ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கண்காணிப்புக்குழுவினருக்கு கட்டுநாயக்கா விமான நிலையம் பார்வையிட தடை. - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 28 ஆயசஉh 2007 10:13 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய விமானத்தளத்திற்கு சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரை சிறிலங்கா வான்படை அதிகாரிகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் இரு தடவைகள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இதற்கான அனுமதியை வான்படை அதிகாரிகள் வழங்கவில்லை இதேவேளை வான்புலிகளின் இத் தாக்குதல் தமக்கு ஆச்சிரியத்தையளிப்பதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோப்பினூர் ஒமர்சன் கருத்து தெரிவிக்கையில்.வான் வழித்…
-
- 0 replies
- 825 views
-
-
புதன் 28-03-2007 10:32 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா இராணுவத்தால் விசாரணையின் பின் இளைஞர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அரசடிச் சந்தியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா படையினரால் விசாரணை செய்தபின் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர் 23 அகவையுடைய லக்மனன் நிசாந்தன் வர்த்தகர் எனவும் நல்லூர் நோக்கி இவரது ஹயஸ் வானில் செல்லும் போது செவ்வாய்கிழமை 11 மணியளவில் சோதனைச் சாவடியில் சிறீலங்கா படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் உள்ளுர் மக்களின் கருத்துப்படி அவரது வாகனம் இனம் தெரியாத வேறு ஒருவரால் 11.30 மணியளவில் ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகி…
-
- 0 replies
- 763 views
-
-
கொழும்பு மார்ச்27 விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலை இந்தியா ஆழ்ந்த கவலையோடு உன்னிப்பாக நோக்குகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறன. இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு :- கடுமையான நெருக்கடிகள் மற்றும அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது வளைந்து கொடுக்காத உறுதியை இந்த வான் தாக்குதல் நடவடிக்கை மூலம் புலிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது கிளர்ச்சி அமைப்புக்கு ஒரு பெரிய இராட்சத பாய்ச்சலாகும். வெளிச் சக்திகளின் ஆதரவின்றி கிளர்ச்சி அமைப்பு ஒன்று உலகின் முதற்தடவையாக வான் வழித் தாக்குதலை நடத்திக் காட்டியிருப்பது இப்போதுதான். புலிகளிடம் வான்படைப் பிரிவு இருப்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த விடய…
-
- 17 replies
- 4.1k views
-
-
சர்வதேச நோக்கர்களால் வியந்து சிலாகிக்கப்படும் தமிழ் ஈழ வான் படையின் கன்னித் தாக்குதல் பற்றிய ஒரு பகுப்பாய்வுப் பதிவு இது. இதுவரை செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மேல் உள்ள வரை படம் , தமிழீழ வான் படையின் விமானம் எங்கனம் கட்டுனாயாக்காவை உள்ளிட்டது என்பதை விளக்குகிறது.இங்கே கவனிக்கப்பட வேண்டியது தாக்குதல் நடந்த நேரம் அண்ணளவாக நள் இரவு பன்னிரண்டு மணி.இந்த நேரத்திலையே பல சர்வதேச விமானங்கள் கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும்.விமான ஓடு தளம் ஆனது நீர் கொழும்பு ஏரியில் இருந்து ஒரு நேர் கோட்டில் இருக்கிறது.தமிழ் ஈழ வான் படையின் விமானம் இந்த நேர் கோட்டில் பயணித்தால், ராடார் கருவிகளில், விமானா ஓடு பாதையைப் பாவிக்கும் மற்ற சர்வதேச விமானங்களில…
-
- 10 replies
- 3.2k views
-
-
திருந்துமா தரப்புகள்? நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதல், இலங்கை இனப்போர் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்திருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. இலங்கை இனப்போரில் முதல் வான் தாக்குதல் 1986 பெப்ரவரியில் யாழ்ப்பாணம், தாவடியில் இலங்கை விமா னப்படையின் "சியாமாச்செட்டி' விமானம் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வான் வழித்தாக்குதல் நடவடிக்கைக் குள், பதிலடியாகப் புலிகள் தரப்பு தமிழர் தரப்பு 22 ஆண்டுகள் கழித்து இப்போது பிரவேசித்திருக்கின்றது. வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பல நூறு மைல்கள் ஒரு தாக்குதல் விமானத்தில் அல்லது இரண்டு விமானங்களில் பறந்து வந்து, இலங்கை விமானப்படை யின் மைய மூளையான க…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயார் - மகிந்த சிறீலங்கா ஜனாதிபதி விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலையடுத்து கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்களை தாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் விசேட தொலைதொடர்பு எண் (116) ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும
-
- 13 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு காலை ஏற்றப்பட்ட இலங்கை தேசியக் கொடி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இது பற்றி பதில் துணை வேந்தர், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இலங்கையின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை காலை பதில் துணைவேந்தரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது
-
- 45 replies
- 6k views
-
-
எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை சிறிலங்காப் படையினர் வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகத்துறையினரை தனது அலுவலகத்தில் சந்தித்த மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது: கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள எத்தகைய குறைபாடுகள் காரணம் என படைத்தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். மக்கள் சந்தேகத்திற்கு இடமான விமானங்களைக் கண்டால் 116 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இத்தாக்குதல் தொடர்பாக சில இராஜதந்திர வட்டாரங்களை நம்ப வைப்பது அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பல நாடுகள் எமக்கு தொழில்நுட்ப உத…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விமானங்களில் 40 வீதமானவை வான்புலிகளின் தாக்குதலையடுத்து பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது. Sri Lanka blackout on Air Force losses [TamilNet, Monday, 26 March 2007, 22:24 GMT] Sri Lanka’s President held an emergency meeting of the country’s security leadership Monday as the government imposed a total blackout on the Tamil Tiger bombing raid on Katunayake, the island’s main airbase in the early hours. Whilst the government says only two helicopter gunships were slightly damaged, airmen coming off duty told reporters in Colombo that several SLAF jet bombers were put out of action by fierce fires which …
-
- 26 replies
- 7.5k views
-
-
காங்கேசன்துறை, பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டு சத்தங்கள் - பாண்டியன் வுரநளனயலஇ 27 ஆயசஉh 2007 20:06 இன்றிரவு 7.45 மணி முதல் யாழ்.குடாவின் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சங்கதி
-
- 13 replies
- 3.8k views
-
-
அனைத்துலக ஊடகங்களின் பார்வையில் தமிழீழ வான்படையின் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 05:47 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலானது அனைத்துலக ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் வலிமையையும், அரசாங்கத்தின் விமான எதிர்ப்புப் பிரிவின் பலவீனத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் 'தி ஏஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. எங்களை மிகவும் குறைவாக எண்ணாதே, எங்களை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என எண்ணாதே என இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் …
-
- 17 replies
- 2.9k views
-
-
புதன் 28-03-2007 02:08 மணி தமிழீழம் [சிறீதரன்] ஆலயத்திற்குச் சென்றவர்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலில் அமைந்துள்ள பன்றித்தலைச்சி ஆலயத்திற்கு சென்ற பக்கதர்கள் மீது இராணுவத்தினர் மிகவும் மோசமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். நேற்றைய தினம் பங்குனித் திங்களுக்கு பொங்குவதற்காக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்கதர்கள் வேண்டும் என்றே இராணுவத்தினரால் சோதனையென்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டு நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்கள். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குறிப்பாக வலிகாமம் தென்மராட்சி உட்பட வடமராட்சிப் பகுதிகளில் இருந்தும் அதிக எண்…
-
- 0 replies
- 711 views
-
-
புதன் 28-03-2007 02:07 மணி தமிழீழம் [சிறீதரன்] பாடசாலை உணவுத் திட்டத்தில் மோசடிகள் யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சிலவற்றில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வலிகாமம் கல்வி வலயம், யாழ்ப்பாணம் கல்வி வலயம், தீவக கல்வி வலயம், மற்றும் வடமராட்சி கல்வி வலயம், தென்மராட்சி கல்வி வலயம், என இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்படும் பொருட்களுடன் மாணவர் ஒருவருக்கு ஒரு ரூபா ஐம்பது சதம் மேலதிகமாக உப உணவுப் பொருட்களைப் பெற்று பயன்படுத்தவும் வழங்கப்படுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட பல பாடசாலைகள் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாது மோசடிகள் செய்து வருவதாக த…
-
- 0 replies
- 708 views
-
-
புதன் 28-03-2007 00:42 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் வேலணையில் மூன்று இளைஞர் கடத்தப்பட்டுள்ளார்கள் கடந்த 23 ம் திகதி வேலணை 7ம் வட்டாரத்தில் உள்ள வீட்டில் இருந்து யாழ்நகரை நோக்கி புறப்பட்டுச் சென்ற 25 அகவையுடைய கோபாலப்பிள்ளை இளங்குமரன் என்ற இளைஞர் சிறீலங்கா படைகளால் கடத்தப்பட்டுள்ளார். கடந்த 12ம் திகதி புங்குடுதீவில் வேலணையில் கடற்தொழிலுக்கு புறப்பட்டு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 அகவையுடைய நடராஜா விமலேஸ்வரன், ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த இருபத்து மூன்று அகவையுடைய சிவநாதன் மதிவதனன் ஆகிய இருவருமே கடத்தப்பட்டுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 639 views
-
-
புதன் 28-03-2007 01:16 மணி தமிழீழம் [சிறீதரன்] மட்டக்களப்பில் இளம் பெண் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மட்டக்களப்பு மாணிக்கப் பிள்ளையார் வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த கந்தையா கிருஸ்ணகுமாhரி என்ற சிறுமியை சிற்றூர்தியில் கடத்திச் சென்றுள்ளனர். இவரது உடலம் நேற்று மாலை சிவானந்தா சந்தியில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பதிவு
-
- 0 replies
- 818 views
-
-
அரசின் பொய்யான பிரச்சாரங்களை வான்தாக்குதல் நிரூபித்துள்ளது: ரணில் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 21:29 ஈழம்] [அ.அருணாசலம்] அரசாங்கம் அண்மைக்காலங்களில் போரில் வெற்றி பெற்று வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் அது ஒரு தவறான தகவல் என்பதனை நேற்று விடுதலைப் புலிகளின் வான்படையினால் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நிரூபித்துள்ளது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலையான 'மௌபிம' பத்திரிகையின் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரியை நேற்று திங்கட்கிழமை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. தமது சொந்த ஊடகத்துறை பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எட…
-
- 0 replies
- 770 views
-
-
செவ்வாய் 27-03-2007 22:27 மணி தமிழீழம் [சிறீதரன்] போகல்லாகம இணைத்தலமை நாடுகளின் தூதவர்களை சந்தித்துள்ளார் சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் போகல்லாகம செவ்வாய்கிழமை கொழும்பில் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடாத்தியுள்தாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் வான்படையினர் தொடர்பாகவும் அதை எதிர்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் தெரியவருகிறது. இதன்போது அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக், ஜேர்மன் தூதவர் யூலியன் றீத், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் யூலியன் வில்சன், நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கர், ஜப்பானிய பிரதிநிதி என்.ற்ரோ ஆகியோரும் பங்கேற்றதாக தெரியவருகிறது pathivu.com
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடிகாலை 6.00 மணியளவில் கரும்புலித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை செலுத்தி வந்த கரும்புலி வீரர் ஒருவர் படை இலக்கு மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. மட்டக்களப்பின் பிரதான முகாமைத் தாக்கவே வந்த வண்டியை தாம் தடுத்து நிறுத்தி பாரிய அழிவைத் தடுத்துள்ளதாக சிங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்திருக்கலாமென நம்பப்படுவதாகவும் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. யாழ்.களத்திற்காக (கணினிக்கு முன்பாகவிருந்து) மின்னல்
-
- 23 replies
- 6.4k views
-
-
செவ்வாய் 27-03-2007 20:10 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] காங்கேசன்துறை கடற்கரையில் துப்பாக்கி சந்தங்கள் மற்றும் வெடியோசைகள் காங்கேசன்துறை பதித்தித்துறை கடற்கரைப் பகுதியில் வெடியோசைகள் மற்றும் துப்பாக்கிச் சந்தங்களும் கேட்டுள்ளவண்ணம் உள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7.45 மணியளவில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பகுதியில் வெடியோசைகள் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் பரா வெளிச்சங்களும் செவிமடுக்கப்பட்டுள்ளளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்
-
- 0 replies
- 2k views
-
-
வான் தாக்குதலின் மூலம் போரின் வியூகமே முற்றாக மாறியுள்ளது: இக்பால் அத்தாஸ் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 14:21 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் போரின் வியூகமே முற்றாக மாறிவிட்டது என்று பிரபல இராணுவ விமர்சகர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உலகின் பிரபல சஞ்சிகையான ஜேன் இதழின் சிறிலங்காவிற்கான முகவரும், பிரபல இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ், கட்டுநாயக்க மீதான தாக்குதல் குறித்து பி.பி.சி ஆங்கில சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த இரண்டு தசாப்தங்களாக தரை கடல் போர் அரங்குகளில் மாத்திரமே இடம்பெற்று வ…
-
- 1 reply
- 738 views
-
-
-ராய்ட்டர் செய்திச் சேவை- இலங்கையிடம் இருக்கும் யுத்த விமானங்களுடன் விடுதலைப் புலிகளின் இரண்டிற்கும் ஐந்திற்கும் இடைப்பட்ட சிறிய விமானங்களைக் கொண்ட விமானப் படையை ஒப்பிடமுடியாதெனக் கூறப்பட்டாலும் இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்களென்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வான் படையை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2002 போர் நிறுத்தத்தின் பின்னர் வணிகக் கப்பல்களில் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட விமானங்களை புலிகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கட்டுநாயக்காவில் இடம்பெற்ற வான் தாக்குதலானது விமானப்படையினரை முற்றுமுழுதாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாக தோன்றுவதாகவும் பதில் நடவடிக்கை மே…
-
- 5 replies
- 2.1k views
-
-
சிலநாட்களாக தேனீ ஏன் பொய்த்தேன் சொரி(றி)ய வில்லை? Global warming காரணமாக மழை அப்பக்கம் அடிக்கவில்லையா?
-
- 2 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 27-03-2007 15:00 மணி தமிழீழம் [மயூரன்] மனித முகம் கொண்ட மீன் கடந்த வெள்ளிக்கிழமை சிலாபம் பகுதிகளில் மனித முகம் கொண்ட 60 கிலோ எடையுள்ள மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இதற்கு வால் காணப்படவில்லை எனவும் சிறகுகள் இரு அடிகளை கொண்டதாக காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கொழும்பு நாசா பரிசோதனை நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்ரீபதி சூரியாராய்ச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிற்கு பிணை வழங்க கடுவெல நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளதுடன் எதிர் வரும் ஏப்ரல் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. விசேட காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராய்ச்சிக்கு பிணை வழங்கவேண்டும் என அவரது சட்டதரணி விடுத்த கோரிக்கையை கடுவல நீதிவான் லக்மால் விக்க்ரம் சூரிய நிராகரித்துள்ளார். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 813 views
-