Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பல்கலைக்கழக தற்போதைய நிலைமை தொடர்பாக பேரவை கவலை Thursday, 24 May 2007 யாழ்.பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகப் பேரவையினர் எவ்வித தடங்கலும் இன்றி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தொடந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே தமது விருப்பமெனவும் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் இரா.குமாரவடிவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமுகமளிப்பது குறித்து மாணவர்களே தீர்மானிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடு…

  2. காணாமல்ப் போனோர் பற்றிய மக்கள் கண்காணிப்புக் குழுவின் முறைப்பாட்டை ஐ-நா ஏற்றுக்கொண்டது ஐக்கிய நாடுகள் சபையில் காணாமல்;ப் போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிற்கு, கொழும்பு மக்கள் கண்காணிப்புக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட காணாமல்ப் போனோர் தொடர்பான பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. “மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு” நூற்றுக் கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், காணாமல்ப்போன 11 பேரின் விபரங்கள் முதற்கட்டமாக ஐ-நா அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமக்கு கிடைக்கப்பெற்ற இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என, ஐ-நாவின் ஜெனிவா அலுவலக மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் கிளவ்டியா டி லா பொன்ரே “மக்கள் கண்காணிப்புக் குழு…

  3. அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி Thursday, 24 May 2007 அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் தாம் விலகமாட்டோம் என்று இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் தன்னிடம் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கூறினார். தற்போது நோர்வேயில் தங்கியிருக்கும் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜெயானந்தமூர்த்தி ஒரு மணிநேரம் உரையாடியுள்ளார். …

  4. மீண்டு வந்த மீனவர்கள்... விலகாத மர்மங்கள்! அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும், அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை. ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோ, அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள். மீண்டு…

  5. வியாழன் 24-05-2007 02:05 மணி தமிழீழம் [மயூரன்] ஏறாவூர் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் தளவை சவுக்கங்காடு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்சம்பவத்தில் விடுதலைப்புலிகளில் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் சிறீலங்கா படையினர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் ஒரு விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்மோதல் சம்பவமானது புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது இறந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…

    • 1 reply
    • 1.2k views
  6. புதன் 23-05-2007 18:25 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தகளத்தில் புலிகளின் கைகள் மேலோங்கும் போதே ஆக்கபூவமான சமாதான நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்வரும் - கஜேந்திரகுமார் யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகள் மேலோங்கும் போதுதான் சமாதான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான முன்னெடுக்க சிறீலங்கா அரசாங்கம் முன்வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சிறீலங்காவுக்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தியுள்ள சர்வதே சமூகம் மறுபுறத்தில் சிறீலங்காவுக்கான யுத்த தளபாடங்களை வழங்கி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருத முடியும் எனத் குறிப்பி…

    • 3 replies
    • 1.6k views
  7. வட பகுதியில் பதற்றமான சூழ்நிலை மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் வீரகேசரி நாளேடு வடபகுதி பிரதேசங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் வன்னியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் இருதரப்பும் மேற்கொள்ளும் படைக்குவிப்பு மற்றும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மீண்டும் போர் வெடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது, . மன்னார், மடுப் பிரதேசத்தில் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இரு…

    • 3 replies
    • 2.1k views
  8. உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை: யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் - யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் - பாடசா…

  9. மகாவம்சம் - சில செய்திகள் -சபேசன் - மெல்பேர்ண் - ஒஸ்ரேலியா சிறிலங்காவின் புதிய அதிபராக, அன்று மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்;தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும். “முதலில் மகாவம்சம…

  10. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில தீர்மானங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு இடையூறாக அமைகின்றது – நோர்வே வெளிநாட்டமைச்சர் “நோர்வேயின் வெளிவிவகாரக் கொள்கையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையுடனான ஒத்துழைப்பும்” என்ற தொனிப்பொருளிலான வருடாந்த ஐரோப்பிய மாநாடு நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹகஹர் ஸ்ரோ (Jonas Gahr Støre) சிறிலங்காவின் சமாதானப் பேச்சுவார்தைகள் குறித்தும் உரையாற்றியிருந்தார். நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் பல செயற்பாடுகளில் கருத்து ஒற்றுமையைக் கொண்டுள்ளபோதிலும் சிலவற்றில் வேறுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த …

  11. பாகிஸ்தானிடம் இருந்து எஃப்-7 ரக வானூர்திகளை கடனாக பெற சிறிலங்கா முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக எஃப்-7 ரக இடைமறிப்பு தாக்குதல் வானூர்திகளை கடனாகப் பெறுவதற்கு சிறிலங்கா அரசு எடுத்த முயற்சியை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசிடம் வான் எதிர்ப்பு ஆளுமை குறைவாக உள்ளதனால் சோவியத்தின் மிக்-21 ரக வானூர்தியின் பிரதி வடிவமாக சீனாவினால் தயாரிக்கப்பட்ட எஃப்-7 ரக வானூர்திகளை பாகிஸ்தானிடம் இருந்து கடன் அடிப்படையில் பெறுவதற்கு சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருந்தது. எனினும் தாக்குதல் வானூர்திகளை வழங்க மறுத்த பாகிஸ்தான், 22 அல் சாரார் வகை டாங்கிகளை சிறிலங்…

  12. படையினரின் வன்முறைகளை அரசு கண்டுகொள்வதில்லை: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. சிறிலங்கா அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு விரும்புவதில்லை என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள சட்டவிதிளை பல வருடங்களாக நாம் அவதானித்து வந்ததில் இருந்து அங்கு ஒரு சமநீதியான சட்டவிதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. அங்கு நடைபெற்று வரும் கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் என்பன சட்ட ஒழுங்கின் குறைபாட்டிற்கான க…

    • 2 replies
    • 1.2k views
  13. பொலிஸ் நிலையத்தை படம் பிடித்ததாக 6 தமிழ் இளைஞர்கள் அனுராதபுரத்தில் கைது வீரகேசரி நாளேடு அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தினை செல்லிட தொலைபேசி மூலம் படம் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு தமிழ் இளைஞர்கள்க நேற்று காலை அனுராதபுரம் பொலிசாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதம இன்ஸ் பெக்டர் சரத்பிரேம கேசரிக்கு தெரிவித்தார். சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வாகரை மற்றும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அனுராதபுரம் பொலிசார் மேலும் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தினை செல்லிட தொலைபேசி மூலம் படம் பிடிப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதனையடுத்தே இவர்கள் பொலிசாரினால் சந்தேகத்த…

  14. யசூசி அகாசி யூன் மாதம் சிறீலங்கா பயணம் [புதன்கிழமை, 23 மே 2007, 22:28 ஈழம்] [காவலூர் கவிதன்] யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி வருகிற மாதம் இலங்கைக்கு வரவிருக்கிறார். கொழும்பிலுள்ள யப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில், முறிவடைந்து போயுள்ள பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான பயணமாக இது அமையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சமாதான செயலக அதிகாரிகள் உட்பட, பலரையும் சந்திக்கவுள்ள அகாசி, பின்னர் கிளிநொச்சி செல்வதற்கும் அனுமதி கோரியுள்ளார். எனினும், கிளிநொச்சி செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா வெளிநாட்டமைச்சு இதுவரை அவருக்கு வழங்கவில்லை என்றும் யப்பானிய தூ…

  15. அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு தமது அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்கு - கிழக்கில் உள்ள 390,000 மக்களி…

  16. புதன் 23-05-2007 17:37 மணி தமிழீழம் [தாயகன்] நாகர்கோவில் முன்னரங்கில் மோதல் யாழ் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிறிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலில், விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக படைத் தரப்பு அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. pathivu

  17. கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் பூட்டு. Wednesday, 23 May 2007 கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதான வாயில் பூட்டுபோட்டு பூட்டப்பட்டு கிடப்பதாக தெரியவருகின்றது மாணவர்களின் பதிஸ்கரிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று காலை பாடசாலை வந்துள்ள பள்ளி நிர்வாகத்தினர் பாடசாலையின் பிரதான நுளைவாயில் பெரிய பூட்டு ஒன்றினால் பூட்டப்பட்டு கிடப்பதை கண்டுள்ளனர். படையினரின் அதிஉச்ச பாதுகாப்புக்கு மத்தியில் மாணவர்கள் துணிந்து சென்று நள்ளிரவு கதவுகளை பூட்டி தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகின்றது தமிழ் ஒசை

  18. யாழ் குடாவுக்கு அனுப்பப்பட்ட 20 பேரூந்துக்களில் 11 பேரூந்துக்கள் படையினரால் கையகப்படுத்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ''லங்கா முடித'' கப்பலில் யாழ் குடாநாட்டுக்கு பொதுமக்களின் பாவனைக்கெனக் கொண்டு செல்லப்பட்ட இருபது பேரூந்துகளில் ஒன்பது பேரூந்தை மட்டும் பொதுமக்கள் பாவனைக்காக வடபிராந்திய போக்குவரத்து சபையிடம் கையளித்து விட்டு மிகுதியை கையகப்படுத்தி தமது பாவனைக்கு பயன்படுத்திவருகின்றனர். சிறீலங்கா படையினர் தற்போது மாத்திரமல்லாது பொதுமக்களது போக்குவரத்து பேரூந்துக்களை பலதடவைகள் தமது பாவனைகளுக்காக உபயோகித்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/

  19. ஏவி.எம். பேரனுக்கு புலிகள் பெயரில் மிரட்டல் மே 23, 2007 காரைக்குடி: மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேரனுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஏவி.எம்மின் கொள்ளுப் பேரன் பழனியப்பன். இவர் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசித்து வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் பழனியப்பன். 2 நாட்களுக்கு முன்பு பழனியப்பன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், உங்களுக்கு ஒரு தபால் வரும் அதைப் பிரித்துப் பார், நான் காரைக்குடி முத்துப்பட்டணத்திலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அத…

    • 3 replies
    • 2.1k views
  20. இலங்கை: மனிதாபிமான உதவிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி [புதன்கிழமை, 23 மே 2007, 15:22 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்க…

  21. மாங்குளத்தில் புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் வீரகேசரி இணையத்தளம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது விமானப்படையினர் இன்று காலை வான் தாக்குதல் நடார்த்தியுள்ளனர். மாங்குளத்திலுள்ள புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று காலை 6.45 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடார்த்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் போதான சேதவிபரங்கள் இது வரை தெரியவரவில்லை, எனினும் விமான படையினர் இவ் வான் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  22. ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து மீண்டும் செஞ்சிலுவைச் சங்க கண்காணிப்பாளர்கள் வெளியேறினர் Wednesday, 23 May 2007 இலங்கையின் வடக்கே கடந்த நான்கு நாட்களாக மூடிக்கிடந்தபின், நேற்றுக் காலை திறக்கப்பட்ட ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடிப் பகுதியில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றினையடுத்து, அங்கு பொதுப் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் தமது பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை…

  23. இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன. புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன. வட மாகாணக் கொடி முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன…

  24. தமிழர்களுக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்க உதவுமாறு புதிய பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை லண்டன் தமிழர் குழு கோடன் பிறவுணுடன் சந்திப்பு லண்டனில் இருந்து குமரன் லண்டன், மே 23 ஈழத்தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறவும் உதவுமாறு பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள, ஆளுங்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கோடன் பிறவுணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடன் பிறவுணை அவரது (நிதி அமைச்சு) அலுவலகத்தில் லண்டனில் வாழும் தமிழ்ப் பிரமுகர்கள் குழு ஒன்று நேற் றுச் சந்தித்தது. அப்போதே மேற்கண்ட வேண்டுகோள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைப…

  25. புதன் 23-05-2007 13:39 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் தமிழர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார் முன்னாள் யாழ் செயலக ஊழியரும் தற்போது கொழும்பு ராஜகிரியவில் வசித்து வருபவருமாகிய 30 அகவையுடைய கணேசன் உசாநாத் கடந்த ஞாயிறு முதல் காணாமல் போகடிகக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைக்கு பால்மா வாங்குவதற்காக கடைக்கு சென்றபின் காணவில்லை என இவரது மனைவியால் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணம் சங்கரப்பிள்ளை வீதி ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் எனவும் ராஜகரியவில் சேர்ச் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் தெரியவருகிறது. pathivu

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.