Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 மார்ச் 2007இ 03:52 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு 2-3 வருடங்கள் தனக்கு தேவைப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் 2-3 வருடங்களில் எங்களால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும். இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க உ…

  2. கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீதான வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விடுதிகளை முற்பதிவு செய்திருந்த உல்லாசப் பயணிகள் தமது பதிவுகளை பெருமளவில் இரத்துச் செய்து வருகின்றனர். இந்தத் தாக்குதலானது ஒரு தனியான தாக்குதல் என விபரிக்கப்பட்டு வந்தாலும், மிக அதிகமாக உல்லாசப் பயணிகள் வரும் இந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட முன் பதிவுகள் இரத்துச் செய்யப்படுவது தம்மை மிகவும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடலாம் என முன்னணி விடுதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க வான் தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம் தனது பயணிகளை எச்சரித்துள்ளது. எனினும், ஏனைய நாடுகள் எச்சரிக்கைகளை விடுக்காதது ஒரு நல்ல அறிகுறி என இலங்கையின் சுற்றுலாத்துறை தலைவர் ரென்ரன் டீ அல்விஸ் …

  3. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு. கடந்த வாரம் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் பிரியானி விஜயசேகர தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்துள்ளோம். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனை தெரிவிக்க முடியாது. இது தொடர்பாக எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக கட்சித் தலைவர்களை இன்று கூட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளோம். படையினரின் ஆலோசனைகளுடன் தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார். …

  4. சிறிலங்காவின் ராடார்கள் 1,000 அடிக்கு கீழ் தொழிற்பட முடியாதவை: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதலின் பின்னர் கொழும்பு மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஞயிறு இரவு வந்த அவர்களின் வானூர்திகள், தளத்தின் வான்பகுதியை இரு மணிநேரங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. இந்தச் சம்பவம் அரசாங்கத்தையும், அதன் பாதுகாப்பு நடைமுறைகளையும் தொங்கு நிலையில் விட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று தனது பாதுகாப்பு ஆய்வு நிலவரப் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: "போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் நாளாந்தம் தாக்குதல்கள் அதிகரித்த படி உள்ளன. இது போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் நெருக்கடிக்குள் இட்டுச் செ…

  5. அவுஸ்திரேலிய tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும்் நியுஸிலாந்திலும் சிறந்த நிர்வாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்

  6. கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை சீரழிக்கவே கஞ்சிகுடிச்சாறு விவசாய குளத்தின் மீதான குண்டுத்தாக்குதல் கஞ்சிகுடிச்சாறு விவசாயக் குளத்தின் அணைக்கட்டு குண்டுவைத்து தகர்க்கப்பட்டமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம் வருமாறு: அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துவரும் அரசானது தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவேதான் ஏப்ரல் 1ஆம் திகதி கஞ்சிகுடிச்சாற்று குளத்தை படையினர் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு குளத்தி…

  7. விடுதலைப் புலிகள் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தாக்குதல் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை புலிகளிற்கு நாட்டின் எந்தவொரு பகுதியையும் குறிவைக்க கூடிய ஆற்றல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அண்மையில் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது கொண்ட வான் தாக்குதலில் இருந்து இது புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் நிராகரித்துள்ளதாக ரணில் சுட்டிக் காட்டினார். மிக் விமானங்கள் கிபிர் விமானங்களை விடுதலைப்புலிகள் அழிக்க முடியாது எனக் கருதி சம்பவத்தை கருத்திற்கொள்ளாது மக்களை ஏமாற்றும் தருண…

  8. யாழ் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் பெரும் நெருக்கடிக்கள் அரச அலுவலர்களின் செயல்பாட்டினால் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கு ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாட்டைக் கொண்டு அரச அதிபர் வழங்கிய பொருட்களை தாம் அவாகள் தந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தற்போதும் அதே நிலமையே பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காணப்படுகின்றன. இதே நேரம் யாழ்ப்பாணத்திற்கு சில தனியார் பொருட்களை எடுத்து வரும் நிலையில் பொருட்களின் விலையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரச களஞ்சியத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் …

  9. யாழில் இராணுவப் புலனாய்வாளர்களினால் பட்டப்பகலில் கொள்ளை நேற்று நண்பகல் மதியம் ஒரு மணியளவில் வீடு ஒன்றுக்குச் சென்றவர்கள் தம்மை புலனாய்வு பரிவினர் என அடையாளப்படுத்தியபின் வீட்டை சோதனையிட்டுள்ளார்கள். ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த இவர்கள் சோதனை முடிந்து திரும்பியபின் வீட்டினுள் பெறுமதியாக பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகிறது.இவ்வாறு வீட்டில் இருந்த நகைகள், கமெரா, கைத்தொலைபேசி என சுமார் இரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கச் சட்ட நேரத்தில் திருட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இராணுவத்தினரின் உளவாளிகளாகவும் மற்றும் இராணுவத்துடன் இனைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களுமே இத்தகைய திருட்டு …

  10. [Tuesday April 03 2007 12:56:50 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே நடைபெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத் துருப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நான்கு நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவத்தில் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக கிழக்குப் பகுதியில் தொடர்ந்து மோதல்கள நடைபெற்று வருகின்றன. அங்கு விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை விட்டு அவர்களை இலங்கை இராணுவம் வெளியேற்ற முயன்று வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் புறந்தள்ளப்ப…

  11. புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தும் போலிப் பரப்புரையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது - இளந்திரையன் விடுதலைப் புலிகள் மீது அவப் பெயரை ஏற்படுத்தும் பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலாம்பாவெளியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட 6 சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இன்று மதியம் கொண்டவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்பு படுத்தி சிறீலங்கா அரசாங்கம் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறதை அடுத்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் சிறீலங்கா அரசின் இக்குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார். தமது விடுதலை அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தும் சதி முயற்சியில் ஒரு…

  12. சார்க் மாநாட்டில் ஆதரவைப் பெறும் திட்டமிட் குண்டு வெடிப்பே கொண்டைவெட்டுவான் பேரூந்துத் தாக்குதல் - சீராளன் கொண்டைவெட்டுவான் பேரூந்துக் குண்டு வெடிப்பானது சார்க் மாநாட்டில் ஆதரவைப் பெறும் சிறீலங்கா அரசாங்கம் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை கொன்று விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது அர்த்தம்மில்லாதவொன்று என சீராளன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான படுகொலைகளைச் மேற்கொள்ளுவதற்கு சிறீலங்காப் படையினர் தரப்பில் போதியளவு துணை இராணுவக் குழுவினர் இருக்கின்றனர். இவ்வாறு படை…

  13. அரசுடன் இணைந்த ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் எதிர்கட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வாட் குணசேகர இன்று மீண்டும் பாராளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையை அடுத்தே எட்வேட் குணசேகர எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இதேவேளை இவருக்கு வழங்கப்பட்டிருந்த புகையிரத விவகார பிரதியமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இவர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் பாராளுமன்றம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒத்தி வைக்கப்பட்டது. pathivu.com

  14. நோர்வே றேனா இராணுவ முகாமில் புலிகளுக்குப் பயிற்சி [03 - April - 2007] பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே நாட்டவர்கள் என்ற பெயரிலான ஒரு பிரபல சர்வதேச அமைப்பின் தலைவரான போல்க் றோவிக் எனப்படும் நோர்வே நாட்டவர் அண்மையில் கனடாவில் நோர்வேயில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை பற்றிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறு நோர்வே அரசாங்கம் புலிகள் அமைப்பின் குழுவினரிற்கு நிதி உதவிகளைச் செய்து வருவதாகவும் மேலும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு மூலமாக நோர்வே அரசு கொடுக்கும் அனைத்து நிதி உதவிகளும் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேருவதாகவும் அவர் ப கிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நோர்வேயிலுள்ள றேனா (RENA)இராணுவ முகாமில் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சி அழி…

  15. முஸ்லிம்களுக்கு தனியான ஆட்சி அதிகார அந்தஸ்து வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கு இணைப்பை ஆதரிப்போம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு முஸ்லிம்களுக்கான தனியானதொரு ஆட்சி அதிகார அலகுடன்கூடிய அந்தஸ்தொன்று வழங்கப்படுமேயானால் தற்போது பிரிந்துள்ள வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதை ஒருபோதும் எதிர்க்கமாட்டோம் இவ்வாறு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்முனைப் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பில் உரையாற்றிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எஸ்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இன்று தமிழ்க் கட்சிகளுள் ஒன்றான ஈ.பி.டி.பி. முஸ்லிம்களுக்கென ஒரு உப அலகு…

  16. வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகள் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகளெனவும் அவர்களுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பில்லையென்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருநாவற்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மைதானத்தில் விளையாடிவிட்டு வந்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் வவுனியாவில் இயங்கும் தமிழ் அமைப்பொன்றின் உறுப்பினர்களெனவும் இருவரையும் விடுதலைப்புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் கூறியதுடன் இருவரது சடலங்களையும் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். இ…

  17. யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா? விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிப்பதா? அல்லது ரத்துச் செய்வதா? என்பது தொடர்பாக அரசாங்கம் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி அன்றைய அரசாங்கத்தில் பிரதமர் பதவி வகித்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே நோர்வே அனுசரணையுடன் போர் நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 5 வ…

  18. அரசியல் - இராணுவ வழிகள் இரண்டும் கலந்தே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் இந்தியாவும் இந்த அணுகுமுறையை ஆதரிப்பதாகப் புதுடில்லியில் போகொல்லாகம புதுடில்லி,ஏப்ரல் 3 எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு, அரசியல் மற்றும் இராணுவ வழிகள் கலந்த அணுகுமுறையைக் கைக்கொண்டே தீர்வு காண்பதற்கு முடிவுசெய்துள்ளோம். மேற்படி அணுகுமுறை மூலமான எமது முயற்சியை இந்தியாவும் ஆதரிக்கிறது. இவ்வாறு இங்கு தெரிவித்தார் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம. நாளை ஆரம்பமாகும் "சார்க்' நாடுகளின் 14ஆவது உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் நேற்றுச் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இலங்கை அமைச்சர் முன்கண்டவாறு தெரிவித்தார்.…

    • 1 reply
    • 764 views
  19. நாடாளுமன்றில் நாளை சிவாஜிலிங்கம் விசேட அறிக்கை சென்னை, ஏப்.3 தாம் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக சிவாஜிலிங்கம் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றுவார். இதேவேளை, நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு சிவாஜிலிங்கத்தைக் கேட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வெள் ளிக்கிழமை விசாரிக்கப்பட்ட பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.30மணிக்கு மீள ஆஜராக வேண்டும் என்று முன்பு ப…

  20. யுத்த நிறுத்தத்தைத் தொடர்வதா ? தெற்கே தீர்மானிக்க வேண்டும் ` இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிப் பதற்காக, அது தொடர்பாக சர்வஜனவாக் கெடுப்பு ஒன்று நடத்தினால் என்ன என்பது பற்றி அரசுத்தலைமை ஆராய்ந்து வருவதாக ஒருபுறத் தில் செய்தி வெளியாக மறுபுறத்தில், ""யுத்த நிறுத்த உடன்பாட் டைப் பேணுவதற்கு அரசு விரும்பாவிட்டால், அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வாய்ப்பே யில்லை. அதேவேளை மோசமான போரும் வெடிக் கும்.'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பா ளர் சு. ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் என்ற தகவலும் வெளியாகியிருக் கின்றது. ""யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்பட…

    • 2 replies
    • 1.2k views
  21. யாழில் 2 வெள்ளை வான் கடத்தல்கள்- 3 பேரை காணவில்லை யாழில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் 2 பொதுமக்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமை 3 பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் ஒருவர் கொழும்புத்துறையில் உள்ள சிவில் நிர்வாக காரியாலயத்திற்கு சென்ற பின்னர் திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை வானில் வந்த அடையாளம் ஆயுததாரிகளால் பாசையூரைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான பாலச்சந்திரன் என்று அழைக்கப்படும் சுவாக்கின்பிள்ளை வாயூரன் (வயது 39) சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவிலும், யாழ். நகரில் உள்ள கொய்யாத்தோட்டத்தை சேர்ந்த பிரான்…

  22. சிறப்புப் பார்வை. நன்றி பதிவு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=300307

  23. புலிகளால் ஆபத்தில்லை: இந்திய விமானப்படை ஏப்ரல் 02, 2007 குவாலியர்: விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலோ, ஆபத்தோ இல்லை என்று தென் பிராந்திய விமானப்படை தளபதி யஷ்வந்த் ராவ் ராேன கூறியுள்ளார். குவாலியரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அவர்களது பலத்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இருப்பினும் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையிலுிம் நமது படைகள் தயாராகவே உள்ளன. என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. போதிய அளவில் ரேடார் வசதிகள் நம்மிடம் உள்ளன. போர் விமானங்கள், நவீன சாதனங்கள் என நமது …

  24. திங்கள் 02-04-2007 21:50 மணி தமிழீழம் [முகிலன்] மகிந்த ராஜபக்ச மணிசங்கர் ஜயர் பஞ்சாயத்து முறைமை தொடர்பில் கலந்துரையாடல் இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணிசங்கர் ஜயரை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று புதுடெல்லியில் அமைந்துள்ள மயூரா சராட்டன் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மணிசங்கர் ஜயரின் பஞ்சாயத்து முறைமை கொண்ட அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆலோசனையைப் பெறுமுகமாகவே இச்சந்திப்பு இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பதிவு

  25. வன்னியில் விடுதலைப் புலிகள் தமது விமானங்களை பறக்க விட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக படையினர் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு தடவைகள் இரண்டு விமானங்கள் வானில் பறந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானித்துள்ள படையினரே இத்தகவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, பிற்பகலிலும் இரவிலும் புலிகள் தம்வசமுள்ள விமானங்களை வானில் பறக்க விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வானில் பறக்கும் விமானங்கள் பயிற்சி முடிவடைந்த பின்னர் பொதுப்போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் பாதுகாப்பான முறையில் இறக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விமானங்கள் எங்கிருந்து வானுக்கு ஏற்றப்பட்டுள்ளன என்பது குறித்து சரியாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.