Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர் உரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 08 MAR, 2023 | 06:15 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) நல்லிணக்கவாதியாகவும் சமாதானத்தை கர்த்தாவாகவும் தன்னை உலகுக்கு வெளியில் காட்டிக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் உண்மை நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பா…

  2. சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் திறன் வகுப்றைகள் திறப்பு Editorial / 2023 மார்ச் 08 , பி.ப. 07:40 யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் மார்ச் முதலாம் திகதி இரண்டு திறன் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்டஐந்தாவது,ஆறாவது திறன் வகுப்பறைகள் ஆகும். பாடசாலை அதிபர் பா. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக Right To Read நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஐந்தாவது திறன் வகுப்பறைளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சூ. நோபேட் உதயகுமாரும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள…

  3. மகளிர் தினத்தில் கதறும் தாய்மார் Freelancer / 2023 மார்ச் 08 , பி.ப. 02:12 சண்முகம் தவசீலன் 2017.03.08 இல் ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்தும் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. ஏழு வருடங்களாக கிடைக்காத நீதி - ஐ.நாவே கண் திறந்து பார் என மகளிர் தினத்தில் வீதியில் நின்று தாய்மார்கள் கதறினர். https://www.tamilmirror.lk/வன்னி/மகளர-தனததல-கதறம-தயமர/…

  4. இலங்கைக்கு ஐ.எம்.எஃப். கடன் கிடைக்க சீனா இணங்கியது - இது என்ன தாக்கத்தை ஏற்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, …

  5. கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பி…

  6. அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை. அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் அவரது கணவர் தெரிவிக்கையில், “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி அரபு நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து கடந்த இரண்டு மாதங்களாக பணம் அனுப்பியிருந்தார். இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை.அதனையடுத்து மனை…

  7. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் திறைசேரி செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரதான எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை Published By: VISHNU 07 MAR, 2023 | 05:51 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், திறைசேரி செயலாளர் அதனை உதாசீனப்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இதனை பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் தெரிவித்துள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்ப…

  8. செவித்திறன் அற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் செவிப்புலனற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்தார். செவிப்புலன் அற்ற 50 பேரை உள்ளடக்கிய ஆய்வில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த வாரத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். …

  9. இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இன்று முதல் வாசிப்புக்காக சபைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதி மற்றும் நிர்வாக சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் மத்திய வங்கியால் தற்போது நிறுவப்பட்டுள்ள நாணய சட்டச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட துணை விடயங்களுக்காக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. புதிய சட்டமூலத்தின்படி, மத்திய வங்கியின் சுயாட்சி எல்லா நேரங்களிலும் மதிக்கப்படும் மற்றும் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அல்லது ஆளும் குழு மற்றும் நாணயக் கொள்கை சபையின் ஏனைய உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியின…

  10. நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன் : திட்டம் தோல்வியுற்றால் மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படும் - ஜனாதிபதி Published By: T. SARANYA 07 MAR, 2023 | 04:13 PM சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொருளாதாரத…

  11. அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி Published By: Rajeeban 05 Mar, 2023 | 12:37 PM திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன…

  12. இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த ஆராய்வு இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்திய பிரஜைகள் அவர்களது பணத்தை நேரடியாக இலங்கையில் பயன்படுத்த முடியும் என்பதுடன் இலங்கையர்கள் வேறு நாணயங்கள் மீது தங்கியிருக்காமல் செயற்பட முடியும் என அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். …

  13. ஹரக் கட்டா, குடு சலிந்து உட்பட 8 பேர் மடகாஸ்கர் விமான நிலையத்தில் கைது Published By: SETHU 07 MAR, 2023 | 09:59 AM இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்புள்ளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, குடு சாலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன ஆகியோர் மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து உட்பட 8 பேர், மடகஸ்காரின் தலைநகர் அன்டனானாரிவோவின் இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர் என எல்.எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஹரக் கட்டாவின் மனைவி எனக் கூறப்படும் மடகாஸ்கர் பெண்ணொருவரும், அப்பெண்ணின் தந்…

  14. அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் - விக்னேஸ்வரன் சாடல் Published By: VISHNU 06 MAR, 2023 | 09:11 PM (நா.தனுஜா) இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முத…

  15. இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது ! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ள சீனா, எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது. 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற…

  16. சிங்கள மயப்படுத்தல் திட்டத்துக்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது: கஜேந்திரகுமார்! மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ் தேசிய மக்கள்…

  17. ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை Published By: Rajeeban 06 Mar, 2023 | 11:26 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்ட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும…

  18. எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்? Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 04:32 PM எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிவாயுவிலைகளும் …

  19. அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்தமை மகிழ்ச்சி – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையி…

    • 1 reply
    • 602 views
  20. மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் - பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை 06 Mar, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பல…

  21. யாழ்.தெல்லிப்பழையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு Published By: T. SARANYA 06 MAR, 2023 | 09:46 AM யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் கொப்பு தொடுகையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/149773

  22. தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தலை தாமதப்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன் திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது உள்ளூராட்சித் தேர்தல் குறித்த தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் வாக்கெடுப்புக்கான புதிய திகதியை அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுவது உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தும் செயற்பாடு என கருதுவதாக அக்கட்சியின் ஊடக பேச்சளார் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். திறைசேரியின் செயலாளர், அரசாங்க அச்சகமும் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என…

  23. ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1326464

  24. வடக்கு மீனவர்கள் ஒன்றாகுவீர்களா? – சுமந்திரன் கேள்வி “வடக்கு மீனவர்களுடைய பிரச்சினைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆதரவு வழங்கத் தயார். ஆனால் மீனவர்கள் எல்லோரும் ஒன்றாகப் போராடத் தயாரா?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். நகரிலுள்ள விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இழுவைமடி தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கடந்த காலத்தில் …

  25. யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானம் Published By: Nanthini 05 Mar, 2023 | 08:00 PM யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (5) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாகவும் மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.