Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாதகமான சமிக்ஞை இன்றேல் பேச்சை தொடர்வதில் பயனில்லை : 10ஆம் திகதி வரையில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு காலக்கெடு By DIGITAL DESK 2 05 JAN, 2023 | 07:20 PM (ஆர்.ராம்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப…

  2. பண மோசடி குற்றச்சாட்டில் காங்கேசன்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரு பெண்கள் கைது! By DIGITAL DESK 5 05 JAN, 2023 | 01:35 PM பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரு பெண்கள் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். வழக்கொன்று தொடர்பில் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள 70 பவுண் தங்க நகைகளை விடுவித்துத் தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் நேற்று (04) காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரி…

  3. நலம் விசாரிக்க சம்பந்தனின் வீடுதேடிச்சென்ற மஹிந்த வழங்கிய உறுதிமொழி 04 JAN, 2023 | 09:25 PM வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள தேசியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நலம் விசாரிக்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்…

  4. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் போவதில்லை - ஜனாதிபதி ரணில் By Digital Desk 2 05 Jan, 2023 | 11:15 AM (எம்.மனோசித்ரா) மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். இரண்டு வருடங்களுக்குள் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களிப்பதற்கு அல்ல என சுட்டி…

  5. ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்றது கூட்டமைப்பு! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை(வியாழக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து, எதிர்வரும், 10ஆம், 11ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், ஜனாதிபதிக்கும், தமிழத் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னாயத்தமாக, நாளைய சந்திப…

  6. டுபாயிலிருந்து திரும்பிய அரகலய செயற்பாட்டாளர் கைது அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கமகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் (SLRC) சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் ‘அரகலய’ செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த வருடம் ஜூலை 13 அன்று, போராட்டக்காரர்கள் அரசுக்கு சொந்தமான ஊடக நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து சிறிது நேரம் ஒலிபரப்பை நிறுத்த வே…

  7. கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் - டயனா கமகே By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 08:55 PM (இராஜதுரை ஹஷான்) வீதி கடைகளில் விற்பதற்காகவும், அனைவரும் வாங்கி பயன் படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை. வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளேன். பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். தவறான மற்றும் முட்டாள்தனமான சிந்தனைகளில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்…

  8. பொரளை வைத்தியசாலையொன்றில் சிறுநீரகக் கடத்தல்: பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பியோட்டம்! By NANTHINI 04 JAN, 2023 | 11:32 AM வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்றுக்கொண்ட வழக்கின் பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவான் திருமதி. ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள இவர், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளதாகவும், அதற்கமைய அவரை கைதுசெய்வதற்கான விசேட வி…

  9. 'ஆக்கிரமிப்பு இராணுவமே மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே” எனத் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் By DIGITAL DESK 2 04 JAN, 2023 | 05:32 PM மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் புதன்கிழைமை (ஜன.04) காலை 10 மணியளவில் தரவையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது. தொடர்சியாக கார்த்திகை 27ஆம் நாளில் ம…

  10. பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுவிப்பு By VISHNU 20 DEC, 2022 | 07:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் இன்று (20) பூர்த்தி செய்த பின்னர் வெளியேறிச் சென்றுள்ளார். அதன்படி கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில்…

  11. சீனாவுடனான உறவால் இலங்கையை மற்றநாடுகள் தனிமைப்படுத்திவிட்டன – அமைச்சர் விஜேதாச ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்…

  12. முட்டை உற்பத்தியை நிறுத்தப் போவதாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை ! முட்டையை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுத்தால், தாம் தொழிலில் இருந்து விலக நேரிடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். 2022 டிசம்பரில், முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வாக, கொழும்பு, கம்பஹாவில் முட்டைகளை 55 ரூபாய்க்கு விற்கும் விசேட திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. அரசாங்கமும் முட்டை உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் முட்டைகளை இறக்குமதி உள்ளுர் தொழில்துறைக…

  13. பருத்தித்துறை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் காணொளி பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசா…

    • 3 replies
    • 334 views
  14. அரச துறைகளில் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை By Digital Desk 2 04 Jan, 2023 | 11:32 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் சேவை புரிகின்ற அரச அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதில், விசேட வைத்தியர்கள், தாதியர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர். …

  15. கூட்டமைப்பு உறுப்பினர்கள் வடக்கு ஆளுநரின் கூட்டத்துக்குச் செல்லப் பின்னடிப்பு 04 Jan, 2023 | 11:27 AM யாழ். மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வர் - சட்டத்தரணி மணிவண்ணன் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார். …

  16. அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது – வெலிஓயா மக்கள் எச்சரிக்கை! விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம். இவ்வாறு ஹட்டன், வெலிஓயா – 22 ஆம் தோட்ட பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். ஹட்டன், வெலிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே இதற்கு…

  17. யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்! கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை, வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங…

  18. போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை நேற்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். இந்த பகிரங்க கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செ…

  19. மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு! மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடித்து மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து படகில் தப்பி செல்ல முற்பட்ட வேளை கடந்த 17ஆம் திகதி படகு பழுதடைந்ததில் , வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தத்தளித்த நிலையில் 104 ரோஹிங்கிய அகதிகள் இலங்கை கடற்படையினாரால் காப்பாற்றப்பட்டு , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை மீரிகான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. அதேவேளை இவர்களை நாடு கடத்த முற்பட்டவர் என ஒருவருக்கு எதிர…

  20. தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா? தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா என வஜிர அபேவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் பணம் அச்சிட்டாவது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் அது நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வருடத்தில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதே ஜனாதிபதியின் இலக்கு. என்றும் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்…

  21. தஞ்சமடைந்த மீனவர்களின் மீன்கள் விற்பனை – கைதான சமாச தலைவருக்கு பிணை! தஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. தமிழக மீனவர்கள் நால்வர் பயணித்த படகு இயந்திர கோளாறு காரணமாக கடந்த 29ஆம் திகதி வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் கரையொதுங்கியது. தமிழக மீனவர்களை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்ற வேளை தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன்களை அங்கு நின்று இருந்த ஒருவர் எடுத்து விற்பனை செய்திருந்தார். தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றத்தில் குறித…

  22. மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் போராட்டம் வெடிக்கும் - மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 07:00 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்ச மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளோம். இராணுவத்தை கொண்டு அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்துக் கொள்ளட்டும் என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். மின்கட்டண உயர்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற…

  23. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி குறித்த அறிவிப்பு இன்று? உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துர…

  24. பெற்றோலிய கூட்டுத்தானம் , ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு : காரணத்தை வினவினார் ஜனாதிபதி 03 JAN, 2023 | 10:04 PM (இராஜதுரை ஹஷான்) நட்டத்தில் இயங்கும் அரச கூட்டுத்தாபனம் மற்றும் அரச நிறுவன சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நிதியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் ஆகிய அரச நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு (போனஸ்) வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் வினவியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேவையாளர்களுக்கு இருமாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில…

  25. மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது ! By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 02:49 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.