Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா "ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது. சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் க…

  2. புதிய றியர் அட்மிரல்களாக நால்வர் நியமனம் சிறிலங்கா கடற்படையில் உள்ள நான்கு கடற்படை அதிகாரிகள் றியர் அட்மிரல்களாக கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொது நடவடிக்கை பணிப்பாளர் சுசித் வீரசேகர, வட மத்திய கட்டளைத்தளபதி ஜயநாத் கொலம்பகே, பொது சுகாதார பணிப்பாளர் டபிள்யூ. ஜெயசேகர, மின்சார மற்றும் மின்னியல் பணிப்பாளர் ஜே.சீ.ஹெட்கம ஆகியோரே றியர் அட்மிரல்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் ஆவர். http://www.eelampage.com/?cn=31411

    • 2 replies
    • 1.2k views
  3. திரியாயில் படையினர் மீது துப்பாக்கிச் சூடு: இரு படைச் சிய்பாய்கள் காயம் திருகோணமலை திரியாய் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் காவலில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டகளப்பில் மோட்டார் தாக்குதல் படைச்சிப்பாய்கள் இருவர் படுகாயம் மட்டக்களப்பு கொடுவாமடு மற்றும் ஏறாவூர் பற்று பகுதிகளின் எல்லையோரப் பிரதேசத்தினுள் சிறீலங்காப் படையினர் ஊடுருவ முயன்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினனர் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று மதி…

  4. கொட்டாஞ்சேனையில் தேடுதல் 13 தமிழ் இளைஞர்கள் கைது வீரகேசரி நாளேடு கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கைகளின் போது 13 தமிழர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைகளின்போது விடுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்

  5. 'எமக்கு ஒற்றர் முத்திரை குத்தப்படுகின்றது': அரச சார்பற்ற நிறுவனங்கள் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி வரும் எமக்கு அங்கு ஒற்றர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது." இம்முறைப்பாட்டினை அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன. முறைப்பாடுகளைச் செய்த அமைப்புக்களில் கொள்கை திட்டமிடல் மையம், பொது கண்காணிப்புச் சபை, சுதந்திர ஊடக இயக்கம், இன்போர்ம் மனித உரிமை தகவல் மையம், இனப்பாகுபாட்டிற்கு எதிரான அனைத்துலக இயக்கம், சட்ட மற்றும் சமூகவியல் நம்பிக்க…

    • 1 reply
    • 1.2k views
  6. இந்தியா சென்ற 4 இலங்கை அகதிகள் பலி மு.சுப்பிரமணியம் இன்று அதிகாலை மன்னார் பகுதியூடாக இந்தியா சென்ற வன்னி பகுதியை சேர்ந்த அகதிகள் 4 பேர் விடத்தல் தீவு அருகாமை படகு கவிழ்ந்த்தில் பலியாகியுள்ளனர். சுமார் 8 பேர் வரை படகு பயணம் செய்திருந்த படகு எதிர்பராதவிதமாக பெரிய அலைகளினால் தாக்கப்பட்டு கவிழ்ந்த்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. வீரகேசரி

    • 3 replies
    • 1.2k views
  7. கொழும்பு துறை முகத்திற்கு 48 மணித்தியாலங்களுக்குள் 6 உல்லாச பயணிகள் கப்பல்கள் விஜயம் [Wednesday April 11 2007 11:01:06 AM GMT] [virakesari.lk] கொழும்பு துறைமுகத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு 6 ஆ டம்பர உல்லாச கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஜெர்மன் மற்ரும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்துள்ளன. இதன் மூஅல்ம் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் புலப்படுவதுடன் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்திர்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஓஷன் ஒடிசி அஸ்டோட் மக்ஸிம் கோர்கி சுகரோஸ் மற்றும் ஷில்வர் சடோ கப்பல்களே வந்துள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையும் கடற்ப்டையினர் இக்கப்…

  8. இந்தியா தலையிடுவது தொல்லையானது: ஜே.வி.பி. தலைவர் சாடல் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 14:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா தலையிடுவது தொல்லை தரக்கூடியது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு சோமவன்ச அமரசிங்க அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எத்தனை முறைதான் அவர்கள் இதனைத் தெரிவிப்பர்? இதுபற்றி அரசாங்கம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்பத…

    • 5 replies
    • 1.7k views
  9. மழை கொட்டுகிறது, உணவும் இல்லை மட்டக்களப்பில் அகதிகள் பெரும் அவலம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்த விதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளையும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

    • 8 replies
    • 1.6k views
  10. புலிகளென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு யாழ். இளைஞர்கள் நீதிமன்றால் விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். இளைஞர்கள் இருவரை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது. கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தன, சந்தேக நபர்கள் மீது எவ்வித குற்றமும் கிடையாதென பொலிஸார் அறிவித்ததையடுத்து அவ்விளைஞர்களை விடுதலை செய்தார். புறக்கோட்டை பொலிஸாரால் கடந்த 02 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த இவ்விளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மறுநாள் நீதிமன்ற விசாரணையின் பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த…

  11. ஹாட்லியில் 6 மாணவர்களுக்கு 10 ஏ 8 பேருக்கு 9 ஏ, 13 பேருக்கு 8 ஏ கடந்தவாரம் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 6 மாணவர்கள் 10 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சிறப்பாகத் தேறியிருக்கிறார்கள். மேலும், 8 மாணவர்கள் 9 பாடங்களிலும் 13 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றிருப்பதாக கல்லூரி அதிபர் நடராஜா தெய்வேந்திரராஜா அறிவித்திருக்கிறார். சண்முகரத்தினம் கோகுல், சுபேந்திரன் பிரசாந், சிவராஜா ராகுலகீதன், ரவீந்திரன் செந்தூரன், கதிரமலை உமாசுதன், ஞானசம்பந்தன் அபிராம் ஆகிய மாணவர்களுக்கு 10 பாடங்களிலும் ஏ சித்தி கிடைத்திருக்கிறது. 9 பாடங்களில் ஏ சித்தி பெற்றவர்களின் விபரம் வருமாறு: அரியரத்தினம் அஜந்தன், தர்மகுலசி…

    • 15 replies
    • 3.1k views
  12. "புலிகளிடம் விமானம் இருப்பது இந்தியாவுக்கு `உறுத்தல்' மட்டுமே" [11 - April - 2007] விடுதலைப்புலிகளிடம் விமானங்கள் இருப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. அது உறுத்தலான விடயம் மட்டுமே என்று இந்தியாவின் புதிய விமானப் படைத்தளபதி பாலி மேஜர் தெரிவித்திருக்கிறார். மார்ச் 31 இல் கடமையை பொறுப்பேற்ற பாலி மேஜர் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டை திங்கட்கிழமை புதுடில்லியில் நடத்தினார். கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படையின் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியமையானது இந்தியாவுக்கு அச்சுறுத்தலா என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது எமக்கு அச்சுறுத்தலில்லை. புலிகள் ஒருபோதும் எமக்கு அச்சுறுத்தலாக இல்லை. அவர்களத…

  13. விடுதலை புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்திய நிபுணர்களின் மாறான கருத்துகள் [11 - April - 2007] உலகில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை நிகழ்த்தாத வான்வழித் தாக்குதலை இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்தி காட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல் இலங்கை அரசு உட்பட பல தரப்பில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய நிபுணர்கள் அதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். புலிகளின் வான்வழித் தாக்குதல் பற்றி இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஆனால், புலிகளின் விமானங்கள் பறந்து வருவதை இலங்கை விமானப் படையினர் எப்படி கண்டுபிடிக்காமல் இருந்து விட்டனர் அவர்கள் வைத்திருக்கும் கண்காணிப்பு சாதனங்கள் தோல்வி அடைந்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு தீவிரம…

  14. மன்னாரில் மக்கள் மீது படையினர் கெடுபிடி. - பண்டார வன்னியன் Wednesday, 11 April 2007 11:13 மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் நேற்று 8.00 மணியிலிருந்து 1.00 மணிவரை அவ்வழியாக வந்த வாகனங்களை சிறிலங்காப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அனைத்து பயணிகளின் ஆள் அடையாள அட்டைகள் உடமைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டதுடன் வெளி இடங்களை சேர்ந்த பயணிகளை படைப் புலனாய்வாளர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் 3.00 மணியளவில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சங்கதி

  15. வட தமிழீழத்தில் நேற்றிரவு நடைபெற்ற மோதல் ஒன்றில் 10 ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிற்கு எதிராக தாக்குதல் நடத்திய படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே 10ற்கும் அதிகமான படயினர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடபகுதி முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலின்போது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து படையினர் நடத்திய பதில் எறிகணைத் தாக்குதலில் 20 புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டசின் ச…

  16. கூட்டுக் கடல் ரோந்து புலிகளுடனான சண்டையில் இந்தியாவைச் சம்பந்தப்படுத்தும்: தமிழகக் கடற்படைப் பொறுப்பதிகாரி. இந்திய இலங்கைக் கடற்பரப்பில் இரு நாட்டுக் கடற்படைகள் கூட்டு ரோந்து மேற்கொள்ளும் பட்சத்தில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் இந்தியக் கடற்படையை அது சம்பந்தப்பட வைத்துவிடும் ஆகையால் கூட்டுக் கடல் ரோந்து இந்தப் பிரதேசத்தில் சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை ஆயினும் இந்திய அரசின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்படவேண்டிய விடயம் இதுவாகும் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழகத்துக்குப் பொறுப்பான இந்திய கடற்படையின் அதிகாரி கொமடோர் வான் ஹால்ரன். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் விவகாரம் குறித்த செவ்வி…

  17. மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம். மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகள் அதிகரித்துச் செல்வதையடுத்து மிலேனியம் சவால்களுக்காக நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படுவதாக பிரீடம் ஹவுஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் காரணமாக 2004ஆம் ஆண்டு மிலேனியம் சவால்களுக்கான உதவிபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டது. எனினும் இந்நிலைமைகள் சீர்குலைந்து விடுதலைப் புலிகள் மீண்டும் சிவில் யுத்தத்தின்பால் திரும்ப தொடங்கியமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும்…

  18. 'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…

  19. யாழ். குடாநாட்டிலிருந்து 7 மாதங்களில் 40,000 மக்கள் வெளியேறினர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடந்த 7 மாதங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியிருப்பதாக யாழ். செயலக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகின்றது. யாழ். மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடையிலான பிரதான தரை வழிப்பாதை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூடப்பட்டதையடுத்து குடாநாட்டு மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இருப்பும் கேள்விக்குறியானது. இந்த 7 மாத இடைவெளிக்குள் யாழ். குடாநாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு வகைகள், சேவைகள் மருந்து வகைகள் போன்றவற்றுக்கு பெரும் பற்றாககுறையும் காணப்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் முகம்…

    • 2 replies
    • 1.5k views
  20. ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…

  21. ஓமந்தை சோதனை சாவடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ஓமந்தை சோதனைச் சாவடி மீது இன்று செவ்வாய்கிழமை காலை மோட்டார் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது இன்று காலை 7.45 மணியளவில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இவ் மோட்டார் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்த இராணுவ வீரர்கள் வவுனியா பொறு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனையடுத்து ஒமந்தை சோதனைச்சாவடி தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புட் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது http://www.tamilwin.com/

    • 1 reply
    • 911 views
  22. சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசாரம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் - விடுதலைப் புலிகள் வரவேற்பு சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என விடுதலைப் புலிகள் கூறியிருப்பதுடன், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி செய்தி சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் …

    • 0 replies
    • 788 views
  23. புதன் 11-04-2007 01:08 மணி தமிழீழம் [தாயகன்] வடக்கு கிழக்கு அபிவிருத்திக் கூட்டம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்காது, சிறீலங்கா அரசு புறக்கணிப்புச் செய்துள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் முக்கிய ஆலோசகரும், சகோதருமான பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகான ஆளுநர்கள், அரச அதிபர்களும், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஃபேறியல் அஸ்ரப், பசீர் சேகுதாவூத், அமீர் அலி, பிரதி அமைச்சர்கள் மயோன் முஸ்தஃபா, றோஹித அபய குணவர்த்தன, ஃபைசால், மற்றும் ஜே.வி.பியின் திருகோணமலை …

  24. புதன் 11-04-2007 01:14 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் பல்கலைக்கழக மாணவன் உட்பட இருவர் கடத்தப்பட்டுள்ளனர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் முதல் காணாமல்ப் போயிருப்பதாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலை, நாவலர் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நாகேந்திரன் ராஜலக்ஸ்மன் என்ற கலைப்பீட மாணவரே காணாமல்ப் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ் காவல்துறை, மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பெற்றோரால் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ் சுண்டுக்குளியைச் சேர்ந்த 24 வயதுடைய ஞானசீலன் ரவி என்ற தொழிலாளியும் நேற்று முன்தினம் முதல் காணாமல்ப் போயிருப்பதாக, யாழ் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள…

  25. புதன் 11-04-2007 01:01 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளின் எறிகணையில் படையினருக்கு பாரிய இழப்பு யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களை நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடுமையான எறிகணைத் தாக்குதலில், படைத் தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அரியாலை கிழக்கு, நாவற்குழி, மற்றும் கேரதீவு பகுதிகளிலுள்ள சிறீலங்காப் படை முகாம்களிலுள்ள படையினர் பாரிய தாக்குதல்களுக்கான தயார் படுத்தலில் ஈடுபட்டவந்த நிலையில், அந்த முகாம்கள் மீதே விடுதலைப் புலிகள் கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எறிகணைத் தாக்குதலால் படைத் தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தாக்குதல் தொடர்பான செய்திகளை படையினர் இருட…

    • 3 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.