Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி பதவி ஒழிப்பு நெடுகிலும் ஒரு பகிடிப் பேச்சு [14 - May - 2007] இலங்கை 29 வருடகாலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இருந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அந்த ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் அல்லது காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், ஒருபோதுமே அது தொடர்பில் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சிகள் மானசீகமாக முன்வந்ததில்லை. கடந்தவாரம் கூட பாராளுமன்றத்தில் சபை முதல்வரான சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்து அதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுக்…

  2. இலங்கைக்கான ஆயுத விற்பனையை இவ்வருடம் நாற்பது மடங்காக அமெரிக்கா அதிகரித்துள்ளது இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் நாற்பது மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் சுயாதீன நிபுணர் குழுவான பாதுகாப்பு தகவல் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த் தளபாடங்களை விற்பனை செய்திருந்தது. இவ்வருடம் இந்த ஆயுத விற்பனை நாற்பது மடங்கால் அதிகரிக்கப்பட்டு இதுவரை 60.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுத விற்பனை இவ்வருடம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இலங்கையில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதால் இலங்கைப் ப…

    • 5 replies
    • 1.6k views
  3. உலகில் எந்த நாடு எம்மை எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் உலகில் எந்த நாடு எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போரை கைவிடமாட்டோமென சூளுரைக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மிக விரைவில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கெதிராக உயிர் நீத்த படையினரின் அபிலாஷைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றுமென்றும் உறுதியளித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற "விருமபவ சுரகிமு" (வீரமகனின் தாயைப் பாதுகாப்போம்) என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். யுத்த களத்தில் மரணமாகும் படையினரின் தாய்மாருக்கு நிதியுதவி வழங்கும் திட்டம…

  4. சிறிலங்காவில் தேசிய அரசு அமைக்க மகிந்த சம்மதம். மூத்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு அமைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் இந்த திட்டத்தை கடந்த ஜனவரியில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரான தனது நண்பரின் ஊடாக பிரேரித்திருந்தார். இரு பெரும் அரசியல் கட்சிகளினாலும் இனப்பிரச்சனைக்கு ஒரு தெளிவான தீர்வை முன்வைக்க முடியவில்லை. எனவே புதிதாக ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்தவை இணங்க வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கட்சி தாவிய உறுப்பினர்…

  5. எமது பிரச்சினையில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை: ரட்ணசிறி [திங்கட்கிழமை, 14 மே 2007, 05:41 ஈழம்] [அ.அருணாசலம்] பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க அனைத்துலக ஞபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது: நாம் மனித உரிமைகளை மீறுவதாக சில நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் அந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை யாரும் குற்றம் சாட்டுவதில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் அரசு கைவிட முடியாது. எமது படையினரின் தியாகங்க…

  6. இந்திய மீனவர்களின் படுகொலை; கூட்டு விசாரணைக்கு இலங்கை தயார் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து கூட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தயாரென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். `எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. நாங்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்வோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1991 முதல் 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை இலங்கை கடற்படை 77 இந்திய மீனவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாலித கோஹண இதனை குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு…

  7. இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அமெரிக்கா விசேட பிரதிநிதியை நியமிக்கும்? வாஷிங்ரன்,மே14 இலங்கை விவகாரத்துக்கென, விசேட தூதுவர் ஒருவரை அமெரிக்க அரசாங்கம் விரைவில் நியமிக்கலாம். இதற்கான சாத் தியக்கூறுகள் நிறையவும் உண்டு என்று ராஜாங்கத் திணைக்கள வட்டாரங்கள் இங்கு தெரிவித்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினையில், அதிக அளவில் பங்காற்றும் பொருட்டு விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பது அவசிய மென அமெரிக்க ராஜாங்க வட்டாரங்கள் கருதுகின்றன. இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்துவர வேண் டும் என்பதே எமது அக்கறையாகும். கடந்த பல வருடங்களாக பேச்சுக்கள் நடை பெறுவதும், முறிவடைந்து தடைப் படுவதும் பெரும் சிக்கலாக மாறிவிட்டது. இந்த …

  8. நான்கு போரை விட மோசமானது புலிகளின் நான்கு வான் தாக்குதல்கள்: இக்பால் அத்தாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும், அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவத…

  9. யாழ்நகரில் முக்கிய சந்திகளில் படையினரின் சோதனைகள் தீவிரம் யாழ்நகரின் முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் கடந்த சில தினங்களாக வாகனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துவிச்சக்கரவண்டிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் வழிமறிக்கப்பட்டு உடற்சோதனைகள், ஆள் அடையாள அட்டை பரிசோதனைகளுக்குட்படுத்தப்ப

  10. இலங்கைக்கான உதவிகளை முடக்க மற்றும் பல வெளிநாடுகள் முஸ்தீபு! ஜப்பானும் சுவீடனும் தயாராகின்றன இலங்கைத் தமிழர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மறுத்து வருவதுடன், மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தவறி வரும் கொழும்பு அரசுக்கு எதிராக பூர்வாங்க நடவடிக்கையாக அந்நாட்டுக்கான தமது உதவித் திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளில் மேலும் பல வெளிநாடுகள் தயாராகி வருகின்றன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடவிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மோசமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் …

  11. இந்திய மீனவர்கள் படுகொலை: இலங்கையின் மறுப்புக்கு இந்தியப் பதில் மெளனம் புதுடில்லி, மே 14 கடந்த காலங்களில் தமிழக மீனவர் கள் படுகொலைகளில் இலங்கைக் கடற் படையினர் தொடர்புபட்டிருந்தனர் என்று புதுடில்லி தெரிவித்த கருத்துகளை மறுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளி யிட்ட கருத்துகளுக்கு இந்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றது. இது விடயங்களைத் தெளிவுபடுத்து மாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு 48 மணிநேரத்திற்கு மேலாகியும் புதுடில்லி எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டில் இதுவரை இந்திய மீனவர்கள் 77 பேர் கொல்லப்பட்டமைக்கு இலங்கைக் கடற்படையே பொறுப்பு என்று இந்தியப் பாதுகாப்பு அம…

  12. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட புத்தபிக்கு சுட்டுக்கொலை. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண…

    • 2 replies
    • 1.7k views
  13. போர்வெறிப் போக்கால் பொருளாதாரச் சீரழிவு! மீண்டும் ஒரு தடவை கடந்த வெள்ளிக்கிழமை யன்று சத்தம் சந்தடியின்றி எரிபொருள்களின் விலை யைக் கூட்டியிருக்கின்றது இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம். ஆறு வார காலத்துக்குள் மூன்றாவது எரிபொருள் விலை அதிகரிப்பு இது. இது மாத்திரம் அல்ல. எரிபொருள் விவகாரத்தில் இன் னும் விலை அதிகரிப்புகள் வரிசையாக வருவதற்குக் காத்தி ருக்கின்றன என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கின்றார் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல். மோசமடைந்து, அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து கொண் டிருக்கும் இலங்கைத் தீவின் பொருளாதார நிலைவரத்தால் தொடர்ச் சங்கிலி நிகழ்வுகளாக இன்னும் பல மோசமான பின்னடைவுகள் இடம்பெறப் போகின்றன என்பதை பொரு ளியல் நிபுணர்கள் முன்கூட்டியே எ…

  14. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார். சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக…

  15. விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சிறிலங்காவின் பொருள…

  16. புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? (கலைஞன்) ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தனது ஜென்ம விரோதியான பாகிஸ்தானின் விமானப் படையைவிட விடுதலைப் புலிகளின் விமானப் படை ஆபத்தானதென காட்டிக் கொள்வது போல் இந்திய அரசின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன் புலிகளின் விமானப் படையால் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்படலாமென கூறிவருவது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப் புலிகளின் விமானப்படை தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலிகளின் விமானப் படை தொடர்பாக கடந்த ப…

  17. அமெரிக்கா, பிரித்தானியா திடீர் கரிசனை உள்நோக்கம் என்ன? ] வான் புலிகளை எப்படிச் சமாளிப்பதென்பது தெரியாது இலங்கை அரசு தடுமாறுகிறது. இதுவரை வான் புலிகளை எதுவுமே செய்ய முடியாத நிலையில் இனி என்ன செய்வதெனக் குழப்பமடைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் அதேநேரம், வான்புலிகளுக்கெதிராக சர்வதேசத்தின் கவனத்தையும் திருப்ப இலங்கை அரசு முயல்கிறது. வான் புலிகளின் அச்சுறுத்தலால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இரவு நேரங்களில் இழுத்து மூடப்படுகிறது. இலங்கை வான்பரப்பை பாதுகாக்கும் ஆற்றலை விமானப் படையினர் இழந்துவிட்டதால் வான்புலிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு அடிபணியும் நிலையேற்பட்டுள்ளது. விமானப் படை விமானங்களால் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீச முடிக…

  18. புலிகள் மீதான தடை சரியா? தவறா? -சோ.ஜெயமுரளி- இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம். `இலங்கைத் தம…

  19. தமிழர் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கூடமுன் வைக்க முடியாத நிலையில் அரசு -(பீஷ்மர்) சென்ற வாரத்து மழை வெள்ள `புதினத்தினால்' அரசாங்கத்துக்கு சில நன்மைகள் கிடைக்காமலில்லை. கொழும்பின் வெள்ளப் பிரச்சினை காரணமாக சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனை பற்றிய ஆழமானதொரு விவாதம் நடக்காமலேயே போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கஜேந்திரன் எம்.பி. பாராளுமன்றத்துக்குள் காட்டிய எதிர்ப்பைத் தவிர தமிழ் மக்களின் நிலைபாடு பற்றி எதுவுமே அறிய முடியாது போய்விட்டது எனலாம். சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் பற்றிய போதாமையும் நிச்சயமின்மையும் பற்றிய அம்சங்களை மீளமீள பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிங்களத்துவ குரலின் நிச்சயமான பிரதிபலிப்புகளிலொன்று என…

    • 0 replies
    • 669 views
  20. மக்கள் முன்னுள்ள இருவேறு தெரிவுகள் அருஸ் (வேல்ஸ்) பொருளாதாரமே இன்றைய உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய காரணி. மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய்வளங்களை தேடி அமெரிக்காவும், ஆபிரிக்க நாடுகளில் தனது சந்தை வாய்ப்பை தேடி சீனாவும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகளவு அணுகுண்டுகளைக் கொண்ட சோவியத்து ஒன்றியம் உடைந்து சிதறியதும் அதன் பொருளாதார கட்டமைப்பை பேணத் தவறியதனால் தான். போரின்போதுகூட ஒவ்வொரு நாட்டின் படையினரும் எதிரியின் இராணுவ இலக்குகளுக்கு நிகராக பொருளாதார இலக்குகளையும் தாக்கி அழிக்கத் தவறுவதில்லை. வான்குண்டு வீச்சுக்கள் உச்சம்பெற்ற இரண்டாம் உலகப்போரில் இருந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் இஸ்ரேல் போர் வரைக்கும் வான்படையினர் தாக்கி அழித்தவற்றில் …

    • 1 reply
    • 998 views
  21. உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் புதுடில்லி விரைவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் புதுடில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதி

    • 0 replies
    • 1.1k views
  22. இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பால் இலங்கை சீற்றம் இலங்கை கடற்படையினர் 1991 ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை 77 இந்திய மீனவர்களை கொலை செய்திருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி அந் நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விவகாரம் தொடர்பாக கொழும்பு புதுடில்லியுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேநேரம், இவ்வாறான மிகைப்படுத்தலுடனான அறிக்கையை விடுத்ததன் மூலம் அந்தோனி நேர்மையற்று நடந்து கொண்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளும் ஏனைய தனி நலன் சார்ந்தவர்களுமே …

    • 2 replies
    • 1.7k views
  23. ஈழத் தமிழர்கள் தொடர்பாக விவாதம் நடத்தியமைக்காக பிரித்தானியாவை எதிர்க்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச, தான் வைத்திருக்கும் பிரித்தானிய குடியுரிமையயைக் கைவிட தயாரா? என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளதாவது: பிரித்தானிய தலையீட்டை எதிர்த்துக் குரல் எழுப்புவதோடு தேசப்பற்றுள்ளவர்களாகத் தம்மை அடையாளம் காட்டும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் அவரது பிள்ளைகளும் பிரித்தானிய குடியுரிமையை கைவிடத் தயாரா என்பதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஆனால், ஒருபோதும் அவர் அதனைச் செய்ய மாட்டார். ஏனெனில் ஆட்சி மாறினால் நாடு மாற வேண்டும். அதுதான் அவ…

  24. இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் பல லட்சம் ரூபா நகை, பணம் கொள்ளை இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று சனிக்கிழமை அதிகாலை பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை ஒரு மணியளவில் கோவில் தெற்கு வாசலை உடைத்துக் கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்த கொள்ளையர்களே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முதலில் களஞ்சிய அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அதன் பின் மூலஸ்தானத்திலிருந்த மூல விக்கிரகத்தை புரட்டி அதற்குள்ளிருந்த பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், ஆ…

    • 2 replies
    • 1.4k views
  25. தாக்குதல்கள்: இக்பால் அத்தாஸ் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 மே 2007இ 18:16 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும்இ அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்புஇ பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.