Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 00:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான எம். சபாரட்ணம் (65) நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் களவாஞ்சிக்குடி காவல் துறை பிரிவின் எரிவில் பகுதியில் உள்ள தமது இல்லத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் காலை உணவை அருந்திக் கொண்டிருந்த சமயம். உந்துருளியில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு…

  2. சிறிலங்கா விமான நிலையப் பகுதியில் தாக்குதல் நடக்கிறதா? தற்போது கிடைத்த செய்தி என்று குறிப்பிடப்பட்டு இப்படியொரு செய்தி அல்ஜசீறா தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. மேலதிக விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடுங்கள்

  3. கடந்த சில வாரங்களாக யாழ்நகரில் சிறிலங்கா படையினர் நடத்தும் கொலை வெறியாட்டங்களினால், யாழ்நகரம் பிணக்காடாக மாறி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒட்டுக்கும்பல் ஈ.பி.டி.பியினருடன் சேர்ந்து சிங்கள இராணுவத்தினர் யாழை பிணக்காடாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக இலக்கத்தகடுகளற்ற வெள்ளை வான்களில் வரும் ஒட்டுக்குழுக்களாலும், இலங்கைப் புலனாய்வுத்துறையினராலும் அப்பாவிப் பொதுமக்கள் கடத்தப்பட்டு காணாமல் போவது அதிகரித்திருக்கும் வேளையில், பட்டப்பகலிலேயே சிறிலங்கா இராணுவ முகாங்களிலிருந்து வரும் ஆயுதக்கும்பல்கள் ஆண்கள், பெண்கள், சிறார்கள் என்ற வித்தியாசமின்றி பொதுமக்களை பகிரங்கமாக படுகொலை செய்து வருகின்றனர். கடந்த சில மணி…

  4. பருத்தித்துறை வைத்தியசாலையில் டாக்டர்களுக்குப் பற்றாக்குறை பருத்தித்துறை வைத்தியசாலையில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வைத்தியசாலைக்கு சுமார் 50 வைத்தியர்கள் தேவையான நிலையில் தற்போது பொது வைத்திய சிகிச்சை ஒரு வைத்தியருடன் மட்டுமே நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் இப்போது சேவைபுரியும் வைத்தியரும் இடம்மாற்றம் பெற்றுச் செல்லவுள்ளõர். இதேவேளை மகப்பேற்று வைத்தியராக ஒரு வருடகாலமாக இங்கு கடமை புரிந்து வரும் வைத்தியரும் இம்மாதத்துடன் வெளிநாடு செல்லவுள்ளார் என்று அறியப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக மேற்படி வைத்தியசாலையின் நிலைபற்றி வைத்தியசாலை நிர்வாகம் சுகாதாரப் பிர…

  5. பல்கலைக்கழக அனுமதியில் தொடரும் இனப்பாகுபாடு இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைக் கான போராட்டம் சுமார் ஆறு தசாப்தகால நீண்ட சரித்திரத்தைக் கொண்டது. தீவின் ஆட்சி அதிகாரம் மேலாண்மைப் போக்குடைய சிங்களப் பெரும் பான்மையினரின் கைகளுக்கு நாற்பதுகளின் கடைசி யில் கைமாறிய சிறிது காலத்திலேயே சிறுபான்மையினரான தமிழரின் உரிமைப்போராட்டமும் ஆரம்பித்துவிட்டது. மொழியுரிமை, பூர்வீகத் தாயகத்தின் தனித் துவத்தை நிலை நிறுத்தும் சொத்துரிமை, சமய, பண் பாட்டு விழுமியங்களைப் பேணும் கலாசார உரிமை, வேலைவாய்ப்புக்கான தொழில் உரிமை என்று சிறுபான்மையினரின் ஒவ்வொரு வரலாற்று உரி மையையும் தென்னிலங்கை பிடுங்கி, அவர்களை அடிமைப்படுத்தும் அடக்குமுறை நடவடிக்கை களை ஒருபுறம் தீவிரப்படுத்தியது. மறுபுறம் இந்த அட…

  6. வாகன விபத்தில் இருவிமானப்படையினர் பலி இன்று காலை வீரவெல ஹம்பாந்தோட்டை பகுதியில் சிறீலங்கா வான்படையினரின் வாகனம் பாலத்திடன் மோதியதில் சிறீலங்கா வான்படையினை சேர்ந்த கப்ரன் தர அதிகாரி ஒருவரும் மற்றும் சார்ஜன் தர அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டு மற்றும் ஆறு வான்படையினர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வான்படையினரை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இதன்போது போது கொல்லப்பட்டவர் ஹம்பாந்தோட்ட வான்படை முகாமிற்கு பொறுப்பானவர் என தெரியவருகிறது http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  7. மட்டக்களப்பில் சிறீலங்கா படைகளின் முகாம்களை அண்டிய எழுவான்கரை மக்கள் இடப்பெயர்வு மட்டக்களப்பில் சிறீலங்கா படைகளின் முகாம்களை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதையடுத்து எழுவான்கரையில் உள்ள படைமுகாம்களில் உள்ள படைமுகாம்களுக்கு ஒருகிலோமீற்றர் விட்டத்திற்கு உட்பட்ட மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அண்மையில் எழுவான்கரையில் உள்ள சிறீலங்கா படைகளின் மூன்று முகாம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து அருகில் உள்ள மக்கள் குடியிருப்பை நோக்கி செறிவான எறிகணைத்த…

  8. கனடாவில் 18 மில்லியன் லொத்தர்ப் பரிசு வெண்ற லக்கிராஜா குடும்பத்தைப் பார்க்க கொழும்புசென்ரார். அங்கு கருனா குழுவால் குடும்பத்துடன் கடத்தப் பட்டுவிட்டார். குடும்பம் கடத்தப் பட்டு சிலமணி நேரத்தில் கட்டுணாயக்கா போய் இறங்கியவுடன் கடத்தப்பட்டார்.இது நம்பிக்கையானதகவல்..

    • 21 replies
    • 4.8k views
  9. ஞாயிறு 25-03-2007 15:31 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் மூன்று வர்த்தகர்கள் சுட்டுப்படுகொலை பழம் விற்பனை செய்வபர், குளிர்கழி உரிமையாளர், அங்கு வேலைசெய்பவர் என மூவர் ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். யாழ் வைத்தியசாலை வீதியில் நடைபாதையில் பழம் விற்பவரை துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்றதாகவும் குளிர்கழி விற்பனை நிலைய உரிமையாளர் மற்றும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளியை பழவியாபாரி சுடப்பட்ட இடத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவில் யாழ் பவர் கவுஸ் வீதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் நிலவிய இச்சம்பவத்தையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதாகவும் கடைகளை மூடிவிட்டு மக்கள் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளதாகவும். பேரூந்து சேவைகள் …

    • 3 replies
    • 1k views
  10. மட்டக்களப்பு படுவான்கரை பகுதி நோக்கி நேற்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்று வரும் மிக உக்கிர ஷெல் தாக்குதலாலும் பல் குழல் ரொக்கட் தாக்குதலாலும் படுவான்கரையில் பல கிராமங்கள் எரிந்து கொண்டிருப்பதுடன் எங்கும் பெரும் புகைமண்டலமாயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் உன்னிச்சை மற்றும் பாவற்கொடிச்சேனையை அண்டிய பகுதிகளில் கடும் மோதல் இடம்பெற்ற நிலையிலேயே படுவான்கரைப் பகுதி நோக்கிஇ வெள்ளி இரவு முதல் அகோர தாக்குதல் நடைபெற்று வருகிறது. நேற்றுக் காலை அம்பாறை எல்லைப் புறத்திலுள்ள படை முகாம்களிலிருந்தும் புளுக்குணாவ மற்றும் மகா ஓயா விஷேட அதிரடிப் படை முகாம்களிலிருந்தும் படுவான்கரை பகுதி நோக்கி பல்குழல் ரொக்கட் தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்…

    • 0 replies
    • 1.2k views
  11. இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு இம்முறை பெண்கள் படைப்பிரிவிற்கும் புதியவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சேர்ப்புப் பணியக இராணுவத்தினர் தெரிவித்தனர். இராணுவத்தில் பொறியியல், வைத்தியம், ஆயுத துணைச்சேவை, தகவல் பிரிவு, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பிரிவுகளுக்கே புதியவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். தகுதியுள்ள இலங்கைப் பிரஜைகள் எவரும் இராணுவத்தில் இணைந்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த. சாதாரணதரம் சித்தி பெற்ற 5 அடி 2 அங்குலத்திற்கு மேல் உயரமான 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. htt…

  12. `மிஹின்' விமான சேவைக்கு பாராளுமன்ற அனுமதியின்றி பொதுமக்களின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசனம் பழைய விமானங்களை கொள்வனவு செய்திருப்பதாக சாடுகிறார் ரவி கருணாநாயக்க மிஹின் எயார்' விமான சேவைக்கு பாராளுமன்றத்தின் அனுமதியின்றி பொது மக்களின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயணிகளின் விமான சேவைக்கு உதவாத பழைய விமானமே கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை, மிஹின் லங்கா நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசிய போதே ரவி கருணாநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார். …

    • 2 replies
    • 983 views
  13. கைதாகி காணாமற் போன 5 இளைஞர் சடலங்கள் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் மட்டக்களப்பு, பட்டிருப்பு பாலத்தில் கடந்த 15 ஆம் திகதி படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போன ஐந்து இளைஞர்களதும் சடலங்கள் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை நள்ளிரவு மட்டக்களப்பு நகரில் நான்கு படை முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பதில் தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்களெனக் கூறி ஒன்பது இளைஞர்களது சடலங்களை வியாழக்கிழமை படையினர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்திருந்தனர். இதில் நால்வரது உடல்கள் தங்களது போராளிகளுடையவையெனக் கூறி அவற்றை புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பெற்றிருந்தனர். ஏனைய ஐந்து இளைஞர்களது சடல…

  14. எலிக்காய்ச்சலால் 3 பேர் மரணம் கம்பஹாவில் வேகமாக பரவுகிறது கம்பஹா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும் இதனால், 3 பேர் மரணமடைந்திருப்பதுடன் 25 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தினார். எலிகளின் சிறுநீர் தண்ணிரில் கலந்து அதன் மூலம், ஏற்படும் கிருமித் தொற்று காரணமாகவே எலிக்காய்ச்சல் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நீர்நிலைகள் மற்றும் சிறுகுழிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் எலிகள் சிறுநீர் கழித்து அது மனிதர்களில் காணப்படும் சிறுகாயங்கள் மூலம் உட்செல்வதாலும் எலிகாய்சல் பரவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இக்காய்சல் காரணமாக இது வரை 3 பேர் மரணமடைந்துள்ளதுடன் 25 க்கும் ம…

  15. கடல்கோளினால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் வீடு தருமாறு கோரி கூரை மீது இருந்து மறியல் கடல்கோளினால் வீடுகளை இழந்த இரு பெண்கள் தமக்குப் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாததைக் கண்டித்து வீட்டுக் கூரை மீது ஏறி அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. பலப்பிட்டியில் கடல்கோளினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் திட்டத்திற்கு இவ்விரு பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அதிகாரிகளும் உறுதியளித்திருந்தனர். சில நாட்களாக இவ்விரு பெண்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட ஏனையோருக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக இரு பெண…

  16. காக்கைதீவு - கல்லுண்டாய் கடற்கரை பகுதியில் பயன்தரு வளங்களை அழிக்கும் படையினர் யாழ்ப்பாணம் காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய்க் கடற்கரைப் பகுதிகளிலுள்ள பற்றை, நிலக்கீழ் வளரிகளை கடற்றொழிலாளர்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அழித்து வருகின்றனர். காலையில் கடலுக்குச் செல்ல அனுமதிக்கும் தொழிலாளர்களிடம் மாலையில் பற்றைகளை வெட்ட வரவேண்டுமென்று வலுக்கட்டாயப்படுத்தி வருவதாகத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்படி கடற்கரையோரங்களில் தினமும் நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர்கள் பற்றைகளை அழித்து வருகின்றனர். யாழ். நாவாந்துறைக் கடற்கரையோரத்தில் தொடங்கி அராலி பெரியபாலம் வரையான சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரையான கடற்கரைப் பகுதியிலே இப்பற…

  17. ஏ-9 வீதி மீண்டும் திறக்கப்பட்டு வன்னிப் போக்குவரத்துக்கு அனுமதி வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலையடுத்து மூடப்பட்ட `ஏ- 9' வீதி நேற்று சனிக்கிழமை முற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது. ஓமந்தை பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் வெள்ளிக்கிழமை காலை பரஸ்பரம் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலையடுத்து படையினர் ஓமந்தை சோதனை நிலையத்தை மூடி `ஏ-9' வீதியையும் மூடினர். மறு அறிவித்தல் வரை இவ்வீதியூடான போக்குவரத்து நடைபெற மாட்டாதெனவும் படைத்தரப்பு தெரிவிக்கவே சோதனை நிலையத்தில் பணியிலிருந்த சர்வதேச செஞ்சி லுவைச் சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறினர். இந்த நிலையில், நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்த சோதனை நிலையம் மீண்…

  18. யாழ்.நல்லூரில் படையினர் மீது குண்டுத் தாக்குதல்: சிப்பாய் பலி. 4 பேர் காயம் - பண்டார வன்னியன் Sunday, 25 March 2007 09:40 யாழ் குடாநாட்டில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முற்பகல் 10.45 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இலுப்படிச் சந்தியிலுள்ள இராணுவக் காவலரண் மீது இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன், 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இதனால் ஆத்திரமுற்ற படையினர் அவ் வீதியால் சென்ற இளைஞர் மீது சரமாரியான துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டனர்.இதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்;…

  19. இராணுவச் சீருடையில் வந்து மட்டக்களப்பில் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள்: கொழும் ஊடகம் மட்டக்களப்பு மாவடிவேம்பு முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (20.03.07) தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவத்தினரின் சீருடையில் வந்து தாக்குதல் நடத்தியதாக கொழும்பு ஊடகம் தெரிவித்திருக்கின்றது. அந்த ஊடகத்தின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய சில பகுதிகள் வருமாறு: சிறிலங்காப் படையின் 12 ஆட்டிலறிப் படையின் ஒரு பிரிவு தங்கியுள்ள மாவடிவேம்பு படைத்தளத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் குமார் ஜெகொட பணியாற்றி வருகின்றார். சம்பவ நாள் முகாமின் கட்டளை அதிகாரி தனது உதவி அதிகாரியான மேஜர் கே.ஏ.சோமசிறியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது வெளிய…

    • 0 replies
    • 1.1k views
  20. மன்னார் - வவுனியா எல்லைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையின் 57 ஆவது படையணியே பங்கு பற்றியிருந்தது என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்திருக்கின்றார். அவரின் பத்தியில் சில முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து படையினரின் 57 படையணி நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. முதலில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 4 கிலோ மீற்றர் தூரம் வரை முன்னேறியிருந்த படையினர் அன்று இரவு மூண்ட பெரும் சமரைத் தொடர்ந்து தமது நிலைகளுக்கு தந்திரமாக பின்வாங்கி இருந்தனர். இச்சமரில் 9 படையினர் கொல்லப்பட்டுள்ள…

  21. மக்கள் - சிவாஜிலிங்கம் எம்.பி.இவ்வாறு கூறினார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 25 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்தவேண்டியிருப்பதாக கூறி ஏ-9 பாதையை மூடி அரசாங்கம் கப்பலில் யாழ். குடாநாட்டுக்கு பொருட்களை அனுப்பும் இன்றைய சூழ்நிலையில், புலிகளுக்கு வரிசெலுத்திய காலத்தைவிட பன்மடங்கு அதிக விலைகொடுத்து பொருட்களை வாங்கவேண்டிய நிலைக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் ஆளாகியுள்ளனரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாட்டரசிறை மற்றும் பொருளாதார சேவை விதிப்பனவு திருத்தச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் பேசும்போதே சிவாஜிலிங்கம் எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகைய…

    • 0 replies
    • 879 views
  22. என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ? [24 - March - 2007] "வெலிக்கடைச் சிறை எமக்கு வெண்ணிலா அறை" அன்று காசி ஆனந்தன் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது பாடிய பாடலாகும். ஆனால், நடைமுறையில் இன்று வெலிக்கடைச் சிறை எம் விடுதலைப் போராளிகளுக்கு வெந்துயர் தருகின்ற வெஞ்சிறையாக விளங்குகின்றது. கவிஞரின் மேற்குறித்த கூற்று அவரின் கற்பனை வளத்திற்கும் உள்ள உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும். எதையும் தாங்கும் இதயத்தோடு தான் எமது போராளிகள் போராட வேண்டும். எத்தகைய விளைவுகளையும் ஏற்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கூற்று எழுந்தது. ஆனால், அண்மையில் களுத்துறைச் சிறை, வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, பெண்கள் பிரிவுச் சிறை போன்ற பகுதிகளை அடிக்கடி பார்வையிட்டதன் விளைவு எமத…

    • 4 replies
    • 1.9k views
  23. ஞாயிறு 25-03-2007 00:57 மணி தமிழீழம் [தாயகன்] 8 மாதங்களில் 3 இலட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் இடப்பெயர்வு தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த 8 மாத காலத்தில் 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் யாழ் குடாநாட்டில் முன்னரங்க நிலைகளில் இருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தற்காலிகமாகக் குடியேறியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தங்கியுள்ளனர். வவுனியாவில் இந்த ஆண்டிலேயே அதிகளவு மக…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இந்தியத் தூதுவர் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்காவிற்கான இந்தியத் தூதுவரைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்து விளக்கியுள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் சிறீலங்காப் படையினர் தமிழ் மக்களின் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் மக்களின் அவல வாழ்வு தொடர்பாகவும் எடுத்து விளக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியத் தூதுவருடனான நேற்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இரா. சம்மந்தன், மாவை செனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனித அவலம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.