ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
ஆரையம்பதியிலிருந்து துணை இராணுவக்குழுவினர் இடமாற்றம். மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் மக்களுக்கும் சிறிலங்கா இராணுவ துணை இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து தமது பிரதேசத்தின் ஊடாக ஆயுதங்களுடன் கருணா குழுவினர் செல்வதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மக்களின் எதிர்ப்பினை அடுத்து உருவான பதற்றத்தை தணிக்கும் முகமாக இராணுவத்தின் 23-3 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் சுபசிங்காவினால் அரையம்பதியில் உள்ள கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அவரது குழுவினரும் வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிதாக வரவழைக்கப்பட்ட உறுப்பினர்கள் அரையம்பதி சிறப்பு அதிரடிப்படைருடன் முகாம் அமைத்…
-
- 0 replies
- 745 views
-
-
மகிந்த - ரணில் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவு. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பூதாகாரமாக வெடித்துக் கிளம்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்குத் தாவும் கொந்தளிப்பான விடயம் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இரு பிரதான கட்சிகளும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை பாதுகாக்க வேண்டுமென்றால், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது தரப்பினர் உள்வாங்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரச …
-
- 0 replies
- 570 views
-
-
புதன் 17-01-2007 02:43 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆயுததாரிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் 2 வயோதிபர்கள் உட்பட மூவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்களில் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளார். அடைக்கலம் புகுந்துள்ள வயோதிப பெண் முன்னர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் உயிர்தப்பியிருந்தார்.இந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை தனது கணவர் தாக்கப்பட்டு தனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக இதுவரை 38 பேர் யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் அடைக்கலம் புகுந்தள்ளதாக கூறுப…
-
- 0 replies
- 630 views
-
-
[புதன்கிழமை, 17 சனவரி 2007, 03:35 ஈழம்] [காவலூர் கவிதன்] கடந்த பல மாதங்களாக, பல்வேறு தாக்குதல்களிலும் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வரும் சிறிலங்காப் படையின் 'கஜபாகு' படையணி, தற்போதைய கிழக்கின் தாக்குதல்களில் எதிர்பார்த்ததை விட அதிக படையினரையும் இழந்துள்ளது. இதனால் அந்தப் படையணிக்குள் எழுந்துள்ள விரக்தி நிலையையும் மன உளைச்சலையும் போக்கவும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது உருவாகியுள்ள வெறுப்புணர்வைப் போக்கவும், திடீரென அரச தலைவர் தரத்தின் அதியுயர் விருதான 'பிரசிடன்ட் கலர்ஸ்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்பாடு செய்த இந்த கௌரவிப்பு நிகழ்விற்கு, இராணுவப்படை தலைமைத் தளபதி என்ற பதவியிலுள்ள மகிந்த ராஜபக்ச, பிரதம விருந்…
-
- 0 replies
- 996 views
-
-
காலம் கடத்தும் போக்கில் அரசு செயற்படுவது ஏன்? ` அலை அடங்கக் குளிப்போம் என்று கடற்கரையில் காத் திருந்தவன் கதை போல இருக்கின்றது மஹிந்த அரசின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சி. இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட யோசனையை முன்வைப் பதை இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தள்ளிப் போட்டிருப்பதாக மஹிந்தரது அரசு, எனச் செய்திகள் வெளி யாகி இருக்கின்றன. அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அரசு இப் போது முக்கியமான சில விடயங்களைக் கவனிக்க வேண்டி யிருப்பதால், தீர்வு யோசனையைத் தயாரிப்பதில் உடனடியா கக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு கருதுவதாகவும் கூறப்படுகின்றது. நல்ல வேடிக்கை இது. நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண…
-
- 0 replies
- 678 views
-
-
புதன் 17-01-2007 02:31 மணி தமிழீழம் [செந்தமிழ்] காத்தான்குடியில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் உடலம் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை காவல்துறையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.சடலம் மீட்கப்படும் போது துண்டிக்கப்பட்ட உடலும் தலையும் வேறாக காணப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான பிரகாஷநாதன் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை இவர் மட்டக்களப்பு வன்னியர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்த போது கடத்திச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி- பதிவு
-
- 0 replies
- 797 views
-
-
புதன் 17-01-2007 02:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] கல்பிட்டி பாலகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை கல்பிட்டி பாலகுடா கடலில் மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவே
-
- 0 replies
- 673 views
-
-
புதன் 17-01-2007 01:08 மணி தமிழீழம் [சிறீதரன்]பதிவு யாழ்பாண பல்கலைக்கழகம் மீளதிறப்பதில் தாமதம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நேற்று செவ்வாய் கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் யாழ்பல்கலைக்கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை 22ம் திகதி மீள ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் இன்னமும் சிலவாரங்களுக்கு மீள ஆரம்பிப்பது பிற்போடப்படுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வதிவிடங்கள் மற்றும் இதரவசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவும் பல்கலைக்கழகத்தை மீளஆரம்பிப்தில் தாமதமாவதற்கு முக்கிய காரணமாகும் எனபதில் துணைவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 805 views
-
-
ஜ.தே.க. உறுப்பினர்களை அரசுடன் இணைக்கும் முயற்சிக்கு ஜனாதிபதியிடம் ரணில் அதிருப்தி வீரகேசரி நாளேடு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவிடம் நேரடியாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் மாற்றும் முயற்சியானது இரு தரப்புக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை சீர்குலைத்து விடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 10.30 மணிக்கு ஆ…
-
- 0 replies
- 643 views
-
-
LTTE response to the accusation "Torture chambers, Cannabis, and illegal logging by LTTE" http://www.ltteps.org/?view=1836&folder=2 Sri Lanka says captures Tiger frontline, kills 30 rebels http://www.alertnet.org/thenews/newsdesk/COL212183.htm TNA MPs to join govt. claims Minister http://www.bbc.co.uk/sinhala/news/story/20...defectors.shtml பிரச்சாரங்களை நோக்காகக் கொண்ட அசம்பாவிதங்கள் கூட பல நடந்தேறலாம். இவை பற்றி தமிழ் ஊடகங்களின் நடத்தையும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
-
- 0 replies
- 948 views
-
-
4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுத…
-
- 6 replies
- 2.4k views
-
-
வவுனியாவில் கிளைமோர் 5 இராணுவம் பலி இருவர் காயம் வவுனியா புதுக்குளம் பகுதியில் வவுனியா மன்னார் வீதியில் இன்று மதியம் 5.10 மணியளவில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்துஇடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 2 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவபாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 824 views
-
-
வாகரையில் படையினர் மீது எறிகணைத் தாக்குதல்: 4 பேர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 15:55 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்திய போது பதிலுக்கு விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குலின் போதே நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக, விடுதலைப் புலிகள் முற்பகல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். …
-
- 34 replies
- 4.9k views
-
-
அம்பாறையில் சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் பெரும் முகாம் கைப்பற்றப்பட்டது குறித்து பெரிதாகப் பிரச்சாரம் செய்தது சிறீலங்கா அரசு. அந்த முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இருந்ததாகவும் முகாம் பகுதியில் போதைப் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் செடிகள் காணப்பட்டதாகவும் யானைகளின் உடற்பாகங்கள் இருந்ததாகவும் சொல்லி பெரிய ஒரு கதையே அளந்து புலிகளைப் சிறிய பயங்கரவாதக் குழுவாகக் காட்ட பகீரத முயற்சி செய்துள்ளது. அவை அதிரடிப்படை அமைத்துக் கொடுத்த கருணா குழு முகாம்கள் போல் தெரிகிறது. மூன்னர் இந்திய அமைதிப்படை யாழ் நகரில் ஒட்டுக்குழுக்கள் தங்க சித்திரவதை செய்ய அசோகா கொட்டல் பகுதியில் இப்படி ஒரு முகாமைப் பரிகரித்து வந்தது. இது குறித்து ரெயிட்டருக்கு விளக்கிய இளந்திரையன் அப்படி முக…
-
- 0 replies
- 885 views
-
-
பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் [15 - January - 2007] [Font Size - A - A - A] (தினக்குரல்) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை. அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை.…
-
- 4 replies
- 1.5k views
-
-
வாகரைநோக்கி படையினர் முன்னேற்ற முயற்சி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:27 வாகரை நோக்கி இன்று அதிகாலை மாங்கேணி, கஜூவத்தை ஆகிய படைமுகாம்களிலிருந்து கடும் எறிகணை வீச்சுடன் படையினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி நடவடிக்கைகளை மேற்கெண்டவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. . http://www.sankathi.org/news/
-
- 6 replies
- 1.9k views
-
-
குருநாகல் கூட்டத்தில் ஹக்கீம் வேதனை அரசுடன் இணைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமானால் எம்முடன் புரிந்துணர்வும், இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். எமது நேர்மைக்கு சமமான பிரதிபலிப்புகள் காட்டப்படுகின்றன. ஆனால், அதைச் சீர்குலைக்க சில சக்திகள் அல்லது தனிநபர்கள் முன்வந்தால் அதனை அரசாங்கம் பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து பெற்ற ஆணைக்கு அமைவாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சில விடயங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ரவூப் ஹக்கீம் அங்கு எடுக்கப்படும் முடிவு மாவட்ட மட்டமாக அன்றி தேசிய ரீதியில் கூட்டாக எடுக்கும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித…
-
- 0 replies
- 851 views
-
-
[Tuesday January 16 2007 05:38:44 AM GMT] [uthayan.com] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்துகொள் ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துவிடாதவாறு செயற் படவேண்டும். இவ்வாறு இந்தியாவும், அமெரிக்காவும் தனித்தனியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. * ஆளுங்கட்சியின் பிரதான கட்சியாக விளங்கும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கடந்த ஒக்ரோபரில் செய்துகொள்ளப்பட்ட புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய முதன்மை நோக்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காண்பதில் இரு தரப்புகளும் ஒத்துழைத் துச் செயற்படுவது என் பதே ஆகும். * அது …
-
- 0 replies
- 984 views
-
-
வெருகலில் பொது மக்கள் குடியிருப்பு மீது ஸ்ரீலங்கா விமானப் படை குண்டு வீச்சு. எழுதியவர் ஆரையம்பதி கார்த்திகா Tuesday, 16 January 2007 வெருகலில் பொதுமக்கள் குடியிருப்பு மீது ஸ்ரீலங்காவின் வான்படைக்குச் சொந்தமான கிபீர் மிகையொலி விமானங்கள் இன்று காலை தாக்குதலை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த வான் வாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தம்மீது தாக்குதல் நடத்த திரண்டிருந்த புலிகள் மீதே விமானங்கள் குண்டு வீசியதாக ஸ்ரீலங்காவின் வானப்படைப் பேச்சாளர் தெரிவித்தள்ளார். http://tamilnews24.com//index.php?option=c...15&…
-
- 0 replies
- 818 views
-
-
கண்காணிப்புக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் புதிய தீர்மானங்களின்படியே அமையும். - தோப்பனூர் ஒமர்சன். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 08:07 இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் பயிற்சிப்பட்டறையில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்களுக்கு அமையவே இருக்கும் எனக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோப்பனூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பினரை தனித்தனியாக இவ்வாரம் இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 754 views
-
-
வவுனியாவில் கிளேமோர் - இரண்டு பொலிஸார் பலி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:43 வவுனியாவில் இன்று காலை 8.10மணியளவில் கச்சேரிக்கு அருகாமையில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு பொலிஸார் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.org/news/index.php?opt...66&Itemid=1
-
- 0 replies
- 717 views
-
-
செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 05:19 ஈழம் (அ.அருணாசலம்) மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில், மட்டக்களப்பில் சமீப காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களும் காணிப்பிரச்சனை தொடர்பாக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் காத்தான்குடியில் இடம்பெற்ற பதற்றம் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவது, மக்களை அச்சுறுத்துவது, காத்தான்குடியில் வன்முறையில் ஈடுபடுவது தொடர்பாக மட்டக்களப்பு காவல்துறை சுப்பிரின்டற் மக்சி …
-
- 0 replies
- 790 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கட்சி தாவத் தயாராகவுள்ள 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை மகிந்தவை சந்தித்து, அரசுக்கு ஆதரவு வழங்கும் தமது திட்டம் தொடர்பாக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு தொடர்பாக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளதாவது: எமது குழுவில் சிலருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன. அது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். எமது தரப்பில் முன்னாள் பிதித்தலைவர் கரு ஜெயசூர்ய உட்பட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நாட்களில் அரசில் இணையவுள்ளனர். அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச…
-
- 1 reply
- 722 views
-
-
"சந்திரிக்கா குமாரதுங்காவின் அதிகாரங்களை ஒழிப்பதற்கும் விடுதலைப் புலிகளுடன் போராடவும் நாம் பிரச்சாரங்களை மேற்கொண்டோம். அதன் பயனாக இடைக்கால தன்னாட்சி சபை என்ற இடைக்கால தீர்வுத்திட்டத்தை நிறுத்திவிட்டோம்" என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் அந்த அமைப்பின் பிரச்சாரச் செயலாளருமான விமல் வீரவன்ச 'போரும் சமாதானமும்' என்ற தலைப்பில் மாத்தளை நகர மண்டபத்தில் பேசும் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு விரைவில் 5 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இந்த சட்டவிரோத உடன்பாட்டை 5 வருடங்கள் பூர்த்தி செய்யவிடாது தடுக்கும்படி நாம் அரசை கேட்டுக்கொள்கிறோம்" எனவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 729 views
-
-
வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் தலைவர்கள் பிரிப்புக்கு உதவ விதித்த நிபந்தனைகள் எவை? [15 - January - 2007] [Font Size - A - A - A] ஜ{தினக்குரல்} -ஏ.சீ.எம். கலீல்- வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வடக்கு- கிழக்கு பிரிப்பின் மூலம் முஸ்லிம் மக்கள் பெறப்போகும் நன்மைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவராக இருப்பதை உணர வேண்டும். கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களின் செல்வாக்கும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது என்பதை முஸ்லிம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் . வடக்கு- கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவில்லை …
-
- 2 replies
- 1.4k views
-