ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மட்டக்களப்பின்அவலத்தை கூறுகிறார் அரியநேத்திரன் எம்.பி. -ஏ.ரஜீவன்- மட்டக்களப்பு மாவட்டத்தில் கன்னன்குடா, ஈச்சம்பற்று பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அகதிமுகாம்களில் அரை இறாத்தல் பாணை ஐவர் பகிர்ந்து கொள்ளும் பரிதாப நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிலிப் குணவர்தன மைதானத்தில் புதன்கிழமை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட சத்தியாக் கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். காணாமற் போனோரை தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கலந்து…
-
- 1 reply
- 916 views
-
-
வியாழன் 29-03-2007 18:19 மணி தமிழீழம் [கோபி] யாழில் மீண்டும் புகைப் படங்களைக் கேட்டு வரும் படையினர் யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலை கொண்டுள்ள 513 இராணுவத்தினரின் சங்கானை சண்டிலிப்பாய் உதவி அரசாங்க அதிபர் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பொது மக்களிடம் குடும்பப் புகைப்படங்களை தங்களுக்கு வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றார்கள். குறிப்பிட்ட பகுதி உதவி அரசாங்க அதிபர்கள் கிராம அலுவலர்களினால் புகைப்படங்களை உறுதிப்படுத்தி தமக்கு வழங்கும் படியும் தவறும் சந்தர்ப்பத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பயமுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புகைப்பட தாள்கள் பலத்த தட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலமையில் பொது மக்கள் தொழிலும் ப…
-
- 1 reply
- 990 views
-
-
'கருணா குழுவின் அராஜகங்களை சிறிலங்கா அரசு விசாரிக்கவோ- நிறுத்தவோ முயற்சிக்கவில்லை': மனித உரிமைகள் காப்பகம் சாடல் [வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 18:05 ஈழம்] [க.திருக்குமார்] "சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரின் சிறார் படைச் சேர்ப்பையும், கடத்தல்களையும் விசாரணைகள் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும், அரசாங்கத் தரப்பு செயற்திறனுள்ள நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுடன் கருணா குழுவினரின் கடத்தல்களும் தொடர்கின்றன." மேற்கண்டவாறு இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களை படையில் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 642 views
-
-
'''போரா ...சமதானமா..? குழப்பத்தில் மகிந்தா...'' இலங்கை அரசு தனது இழப்புக்களை அவமானத்தை மறைக்க ஒரு பாரிய வலிந்து தாக்குதலை தொடுத்து அதன் ஊடாக வெற்றி செய்தி ஒன்றை சிங்கள மக்களிற்கும் உலகிற்கும் சொல்ல முற்படுகிறது ஆயினும் என்ன யாவும் தோல்வியில் முடிகிறது. கடந்த விமான தாக்குதலை அடுத்து தனது பாதுகாப்பில் பாரிய இடை வெளி உண்டு என்பதை ஒத்து கொண்ட படைகள் அவற்றை நிவர்த்தி செய்ய பாரிய படை கலங்களை வேண்டி குவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன அன்றி உள்ளவற்றை சரியான முறையில் செயற்படுத்த வைத்துள்ளது. ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பு படைகளின் நிலைகளையும் தற்போது தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற வினா அரச படை மட்டத்தில் எழுந்துள்ளது. இந்த வினாவிற்க்கு விடையை த…
-
- 1 reply
- 974 views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] [Font Size - A - A - A] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது…
-
- 2 replies
- 1.4k views
-
-
மருத்துவர் மூர்த்தி(இலண்டன்) அவர்களின் செவ்வி CNN தொலைக்காட்சியில் மத்திய ஐரொப்பிய நேரம் 16:30 க்கு இடம் பெற உள்ளதாக தெரிவிக்கபடுகிறது. பார்ப்பவர்கள் பகிர்ந்துகொள்ளவும்.
-
- 2 replies
- 1.9k views
-
-
சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 12:38 யாழ்ப்பாணம் பலாலிவீதி உரும்பிராய் சந்தியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கணவன் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் படுகையில் படுத்திருந்;த கணவன் மனைவியை சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே படுக்கையில் படுத்திருந்த 2 வயதுக் குழந்தை அனாதையாக்கப்பட்ட நிலையில் இன்று காலை வரை தனது பெற்றோரின் சடலத்துடன் அழுத நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்க…
-
- 14 replies
- 2.9k views
-
-
இரு அமெரிக்கப் பிரஜைகள் கைச்சாத்திட்ட அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை [29 - March - 2007] பி.இராமன் அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 (9/11) தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் அப்போது பதவி வகித்த ஜனாதிபதி சந்திரிகா அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு அனுப்பிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "எமது நாட்டிலுள்ள துறைமுகங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் ஆகிய அனைத்து வசதிகளையும் வழங்கத் தயார்" எனத் தெரிவித்திருந்தார். அல்-ஹைதா மற்றும் ஆப்கான் தலிபான் அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்போது பயன்படுத்துவதற்காகவே இலங்கை வழங்குவதாகத் தெரிவித்த அந்த யோசனையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. 2002ஆம் ஆண்டு மார்ச…
-
- 0 replies
- 723 views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது தாக்குதலை நடத்திய புலிக…
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானத் தளத் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகங்கள் பரந்த பிரசாரம் [29 - March - 2007] கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது புலிகள் இயக்கத்தினரின் விமானம் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களுக்குள்ளேயே புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கிளிநொச்சிக் காட்டுக்குள்ளே பதுங்கு குழி ஒன்றிலிருந்து செய்மதி தொலைபேசி மூலம் இந்தத் தாக்குதல் பற்றி ராய்ட்டர் தலைமையகத்துக்குத் தகவல் தெரிவித்ததுடன் இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி பரந்த முறையில் பிரசாரம் செய்யும் படியும் வேண்டிக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல் பற்றி புலிகளின் இணையத் தளமாகிய "தமிழ் நெற்" உடனடியாகவே உலகம் முழுவதும் அறிவித்து விட்டது. தொடர்ந்து ஏ.பி. செய்தி ஸ்தாபனம் (அசோசியேட்டட் பிரெஸ்), சீ.என்…
-
- 12 replies
- 2.8k views
-
-
வியாழன் 29-03-2007 12:25 மணி தமிழீழம் [செந்தமிழ்] வான் புலிகள் பிரச்சனை சார்க் மாநாட்டில் பிரச்சாரப்படுத்த திட்டம் நாளை தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமைவரை இடம்பெறும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக் கவுன்சிலின் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் வான்படையால் தெற்காசியப்பிராந்தியத்திற்
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்தியாவினால் வழங்கப்படட் ரேடார்கள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை : இந்தியா - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 11:06 சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. நேற்று புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தச் சம்பவம் குறித்து நேரடியாகக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்த அவர், இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது, மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எந்த வக…
-
- 2 replies
- 1k views
-
-
உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில் பேச்சுக்கான அர்ப்பணிப்பு அவசியம் ` விடுதலைப்புலிகளோடு சமாதானப் பேச்சுகளை நாளை நடத்தவும் அரசு தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கின்றார். கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் முதல் விமானத்தாக்குதல் நடைபெற்று அடுத்தநாள் இந்தஅறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ""பரந்த பயனுள்ள அமைதியை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இதற்காகப் பேச்சு நடத்த வேண்டும், எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என எமது அரசு நம்புகின்றது. பேச்சுக்குப் புலிகள் தயார் என்றால் நாளையே நாம் பேச்சை நடத்தலாம்.'' என்ற சாரப்பட வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார். கட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜவரை காணவில்லையென முறைப்பாடு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 09:47 யாழ். குடாநாட்டில் ஜந்து இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளரென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று குடும்பத்தவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காணாமல் போனவர்களுள் சோசலிச சமத்துவக்கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் உள்ளடங்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி வேலணையிலிருந்து புங்குடுதீவு பகுதிக்கென புறப்பட்டுச் சென்றிருந்த நடராசா விமலேஸ்வரன் (27) மற்றும் சிவநாதன் மதிவதனன் (23) ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர் இவர்கள் இருவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 929 views
-
-
புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டுப் போர் [28 - March - 2007] இலங்கையின் சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் முதற்தடவையாக அரசாங்கப்படைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்கள். நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் விமானப்படையின் பிரதான தளத்தின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளியிட்டிருக்கின்ற போதிலும், இப்போது உள்நாட்டுப்போர் புதியதொரு கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வடக்கு, கிழக்கில் முப்படைகளும் …
-
- 0 replies
- 959 views
-
-
ஓவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் நாடாளுமன்றத்தை கூட்டமுடியாது: சிறிலங்கா அரசு. சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலமை தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கின்றது, இது முழுக்க அரசியல் நோக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் வான்படை: இந்தியா விலகி நிற்க முடிவு. சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதுடன் அதில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியா, பொதுவாக இடம்பெற்று வரும் வன்முறைகளையே கவனித்து வருகின்றது, வான் தாக்குதலும் அதில் ஒன்றாகும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில வாரங்களாக சிறிலங்காவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். இந்த சம்பவமும் இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக…
-
- 16 replies
- 3.3k views
-
-
அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்! சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது, வான்புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடாத்திவிட்டு, பாதுகாப்பாக வன்னிப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்கள். சிறிலங்காவைப் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து, உலகின் சகல ஊடகங்களும் முதன்மைச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஷதமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது| - என்று வெளிநாட்டு ஆய்வாளர்;களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் வாழ்விடங்கள்மீது விமா…
-
- 0 replies
- 675 views
-
-
வன்னி நிலப்பரப்பு மீது மறைமுக பொருளாதாரத் தடை - தமிழீழ சமாதான செயலகம் வன்னி மீது சிறீலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ சமாதான செயலகம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழீழ சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைத் தீவில் பணி புரிந்து வருகின்ற போதிலும், அந்த நிறுவனங்களுக்குத் தெரியாமல் மறைமுக பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசு ஏற்படுத்தி வருகின்றது. தனியார் வர்த்தகர்கள் வன்னிக்கு உணவுப் பொருட்களைக் எடுத்துச் செல்ல சிறீலங்காப் படையினர் தடை விதித்துள்ளதாக, தமிழீழ சமாதான செயலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படைத் தேவைகளுக்குரிய உணவுப் பொருட்கள் உட்பட மிகக் குறைந்த அளவு பொருட்கள…
-
- 0 replies
- 645 views
-
-
அவுஸ்திரேலிய tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும்் நியுஸிலாந்திலும் சிறந்த நிர்வாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்
-
- 24 replies
- 4.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட வான்தாக்குதலானது அரசாங்கத்தின் தவறான தகவல்களையும், உண்மையான கள நிலைமையையும் எடுத்துக்கூறியுள்ளது. எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் பாதுகாப்பிற்கு தான் முழுமையான பொறுப்பை ஏற்பதாக கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் போரில் 95 விகிதங்களை வென்றாகி விட்டது எனவும் கூறியிருந்தார். எனவே அவருக்கு சுயமரியாதை ஏதும் இருப்பின் அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தாக…
-
- 1 reply
- 827 views
-
-
"கடந்த வாரம் வரை இருதரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்தப் போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர்." நேற்று செவ்வாய்க்கிழமை 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு பிரபல படைத்துறை ஆய்வாளரும், சண்டே ரைம்சின் பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். செவ்வியின் முழு விபரம் வருமாறு: கேள்வி: விடுதலைப் புலிகள் தமது வான் படையின் பலத்தை தற்போது நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கட்டுநாயக்க வான்படைத் தளம் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பத…
-
- 0 replies
- 675 views
-
-
விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…
-
- 2 replies
- 1.4k views
-
-
கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு படையின் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிங்கள பத்திரிகையான லக்பிம நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தசெய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை விமானப்படையினர் தயார்நிலையில் இருக்காததன் காரணமாகவே விடுதலைப்புலிகள், விமானப்படைத்தளம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்லக் கூடியதாக இருந்துள்ளதென முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானத்தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இலங்கை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. …
-
- 19 replies
- 5.4k views
-
-
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: இந்திய கடல் எல்லையில் போர் கப்பல் - விமானம் தீவிர கண்காணிப்பு இலங்கையில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் விடுதலைப்புலிகள் முதல் முறையாக விமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை விமானப்படை தளம் கடுமையாக சேதம் அடைந்ததுடன் ராணுவ வீரர்களும் பலியானார்கள். இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து இலங்கை மீள்வதற்குள் விடுதலைப்புலிகள் டிராக்டரில் வெடிகுண்டுகளை நிரப்பிச் சென்று மற்றொரு ராணுவ தளம் மீது தற் கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தடுத்த தாக்குதல்களில் இலங்கை ராணுவம் நிலைகுலைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலால் பயந்துபோன இலங்கை அரசு, இது இந்தியாவுக்கும் ஆபத்து என்று அலறியுள்ளது. விடுதலைப்பு…
-
- 1 reply
- 1k views
-