Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Wednesday April 04 2007 08:33:49 AM GMT] [யாழ் வாணன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து அரசு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் என வெளியான செய்தியில் உண்மையில்லை. அரசு இது குறித்து ஆராயவில்லை என்று பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்தி யாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பு கிராமோதய நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் அங்கு தொடர்ந்து தகவல் தருகை யில் கூறியதாவது: இந்தச் செய்தி எவ்வாறு வெளியிடப்பட் டது என்பது குறித்து அரசு விசாரணை நடத் தும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இச்செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றார் செய்தியாள…

  2. வடமராட்சி இன்பருட்டி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடல் ஒத்திகை வடமராட்சி இன்பருட்டி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடல் ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடற்படையினர் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருவர் தாக்கவர மற்றவர்கள் அத்தாக்குதலை முறியடிப்பது போன்ற இவ் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இன்றை ஒத்திகைப் பயிற்சியில் 3 உலங்கு வானூர்த்திகள், 16 டோரா பீரங்கிப் படகுகள், 20 நீருந்து விசைப் படகுகளும் ஈடுபட்டுள்ளன. pathivu.com

    • 2 replies
    • 1.1k views
  3. திருமலையில் தன்னார்வப் பணியாளர்கள் இருவர் படையினரால் கைது திருமலை உப்புவெளியில் தன்னார்வப் பணியாளர்கள் இருவர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர். NPPF எனப்படும் தன்னார்வ நிறுவன பணியாளர்கள் இருவரும் தன்னார்வ நிறுவனத்தின் வாகனத்தில் சென்று கொண்டுடிருந்த போது அவர்களை வழமறித்து சோதனையிட்டனர். இன்று மதியம் 1.30 மணியளவில் உப்புவெளிச் சந்தியில் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது அவர்கள் வானத்தில் கைக்குண்டு இருந்ததாகத் தெரிவித்து இவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தனபாலசிங்கம் சுவீந்திரன், முகதீன் சுகைதீன் ஆகியோரோ கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவருகின்றது. pathivu.com

  4. விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள் [04 - April - 2007] விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும், அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவ…

    • 2 replies
    • 1.7k views
  5. எட்வேர்ட் குணசேகரவை தொடர்ந்து மீண்டும் ஐ.தே.க.வுக்கு சிலர் திரும்பிச்செல்லும் சாத்தியம் ஐ.தே.க.விலிருந்து விலகி ஆளும் தரப்பில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சிலர் மீண்டும் அக்கட்சியில் இணையவிருப்பதாக அறிய வருகிறது. ஐ.தே.க.விலிருந்து விலகி அர சாங்கத்தில் பிரதி ரயில்வே அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட எட்வேர்ட் குணசேகர நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இந்நிலையில் ஐ.தே.க. விலிருந்து விலகி ஆளும் தரப்புடன் இணைந்து கொண்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அக்கட்சியிலேயே இணையவுள்ளனர். தமக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், அவை பெயரளவில் மாத்திரமே…

  6. [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…

  7. 'மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்' -சபேசன் 'கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.' தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்: 'அடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா?' என்று ஒரு பாடலின் வரிகள் கூறும். அடிகளை மட்டுமல்ல, இடிகளையும் தாங்கி நிமிர்ந்து நின்றவர்தான் எங்கள் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, அவுஸ்திரேலியாவில் பேரினவாதச் சார்புச் சக்திகள் கொடு…

  8. அம்பாறை கல்முனையில் படையினர் மீது தாக்குதல் : நான்கு பேர் பலி. அம்பாறை மாவட்டம் கல்முனையில் வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் அதிரடிப்படை சார்ஜண்ட் ஒருவர் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது வீதிரோந்தில் அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதினால் அதிரடிப் படையின் சார்ஜண்ட் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. . - சூரியன்

  9. [செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2007, 13:35 ஈழம்] [புதினம் நிருபர்] பொடா வழக்கிலிருந்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோரை விடுதலை செய்து இன்று செவ்வாய்க்கிழமை பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13 ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத…

    • 2 replies
    • 1.1k views
  10. மனித உரிமை மீறல்கள் தொடர்பான உலகின் கவனத்தை சிறிலங்கா அரசு மாற்ற முயல்கின்றது: சு.ப.தமிழ்ச்செல்வன். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் அனைத்துலக சமூகம் எடுத்துள்ள கவனத்தை சிறிலங்கா அரசாங்கம் திசை திருப்ப முனைகின்றது. இதன் பொருட்டு தமிழ் மக்களின் உரிமைப் போருக்கு எதிராக பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்த முனைகின்றது. தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "சார்க் போன்ற மாநாடுகள் நடைபெறும் போத…

  11. சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி. சிறிலங்காப் படையினரின் அழ ஊடுருவும் அணியினர் வவுனியா வடக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடத்திய தாக்குதலில் ஆண், பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சேமமடுவுக்கும், ஆனந்தப்புளியங்குளத்திற்கும

  12. கனடாவிலிருந்து புலிகளுக்கு `ஸ்லின்' விமானங்கள் புலிகள் இயக்கத்திடம் இவ்வாறான விமானங்கள் இருப்பதாக உறுதியான தகவல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க இராணுவ செய்மதி மூலமாக புகைப்படம் பிடிக்கப்பட்ட இரணைமடு பிரதேசத்திலுள்ள புலிகள் இயக்கத்தினரின் விமான ஓடுபாதை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்களிலிருந்து வெளியாகி விட்டது. இந்தச் செய்மதிப் படங்களை ஆராய்ந்து தெரிவிக்கப்பட்ட தகவல்களில் அந்த இரண்டு விமானங்களும் ஸ்லின் வகை விமானங்கள் என்பதைப் பாதுகாப்புத் துறையினர் அறிந்து கொண்டனர். மேலும் மேற்படி" ஸ்லின்", விமானங்களின் உற்பத்தி மற்றும் சர்வதேச ரீதியிலான விற்பனைகள் என்பவற்றை செக்கோஸ்செலவாக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள…

  13. 'மாமனிதர்' ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு: கிழக்குத் தீமோர் தூதரகம் இரங்கல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று மாலை மெல்பேல்பேண் ஸ்பிறிங்க்வேலில் உள்ள நகர மண்டபத்தில் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.25 மணியளவில் அவருடைய புகழுடல் அடங்கிய பேழை ஊர்தியில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. வாயிலில் இருந்து மேடை வரை, செங்கம்பளம் விரிக்கப்பட்ட, மண்டபத்தின் பிரதான வாயிலில் 'மாமனிதர்' ஜெயக்குமாரின் தமிழ்ப் பாராம்பரிய உடையணிந்த உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்ததோடு, படத்தின் அருகாமையில் தமிழீழத்தின் தே…

    • 1 reply
    • 949 views
  14. செவ்வாய் 03-04-2007 22:13 மணி தமிழீழம் [மகான்] கடற்படையினரால் ஆறு தரைப்படையினர் சுட்டுக்கொலை வலிகாமம் அராலி கொட்டைக்காடு பகுதியில் கடந்த செவ்வாய் அதிகாலை 5 மணியளவில் சில வீடுகளுக்குள் புகுந்த சிறீலங்கா தரைப்படையினர் அங்கு உறங்கிக்கொண்டிருந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டனர். எனினும் இளம் பெண்கள் கூக்குரலிட்ட அயலவர்களை கூட்டியதை அடுத்து அவர்கள் அவசர அவசரமாக பனங்காட்டின் ஊடாக ஓடியுள்ளனர். இதனை அவதானித்த கடற்படையினர் அரைகாற்சட்டையுடன் ஓடிய தரைப்படையினரை சரமாரியாக சுட்டுள்ளார்கள். இதன்போது ஆறுபேரும் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. pathivu.com

    • 6 replies
    • 2.9k views
  15. யாழ் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களை கண்காணிக்கும் சிறீலங்காப் படையினர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி முன்னால் இராணுவத்தினர் வார இறுதி நாட்களான சனி ஞாயிறுகளில் வகுப்புகள் இடம்பெறும் போது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கை கடந்த வாரம் முதல் இடம் பெறத் தொடங்கியுள்ளது. தொழில் நுட்ப நிறுவனத்தின் வளாகத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடு நிலையில் ஏந்திய வண்ணம் இராணுவத்தினர் நிற்பதினால் வார இறுதி நாட்களில் வகுப்புக்கு வரும் மாணவ மாணவிகள் பெரும் பதட்டமான நிலையில் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். பிறவுன் வீதிச் சந்தியில் கடுமையான சோதனைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி வகுப்புகளுக்கு…

  16. உன்னிச்சைப் பகுதியில் மோதல்கள் - இரு இராணுவத்தினர் காயம் மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் சிறுமோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பின்னிரவு வேளையில் உன்னிச்சை பகுதியில் இருந்து வலிந்த படைநகர்வு முயற்சியில் சிறீலங்கா படைகள் ஈடுபட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மோதல்களில் இருபடையினர் காயமடைந்திருப்பதாக படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 744 views
  17. 'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 மார்ச் 2007இ 03:52 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு 2-3 வருடங்கள் தனக்கு தேவைப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் 2-3 வருடங்களில் எங்களால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும். இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க உ…

  18. கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீதான வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விடுதிகளை முற்பதிவு செய்திருந்த உல்லாசப் பயணிகள் தமது பதிவுகளை பெருமளவில் இரத்துச் செய்து வருகின்றனர். இந்தத் தாக்குதலானது ஒரு தனியான தாக்குதல் என விபரிக்கப்பட்டு வந்தாலும், மிக அதிகமாக உல்லாசப் பயணிகள் வரும் இந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட முன் பதிவுகள் இரத்துச் செய்யப்படுவது தம்மை மிகவும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடலாம் என முன்னணி விடுதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க வான் தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம் தனது பயணிகளை எச்சரித்துள்ளது. எனினும், ஏனைய நாடுகள் எச்சரிக்கைகளை விடுக்காதது ஒரு நல்ல அறிகுறி என இலங்கையின் சுற்றுலாத்துறை தலைவர் ரென்ரன் டீ அல்விஸ் …

  19. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு. கடந்த வாரம் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் பிரியானி விஜயசேகர தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்துள்ளோம். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனை தெரிவிக்க முடியாது. இது தொடர்பாக எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக கட்சித் தலைவர்களை இன்று கூட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளோம். படையினரின் ஆலோசனைகளுடன் தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார். …

  20. சிறிலங்காவின் ராடார்கள் 1,000 அடிக்கு கீழ் தொழிற்பட முடியாதவை: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதலின் பின்னர் கொழும்பு மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஞயிறு இரவு வந்த அவர்களின் வானூர்திகள், தளத்தின் வான்பகுதியை இரு மணிநேரங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. இந்தச் சம்பவம் அரசாங்கத்தையும், அதன் பாதுகாப்பு நடைமுறைகளையும் தொங்கு நிலையில் விட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று தனது பாதுகாப்பு ஆய்வு நிலவரப் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: "போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் நாளாந்தம் தாக்குதல்கள் அதிகரித்த படி உள்ளன. இது போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் நெருக்கடிக்குள் இட்டுச் செ…

  21. அவுஸ்திரேலிய tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும்் நியுஸிலாந்திலும் சிறந்த நிர்வாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்

  22. கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை சீரழிக்கவே கஞ்சிகுடிச்சாறு விவசாய குளத்தின் மீதான குண்டுத்தாக்குதல் கஞ்சிகுடிச்சாறு விவசாயக் குளத்தின் அணைக்கட்டு குண்டுவைத்து தகர்க்கப்பட்டமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம் வருமாறு: அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துவரும் அரசானது தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவேதான் ஏப்ரல் 1ஆம் திகதி கஞ்சிகுடிச்சாற்று குளத்தை படையினர் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு குளத்தி…

  23. விடுதலைப் புலிகள் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தாக்குதல் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை புலிகளிற்கு நாட்டின் எந்தவொரு பகுதியையும் குறிவைக்க கூடிய ஆற்றல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அண்மையில் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது கொண்ட வான் தாக்குதலில் இருந்து இது புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் நிராகரித்துள்ளதாக ரணில் சுட்டிக் காட்டினார். மிக் விமானங்கள் கிபிர் விமானங்களை விடுதலைப்புலிகள் அழிக்க முடியாது எனக் கருதி சம்பவத்தை கருத்திற்கொள்ளாது மக்களை ஏமாற்றும் தருண…

  24. யாழ் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் பெரும் நெருக்கடிக்கள் அரச அலுவலர்களின் செயல்பாட்டினால் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கு ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாட்டைக் கொண்டு அரச அதிபர் வழங்கிய பொருட்களை தாம் அவாகள் தந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தற்போதும் அதே நிலமையே பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காணப்படுகின்றன. இதே நேரம் யாழ்ப்பாணத்திற்கு சில தனியார் பொருட்களை எடுத்து வரும் நிலையில் பொருட்களின் விலையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரச களஞ்சியத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் …

  25. யாழில் இராணுவப் புலனாய்வாளர்களினால் பட்டப்பகலில் கொள்ளை நேற்று நண்பகல் மதியம் ஒரு மணியளவில் வீடு ஒன்றுக்குச் சென்றவர்கள் தம்மை புலனாய்வு பரிவினர் என அடையாளப்படுத்தியபின் வீட்டை சோதனையிட்டுள்ளார்கள். ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த இவர்கள் சோதனை முடிந்து திரும்பியபின் வீட்டினுள் பெறுமதியாக பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகிறது.இவ்வாறு வீட்டில் இருந்த நகைகள், கமெரா, கைத்தொலைபேசி என சுமார் இரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கச் சட்ட நேரத்தில் திருட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இராணுவத்தினரின் உளவாளிகளாகவும் மற்றும் இராணுவத்துடன் இனைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களுமே இத்தகைய திருட்டு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.