ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி பிரதமருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கின்றார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பல தடவைகள் மோடி இலங்கை தலைவர்களுடன் பேசியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால் அதற்கு சென்னையிலிருந்து யாரோ கடிதம் எழுவது காரணமில்லை புதுடில்லியில் யாரோ இதனை கையாள்வதே காரணம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 2014 முதல் 2835 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோடி இலங்கை தலைவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருக்கின்றார்- ஜெய்சங்கர் | Virakesari.lk
-
- 0 replies
- 221 views
-
-
ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது. வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது. இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச…
-
- 0 replies
- 255 views
-
-
பஸ்ஸின் சாரதி திடீர் மாரடைப்பினால் மரணம்: கட்டுப்பாட்டை இழந்த பஸ் மதிலையும் வீட்டையும் மோதியது! மத்தேகொடவில் சம்பவம்! By VISHNU 20 DEC, 2022 | 02:38 PM பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தான் செலுத்திச் சென்ற பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த பஸ் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வீட்டில் மோதியுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவ பிலியந்தலை 342 பஸ் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இந்த பஸ், கொட்டாவ பஸ் நிலையத்துக்கு முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக இன்று (20) அதிகாலை 5.45 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
நாளாந்தம் 10 மணிநேர மின்வெட்டை எதிர்நோக்கும் அபாயம் : இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்! By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 03:30 PM நாட்டின் நிலக்கரி கையிருப்பு இம்மாதம் 31ஆம் திகதி முடிவடையும் நிலையில் நுரைச்சோலை 'லக்விஜய' அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (டிச. 20) தெரிவித்துள்ளார். நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 சத வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகின்றன. இந்த மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் நாளாந்தம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் – கூட்டமைப்பிற்குள் மூண்டது சொற் போர்; சுமந்திரனுக்கு பதிலடி! உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எமது கட்சியின் முடிவுகளே. அவை ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல எனத் தெரிவித்த புளொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். அந்தக் கட்டமைப்பில் செயற்பட விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு பதில் வழங்கியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்து சந்திக்க மேற்கொள்ளும் எத்தனங்கள் பற்றியும், கூட்டமைப்பை விட்டு எந்…
-
- 7 replies
- 1.1k views
-
-
கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்! கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டார்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பா…
-
- 0 replies
- 199 views
-
-
பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் தயார் என்றால் பேசுவதற்கு நாங்கள் தயார் – எம்.ஏ.சுமந்திரன் பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் தயார் என்றால் பேசி தீர்ப்பதற்கு நாங்கள் தயார் என்று கூறியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. வாழைச்சேனை,வவுணதீவு,ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்களும…
-
- 0 replies
- 228 views
-
-
ஜனாதிபதியை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம் By T. SARANYA 19 DEC, 2022 | 04:17 PM (எம்.மனோசித்ரா) இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களில் சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந…
-
- 5 replies
- 799 views
- 1 follower
-
-
இலங்கை மாணவர்களுக்கு 70 சதவீத சீருடை துணிகளை நன்கொடையாக வழங்கும் சீனா By VISHNU 19 DEC, 2022 | 06:58 PM (எம்.மனோசித்ரா) இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான மாணவர்களின் 70 சதவீத சீருடைக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சீனா சீருடை துணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்கமைய இந்த நன்கொடையின் முதலாவது தொகுதியாக 3 மில்லியன் மீற்றர் 38 ஆயிரம் பெட்டிகளில் பொதியிடப்பட்டு , 20 கொல்கலன்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளில் 70 சதவீதமான வெட்டிய துணிகளை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மிகுதி 30 சதவீத துணிகளை பெ…
-
- 1 reply
- 646 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதில், இலங்கைக்கு சீனா, மிகப்பெரிய தடையாக உள்ளது என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி இதுவரை இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2.9 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற்றுக்கொள்ள சீனா உட்பட்ட கடனாளிகளிடம் கடன் நிலைத்தன்மை உத்தரவாதங்களை இலங்கை பெறவேண்டியுள்ளது. இதனை அடிக்கடி சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வருகிறது. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களாக உள்ளன. இதில் சீனாவின் பங்கு 52 சதவீதமாக உள்ளது. ஜப்பானின் பங்கு 19.5 சதவீதம் மற்றும் இந்தியாவின் ப…
-
- 1 reply
- 738 views
-
-
சீன வேவுக்கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இந்தியா உள்நாட்டு விவகாரங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மூலோபாய உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு இலங்கை முன்னுரிமை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடல்சார் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இலங்கை எதிர்க்கவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவின் ஏஐஐஎம்எஸ் சேர்வர்கள் மீதான சமீபத்தைய தாக்குதலிற்கு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு யுவான் வாங் 5ம் பின்னர் நவம்பர் ஆறாம் திகதி யுவான் வாங் விஜயம் மேற்கொண்டமையும் காரணமாகயிருக்கலாம் …
-
- 1 reply
- 617 views
-
-
கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் நல்லடக்கம் கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர். இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் க…
-
- 1 reply
- 567 views
- 1 follower
-
-
சந்தியா எக்னெலிகொட 2022 ஆம் ஆண்டுக்கான பிபிசி 100 பெண்கள் தொடரில் டிசம்பர் 6 ஆம் திகதி இலங்கையிலிருந்து செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்க இன்று ஊடகங்களுக்கு உரையாற்றினார். கறுத்த உடையும், வழித்த தலையுமாக ஊடகவியலாளர் முன் தோன்றினார் அவர். 12 வருடகால துன்பங்கள் மற்றும் வேதனைகளுக்குப் பின்னரும் தனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சக்கள் தனது சாபத்தில் இருந்து விடுபட மாட்டார்கள் என காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். “எனது அன்புக் கணவர் மறைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த ஜனவரி 25, 2022 அன்று, அவரை காணாமல் ஆக்கிய ராஜபக்சேக்களுக்கு ‘சுவாமிபக்தி ஆதுர மஹா சபயா’ என்ற சக்தி வாய்ந்த சாபத்தை உண்டாக்குவதற்க…
-
- 2 replies
- 407 views
-
-
ஊழல் ஒழிப்பு புதிய சட்டமூலம் தொடர்பில் அரச சார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் By DIGITAL DESK 2 19 DEC, 2022 | 05:16 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஊழல் ஒழிப்பு புதிய சட்டமூலம் தொடர்பில் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பெரு முயற்சியுடன் செயற்படும் அரச சார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளை அறிவுறுத்தும் நடவடிக்கை நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் திங்கட்கிழமை (டிச.19) நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலம் தொடர்பாக நீதி அமைச்சரினால் அந்த நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் ஊழல் மோசடி இடம்பெறுவதை தடுப்பதற்காக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளினால் ஆலோசனை மற்றும…
-
- 1 reply
- 409 views
- 1 follower
-
-
காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
அரசியல் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 2022 இல் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அதிகரித்து வரும் உணவு நெருக்கடியை துரிதமாக எதிர்கொள்கின்றது நாளில் ஒருவர் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என ஐநா அமைப்பு தெரிவி;த்துள்ளது. ஜூன் 2022 முதல் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குடும்பங்களை சேர்ந்த 244 330 பேருக்கு உதவி வழங்கியுள்ளது. இலங்கை முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது அரசியல் சமூக குழப்பநிலை காரணமாக இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானவர்கள் …
-
- 0 replies
- 425 views
-
-
தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள் கனகராசா சரவணன் “வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பிப் சென்று தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனரா?” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது, “அண்மையில் சர்வகட்…
-
- 0 replies
- 459 views
-
-
தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் – மாவை தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் கிடைத்த போதும் ஆட்சி அதிகார விடயத்தில் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில்பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை சாதகமாக கையாள வேண்டு…
-
- 0 replies
- 193 views
-
-
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் வெளிநாட்டு சேவை ! இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உயர் பதவியில் உள்ள வீட்டு பராமரிப்பு உதவியாளர்களை பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இலங்கைப் பெண்களுக்கு வெளிநாட்டில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுவதற்கு உயர்தரப் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்…
-
- 0 replies
- 648 views
-
-
சரியான பாதையை அமைக்காமல் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது அரசாங்கம் – ஹர்ஷ குற்றச்சாட்டு எந்த திசையில் செல்லப்போகின்றோம் என்ற அறியாமையுடன் இலங்கை அரசாங்கம் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டிற்கான வரைபடத்தை வகுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி டிசம்பரில் வரும், ஜனவரியில் வரும் அல்லது மே, ஜூன் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் சரியான கணிப்பை வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் 3 பில்லியன் டொலர் உதவியை நாடு தவறிவிட்டால், எப்படி உயிர்வாழ்வது மற்றும் மக…
-
- 0 replies
- 565 views
-
-
பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் : மஹிந்த அமரவீர ! December 17, 2022 இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார். அடுத்த அறுவடைக் காலத்தில், …
-
- 12 replies
- 907 views
-
-
16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார். 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு…
-
- 7 replies
- 823 views
-
-
தமிழினம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் - பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் By VISHNU 18 DEC, 2022 | 04:40 PM தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இன்று (18-12-2022) கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலம் காலமாக தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் ஆக்கிரமிப்புக…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு எவரையும் அனுப்பமாட்டோம் - மனுஷ நாணயக்கார By DIGITAL DESK 2 18 DEC, 2022 | 04:53 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த வருடம் மார்ச் மாத்தத்துக்கு பின்னர் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு இலங்கையில் இருந்து யாரையும் அனுப்பவித்தில்லை. சிறந்த பயிற்சி பெற்றவர்களையே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
தான் கடத்தப்பட்டுள்ளதாக கூறி தனது கணவன், பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெற முயன்ற பெண் கைது By DIGITAL DESK 5 18 DEC, 2022 | 06:00 PM தான் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெறுவதற்காக வேறொரு வீட்டில் பதுங்கியிருந்த பெண் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனமடுவ நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி எனவும் அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து தற்போது ஒப்பந்தங்களில் நஷ்டமடைந்து வீட்டில் தங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெ…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-