Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் நாள் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் கூறியதாவது: இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை இதுவரையில் கொண்டு வந்தது இல்லை. பாதுகாப்புச் சபையின் அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது? 1988, 1989 ஆண்டுகளில் ஜெனீவாவில் மனித உரிமை மீறல் குறித்து கவனமெடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று ஐக்…

  2. தமிழ் முஸ்லீம் மோதல்களை உருவாக்க கருணா குழு சதி எழுதியவர் மட்டக்களப்பு - உதயகுமார் Wednesday, 10 January 2007 மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதல்களை உருவாக்குவதற்கு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் கருணா குழு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இச்சதி வேலைகளை திட்டமிட்டு அதை செயற்படுத்தும் பொறுப்பை கருணா குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் அறியாது இராணுவத்தினரினதும் கருணா குழுவினரினதும் சதி வலைகளில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்பதி தமிழ் கிராம மக்களுக்கும் காத்தான் குடியில் உள்ள மு…

    • 0 replies
    • 878 views
  3. திருகோணமலையிலும் கருணா குழுவால் தமிழ் பத்திரிகைகளுக்கு தடை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 10 January 2007 திருகோணமலை மாவட்டத்தில் தினக்குரல் சுடர்ஒளி ஆகிய தமிழ் தினசரிப்பத்திரிகைகளை விற்பனை செய்வதற்கும் கொழும்பிலிருந்து திருமலைக்கு அப்பத்திரிகைளை எடுத்து செல்வதற்கும் இராணுவ ஒட்டுக்குழுவான கருணாகுழு தடை விதித்துள்ளது. தினக்குரல் சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகளை எடுத்து வரக்கூடாது என்றும் விற்பனை செய்யக்கூடாது என்றும் அதை மீறினால் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என மேற்படி பத்திரிகைகளின் திருகோணமலை முகவர்களுக்கு கருணாகுழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. தினக்குரல் சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் விற்பனை செய்வதற்கு கருணாகுழு தடைவித்த…

    • 0 replies
    • 740 views
  4. இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட மாணவன் விடுதலை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 10 January 2007 யாழ். கொக்குவில் கிழக்கில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினராலும் ஈபிடிபியினராலும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு விஞ்ஞானபீட மாணவன் மிகக்கொடூரமான சித்திரவதைகள் அச்சுறுத்தல்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடி உதவியுடன் கொக்குவில் பகுதிக்கு வந்த ஈபிடிபி துணைக்குழு உறுப்பினர்கள், அருணகிரிநாதன் நிருபராஜ் என்ற இந்த மாணவனை, பலாத்காரமாக கடத்தி சென்றனர். இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், அவரது வீட்டிற்கு முன்…

    • 0 replies
    • 613 views
  5. கருணாகுழு சிறிலங்கா பாதுகாப்பு படையின் ஒரு பகுதியென அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. Sri Lankan government lye expose by them self. The international medias who gets their news about the conflict in Sri Lanka from The Sri Lankan defence ministry today writs that at episode has taken place between the LTTE and the Paramilitary Karuna group, and that the government forces has found 4 dead bodies of LTTE fighters. This news has also been broadcasted via the international AFP agency, but the Sri Lankan Media Centre for National Security and srilankan army website explains the same episode with the headline saying, 4 LTTE fighters killed by Security forces. Karuna g…

    • 3 replies
    • 1.9k views
  6. யாழ் பல்கலைக்கழக மாணவன் நிருராஜ் பற்றை ஒன்றினுள் குற்றுயிருடன் மீட்பு யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் இறுயாண்டு மாணவன் அருணகிரிநாதா நிருபராஜ் குற்ருயிருடன் உறவினர்களால் மீட்கப்பட்டுள்ளார். கடும் சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இவர் பற்றை ஒன்றினுள் நேற்றிரவு மீட்கப்பட்டு யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கல்விச் சமூகத்தின் பெரும் அழுத்தம் காரணமாக இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com

  7. புதன் 10-01-2007 17:04 மணி தமிழீழம் [முகிலன்] இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இம்மாதம் 27ம் நாள் நடத்த காலியில் ஏற்பாடு இலங்கைக்கு உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு இந்த வருடம் ஸ்ரீலங்காவின் தென்பகுதி நகரான காலியில் நடத்தப்படவுள்ளது இம்மாதம் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை காலியில் உள்ள வெளிச்ச வீட்டு விருந்தினர் விடுதியில் இந்த மகாநாடு நடத்தப்படவுள்ளது இதில் அமெரிக்கா பிரித்தானியா ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகளினதும் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் இந்த நாடுகளினால் 120 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றிருந்தது இந்த வருடம் அதனை விட கூடுதலான…

  8. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் அமைந்திருந்த சிங்களப் படைகளின் துணை ஆயுதக்குழுவான கருணா கும்பலின் இரு முகாம்கள் மீது இன்றிரவு 8.30 மணியளவில் அதிரடித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழைச்சேனையில் அமைந்திருந்த இரு முகாம்கள் மீதே இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கருணா கும்பலிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நெட் இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சங்கதி

    • 22 replies
    • 5.7k views
  9. மேர்வின் சில்வா கூறுகிறார் துட்டகைமுனு அரச பரம்பரையிலிருந்து வந்தவரே நாட்டில் இன்று ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். நானும் அப்பரம்பரையிலிருந்தே வந்தவன். எனவே, பயங்கரவாதத்திற்கு ஒரு போதும் அடிபணியப் போவதில்லையென பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். நுகேகொடையில் ஐக்கிய மக்கள் இயக்கம் நடத்தவிருந்த கூட்டம் அசம்பாவிதங்களால் நிறுத்தப்பட்ட பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் புலிகளின் ஆறு முகாம்களை எமது படையினர் கைப்பற்றியுள்ளனர். ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவோம். நுகேகொடையில் இடம்பெறவிருந்த கூட்ட மேடைக்கு வந்த சிலர் அங்கு அசம்பாவிதங்களை மேற்கொண்ட…

  10. பிரதியமைச்சர் மேர்வின் மீது ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய மக்கள் இயக்கத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு நுகேகொடை சந்தியில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சென்ற கோஷ்டியினால் குழப்பப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.இச்சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர். நுகேகொடை சுப்பர்மார்க்கெட் சந்தியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. யுத்தத்தை உடன் நிறுத்தி அதிகாரப் பரவலாக்கல் மூலம் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்தப் பொதுக் கூட்டம் நடைபெறவிருந்தது. க…

  11. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான போட்டியில் இலங்கைக்கான வாய்ப்பை இந்தியா நாசமாக்கியதாக ஜயந்த தனபால தெரிவித்த குற்றச்சாட்டை இந்திய இராஜதந்திரி சசிதரூர் நிராகரித்திருக்கிறார். இலங்கை வேட்பாளருக்கு சிறிதளவு வாய்ப்பு இருக்குமென்று தான் கருதியிருந்தால் இந்த போட்டிக்குள் நுழைந்திருக்கவே மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகள் ஒன்றுபட்டு ஒரு வேட்பாளரின் பின் அணி திரண்டிருப்பது கட்டாயமானது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பரந்தளவு ஆதரவு இருப்பது சந்தர்ப்பம் கிடைப்பதற்கு அவசியமானதாகுமென தனபாலவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் சசி தரூர் தெரிவித்திருக்கிறார். உறுதியான ஆதரவை எந்த வேட்பாளர் பெற்றிருக்கிறார் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்…

  12. சிங்களத்தில் ஏசினால் கண்காணிப்புக் குழுவிற்கு விளங்குமா? ஹெகெலிய ரம்புக்வெல மீது விமல் வீரவன்ச சீற்றம். - பண்டார வன்னியன் Wednesday, 10 January 2007 12:20 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தேவையில்லாமல் தொடர்ந்தும் கடைப்பிடிக்காமல் கண்காணிப்புக் குழுவினரையும் நாட்டை விட்டு வெளியேற்றி புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு சம அந்தஸ்த்து வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐந்து வருட காலம் நிறைவடையப்போகின்றது. இவ்வாறு அதி…

  13. இருசாராரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும்: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் - பண்டார வன்னியன் Wednesday, 10 January 2007 12:27 கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் யுத்தம். இலங்கையில் எவ்வித நன்மையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக யுத்தத்தை முற்றாக நிறுத்தி சம்பந்தப்பட்ட இரு சாராரும் சமாதான பேச்சு வார்த்தைக்கு வருவதன் மூலமே பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வினை எட்ட முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளக் தெரிவித்தார். நேற்று காலை கண்டி டி.எஸ்.சேனாநாயக்கா ஞாபகார்த்த பொது நூலகத்தில் அமைந்துள்ள அமெரிக்க கோனரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவ…

  14. தென்னிலங்கையில் பொதுப்போக்குவரத்தினை தவிர்க்கும் மக்கள் தென்னிலங்கையில் அண்மையில் பேரூந்துகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை தொடர்ந்து அரச பேரூந்து மற்றும் தொடரூந்துகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்த போதும் மக்கள் பொதுப்போக்குவரத்துச் சேவையினை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. தனியார் பேரூந்து நிறுவனங்களின் தகவல்களின் படி தாக்குதலின் பின்னர் மக்கள் பேரூந்தை பயன்படுத்துவது 35 வீதம் குறைந்துள்ளதுடன் தொடரூந்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் தமது சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அரசின் பாதுகாப்பு உறுதிமொழிகளை மக்கள் நம்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பயணிகளின் ப…

  15. அரசியல் தீர்வு முயற்சியை விரைவுபடுத்துங்கள்: மகிந்தவிடம் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா அரசு இராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக்கிய அதே சமயம் இனப்பிரச்சனைக்கு அரசியல் வழிகளில் தீர்வு காணும் நடவடிக்கைகளை மந்தமாக்கியுள்ளது என்று நேற்று செவ்வாய்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3-5 வரை நடைபெறவுள்ள 14 ஆவது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை மகிந்த ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது, இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பான இந்திய அரசின் கருத்தையும் வெளியுறவுத்துறை அமைச்ச…

  16. தனது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்த யுத்த வெற்றிகளை நாடுகிறார் மஹிந்தா கிழக்கில் புலிகளைத் தோற்கடித்து,இந்த மாகாணத்தை முற்றாக விடுவித்த பின்னர், அதனால் கிடைக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவும் யுத்த வெற்றிகளைத் தமது அரசியல நிலைமையை ஸ்திரப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருக்கின்றார் எனத் தெரிகின்றது. லண்டனிலிருந்து வெளியாகும் ‘தபினான்ஸியல் டைம்ஸ்’ பத்திரகையில் ஜோ.லெகி என்பவர் வரைந்த அரசியல் கட்டுரையில் இவ்வாறு மதிபாய்வு செய்யபட்டிருக்கின்றது. அக் கட்டுரையின் முக்கிய சாராம்சங்கள் வருமாறு : ஜனாதிபதி மஹிந்தத தனது வெற்றிக்குத் தாமே இரையகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியவராகியிருக்கின்றா…

  17. நாடாளுமன்றத்தில் நேற்று விமல் வீரவன்ஸ அறிக்கை விடுத்து உரை. தேசத்திற்கு விரோதமான முறையில் செய்து கொள்ளபட்ட – புலிகள் தொடர்ந்தும் வன்முறை நடவடிக்கைகளை முன்னெடுததுச் செல்லக் கருவியாகப் பயன்படுத்துகின்ற – சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடாப்பட்டு 5 வருடங்களை நிiவு செய்கின்றது. ஐந்து வருடங்கள் முடிவடையும் முன் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அரசு கிழித்தெறிய வேண்டும். இவ்வாறு ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றில விசேட அறிக்கையொன்றில் வெளியிட்டு உரையாறுகையில் கூறினார். ... \\யுத்த நிறுத்த ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அமைதிப் பே…

  18. வாளைச்சேனையில் கருணா குழுவினர் மூன்று முகாம்கள் தாக்கியழிப்பு: 20க்கு மேற்பட்டோர் பலி! பலர் காயம். செவ்வாய் 09-01-2007 22:43 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மட்டக்களப்பு வாழைச்சேனையில் அமைந்துள்ள கருணா ஒட்டுக்குழுவினரின் மூன்று முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் எம்மிடம் கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில்....... நேற்றிரவு (செவ்வாய்) 8.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தொடக்கம் 25 வரையிலான ஒட்டுக்குழுவினர் பலியாகியதோடு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள…

  19. இனப் பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கு உரிமையில்லை: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை நடத்திவரும் இந்திய அரசாங்கத்துக்கு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரச்சினையில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி. நாடர்ளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினையை இந்திய அரசு போர் ரீதியாகக் கையாள்கின்றது. காஷ்மீர், குஜராத் பகுதிகளில் இந்திய இராணுவத்தினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின…

  20. தமிழ் - முஸ்லிம் நல்லுறவை துணை இராணுவக்குழுவினர் சீரழிக்கின்றனர்: ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினர் சீரழித்து வருவதாகவும் அரசு அவர்களை கட்டப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: கருணா குழுவினரது செயற்பாடுகளை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றது. அந்த குழுவினர் தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். வாகரையிலிரு…

  21. செவ்வாய் 09-01-2007 16:50 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பை அண்டிய பகுதிகளில் 40 தமிழர்கள் கைது இன்று செவ்வாய்கிழமை கொழும்பை அண்டிய புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 40 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பை தொடர்ந்தே மிருவாங்கொட, நிகம்பு, வத்தளை, கம்பகா ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை இரவு, மற்றும் செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போNது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பதிவு

  22. வெருகலை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒருவர் பலி- 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம் திருகோணமலை மாவட்டம் வெருகல் சூரநகர்ப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில் இடம்பெற்றது. ஈச்சிலம்பற்றுப் பகுதியிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த பொதுமக்களில் 550 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கதிரவெளி மற்றும் வாகரைப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு தொடர்வதாலும் தொடர் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனாலும் வாகரையை நோக்க…

  23. சர்வதேச சமூகத்தின் மீதும் குற்றப் பொறுப்பு விழுகிறது நிட்டம்புவவிலும், ஹிக்கடுவவுக்கு அருகில் மீட்டியகொட விலும் கடந்த வாரத்தில் இருபது மணி நேர வித்தியாசத்தில் இடம்பெற்ற இரு வேறு பஸ் குண்டு வெடிப்புகளில் அப்பாவிப் பொதுமக்கள் 21 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். 75 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இக்குண்டு வெடிப்புகள் விடுதலைப் புலிகளின் சதி நாச வேலை என்று அரசு குற்றம் சுமத்தியிருக்கின்றது. ஆனால், புலி களோ அதை மறுத்துள்ளனர். இந்தக் குண்டு வெடிப்புகளுக் கும், தங்களுக்கும் தொடர்பு ஏதுமில்லை என அவர்கள் தெரி வித்துள்ளனர். ""புலிகளுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், எவ்வித ஆதாரங்களும் அற்ற நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு புலிகள் மீது சுமத்…

  24. அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது அமைச்சர் தலைமையிலான குழுவினர் தாக்குதல். கொழும்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது சிறிலங்கா அமைச்சர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினர். ஐக்கிய மக்கள் இயக்கத்தின் சார்பில் நுகுகொட சந்தியிலிருந்து போருக்கு எதிரான அமைதிப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது அமைச்சர் மெர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ராவய ஊடகவியலாளர் அஜித் செனிவிரத்ன, அமைதிப் பேரணியினரின் மேடையை நோக்கி நான…

  25. யாழில் இளம் பெண்ணொருவர் காணமற்போயுள்ளார். யாழ் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த தமது உறவினரை கடந்த 5ம் திகதி பார்க்கச் சென்ற யாழ் தென்மராட்சி மந்துவில் பகுதியைச்சேர்ந்த வசந்தகுமார் பிரியா(26) என்ற இளம்பெண்ணொருவர் காணமற்போயுள்ளார். கடந்த காலங்களில் பாடசாலைக்குச் சென்ற கிருஷாந்தி, தமது உறவினர் வீட்டுக்குச் சென்ற தர்சினி ஆகியோர் இதேபோன்று காணமற்போய் பின்னர் சிறிலங்காப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.