ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
அக்கரைப்பற்றி;ல் மேசன் தொழிலாளி ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று -7- வீரமகாளிஅம்மன் கோவில் வீதியில் வசித்து வரும்இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை நவரட்ணம் (வயது 23) என்பவரே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். நேற்று முன்தினமிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் இரவு உணவை உட்கொண்டிருந்தபோது இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கருணாகுழு உறுப்பினர்கள் இவரை அழைத்து சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவர் அக்கரைப்பற்று அஷ்ரப் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித…
-
- 0 replies
- 852 views
-
-
இலங்கை: புலிபாய்ந்தகல் நோக்கிய உடுருவல் முயற்சி முறியடிப்பு: இரு கருணா குழுவினர் பலி! 10 பேர் காயம் 3 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் நோக்கி சிறீலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னெடுத்த ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். இன்று கலை 7.30 மணியளவில் கிண்ணியடி பிரம்படித்தீவுப் பகுதியின் ஊடாக ஊடுருவிய இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் குடும்பிமலை கோட்டப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்டுகள்சேனையில் இருந்த போராளிகள் மீது தாக்குதலைத் தொடுத்த போது இருதரப்பினரிடை உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.…
-
- 0 replies
- 988 views
-
-
புலிகளை தடைசெய்யக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் [Monday December 11 2006 06:33:08 AM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளை தடை செய்து, விடுதலைப்புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்ய கோரி கொழும்பில் இன்று திங்கட் கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப் படவுள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பல் 2 மணியளவில் லிப்டன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும். இதேவேளை புலிகளை தடைசெய்ய கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/art…
-
- 0 replies
- 893 views
-
-
மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது: சு.ப.தமிழ்ச்செல்வன். மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை: மானுட நாகரிகத்தின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக 1948 ஆம் ஆண்டு இன்றைய நாள் அமைகிறது. அன்று, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஐ.நா பொதுச் சபை வெளியிட்டது. இந்நாளை நாம் இன்று அனைத்துலக மனித உர…
-
- 3 replies
- 1.3k views
-
-
இராமேஸ்வரம் பகுதி கடலுக்குள் மரப் பெட்டியில் றொக்கெட் குண்டு! அடுத்தடுத்து இரு தடவைகள் வலையில் சிக்கின இராமேஸ்வரம் கடற்பகுதியில் இரண்டாவது முறையாக றொக்கெட் குண்டுகள் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் கடற்பரப்பில் வழமையாகத் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை களில் அவர்கள் விரித்த வலைகளில் இரண்டு தடவைகளும் மரப்பெட்டிகள் அகப்பட்டன. அவற்றை கரைசேர்த்துத் திறந்து பார்த்தபோது அவற்றுக்குள் றொக்கெட் குண்டுகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாவது தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மீனவர்களின் வலையில் மரப்பெட்டி சிக்கியது. அதற்கு முதலில் கடந்தவாரம் இராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் முதல் தடவையாக மரப்பெட்டி ஒன்று சிக்கியது. அந்தப் பெட்டி…
-
- 0 replies
- 1k views
-
-
ஆயுதங்களை அகற்றித் தாக்குதலை நிறுத்த புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கண்காணிப்புக் குழுவிடம் வேண்டுதல். வாகரைப் பகுதியில் இருந்து ஆயுதங்களை அகற்றி படையினர் மீது தாக்குதலை நிறுத்தும்படி விடுதலைப் புலிகளுக்கு அழுத் தம் கொடுக்குமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தாம் கேட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவ்வாறு முடியாவிடின் இவ்விடயத்தை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும்படியும் தாம் கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்தார். கிழக்கில் தாக்குதல் நடக்கும் பகுதிக்கு செல்வதற்குப் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த இடங்களுக்கு செல்வதற்கான அனும…
-
- 0 replies
- 875 views
-
-
புலிகள் பொது மக்களைக் கேடயமாக பயன்படுத்துவதாக அரசு குற்றச்சாட்டு. மட்டக்களப்பு, வாகரையில் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி படை யினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் களைத் தொடுக்கின்றனர் என்று படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், தாம் பொதுமக்கள் இலக்கு களை நோக்கி தாக்குதல்களை நடத்துவதை இயன்றளவு தவிர்த்து வருவதாகவும் அரசின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடி யர் பிரசாத் சமரசிங்க கூறினார். எனினும் தமது பாதுகாப்பின் நிமித்தம், எந்த இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ அந்த இடங்களை நோக்கித் தாங் கள் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார். நேற்று முற்பகல் மட்டக்களப்பு வாகரை நோக்கி படையினர்நடத்திய பல்குழல் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்…
-
- 0 replies
- 807 views
-
-
துணை இராணுவக்குழுவின் முக்கிய உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அதன் நிதித்துறைப் பொறுப்பாளருமான இனியபாரதி அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு பெரிய கல்லாறு மகாவித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் இனியபாரதியும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் சிறீலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் சிறீலங்கா துணை இராணுவக் குழுவினர் இரண்டு லட்சம் ரூபா பணம் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வெளிநாட்டுக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு துப்பாக்கிகளுடன் சென்று கொலை அச்சுறுத்தல் விடுப்பதோடு இரண்டு இலட்சம் ரூபாக்கள் கட்டாயத்தின் பெயரில் கேட்டுள்ளனர். சிறீலங்கா இராணுவத்தினரின் துணையுடன் இயங்கும் புளொட் அமைப்பினரே பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள வெளிநாட்டுக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று தம்மை புளொட் அமைப்பினர் என தெரிவித்து பணம் பறிப்பில் இவ் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டு இலட்சம் பணத்தினை கேட்பதோடு பணத்தினை பெறுவதற்கு கால வரையறையும் வழங்கப்படுகின்றது. இவ்வா…
-
- 1 reply
- 974 views
-
-
கொழும்பு அரசியலும் குளறுபடி நடவடிக்கையும் காணொளியில் பார்வையிட http://www.pathivu.com/?ucat=nilavaram&file=101206
-
- 0 replies
- 863 views
-
-
இன்று இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் க.போ.த சாதாரணதர பரீட்சைகள் நடைபெறுகிறது. ஆனாபோதும் மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக அப் பிரதேச சுமார் 500 மாணவர்கள் க.போ.த சாதாரண தர பரீட்சை எழுதமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு
-
- 0 replies
- 744 views
-
-
இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு:- எழிலன். சிறீலங்கா அரசாங்கத்தால் வாகரையின் தெற்கு கரையோர பகுதி வழியாக பனிச்சங்கேணி நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் 50 பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 27 பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது உதவியை வழங்க தயாராக இருந்தபோதும் சிறீலங்கா இராணுவம் அதற்கு இடமளிக்கவில்லை. இதேவேளை போர்நிறுத்த கண்காண…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிபாய்ந்தகல் நோக்கிய உடுருவல் முயற்சி முறியடிப்பு: இரு ஒட்டுக்குழுவினர் பலி! 10 பேர் காயம்: 3 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் நோக்கி சிறீலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னெடுத்த ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். இன்று கலை 7.30 மணியளவில் கிண்ணியடி பிரம்படித்தீவுப் பகுதியின் ஊடாக ஊடுருவிய இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் குடும்பிமலை கோட்டப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்டுகள்சேனையில் இருந்த போராளிகள் மீது தாக்குதலைத் தொடுத்த போது இருதரப்பினரிடை உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
(2 ஆம் இணைப்பு) மகிந்தபுரவில் சிறிலங்காப் படையினரின் நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 17:44 ஈழம்] [திருமலை விசேட நிருபர்] திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகா…
-
- 20 replies
- 3.8k views
-
-
வாகரைப் பனிச்சங்கேணி பாலத்தில் உக்கிரமோதல் தொடர்கிறது: கண்டலடி பாடசாலையில் 20 பொதுமக்கள் பலி! 17 பொதுமக்கள் காயம். வாகரை நோக்கி சிறீலங்காப் படையினர் மீது பிறிதொரு படைநகர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் மாங்கேணிப் படைமுகாமிலிருந்து எறிகணைச் சூட்டாதரவுடன் வாகரை நோக்கியே இப்படை நகர்வு நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே மாங்கேணிக்கும் வாகரைக்கும் இடைப்பட்ட முன்னரங்கப் பகுதியான பனிச்சங்கேணிப் பாலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடையேயான தேசவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் மேல…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 10-12-2006 18:21 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] கண்டலடி, பனிச்சங்கேணிப் பால மோதலில் 12 படையினர் பலி! 51 படையினர் காயம்: 7 போராளிகள் வீரச்சாவு. திருமலை வாகரை நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாங்கேணி மற்றும் கட்டுமுறிவு படைமுகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது முன்னேறிய சிறீலங்காப் படையினரை வழிமறித்து கிழக்குக் கண்டலடி, பனிச்சங்கேணி பாலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது சிறீலங்காப் படைத்தரப்பில் 12 படையினர் கொல்லப்பட்டு மேலும் 51 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே இன்று கஜுவத்தை, கிரிமிச்சைக்குளம், கட்டுமுறிவுக் குளம் ஆகிய களமுனை…
-
- 0 replies
- 847 views
-
-
யுனிசெஃப்பிடம் மகிந்த சமரசிங்க விளக்கம் கோருகிறார் [ஞாயிற்றுக்கிழமை, 10 டிசெம்பர் 2006, 13:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி அலன் றொக்கின் அறிக்கை குறித்து தமக்கு விளக்கம் அளிக்குமாறு யுனிசெஃப்பின் தலைவர் அனா வினிமாவை சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கோரியுள்ளார். ஜ.நாவின் சிறப்புப் பிரதிநிதி, இலங்கைக்குப் பயணம் செய்த பின்னர் சமர்பித்த அறிக்கையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார்களை படையில் சேர்ப்பதற்கு சிறிலங்கா இராணுவம் உதவி செய்வதாக தெரிவித்திருந்தார். அதேவேளை ஜ.நாவின் சிறுவர்களுக்கும் ஆயுத முரண்பாடுகளுக்குமான சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாம…
-
- 0 replies
- 889 views
-
-
மீண்டும் நாகர்கோவில்-முகமாலை(எழுதுமட்டுவாள்)-கிளாலி'யில் புதியதொரு இராணுவநடவடிக்கையின் அறிகுறி? விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரியன் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முன்பு கூறியிருந்தார், இன்னும் இரண்டு வாரத்தில் இராணுவம் தாங்களாகவே ஏ9 வீதியை திறக்காவிட்டால், தாங்கள் அதாவது விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பினம் என்று. இந்த கூற்றை உணர்ந்துகொண்டுதான் சிறீலங்கா இராணுவம், விடுதலைப்புலிகள் எதாவது நடவடிக்கை எடுக்க முன், தாங்களாகவே மீண்டும் ஒரு பெரிய இராணுவநகர்வுக்கு தயாராகினம்/தயாராகிவிட்டினம் போல? வாகரை நோக்கிய படைநகர்வு கூட ஒரு திசைதிருப்பும் வேலையாகக்கூட இருக்கலாம்! கிழக்கில் புலிகளுக்கு தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்து, வடபுலத்திலுருந்து போராளிகளை…
-
- 1 reply
- 1.6k views
-
-
மேலதிக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுப்பு. வாகரையில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மக்களை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக வாகரை மருத்துவமனை மருத்துவ அதிகாரியினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 2 replies
- 983 views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தை சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்தில் வெளியிட்டப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவரிடம் இந்த விடயம் குறித்து சிறீலங்கா அரசாங்கம் தமது அதிருப்தியினையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களே உண்மைக்கு புறம்பானவை என்று சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது ஆரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
பலாலி ஊரெழு படைமுகாம்களில் இருந்து அதிகாலை முதல் எறிகணைத் தாக்குதல்கள். இன்று அதிகாலை 4.00 மணி முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ஊரெழு மற்றம் வரணிப் படைத்தளங்களில் இருந்து படையினர் தொடாச்சியாக எறிகணைத்தாக்குதல்களை வன்னி பெரு நிலப்பரப்பின் மீது மேற் கொண்டுள்ளார்கள் இத்தகைய எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக பரீட்சைக்கு படிப்பதற்காக அதிகாலையில் எழுந்த மாணவர்கள் பாடங்களை கற்க்க முடியாது பெரும் சிரமத்திற்க்கு உட்பட்டார்கள் படைத்தரப்பினர் பரீட்சைக்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு தற்போது அதி காலையிலேயே தொடர்ச்சியாக எறிகணைகளை வீசி வருவதினால் பாடங்களை ஒரு மன நிலையில் இருந்து கற்க்க முடியாத நிலை காணப்படுவதுடன் வீடுகளின் அதிர்வுகளும் பெரும் தடையாக இருப்பதாகவு…
-
- 1 reply
- 860 views
-
-
கவலை தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இருதரப்பிற்கும் இந்தியா ஆலோசனை கூறவேண்டும் "தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்து வீரகேசரி வாரவெளியீடு இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கு தொலைதூரத்திலுள்ள நோர்வே முயற்சித்து வரும்போது, அண்டை நாடான இந்தியா வன்முறைகள் ஏற்படும்போது வெறும் கவலையை தெரிவிப்பதோடு மட்டும் நின்று விடக்கூடாதென தமிழகத்தில் இருந்து வெளியாகும் தினமணி நாளிதழின் நேற்றைய ஆசிரியர் தலைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "இனப்பிரச்சினை தீர' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: இலங்கையில் இன மோதல்கள் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் அதை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கலைஞர்.கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. முதல்வர் கருணாநிதி முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறி முதல்வர் கருணாநிதி தாமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இத் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது காங்கிர…
-
- 6 replies
- 2.5k views
-
-
தமிழர்களின் மனங்களை வெல்வது ` வடக்கில் ஏ9 பாதையும் கிழக்கில் ஏ15 பாதையும் இப் போது திறக்கப்படும் சாத்தியம் எதுவும் தென்படவில்லை. அதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாடும் தமிழ்மக்களும், இராணுவ மோதல் களினால் தங்கள் சொந்த இடங்களை விட்டு பல தடவைகள் அங்கும் இங்குமாக அலைந்து அகதி முகாம்களிலும் உறவினர் கள் , தெரிந்தவர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்து வாழும் வாகரைப் பிரதேச தமிழ் மக்களும் அல்லற்பட்டு அவதியுறவேண்டுமா? போதிய உணவுப் பொருள்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய பொருள்கள் வைத்திய வசதிகள் மற்றும் மருந்து வகை கள் கிடைக்காமல் தொடர்ந்து பேரவலத்தை அனுபவித்துக் கொண்டு தமிழர்கள் அவலப்படவேண்டியதுதானா? யாழ்ப்பாணத்திலும் வாகரையிலும் உண்டாக்கப்பட்டி…
-
- 1 reply
- 921 views
-
-
வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு …
-
- 13 replies
- 1.7k views
-