ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா கடும் தாக்குதல் [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 05:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கடந்த வருடம் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன் குறிப்பாக போர் நிறுத்தம் முறிவடைந்தது மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான தாக்குதலின் பின்னர் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ளது. மனித உரிமைகளும் தொழிலாளர்களுக்குமான அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினால் சிறிலங்காவில் 'மனித உரிமை செயற்பாடுகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 15 பக்க அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அறிக்கையில் மேல…
-
- 4 replies
- 1.5k views
-
-
[Wednesday March 07 2007 11:00:40 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொண்டர் நிறுவனமான அக்ஸன் பெயிம் அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மரணமான சம்பவம் ஒரு கொலைச் செயல் என, அது குறித்த மரண விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் கந்தளாய் நீதிமன்றத்தில் நடந்த இது தொடர்பான மரண விசாரணையின் போது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச இந்தத் தீர்ப்பை அறிவித்தார். அத்துடன் இந்த மரணங்கள் குறித்த புலன் விசாரணைகளை பொலிஸார் தாமதமின்றி நடத்த வேண்டும் என்றும், சாட்சிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார…
-
- 8 replies
- 1.7k views
-
-
யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்? சிங்கள வெளிநாட்டு அமைச்சரை லண்டனில் சந்தித்து தமிழருக்கு ஏதாவது பிச்சை போடுங்கோ என்று காலில விழுந்து கேட்டுதாம். அதை ரி.பி.சி தமிழோசை பேட்டி எடுத்து போட்டது. இன்றைய ரி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பப்பட்டது நக்கி வாழந்த தமிழ் நாய்
-
- 6 replies
- 2.7k views
-
-
இலங்கை அரசுமீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் ! இலங்கை அரசுமீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க-வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்று தலைப்பில் 6-3-2007 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்று தொடக்கவுரையாற்றினார். அடுத்து திராவிடர் இயக்-கத் தமிழர் பேரவையின் மாநில அமைப்பாளர் சுப. வீரபாண்டியன் ஈழத் தமிழர்களின் அவலங்களையும் பார்ப்-பனர்கள் கொச்சைப்படுத்தும் செயல்களையும் மிக விளக்க-மாக எடுத்து…
-
- 0 replies
- 889 views
-
-
இராணுவப் போர்க்கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்த ஐந்து பேரைப் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர். கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களது உறவினர்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஊடாக இன்று கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் 11ஆம் திகதி முகமாலையில் இடம்பெற்ற சமரில் இராணு வத்தைச் சேர்ந்த ஒருவரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்பகுதி யில் இடம்பெற்ற கடற்சமரின்போது நான்கு கடற்படையினரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். முகமாலையில் இடம்பெற்ற சமரின் போது விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்…
-
- 21 replies
- 4.3k views
-
-
மிருசுவில் சிறிலங்காப் படைத்தளப் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு. யாழ்ப்பாணம் மிருசுவில் சிறிலங்காப் படைத்தளப் பகுதியில் இன்று காலை 9.00மணிக்கு பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதன் போது இரண்டு படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. இருந்த போதிலும் பல படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என சுயாதினத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1k views
-
-
முகமாலை, கிளாலி மற்றும் அலம்பில் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் தாக்குதல். முகமாலை, கிளாலி மற்றும் அலம்பில் பகுதியிலும் சிறீலங்கா வான்படையினரின் கிபிர் விமானங்கள் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் முன்னரங்கப் பகுதிகளை வட்டமிட்ட 4 கிபிர் விமானங்கள் இக்குண்டு வீச்சை நடத்தியுள்ளன. இதேநேரம் இன்று கலை அலம்பில் பகுதியிலும் சிறீலங்கா வான் படையினரின் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்றைய தாக்குலின் போது ஏற்பட்டுள்ள தேசவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. -Pathivu-
-
- 0 replies
- 946 views
-
-
மலையகத்திற்கு தனி உளவுப் பிரிவு ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:30 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்டறியும் முகமாக சிறப்பு உளவுப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக" ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரி.ஜே.மிஸ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "ஊவா மாகாணத்தின் அனைத்து காவல்துறை பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவின் மூலம் தற்போது மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து பல தகவல்களைப் பெறக்கூடியதாக உள்ளது. உளவுப் பிரிவினரின் தகவல்கள் அடிப்படையிலேயே அண்மையில் மலையகப் பகுதிகளில் பல ஆயுதங்களைக் கைப்பற்ற முடி…
-
- 5 replies
- 1.5k views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலை திட்டமிட்டவர் கைது ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:44 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்காவின் அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலை திட்டமிட்ட மணிமாறன் உட்பட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களை சிலாபம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்தகவலை இன்று புதன்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டிருக்கின்றது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "விநாயகம் மணிமாறன் என்பவர் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலின் பின்னர் மன்னாருக்கு தப்பியோடி இந்தியாவில் தஞ்சடைந்திருந்தார். பின்னர் இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற அவர் கடந்த ஜனவரி மாதம் இலங்கை திரும்பினார். இவர் …
-
- 12 replies
- 3.3k views
-
-
மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி மாட்டுப்பட்டிகளில் பராமரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்களை பிடித்துச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு படுவான்கரை தாந்தாமலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது அந்தப் பகுதியில் மாட்டுப் பட்டிகளை பராமரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர். அரசடித்தீவைச் சேர்ந்த கதிர்காமப்போடி பகீரதன் (வயது 22) அமரசிங்கம் சிவகுமார் (வயது 16) கதிராமப்போடி கோணேஸ்…
-
- 2 replies
- 1.4k views
-
-
விஜயதாச ராஜபக்ஷ மீதான அச்சுறுத்தல் விவகாரம் தன்மீது வீண்பழி சுமத்தப்படுவதாக ரணில் விசனம் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. மீதான அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக தன் மீது வீணான பழிச் சொல் சுமத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; கடந்த மாதம் இரு நாட்களாக தொடர்ச்சியாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதா…
-
- 0 replies
- 961 views
-
-
நளினி மகள் இங்கு வந்த பிறகு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அவருக்கு குடியுரிமை வழங்களாமா என்று 4 வாரத்துக்கள் பதில் அறிவிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு. நன்றி : மாலை மலர்
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்.குடா நாட்டில் ஆட்கடத்தல்கள் தொடர்கிறது மூன்று நாட்களில் ஏழு அப்பாவிகள் கடத்தப்பட்டனர் யாழ்.குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் வைத்து கடந்த மூன்று தினங்களில் ஏழு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வடமராட்சி கம்பர்மலை தோட்டவெளியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்களான வேலாயுதம் கிருஷ்ணமோகன் (வயது 19) ,கந்தையா செல்வக்குமார் (வயது 21), கோவிந்தராஜா கிருபாகரன் (வயது 22) ஆகிய மூவரும் அங்கு சீருடையில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சுன்னாகம் ஸ்ரேசன் வீதியிலுள்ள தனது வீ…
-
- 0 replies
- 595 views
-
-
கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு வழமையான ஒத்திகையென கடற்படை தெரிவிப்பு கொழும்பு துறைமுகத்திற்குள் கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஒத்திகை நடவடிக்கை யொன்றில் ஈடுபட்டனர். முன் அறிவித்தலின்றி இடம் பெற்ற கடற் படையினரின் இந்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக விடயம் அறியாத பலரும் துறைமுகத்திற்குள் சண்டை நடப்பதாக பீதியடைந்தனர். பாதுகாப்பு காரணத்துக்காக மாதாந்தம் மேற்கொள்ளும் வழமையான ஒத்திகை நடவடிக்கை என்று கடற்படையினரிடம் கேட்டபோது தெரிவித்தனர். கடற் படையினரின் கொழும்பு துறைமுக ரங்கலை கடற்படை முகாம் கடற்படையினரே இரு தரப்பாக நின்று நேரடி மோதலில் ஈடுபடுவதை செய்து காட்டி பாதுகாப்பு பயிற்சியில்…
-
- 2 replies
- 1.5k views
-
-
திருச்சி: திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பெருமளவிலான பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவரைக் கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் ஒருவரைக் கைது செய்து, 4 டன் இரும்புக் குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, தீரன் நகர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் குறித்து போலீஸாருக்குத் தகவல்கள் சென்றன. அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஒரு நபர் அவரிடம் வந்து பெரிய சூட்கேஸைக் கொடுத்துச் சென்றதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அவரது வீட்டை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு 10 மணிக்கு போலீஸ் படை அந்த இல…
-
- 0 replies
- 766 views
-
-
மற்றைய சிந்தனைகள் சமாளித்துக்கொண்டு அதிகாரத்துக்கு வருவதற்கு வழிசமைத்ததற்காக `சந்திரிகா சிந்தனைக்கு' நன்றி தெரிவிக்க வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகலையில் இரண்டு மாடி சனசமூக கட்டிடத்துக்கான அடிக்கல்லை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது. இன்று ஒருவாறு சமாளித்து ஆட்சிக்கு வந்துள்ள சிந்தனைக் காரர்கள் அனைவரும் சந்திரிகா சிந்தனைக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் நான்கு அமைச்சுக்களை தனித்து கையாண்டேன். ஆனால், ஏனைய அமைச்சர்கள் அதற்கான பெயரை சம்பாதித்தனர். நான் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு சதித்திட்டம் செய்வதாக சிலர் கதைக…
-
- 1 reply
- 880 views
-
-
கடந்த சில வாரங்களாக இப்பத்திரிகையில், ரவி சுந்தரலிங்கம் என்பவரால் தொடராக எழுதப்பட்ட 'இஸ்ரேலிய லெபனான் சர்ச்சைகள், போர்கள், உத்தேசங்கள், விளைவுகள் எமக்கான படிப்பினைகள்" என்கின்ற கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவலை நினைத்து உரலை எப்படி இடிப்பது என்பதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது. நானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்ற முறையில் சில கருத்துக்களை ஆரோக்கியமான விமர்சனத் தளத்திலிருந்து முன்வைக்க விரும்புகிறேன். விடுதலைப் புலிகளையும், ஹிஸ்புல்லாவையும் ஒன்றென தளமும் தரமுமற்ற ஒப்பீடுகளால் ஓலமிடுவதைத் தவிர்க்கும்படி இக்கட்டுரையாளர் தமது பத்தி எழுத்தை நிறைவு செய்கிறார். அதுமட்டுமின்றி மக்கள் பலமற்ற திடமில்லாத வெறும் போரொன்றை புலிகள் மேற்கொள்வதாகவும் சலிப்புறுகிறார்.…
-
- 0 replies
- 884 views
-
-
தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல். யாழ் தென்மராட்சியின் மந்திகைப் பகுதியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் 52வது படைப்பிரிவின் தலைமையகம் மீது செவ்வாய்க்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் இரண்டு படைத்தளத்திற்கு உள்ளேயும் ஒன்று படைத்தளத்திற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து குறித்த படைத்தளத்திலிருந்து மருத்துவ காவு வண்டிகள் பலாலிப் பகுதி நோக்கிச் சென்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தப் படைபிரிவு தலைமையகம் சில மாதங்களிற்கு முன்னர் வரணிக்கு மாற்ற…
-
- 17 replies
- 2.9k views
-
-
http://tamilaffairs.com/node/59
-
- 3 replies
- 2.2k views
-
-
'எனக்கு மேசை கதிரைகள் கூட இல்லை': அனுரா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:08 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "தனது அமைச்சகத்துக்கான பணிகளை செய்வதற்கு காரியாலயமோஇ அதற்குரிய பொருட்களோ இல்லை என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "எனது அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர் தான் நிர்மாணிக்கப்பட்டது. இன்று வரை எனக்கு காரியாலயமோ ஏனைய அத்தியாவசிய வசதிகளோ வழங்கப்படவில்லை. உதாரணமாக மேசைஇ கதிரை கூட இல்லை. எமது துறைகளில் வெற்றிடங்கள் உள்ளனவா என்ற கே…
-
- 12 replies
- 2.6k views
-
-
'சிறிலங்காவிற்கு அமெரிக்கா அமைதிப்படையை அனுப்பாது': அமெரிக்கா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:18 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கிற்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமானது சாதாரண பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல்களுக்கான ஒரு உடன்பாடு" என அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பில் அமெரிக்க தூதரக ஊடகத்துறை அதிகாரி ஈவான்ஸ் ஓவன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: "அமெரிக்காவின் அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் பணியாற்றுவதோ அல்லது சிறிலங்காவின் படையினரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதோ இந்த ஒப்பந்தத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஐ.நா தலையிடலாம் ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:44 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புப் பிரிவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சிறிலங்காவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எனப்படும் ஹியுமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பு உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபைக்கான மனித உரிமைகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) நான்காவது அமர்வின் போது ஆராயப்படும் என அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணி…
-
- 0 replies
- 816 views
-
-
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தை இராஜதந்திரிகள் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம் வி.திருநாவுக்கரசு- இலங்கையில் சாந்தி சமாதானம் நிலவ வேண்டுமென அங்கலாய்க்கும் எல்லா மக்களும், நாட்டு வளங்கள் யாவும் முழுமையாக அபிவிருத்திக்குப் பயன்படுத்தி நாடு சுபிட்சப் பாதையில் பயணிக்க வேண்டுமென ஆவல் கொண்டுள்ள சகல மக்கட் பிரிவினரும், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அன்றி அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றே ஆதங்கப்படுகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நாள் முதல் விடுதலைப் புலிகளுடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாகக் கூறி வந்துள்ளார். ஆனால், இன்று வரை தீர்வுக்குரிய யோசனைகள் எவையும் ஸ்ரீலங்கா சுதந்தி…
-
- 2 replies
- 944 views
-
-
ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர் சிறீலங்காவின் பொலீஸ் மா அதிபர் சிறீலங்காவில் நடந்துவரும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள், கொலைகள் பணப்பறிப்புகள் ஆகியவற்றில் சிறீலங்கா இராணுவத்தினர மற்றும் காவல்துறையின் உறுப்பினர்களும் பெருமளவில் சம்பந்தப்பட்டிருபதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆட்கடத்தல்கள் தொடர்பாக கடந்த செப்ரம்பர் முதல் 433 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் பலர் காவல்துறை உறுப்பினர்கள், இராணுவத்தினர் அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியர்கள் என்று குறிப்பிட்டார். இவர்களில் இராணுவத்தினர் எவ்வளவு பேர், காவல்துறையினர் எவ்வளவு பேர் என குறிப்பிட மறுத்துள்ளதோடு அவர்குறிப்பிட்ட கைதுகள் தொடர்பில் மே…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொழும்பில் பிரித்தானிய ஹரோவாசி கடத்தல் - பிரித்தானிய அமைச்சருக்கு சவால் விடும் "சர்வாதிகார மகிந்த குடும்பக்கும்பல்". பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் ந…
-
- 1 reply
- 1.1k views
-