிய பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்காப் படையின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இராணுவத் தளபதி ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கின் பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தொப்பிக்கல பகுதியில் உள்ளனர். வாகரைப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீளக்குடியமர்த்தும் வேலைகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்றார். இக…
-
- 3 replies
- 1.1k views
-
-
டொனால் பெரேரா மற்றும் சரத்பொன்சேகா யாழில் படை அதிகாரிகளுடன் ஆலோசனை சிறீலங்கா கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா மற்றும் சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் யாழ் குடாநாட்டுக்கான இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று சனிக்கிழமை விமானம் மூலம் பலாலி கூட்டுப்படைத்தளம் சென்றடைந்த இவர்களை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வரவேற்றார். இதனைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து படை உயர் அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனையை நடத்தியுள்ளனர். அத்துடன் யாழ் குடாநாட்டில் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டுள்ளனர். இதேநேரம் நேற்று நாகர்கோவில் மற்றும் தென்…
-
- 1 reply
- 975 views
-
-
புலிகளின் வான் பலத்தை முறியடிக்க அமெ. பாதுகாப்பு அதிகாரிகள் உதவுவர் உயர் மட்டக் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு கொழும்பு,மே13 விடுதலைப் புலிகளின் வான் படைப் பலத்தை முறியடிப்பது குறித்து இலங்கைப் படை அதிகாரி களுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு நிபுணர்கள் அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்கள். இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர கோரிக்கையைத் தொடர்ந்தே அமெரிக்கப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், புலனாய்வு நிபுணர்கள் கொண்ட குழு இங்கு வர இருப்பதாக அறியப்படுகிறது. ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்கா வின் பசுபிக் கட்டளைத் தளத்தைச் சேர்ந்த நிபுணர்களும் அதிகாரிகளுமே இங்கு வர வுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் வான் பலத்தை முறியடி…
-
- 0 replies
- 763 views
-
-
மாற்றமடைந்துவரும் சர்வதேச நிலைப்பாடு ` வாழ்வியல் இருப்புக்காகவும் நியாயமான உரிமைகள் வேண்டியும் ஈழத்தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போராட் டத்தை இனிமேலும் பயங்கரவாதச் சாயம் பூசி ஒதுக்கிவிட முடியாது. அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நீதியான அர்த்தபுஷ்டியான நியாயமான காரணங்களும் அர்த்தங் களும் ஆழமாக உள்ளன என்ற உண்மையை சர்வதேசம் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது. இதனால் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் கொழும்பின் போக்குத் தொடர்பாக சர்வதேசத்துக்கு இருந்து வந்த கருத்தியல் நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றம் தென் படத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலை மாற்றப் போக் கைச் சகித்துக்கொள்ளமுடியாமல் சீறுகின்றது கொழும்பு. பௌத்த சிங்கள மேலாண்மைவாதச் சிந்தனையில் ஊறிப்போன கொழும்பு அதன் கார…
-
- 0 replies
- 958 views
-
-
இலங்கை நிலைவரங்களை மீண்டும் நெருங்கி வந்து அவதானிக்க ஆரம்பித்திருக்கும் சர்வதேச சமூகம் இலங்கையின் அரசியல் ஆடுகளம் இவ்வாரத்தில் அதிக பரபரப்பையும் கடும் விவாதங்களையும் உலக நாடுகளின் அவதானிப்பையும் கொண்டதாகக் காணப்பட்டது. ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சிகளும் ஆடிவரும் அரசியல் கள ஆட்டங்களை மக்கள் ஆர்வமற்ற வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆளும் தரப்பினர் எடுக்கும் முடிவுகளும் விடாப்பிடியான செயற்பாடுகளும் தாங்கள் பலமான நிலையில் இருந்து வருவதாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நாடு எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளும் மக்கள் கொண்டிருக்கும் கவலைகளும் ஆளும் தரப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்மாறானவைகளாகவே இருந்து வருகின்றன. அவை இரண்டு அட…
-
- 0 replies
- 925 views
-
-
கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுங்கள்! மாவை சேனாதிராஜா எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் கொழும்பு, மே 12 யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட் டிருக்கும் பாடசாலை மாணவர்கள் பாதுகாப் பாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருக்கிறார். இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அவர் அனுப்பியிருக்கிறார். நான்கு மாணவர்களினதும் பெயர் விவ ரங்களைக் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்திருப்பவையாவது: யாழ்ப்பாணத்தில் "கிறீன் காம்ப்' எனப் படும் முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினராலேயே பாடசாலை மாணவர்கள் கட…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை அமெரிக்கா இடைநிறுத்தியது. சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை இடை நிறுவத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலர் றிச்சட் ஏ பௌச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் நிகழும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக இவ் நிதியுதவியை வழங்கமுடியாது உள்ளதால் இதனை இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் விமான சேவைகளின் இடைநிறுத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் குறைவும், வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு எனத் தெரிவித்தார். …
-
- 7 replies
- 1.9k views
-
-
புதுக்குடியிருப்பில் மிக்-27 யுத்த விமானங்கள் 20 குண்டுகளை வீசின சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மூன்று மிக் - 27 ரக யுத்தவிமானங்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதி மீது மிலேச்சத்தனமான வான்வழித்தாக்குதல்களை கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தன. இவை காலை 7.30 மணிக்கும் பின்னர் காலை 11.20 மணிக்குமாக இருதடைவைகள் 12 விமானக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன. இரு மிக் - 27 ரக விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மேலும் 8 குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலில் ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை இக்குண்டுத் தாக்குதலால் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கைவேலி கணேசா வித்தியாலய மாணவர்களும் பதற்றமடைந்து பதுக்கு குழ…
-
- 0 replies
- 723 views
-
-
கருணா ஒட்டுக் குழுவின் 5 சடலங்களில் ஒன்று இனம் காணப்பட்டது. மட்டக்களப்பு கிரானில் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட ஒட்டுக் குழுவினரின் 5 சடலங்களில் ஒன்று கல்லாறைச் சேர்ந்த 31 வயதுடைய சிந்துஜன் ஒன்றழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன் என்பவரது என அவரது அனைவி அடையாளம் காட்டியுள்ளார். கருணா ஒட்டுக் குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவின் எதிரொலியாக பிள்ளையான் அணிக்கு ஆதரவாக இருந்த சிந்துஜன் உட்பட 5 பேர் கருணா அணியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 4 சடலங்களில் ஒன்று பிள்ளையான் அணியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது என நம்பப்படுகின்றது. பெரியகல்லாறிலுள்ள தனது வீட்டிலிருந்து களுவாஞ்சிக்குடியிலுள்ள கருணா ஒட்டுக் குழுவின் முகாமிற்கு…
-
- 19 replies
- 3.6k views
-