Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாங்கேணி முகாம் மீது எறிகணை வீச்சு - 4 படையினர் பலி - பாண்டியன் Saturday, 20 January 2007 21:02 (சங்கதி) மட்டக்களப்பு மாவட்டம், மாங்கேணிப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பகல் நடத்திய ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பொலநறுவையில் உள்ள படைத்துறை வட்டாரங்களை மேற்கொள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற இத்தாக்குதலில் மேலும் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று திருமலையில் மகிந்தபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சனிக்கிழமையும் இதே முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் …

  2. முஸ்லீம் காங்கிரசின் கட்சித்தாவலுக்கும் அண்மையில் புத்தளத்தில் கைதான இரு ஈரானியருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்குமோ என பாதுகாப்புத்தரப்பு ஆராய வெளிக்கிட்டுள்ளதாம்.நேற்று புத்தளத்தில் நடந்த தேடுதல் இதன் பின்ணணியில் தானாம்.இவர்களின் விசாரணையில் தீவிரவாத வலைப்பின்னல்களில் சம்பந்தப்பட்டவர்களா?பாகிஸ்தான் அரசுடன் தொடர்புகளைவைத்துள்ளார்களா?ஏன் திருடினார்கள்? என்று குழப்பத்துடன் பொலிஸ் விசாரணை ஒரு புறம்?தலைமைபீடம் மறுத்தாலும் எப்படியாவது அரசில் இணையவேண்டும் என்ரு கங்கணம் கட்டிய புத்தளம் பகுதி முஸ்லீம்காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?(news from puththalam by phone)

  3. இருவாரத்தில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 27பேர் காணாமற் போயுள்ளனர். 2007ஆம் ஆண்டின் இருவாரங்களுக்குள் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதல்களில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27பேர் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 14பேர் -மட்டக்களப்பு 17பேர் -மன்னார் 5பேர் -திருகோணமலை 8பேர் -வவுனியா 13பேர் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டவர்களில் 22பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், (1)பரஞ்சோதி தனஞ்சேயன், (2) முருகானந்தன் பரமநாதன், ஆகிய இருவரும் பாடசாலைய மாணவர்கள். படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தமிழர் தாயகப் பகுதிகளில் வெளிப்படையாகவும் மறைவாகவும்…

  4. மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …

  5. கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ர…

  6. சனி 20-01-2007 14:31 மணி தமிழீழம் [மோகன்] பாதிரியார் கொலையையிட்டு சி.எஸ்.டபிள்யு கேள்வி யாழ் குடாநாட்டில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள சி.எஸ.டபிள்யு எனும் அமைப்பு தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் சப்பல் ஒழுங்கையில் வைத்து இவர் மீது சிறீலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விதமான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளை கொண்டிராதவரான கிறிஸ்தவ பாதிரியாரான நல்லதம்பி ஞானசீலனை சிறீலங்கா படைகள் எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது யாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமான ம…

  7. சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி பதவி ஏற்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 52 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரே ஒரு அமைச்சினை மட்டுமே வழங்குவதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக் குழுவினரக்கு 8 அமைச்சு பதவிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப…

  8. ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு. கடந்த ஒரு மாத காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை சிறிலங்காவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவினர் அவரை விடுதலை செய்யலாம் என பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அக் கடிதத்ததை ஏற்றுக்கொண்டதாக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்தவினால் வழங்கப்பட்ட…

  9. இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா? வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?

  10. வாழைச்சேனை ஓட்டமாவடியில் நான்கு முஸ்லிம்களைக் காணோம்! வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒமடியாமடு பகுதியில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த எம்.ஐ. தாஜுதீன் (வயது32), என்.எம். சுபைர் (வயது35), ஏ.எல். ஹலால்தீன் (வயது27), யூ.எல். முஹைதீன் (வயது32) ஆகிய நால்வருமே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 15 ஆம் திகதி ஓட்டமாவடியில் இருந்து 11 பேர் விறகு வெட்டுவதற்காக ஒமடியாமடுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதி ஒன்றுக்குச் சென்றுள்ளனர். மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்ற இவர்களில் இரண்டு குழுவினர் வீடு வந்து சேர்ந்துள்ளனர். ஏனைய குழுவை…

  11. இரட்டை வேட அணுகுமுறையால் அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு. "சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது'' இப்படி ஒரு பேச்சு மொழி வழக்கு, நம் மத்தியில் உள்ளது. அமைதி முயற்சிகளை அரசு கையா ளும் விடயத்தைப் பார்க்கும்போது இந்த மொழித் தொடர்தான் நினை வுக்கு வருகின்றது. ஒரு புறம் இராணுவப் போர்வெறித் திட்டம். மறு பக்கத்தில் அமைதி முயற்சிகள் குறித்து சர்வதேச மட்டத்தில் ஆரவாரப் பிரசாரம். இந்த இரட்டைவேட அணுகுமுறை, நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத் தப் போகின்றது? மட்டக்களப்பு, வாகரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றும் இறுதித் தாக்குதலை இலங்கை அரசின் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது என்று கொழும் பில் அறிவிக்கப்படுகின்றது. அதாவது, யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்ப…

  12. யாரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையலாம் - விலகலாம்: மகிந்த ராஐபக்ஸ. ஒவ்வொருவருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவும், விலகவும் உரிமையுண்டு. யாரும் கட்சியில் இணைவதையும் விலகுவதையும் நான் எதிர்க்கமாட்டேன் என மகிந்த ராஐபக்ஸ சிறீலங்கா சுதந்திரக்கட்சி உயர் குழு கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். தனது அரசு தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுதலையடையச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலராக மைத்திரிபால சிறீசேன மீள தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மங்கள சமரவீர பொருளாளராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்தை ரத்வத்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். -Pathi…

  13. யாழில் மாவீரர், போராளி குடும்பங்களின் விபரங்களை திரட்டும் படையினர். யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றவத்தை நவிண்டில் பகுதியில் சிறிலங்காப் படையினராலும் அவர்ளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் அங்கு உள்ள மாவீரர், போராளி குடும்பங்களின் பெயர் விபரங்களையும் தருமாறு மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-

  14. ஈச்சிலம்பற்று பகுதியில் எறிகணை வீச்சில் நான்கு படையினர் பலி. ஈச்சிலம்பற்று பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிங்கள அரச தரப்பு அறிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று பகல் 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் அனைவரும் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். -Sankathi-

  15. மன நோயாளியை தாக்கிய துணைஇராணுவக்குழுவினர். - பண்டார வன்னியன் Friday, 19 January 2007 12:31 {சங்கதி} சாவகச்சேரிச் சந்தையில் நின்ற மன நோயாளியை கடத்திச் சென்ற சிறிலங்காப் படையினரின் துணைஇராணுவக்குழுவினர் நான்கு நாட்களின் பின்னர் ஆட்கள் இல்லாத வீட்டில்கடும் சித்திரவதையின் பின்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த நான்காம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியில் நின்ற இவரை ஆயுதங்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்ட சிறிலங்காப்படையினரின் துணைஇராணுவக்குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து நிற்க்கக் கூடியதாக வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசில் முறையிட்ட போதிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை கடந்த இரண்டு நாட…

  16. வெள்ளி 19-01-2007 23:46 மணி தமிழீழம் [நிலாமகன்] வடமராச்சியில் நவிண்டில் முகாம்மீது தாக்குதல் 6 படையினர் காயம் யாழ்ப்பாணம் வடமராச்சி நவிண்டில் பகுதயில் இன்று காலை 7 மணியளவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 6 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளனர். இம் மோதல் சம்பவமானது 15 நிமிட நேரம் நீடித்துள்ளதாக இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் இப்பிரதேச மக்கள் மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/

  17. சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகளிற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்: அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துவருகின்றது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அவுஸ்ரேலிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ வாதத்தினால் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதும் குறிப்பாக பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள் மீது எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொண்டு மனிதப்படுகொலைக…

  18. கணவரிடம் சென்ற மனைவியைக் காணவில்லை. கடந்த ஒகஸ்ட் மாதம் தொண்டமானாறு செலவச்சந்நிதி பகுதியிலிருந்து கணவரின் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற மனைவி கடந்த ஐந்து மாதங்களாகிய நிலையிலும் கணவரிடம் செல்லவில்லையென யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. உசன் மிருசுவிலில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது தொண்டமானாற்றில் வசித்து வருபவரான வசந்தன் அனிற்றா (23) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் தாயார் பல இடங்கிளலும் தேடியும இவரைக் காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார். -Sankathi-

    • 2 replies
    • 1.8k views
  19. காட்டுப் பகுதியில் பயிற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டு கொமாண்டோ வீரர்களினதும் சடலங்களை பொலிஸார் அம்பேகமுவ காட்டுப் பகுதியில் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்டுள்ளனர். தனமல்வில குடாஓய இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த இவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயுள்ளனர். 57 வீரர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியில் இவ்விருவராக பயிற்சிக்காக காட்டுப் பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன் பயிற்சி முடிவில் கொழும்பு - வெலிவாய வீதிக்கு வந்து நிற்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். எனினும், பயிற்சியின் முடிவில் 55 வீரர்களே உரிய இடங்களுக்கு வந்திருந்தனர். இதனையடுத்து, இராணுவமும் பொலிஸாரும் பல தினங்களாக தேடுதல் நடத்…

  20. மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். குடும்பிமலை கோட்டத்திற்கு உட்பட்ட திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திகிலிவெட்டை ஆற்றுப்பகுதியினூடாக இரு படகுகளில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த நால்வர் நுழைய முற்பட்டனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலின் போதே இருவர் கொல்லப்பட்டும் இருவர் உயிருடனும் பிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் ஆற்றில் வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்க…

  21. ஈழத்தமிழர் துயர் துடைக்க உதவிப் பொருட்கள் வழங்கும் மாநாடுகள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : யாழ் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க சிங்கள அரசு முயலுகிறது. நமது சகோதரத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டும் வேலை தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை வழங்குவதில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காட்டும் உற்சாகம் நம்மை நெகிழ வைக்கிறது. மக்கள் மனமுவந்து அளிக்கும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விழாக்கள் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளன. சனவரி - 24 மதுரை சனவரி - 28 விழுப்புரம் சனவரி - 30 ஈரோடு சனவரி - 31 வேலூர் பொருட்களைச் சே…

  22. அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் 'நியத்த ஜய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வழங்கல் செயற்பாட்டு முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு வழங்கலை மேற்கொள்வதற்காக கஞ்சிகுடிச்சாறு வக்கிமுட்டியா பகுதியில் அதிரடிப்படையினர் அமைத்துள்ள முகாம் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குகுதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்பட…

  23. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தில் ஒரு கட்டுரை செஞ்சோலை சிறுமிகள் படுகொலையை நியாயப்படுத்தி வெளிவந்திருகிறது.முகமாலையில

  24. டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்! கடந்த 09.01.07 அன்று டென்மார்க்கில் உள்ள கிரின்ஸ்ரட் நகரத்தில் கத்தோலிக்க தமிழர்களால் நடத்தப்படுகின்ற "டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை" என்கின்ற அமைப்பு ஒரு ஒளிவிழாவை நடத்தியது. அந்த விழாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பட்டங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் பெற்ற பட்டங்களை அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்பட்டார்கள். அதன்படி திரு. ராசா மரியா பெர்னாண்டா என்பவர் ஒளிவிளக்கை ஏற்றுவதற்காக மேடைக்கு…

  25. HOT NEWS நாகர்கோவில் மோதலில் இராணுவ வீரர் பலி****இலங்கையில் அக்கிரமத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர்****சூடுபட்ட இளைஞன் உதவி கோரி அவலக்குரல் எழுப்பியபோதும் ஒருவரும் உதவ முன்வரவில்லை-வவுனியா மாவட்ட நீதிபதி விசனம்***வவுனியாவில் ஒருவர் சுட்டுக் கொலை****முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியில் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை* `புதிய அரசியல் கலாசாரம்' வெறும் பசப்பு வார்த்தை [19 - January - 2007] [Font Size - A - A - A] ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இன நெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.