Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்: கலைஞர் கருணாநிதிக்கு மன்மோகன் சிங்க் உறுதி இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் உறுதியளித்து கடிதம் எழுதியனுப்பியுள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்கள் முன்பு கடிதம் எழுதியனுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மன்மோகன் சிங்க் கூறியிருப்பதாவது: இலங்கைப் பிரச்சினை குறித்து உங்கள் கவலையை நான் புரிந்து கொண்டேன். இலங்கையில் பொது மக்கள் …

  2. படகுதுறை பொதுமக்கள் படுகொலை ஐ.நா.கண்டனம். சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை. (ஆங்கிலத்திலான அறிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு) மன்னார் படகுத்துறை கிராமத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தி 14பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.சபை வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபையின் உதவிச்செயலாளரும் மனிதாபிமான அலுவல்கள் மற்றும் இடர்கால உதவி வழங்கும் பிரிவின் இணைப்பாளருமான மார்கிரட் வேல்ஸ்ரேம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட 14பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ.நா.சபை ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை மக்கள் போரினால் தங்கள் வாழ்வை இழந்து தவிக்…

    • 3 replies
    • 1.8k views
  3. தமிழீழ குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் ஆரம்பத்தை ‘தமிழீழத்தை நோக்கிய தமது பயணத்தின் உறுதிப்பாட்டை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தும் புத்தாண்டின் முதல் முயற்சி’ என ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை நேற்று தமிழீழ ஆட்பதிவு திணைக்களம் தனது முதலாவது அடையாள அட்டையை தமிழீழ தேசியத் தலைவருக்கு வழங்கி தமது செயற்பாட்டை தொடங்கியிருந்தமை தெரிந்ததே. நன்றி : பதிவு

    • 0 replies
    • 1.5k views
  4. இயந்திரக்கோளாறு காரணமாக தமிழீழக் கடற்பரப்பில் கரையொதுங்கி நிற்கும் மேற்படி ஜோர்தானிய சரக்குக்கப்பலை மீளப் பெறுவதற்கு அதன் உரிமையாளர்களான ஜோர்தானிய கப்பல் கம்பனி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இக்கப்பலையும் அதில் ஏற்றப்பட்டுள்ள பெருமளவு அரிசியையும் எப்படியாவது சேதமின்றி மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை அக்கம்பனி முடுக்கிவிட்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக பார்க்கும்போது விடுதலைப்புலிகள் இத் தனியார்சரக்குக்கப்பலை சீரற்ற காலநிலைக்கும் இயந்திரக்கோளாறுக்கும் மத்தியில் மிகச் சாதுரியமான முறையில் செயற்பட்டு கப்பல்பணியாளர்கள் அனைவரையும் காப்பாற்றிப் பாதுகாப்பாகக் கரைசேர்த்தது மிகவும் வரவேற்கக்கூடியதே. அதேவேளை கப்பலிலிலிருந்து அனுப்பப்பட…

    • 0 replies
    • 1.6k views
  5. இன்று காலை 4.00 மணியளவில் வவுணதீவு படைமுகாமில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதியை நோக்கிய சிறீலங்கா இராணுவ முன்னகர்வு முறியடிக்கப்பட்டுள்ளது இம் முன்னகர்வு முயற்சியை விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்டு சிறீலங்கா இராணுவத்தினர் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சமரில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

    • 0 replies
    • 1.3k views
  6. எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது: யோ.யோகி. எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். இரண்டாம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணிக்கான பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. பயிற்சி ஆசிரியர் பொதிமைமலர் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பனும், இரண்டாம் லெப். ஜீவனின் உருவப்படத்திற்கான பொதுச்சுடரினை மணலாறு ச…

  7. இந்தியப் பயணம் நம்பிக்கை அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிப்பு. இந்தியப் பயணம் நம்பிக்கையையும், திருப்தியையும் அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலநிலை குறித்து இந்தியத் தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பான கவலையையும் இந்தியத் தலைவர்கள் தம்மிடம் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இந்தியாவிற்கு கடந்தமாதம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

  8. ஜே.வி.பி.யின் லங்கா அச்சகம் தீப்பிடித்து முற்றாக எரிந்தது நாசமாகியுள்ளது. கோட்டே ரஜமஹா விகாரை முன்பாக அமைந்திருக்கும் அச்சகம் மூடப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்துச் சம்பவத்தில் பத்திரிகை அச்சகம் முற்றாக எரிந்துள்ளதுடன் அருகிலிருந்த வாகன விற்பனை நிலைய கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்து சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவர வில்லையென தெரிவித்த தீயணைப்பு படையினர் அது தொடர்பாக மிரிஹானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர் www.tamilwin.com

  9. ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை [02 - January - 2007] [Font Size - A - A - A] * இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையை தேடிய கதை ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை, இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையைத் தேடிய கதையாக இருக்கிறது. இலங்கை அரசும் ஈழப் போராளி களும் கூடிப்பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து உபந்நியாசம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில், ஈழப் போராளிக ளுக்கு எதிராக இலங்கை அரசிற்கு எந்த அளவிற்கு ஆயுத உதவி, உணவுப் பொருள் உதவி அளிக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம், இவர்களுடைய நடுநிலை நாடகம் அம்பலத்திற்கு வந்துவிடுகிறது. இந்த நாடகத்திற்கு, இப்போது ஐக்கிய முன்னணியின் த…

    • 2 replies
    • 1.6k views
  10. ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீது ஒழுக்காற்று நடவடிக்கை? ஜே.வி.பி கட்சியின் உள்வீட்டு சண்டை அம்பலத்திற்கு வந்துள்ளது. அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் குற்றச்சாட்டக்களை சண்டே லீடரும் அதன் சகோதர பத்திரிகையான இருடினவும் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு தொடங்கியுள்ளது. ஜே.வி.பியின் கீழ்மட்ட உறுப்பினர்களிடையே இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியிருப்பினும் அதன் தலைமைப்பீடம் மௌனமாகவே இருந்து வருகின்றது. எனினும் கடந்த வாரம் இந்த பிரச்சினை புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு விமல் வீரவன்ச மீது ஓழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து ஏராளமான கட…

  11. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் · வவுணதீவு இராணுவமுகாம் மீது மோட்டார் தாக்குதல் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இன்று காலை 9.30மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதிரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிக்கவைக்கப்பட்டதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு வவுணதீவு இராணுவமுகாம் மீது இன்று காலை 5.45மணி முதல் எம்.எம் 81ரக மோட்டார்கள் மூலம் விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்…

    • 0 replies
    • 1.1k views
  12. விமானதாக்குலுக்கு உள்ளான படகுத்துறை கிராமத்திற்கு மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார். · விடுதலைப்புலிகளின் தளங்கள் எதுவும் அங்கு இல்லை ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் விமானத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட படகுத்துறை கடற்கரையோரகிராமத்திற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். படகுத்துறை கிராமத்தில் விடுதலைப்புலிகளின் எந்த தளங்களும் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இல்லை என தெரிவித்த ஆயர் மீனவர்களின் குடிசைகளே தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிந்திருப்பதாக தெரிவித்தார். விமானப்படையின் கோரத்தாக்குதலில் 3பிள்ளைகள் கற்பிணிதாய் தந்தை என ஒரேகுடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் குண்டுவீச்சினால் உடல்சிதறி பலியாகியிருப்பதாக ஆயர் ம…

  13. பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா? ஆன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம் இறந்து விட்டார். இது எதிர்பாராமல் நடந்ததல்ல. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவரது இழப்பு, ஈழத்தமிழர் களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எதற்கும் கலங்காத விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக்கூட கொஞ்சம் அசைத்திருக்கிறது பாலசிங்கத்தின் மரணம். ‘‘துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து நெஞ்சத்தை பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறுபோல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமும் இல்லை’’ என்று பிரபாகரன் துடித்துப் புலம்பியிருக்கிறார். ஒரு மூ…

  14. "சண்டே லீடர்" ஆசிரியரின் கைது முயற்சியும் பின்னனியும்: "சண்டே லீடர்" வெளிட்ட தகவல்கள் கடந்த வாரம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பதுங்கு குழி விவகாரத்தை அம்பலப்படுத்திய காரணத்தால் சிறிலங்கா அரசு, "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய முயற்சித்த போதும் ஊடகத்துறை, அரசியல்வாதிகள், மற்றும் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பின் மத்தியில் பின்னர் அது கைவிடப்பட்டது. அண்மையில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடாமல் போனது எப்படி என்பதை "சண்டே லீடர்" வார ஏடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.06) இதழில் வெளியிட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் அமுலாக்கலின் பின்னர் "சண்டே லீடர்" வார எட…

  15. வடக்கு கிழக்கில் உள்ள தமிழீழ மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தமிழீழ பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.ஜெயந்தன் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு பிரயையின் பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். www.pathivu.com

  16. போர் மேகம் சூழ்வதால் பொருளாதாரமும் பாதிப்பு பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின் நியதி. அதன் வழி 2006 கழிய, 2007 இல் பூமிப் பந்து காலடி எடுத்துவைக்கின்றது. புதிய வருடப் பிறப்புடன் புது வாழ்வு கிட்டுமா என்று ஏங்குவது மனித இயல்பு. அதுவும் அவலத்திலும், அபத்தத் திலும் சிக்கி அந்தரப் பட்டு, அர்த்தம் இழந்து நிற்கும் இலங் கைத் தீவு, புத்தாண்டிலாவது போர் மேகம் கலைந்து, அமை தித் தென்றல் வீசாதா என்று ஏங்கி நிற்பது புரிந்துகொள்ளத் தக்கது. ஒருபுறம் சமாதான முயற்சிகள் கானல் நீராகிக் கலைந்து போகும் அவலநிலை. மறுபுறம், போர்ச் சூழல் கவிந்து, பொருளாதாரம் சீர்குலைந்து, வாழ்வுக்கு அல்லாடும் கையறு நிலை. திசை தெரியாது, போக்கிடம் புரியாது தடுமாறுகிறது இலங்கைத் தீவு. …

  17. புதுவருட கொண்டாட்டங்களினால் கொழும்பில் 435பேர் காயம் வடக்கு கிழக்கில் அமைதியான புதுவருட கொண்டாட்டங்கள் புதுவருட கொண்டாட்டங்களினால் கொழும்பு நகரில் மோதல்களினாலும் விபத்துக்களினாலும் 435பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடகப்பேச்சாளர் புஸ்பா டிசொய்சா தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு புதுவருட கொண்டாட்டங்களில் கலந்து விட்டு வீடு திரும்பிய சிலர் மது போதையில் இருந்த காரணத்தாலும் வீதிவிளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் விபத்துக்களில் சிக்கியுள்ளனர். அதிகமான வீதி விபத்துக்கள் மதுபோதை காரணமாகவே இடம்பெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர புதுவருட கொண்டாட்டங்கள் கேளிக்கைகளின் போது ஏற்பட்ட கைகலப்புக்களில…

    • 0 replies
    • 1.1k views
  18. ஜேர்மனியிடம் கைமாறும் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவி: நெருக்கடியில் சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வ…

    • 3 replies
    • 1.9k views
  19. செங்கலடி வவுணதீவு இராணுவ முகாம்கள் மீது மோட்டார் தாக்குதல். மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மீது இன்று காலையில் மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. செங்கலடி கறுப்பு பாலத்தில் உள்ள இராணுவமுகாம் , ரமேஷ்புரம் இராணுவமுகாம், வவுணதீவு இராணுவமுகாம் ஆகியவற்றின் மீதே இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 81எம்.எம் ரக மோட்டார் மூலமே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நடத்தியது. நேற்றுமாலை ஞாயிறுக்கிழமை மாலை பதுளை சந்தியில் உள்ள விசேட அதிரடிப்படைகளின் நிலைகள் மீதும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப…

  20. கிரானில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கிரானில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிறு மாலை 7.30மணியளவில் கிரான் விஷ்ணு கோவில் வீதியில் உள்ள கத்தோலிக்க மயானத்தடியில் வைத்து இந்த இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கிரானைச்சேர்ந்த 22வயதுடைய வீரசிங்கம் செந்தூரன் வந்தாறுமூலையைச்சேர்ந்த 27வயதுடைய யோகநாதன் மயூரன், கிரானைச்சேர்ந்த 24 வயதுடைய நமசிவாயம் புவனேஸ்வரன் ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மயூரனும் புவனேஸ்வரனும் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர்கள் என்றும் செந்தூரன் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி மாணவன் என்றும் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwebr…

    • 0 replies
    • 1.1k views
  21. புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும்: விடுதலைப் புலிகள். புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் என்று அவர்கள் நம்பினர். இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்ப…

  22. வடமராட்சியில் படையினர் மீது கிளேமோர்த் தாக்குதல். வடமராட்சி வியாபாரி மூலை நாவலடிச் சந்தியில் இன்று காலை 7.50மணியளவில் படையினர் மீது கிளேமோர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் ஒருபடைச்சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் இரண்டுபடையினர் மட்டும் காயமடைந்ததாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும் 5படையினர் கொல்லப்பட்டதாகவும் 8படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இக் கிளேமோர் வெடிப்பின் பின் படையினர் அப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர் இத் தோடுதலின் போது இளைஞர் யுவதிகள் படையினரினால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. www.sankathi.com

  23. எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அத்தனகல்ல மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கே இதுகாலவரை வாக்களித்து வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்க முதன் முதல் 1931 ஆம் ஆண்டு அத்தனகல்ல தொகுதிக்காகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் 1947 ஆம் ஆண்டில் அத்தனகல்லவுக்குத் தெரிவு செய்யப்பட்ட போது அவர் போட்டியிட்டது யானைச் சின்னத்திலாகும். 1952 இல் அவர் யானைச் சின்னத்துக்குப் பதில் கை.சின்னத்தை தெரிந்தெடுத்தபோது அந்தனகல்ல மக்கள் சின்னத்தைப் பற்றிக் கருதாமல் அவருக்கே வாக்களித்தனர். இவ்வாறே 1956 இல் சில்லுச் சின்னத்தில் அத்தனகல்ல தொகுதிகளில் போட்டியிட்டார் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க. இதன் பின்னர் கதிரை பண்டாரநாயக்க குடும்பத்தின் தேர்தல்…

  24. பாகிஸ்தானிடம் இருந்து ரூ.450 கோடிக்கு இலங்கை அரசு ஆயுதம் வாங்குகிறது. மகிந்தா ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்ற பிறகு உள்ள தமிழர் பகுதிகள் மீது போர் விமானங்கள் அடிக்கடி குண்டு வீசுகின்றன. இதில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர். புலிகளை ஒடுக்க இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து ரகசியமாக ஆயுதங்களை வாங்கி குவிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த தகவலை ஜேன் என்ற பாதுகாப்பு துறை பத்திரிகை தற்போது உறுதி செய்து உள்ளது. அந்த பத்திரிகையில் கூறி இருப்பதாவது:- இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து 450 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் ஆளில்லா விமானங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள், வெடிபொருட்கள், பல்வேறு வகையான வெடிகுண்டுகள், ஏவ…

  25. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தனது பணியைக் குறைத்துக்கொள்கிறது. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை குறுகிய காலத்துக்கு குறைத்துக்கொள்ளவுள்ளது. சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளும் இடையே போர் தொடர்வதால் தனது செயற்பாடுகளையும் குழுவையும் மறு ஆய்வு செய்ய கண்காணிப்புக்குழு முடிவெடுத்துள்ள காரணத்தால் சிறிது காலத்துக்கு தனது நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள குழு தீர்மானித்துள்ளது. தனது செயற்பாடுகளை மாற்றியமைப்பது குறித்த பயிற்சிப் பட்டறை ஒன்றை இந்த மாதத் தொடக்கத்தில் கண்காணிப்புக்குழு நடத்தவுள்ளது. பயிற்சிப் பட்டறை நடைபெறும் சமயத்தில் கண்காணிப்புக்குழுவின் மாவட்ட அலுவலகங்கள் திறந்தே இருக்கும். கண்காணிப்பு நடவடிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.