ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
புலி ஆதரவாளர்கள் மீது தமிழ் நாட்டில் கண்காணிப்பு தமிழ் நாட்டில் இருந்து செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களது நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்களத்தினால் இந்தப் பணி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தமிழ்நாடு பொலிஸ் பணிப்பாளர் நாய கம் டி.முகர்ஜி தெரிவித்தார். ""கியூ பிரிவினர் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 1967ஆம் ஆண்டின், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப் புச் சட்டத்தின் கீழ் சிலரைக் கைது செய்வதற்கான ஆரம்ப வேலைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.'' என்றார் அவர். ஆனால் எந்த அமைப்புக்கள் பொலி ஸாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன என்பதை முகர்ஜி தெரிவிக்கவில்லை. இதேவேளை, விடுதலைப் புலிகள் வசம் உள்ளார்கள் என்று தமிழ்நாட்டுப…
-
- 0 replies
- 796 views
-
-
-
- 7 replies
- 2.7k views
-
-
பாக்கிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்கா படைகளின் தளங்களை நேற்று காலை பாக்கிஸ்தான் புலனாய்வுதுறை, வான்படை ஆகியவற்றை சேர்ந்த மூன்று அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்தாலோசனை நடாத்தியுள்ளார்கள். இவர்கள் உலங்கு வானூர்தியில் தென்மராட்சி வரணி, சாவகச்சேரி வடமராச்சி பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள படைத்தளங்களுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்கள். பதிவு
-
- 2 replies
- 1.6k views
-
-
வான்புலிகள் தாக்குதல் எதிரொலி: சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக அதிகளவான பேனா மைகள் எழுதித் தீர்ந்து விட்டன. ஆனால் இன்று வரை அதற்கான ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வான்படை மற்றும் அதன் ஓடுதளம் தொடர்பாக அரசு தனக்கு தெரியும் என கூறியிருந்தது. அப்படியானால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருந்தது? முதலாவதாக செயற்திறன் …
-
- 1 reply
- 1k views
-
-
வியாழன் 17-05-2007 02:31 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கையில் அமைதிப்போராட்டம் சிறிலங்கா படைகளின் பின்புலத்தில் தென்னிலங்கையில் ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி நேற்று கொழும்பில் தமிழ் - முஸ்லீம் - சிங்கள சமூகங்களை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்ட பொதுமக்களின் உறவினர்களும் அமைதிப்போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். இவ் அமைதிப்போராட்டத்தில் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறீதுங்க விஜயசூரிய, கடந்த ஆண்டு மட்டும் கொழும்பிலும் புறநகர் பகுதியிலும் 140 பொதுமக்கள் கடத்தப்பட்டதாகவும் 18 பேர் சடலமாக மீட்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பதிவு
-
- 0 replies
- 950 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் விமானம் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல். திருகோணமலை கடற்படைத்தளத்தை அண்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானம் ஒன்றை அவதானித்துள்ள சிறிலங்கா கடற்படையினர் உடனடியாக விமானப்படை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இந்த விமானம் பற்றி அறிவித்துள்ளனர். உடனடியாக இந்த விமானம் சிறிலங்கா வான்படையினரது அல்ல என சிறிலங்கா விமானப்படையினர் தெரிவித்தபோது கடற்படையினர் விமானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல்களால் சட்டென உயர பறந்த விமானம் பின்னர் அவசர அவசரமாக விமானப்படை கட்டுப்பாட்டு தலை…
-
- 2 replies
- 1.8k views
-
-
பூசா தடுப்பு முகாமில் "சிங்களப் புலிகளுடன்" சட்டத்தரணிகள் சந்திப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 19:33 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் காலியில் பூசா தடுப்பு முகாமில் உள்ள 13 அரசியல் கைதிகளை 5 சட்டத்தரணிகள் குழு சந்தித்துப் பேசியது. புதிய ஜனநாயக் கட்சி உறுப்பினர் - 5 சிங்களப் புலிகள் என இராணுவத்தினரால் குற்றம் சுமத்தப்பட்ட சிங்களவர்கள்- 7 மற்றும் கிழக்கு மகாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆகியோரை சட்டத்தரணிகள் குழு சந்தித்தது. சட்டத்தரணிகள் இ.தம்பையா, எஸ்.தேவராஜா, மகிந்த ஜயவர்த்தன, திலக் விஜயசிங்க, சிறிநாத் பெரேரா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். புதினம்
-
- 0 replies
- 1.4k views
-
-
பூநகரியில் எறிகணை வீச்சு: பாடசாலை மாணவன் பலி [புதன்கிழமை, 16 மே 2007, 18:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பூநகரி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிளாலி சிறிலங்காப் படை முகாம் பின்தளத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் எறிகணைகள் ஏவப்பட்டன. இந்த எறிகணைகள் பூநகரி - மன்னார் வீதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் குடியிருப்பு மீது வீழ்ந்து வெடித்தன. இதில் பூநகரி கவாக்குளத்தைச் சேர்ந்த சிறீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் கனகரத்தினம் மோகன்ராஜ் என்ற பாடசாலை மாணவனே கொல்லப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 946 views
-
-
புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பைத் தடை செய்ய சிறிலங்கா தீவிர முயற்சி [புதன்கிழமை, 16 மே 2007, 19:22 ஈழம்] [சி.கனகரத்தினம்] அமெரிக்கா வாசிங்ரனில் இயங்கும் இன்ரல்சட் செய்மதி ஊடாக புலிகளின் குரல் வானொலிச் சேவை தொடர்ந்து நடைபெற்று வருவதனை எதிர்த்து சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. இம்முறைப்பாடு தெரிவிக்கப்படு முன்னர் சிறிலங்கா தூதரகத்தின் மூலம் இன்ரல்சட் நிறுவனத்திற்கு புலிகளின் வானொலிச் சேவையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் இவ்வோண்டுகோளை அலட்சியப்படுத்தி விட்டு அது தனது சேவையைத் தொடர்ந்தும் நடத்தி வந்தது. இன்ரல்சட் நிறுவனத்திற்குச் சொந்தமான செய்மதி மூலம் புலிகள் சட்டவிரோதமாக ஒலிபரப்புச் சேவை நடத்தி வருகின்றனர் எனவும் அதற்கு இட…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது. நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துணைபுரிந்த குற்றத்திற்காக கலைப்பீடத்தில் 86 பேருக்கும், முகாமைத்துவப் பீடத்தில் 67 பேருக்கும், மருத்துவ பீடத்தில் 38 பேருக்கும், விஞ்ஞான பீடத்தில் 27 பேருக்கும், சித்த பீடத்தில் 7 பேருக்கும்,…
-
- 13 replies
- 3.7k views
-
-
ஜே.வி.பி.க்கு பிரித்தானிய தூதுவர் அழைப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:46 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையான விமர்சித்து வருவது தொடர்பாக ஜே.வி.பி.யினருடன் விவாதிக்க பிரித்தானிய தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணி நேர விவாதம் நடத்தப்பட்டது. இலங்கைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற குழு பயணம் மேற்கொள்ளும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் அமைதிக் குழுப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானியா நாடாளுமன்றத்துக்கு அழைத்து புலிகளின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுடனான அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவல் உள்ளது: ஐ.தே.க. [புதன்கிழமை, 16 மே 2007, 17:50 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது குறித்து முக்கிய தகவல் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ரூ. 200 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியராச்சி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளைவத்தையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது. கொழும்பு வெள்ளைவத்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். நேற்று மாலை 5 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளைவத்தை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தங்களை அடையாளப் படுத்தத் தவறியதாலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளைவத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். -Pathivu-
-
- 2 replies
- 1.2k views
-
-
துறைமுகம் மற்றும் வானூர்தித்துறை அமைச்சராக மகிந்தவின் சகோதரர் நியமனம் [புதன்கிழமை, 16 மே 2007, 17:14 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் வானூர்தி மற்றும் துறைமுக அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்புக்கு முன்னர் சமல் ராஜபக்ச, அமைச்சராகப் பதவியேற்றார். இப்பதவியேற்பின் போது ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப, மகிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சந்திரபால லியனக ஆகியோர் உடனிருந்தனர். மகிந்தவின் அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்மேலாண்மை அமைச்சராக இதுவரை சமல் ராஜபக்ச பொறுப்பு வகித்து வந்தார். மகிந்தவுடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து …
-
- 1 reply
- 1.1k views
-
-
வான் தாக்குதலுக்கு செய்மதி நிழற்படங்களைப் பயன்படுத்தினர் புலிகள் - இந்தியன் எக்ஸ்பிறஸ். தமிழீழ விடுதலைப் புலிகள் செய்மதிப் நிழற்படங்களின் உதவியுடனேயே வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தி நாளேடு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தமக்கான இலக்குகளை தேர்ந்தெடுக்க வர்த்தக செய்திமதியின் தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றுள்ளதாகவும் அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Pathivu-
-
- 3 replies
- 2.1k views
-
-
கொள்ளையனை துரத்தி பொலிஸார் சூடு அப்பாவி குடும்பஸ்தர் உயிரிழந்தார் வவுனியா காமினி வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளையனொருவனைத் துரத்திச் சென்ற பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிக் குடும்பஸ்தரொருவர் கொல்லப்பட்டுள்ளார். பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த சனிக் கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளை முயற்சியின்போது மூவர் பிடிபட மேலும் சிலர் தப்பியிருந்தனர். இவ்வாறு தப்பியவர்களில் ஒருவர் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் வீடொன்றிலிருப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து மாலை 5.30 மணியளவில் மேற்படி வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது அந்தக் கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து பொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுடுவதாக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி குற்றச்சாட்டு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினரே சுட்டுக் கொல்வதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி ராமன் பிரேம்சுதன், அண்மையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லையென்றும் கூறினார். இந்திய கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராமன் பிரேம்சுதன் திங்கட்கிழமை அடையாறிலுள்ள கடற்படைத்தளத்தில் வைத்து வழங்கிய பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவேயுள்ள பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு அதிகரி…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்.கல்விச் சமூகத்துக்கான கொலை மிரட்டல் குறித்து வெளிநாட்டுத் தூதர்களை கூட்டமைப்பு சந்திக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சமூகத்துக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டல் தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களை உடனடியாக நேரில் சந்தித்து அவர்களது கவனத்திற்கு கொண்டுவருவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களென 323 பேருக்கு `நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 599 views
-
-
கடற்பிராந்திய உரிமையை இலங்கை இழக்கும் சாத்தியம் [16 - May - 2007] அண்மையில் "நமது தேசமும் கடல்பிராந்தியமும்" எனப்படும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா அதற்குரிய கடற்பிராந்திய உரிமையை பரந்த அளவில் இழக்கக்கூடிய சூழ்நிலையும் சாத்தியப்பாடும் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது பற்றி குறித்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்; குறிப்பாக ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தைப் பராமரித்தல், ஆய்வு செய்தல் சம்பந்தமாக அரசினால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதிகள், நடைமுறைகள் குறைபாடுகளை உடையதாக இருப்பதாகவும் இத்தகைய குறைபாடான நடைமுறைகளாலேயே மேற்படியாக ஸ்ரீலங்கா அதன் கடற்பிராந்திய ஆதிக்கத்தையும் உரிமையையும் இழந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதா…
-
- 2 replies
- 1.5k views
-
-
~வலியப்போய் ஏமாறுபவர்களும், துணிந்து வந்து ஏமாற்றுபவர்களும்!!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- சில மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசு மீது இப்போது கொடுக்கக் தொடங்கியிருக்கின்ற அழுத்தங்கள், தங்களது நலன் சார்ந்தே இருக்கும் என்பதையும், இத்தகைய அழுத்தங்கள் மீது நாம் தேவையற்ற நம்பிக்கைகளை வைக்கக் கூடாது என்பதையும் விளக்குகின்ற தர்க்கங்களை நாம் இந்த வாரம் முன்வைப்போம் என்று, எமது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கிணங்க, சில கருத்துக்களை முன்வைத்து இவ்விடயங்களை இவ்வாரம் தர்க்கிக்க விழைகின்றோம். இங்கே மேற்குலகின் தன் நலன் சார்ந்த விடயம் என்னவென்றால், தங்களுடைய அரசியல், பொருளாதார, பிராந்திய நலன்களைப் பாதிக்காத வகையில், இலங்கைத்தீவில், ஏதாவது, ஒரு வகையில் ஷஏதோ…
-
- 3 replies
- 1.6k views
-
-
முழு நாட்டையும் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளிவிடும் நடவடிக்கையில் அரசாங்கம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லையெனத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழு நாடும் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமே காணப்படுவதாகவும் எரிபொருள், சமையல் எரிவாயு, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்கள் மீது பாரிய பொருளாதாரச் சுமை சுமத்தப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 883 views
-
-
அரசியல் நோக்கங்களுக்காக அவசர மீள் குடியேற்றம் கிழக்கில் பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு, லட்சக்கணக்கானோரை நாட்டுக்குள்ளேயே இடம்பெயரவைத்து, மனிதப் பேரவல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொழும்பு அரசு, அந்தச் செயற்பாட்டின் மூலோபாயமாக இருக்கும் தனது தந்திரத் திட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகளை காய்நகர்த்தல்களை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டது. அண்மைக்காலத்தில் கிழக்கிலங்கையில் அரசுப் படைகள் மேற்கொண்ட பெரும் தொடர் இராணுவ நடவடிக்கைகளினால் சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் தமது வீடு,வாசல்கள், நிலபுலன்கள், உடைமைகள், சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். நலனோம்பு மையங்கள் என்ற பெயரில் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களை…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான கொலை மிரட்டலுக்கு ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம் கண்டனம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு 'நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு" என்ற புனைபெயரில், வன்முறையைக் கட்டிக் காக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விடுத்துள்ள பகிரங்க கொலை மிரட்டலானது ஒட்டாவா தமிழ் மாணவ சமூகத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் 270 தமிழ் மாணவர்களிற்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகின்றது என்ற ஸ்ரீலங்கா இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான அறிவித்தலை ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் (Academic Soceity of Tamil Students - ACTS) வன்மையாகக் கண்டிப்பதோடு உலகளாவிய கல்விச் சமூகத்தின…
-
- 4 replies
- 1.6k views
-
-
பாரதத் தாயின் கால்விரல் மெட்டியான கச்சதீவை இலங்கை கைப்பற்றியபோது கண்டுகொள்ளாமல் விட்டது முதற்கோணல் [15 - May - 2007] காஷ்மீர் பாரதத் தாயின் முகமென்றால், கச்சதீவு கால்விரல் மெட்டி எனலாம். கச்சதீவின் நீளம் ஒரு மைல், அகலம் அரை மைல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. கச்சதீவில் `டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே, பச்சைத் தீவு நாளடைவில் கச்சதீவு ஆயிற்று. 1882 ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சதீவும் ஒன்று. கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகை நிலமாக கச்சதீ…
-
- 3 replies
- 1.6k views
-
-
கருணா குழு முகாம்களை உடனே மூட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் [புதன்கிழமை, 16 மே 2007, 05:58 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கப் பகுதிகளில் உள்ள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முகாம்களை உடனே மூட வேண்டும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. படையணிகளில் சிறார் சேர்ப்பு குறித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையத்தின் பாதுகாப்பு சபைக்கான செயற்பாட்டுக் குழு வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவினரின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி ஜோ பெக்கர் தெரிவித்துள்ள கருத்து: இலங்கையின் கிழக்குப் …
-
- 1 reply
- 1.2k views
-