Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1987 ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒன்றாக இணைந்து செயற்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபையை இரு நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட வடக்கு கிழக்கு ஆளுநர் மோகன் விஜயவிக்கிரம உத்தரவிட்டுள்ளார். இதன்படி வவுனியாவை தலமையகமாக கொண்டு வடக்குமாகாணசபை அலகு நிர்வாகமும், கல்முனையை தலமையகமாக கொண்டு திருமலை தவிர்ந்த கிழக்கு மாகாணசபை நிர்வாகமும், திருமலை மாவட்டம் நேரடியாக ஆளுநரின் கீழ் செயற்படும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு

  2. பாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள் -பா. கிருஷ்ணன்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட அன்ரன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது. அன்ரன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் `வீரகேசரி' நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங…

  3. தமிழ் வர்த்தகர்கள் கடத்தல்- கொலைகளில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்பு:- எஸ்.பி.திசநாயக்க. தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுதல் மற்றும் கொலை செய்யப்படும் சம்பவங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். எஸ்.பி.திசநாயக்க கூறியதாவது: மாத்தறை பகுதியில் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பொலநறுவவின் மன்னம்பிட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் அறவிடப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மன்னம்பிட்டியவுக்கு சிறிலங்கா காவல்…

  4. வாகரையில் நோயாளி ஒருவர் அத்தியாவசிய மருந்து வசதிகள் இன்றி மரணம் வாகரை வைத்திய சாலை அத்தியாவசிய மருந்துகள் இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக வைத்தியர் துரைராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை 70 அகவையுடைய நாகேந்திரா என்வர் போதிய மருந்துகள் இன்றி இறந்ததாகவும் மற்றும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் ஏ-15 பாதையூடாக மிகவும் அவசர சிகிச்சைக்கா கொண்டு செல்லும் நோயாளிகளை கூட கடந்த ஒக்ரோபர் நடுப்பகுதியில் இருந்து கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

  5. விடுதலைபுலிகள் என சந்தேகிக்கப்படும் 15 பேர் கிழக்கில் கைது. நிஷாந்தி வாகரையில் இருந்து இடம்பெயரும் மக்களுடன் அகதிகளாக ஊடுருவி செல்ல முயன்ற விடுதலை புலிகள் என சந்தேகிக்கப்படும் 15 பேரை கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. . கிழக்கில் தொடரும் மோதல்களால் வாகரையிலிருந்து பாதுக்கப்பு கரிதி மக்கள் இடம்பெய்ருகின்றனர்.இன்னும் 10,000 இலிருந்து 15,000 வரையான மக்கள் வாகரையிலிருந்து இடம்பெயர விரும்புகின்றனர் என இராணுவ தரப்பு மேலும் தெரிவித்தது. http://www.virakesari.lk

  6. யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன் [வியாழக்கிழமை, 21 டிசெம்பர் 2006, 18:18 ஈழம்] [ப.தயாளினி] யாழ். பருத்தித்துறையில் 3 பிள்ளைகளின் உணவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக பிரான்சைச் சேர்ந்த தமிழர் மனித மையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "மெளபிம" (10.12.06) சிங்கள வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: கேள்வி: தமிழர்களுக்கான மனித உரிமை மையம் எதற்காக நிறுவப்பட்டது? பதில்: இலங்கையில் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்க…

  7. சென்னை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து நாளை திக சார்பில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்வதை கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் திக சாரப்பில் நாளை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறகிறது. இதற்கு திமுக ஆதரவு அளிப்பதுடன், சென்னையில் நடக்கும் மனித சங்கிலியில் திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ்.இளங்கோவன் கலந்து கொள்வார் என அதில் கூறப்பட்டுள்ளது. தற்ஸ் தமிழ்

  8. யாழ் குடாநாட்டில் சிக்குன் குனியாவால் ஐந்து நாட்களில் பத்துப்பேர் உயிரிழப்பு. யாழ் குடாநாட்டில் கடந்த ஐந்து தினங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக யாழ் மாவட்ட பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். யாழ்குடாநாட்டின் அண்மை நாட்களாக பரவி வரும் சிக்குன்குனியா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாமலும் போசாக்கான உணவுப் பொருட்கள் இல்லாமையினாலும் கடந்த ஐந்து தினங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீரிழிவு, அஸ்மா, இதய நோய்க் கோளாறு போன்ற நோயாளிகளே சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரண விசாரணைகளில் இருந்தது தெரியவந்துள்ளது என பதில் நீதவான் …

  9. இரட்டை வேடமிடுகிறது போர் நிறுத்த கண்காணிப்புக் குழு: கேகலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இரட்டை வேடமிடுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில்; மாணவர்களும் ஆசிரியர்களும் விடுதலைப் புலிகளினால் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை உலகுக்கு அறிவித்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இதனால் ஏற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 7 ஆண்களை…

    • 2 replies
    • 1.1k views
  10. சுனாமி அவலத்தின் உயிர்ச் சிற்பம் - பண்டார வன்னியன் தமிழன் தன்மானப் போராட்டத்தின் மத்தியிலும் அடுத்தவன் அவலத்தை போக்கவும் மதிக்கவும் தவறாதவன் என்பதற்கு ஆனந்தனின் சுனாமி அவலத்தை சித்தரிக்கும் சிலை ஓரு எடுத்துக் காட்டாகும் இது வெறுமனே அவலத்தை மட்டும் எடுத்துக் காட்டவில்லை தமிழன் தனது தன்பத்திலும் அடுத்தவன் துன்பததையும் தன் துன்பமாக ஏற்று நடப்பவன் என்பதையும் இந்த சிற்பம் எடுத்தியம்புகின்றமை பராட்டத்தக்கதாகும். இந்த சிற்பம் சம்பந்தமாக ஓவியர் மாற்கு, ஓவியர் இராசையா, ஓவிய சிற்பி ரமணி, கவிஞர் யாழ் nஐயம், ஓவியர் எஸ்.டி சாமி எனப் பலரும் பல வடிவத்திலும் புகழ்ந்துள்ளாhகள் விமர்சித்துள்ளார்கள். ஓவியர் மாற்கு குறிப்பிடுகின்றார் ஆனந்தன் சிற்பக் கல்லூரிகளின் ஊடாக …

  11. முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் தாக்குதல் பாலாவின் இறுதி வணக்க நிகழ்வுக்காக திரண்டிருந்த மக்கள் சிதறியோட்டம் [21 - December - 2006] [Font Size - A - A - A] முல்லைத்தீவில் நேற்று புதன்கிழமை காலை கிபிர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே காலை பத்து மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி வணக்க நிகழ்வுகளில் நேற்றுக் காலை பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்த வேளையிலேயே இந்த விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலால் மக்கள் நாலாபுறமும் தப்பியோடி பாதுகாப்புத் தேடிக் கொண்டனர். இதேநேர…

  12. வல்லை வீதியில் இளைஞனின் சடலம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 21 னுநஉநஅடிநச 2006 11:34 யாழ்ப்பாணம் தொண்டைமானாறு வல்லை வீதியில் நேற்று மாலை சூட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலத்தை இனங்காண உதவுமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முப்பது வயது மதிக்கத்தக்கவரின் இந்த சடலத்தில் நீல நிற நீளக்காற்சட்டை அணிந்திருக்கக் காணப்பட்டது தலைப்பு திருத்தப்பட்டுள்ளது. செய்திகளை இணைக்கும் போது அவற்றின் மூலத்தை குறிப்பிட மறக்காதீர்கள் - மதன்

  13. அக்கறை காட்டுமா அரசு? தென்கிழக்காசிய நாடுகளை உலுப்பி, பெரும் உயிர்ச் சேதங்களையும் உடைமை நாசத்தையும் விளைவித்த ""சுனாமி'' என்ற ஆழிப்பேரலை தாக்கி, இன்னும் ஐந்து நாள்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் புனர்நிர்மாணப் பணிகளுக்குமென ஐக்கிய நாடுகள் உட்பட்ட சர்வதேச மட்டத்தில் உதவும் திட்டங் களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்த அளவில் ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவை. ஆனால், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் இப் பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் மிக மந்தமாகவே, குறை வாகவே நடைபெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் …

  14. யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கையில் முதலிடம் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிரகாரம் பாடசாலை அதிபர்கள் ஊடாக முற்கொண்டு கிடைத்த சில முடிவுகள் வருமாறு: யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை 233 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். 102 பேர் சித்தியடைந் துள்ளனர். இந்தப் பாடசாலையில் இருந்து தோற்றிய சுந்தரேஸ்வரன் வித்தி யாசாகர் 185 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் தமிழ் மொழி மூல மாணவரில் முதலிடம் பெற்றுள்ளார். யாழ்.சென்.ஜோன் பொஸ்கோ பாடசாலையில் 75 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பா.சிவயோகன் என்ற மாணவன் 170 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தமிழ்மொழிப் பிரிவில் முதல் பத்து இடங்களில் சுந்தரேஸ்வரன் வி…

  15. இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி பாப்பரசர் அதிர்ச்சியடைந்துள்ளார் ரோமாபுரி தூதுவர் மரியோ செனாரி தகவல் இலங்கையில் பல்வேறு வகைகளில் மனித மற்றும் சிவில் உரிமைகள் மீறப்பட்டுவருவது குறித்து போப்பாண்டவர் 16 ஆவது பெனடிக்ட் பெரிதும் அதிர்ச்சிக்குள் ளாகியுள்ளார் என்று பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் மேற்றிராணியார் மரியோ செனாரி தெரிவித்துள்ளார். டிசெம்பர் 6ஆம், 7ஆம் திகதிகளில் வன்செயல்கள் மலிந்துள்ள யாழ்ப்பாணப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பியுள்ள மேற்றிராணியார் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் பாப்பரசரின் தூதுவர் வன்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய் திருந்தார். மட்டக்களப்பின் கத்…

  16. புதன் 20-12-2006 23:12 மணி தமிழீழம் [முகிலன்] மன்னார் உயிலங்குளப் பகுதியில் சிறு மோதல்: இராணுவச் சிப்பாய் பலி மன்னார் உயிலங்குள இராணுவ முகாம் அமைந்த பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியது. இதன்போது சிறீலங்காப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இப்பகுதியில் ஆயுததாரிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் சிறு மோதல் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் சுசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  17. புதன் 20-12-2006 23:07 மணி தமிழீழம் [முகிலன்] கல்முனையில் அலுவகலகம் மீது தாக்குதல்: கருணா ஒட்டுக் குழு உறுப்பினர் பலி கல்முனையில் சிறீலங்கா இராணுவத்தினருடன் இயங்கும் கருணா குழுவின் கல்முனை அலுவலகம் உந்துகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதன்போது ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலானது நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

  18. Military says Sri Lankan patrol escapes roadside bomb attack A military patrol escaped a roadside bomb attack in northern Sri Lanka, the Defense Ministry said Thursday. The patrol retaliated, killing one rebel. Brig. Prasad Samarasinghe said the attack occurred in Vavuniya on Wednesday night and was launched by the Liberation Tigers of Tamil Eelam, or LTTE. The group is fighting to create a separate homeland for Sri Lanka's 3.1 million Tamils, accusing the majority Sinhalese of discrimination. He said soldiers found the body of a rebel, along with ammunition and two bombs and cord often used to detonate them. In a separate incident in Jaffna P…

    • 0 replies
    • 888 views
  19. பாலசிங்கம் நினைவேந்தல் கூட்டம் சென்னை 19-12-2006 உரைகள் பழ. நெடுமாறன், தலைவர், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு பெ. மணியரசன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம் கவிஞர் காசி. ஆனந்தன் மூத்த ஊடகவியலாளர் பகவான் தாஸ் http://thenseide.com Thousands throng Balasingham's funeral held in London http://www.youtube.com/watch?v=i-aMaC-2yYs

    • 0 replies
    • 879 views
  20. ஈழத்தமிழர்கள் கருணாநிதியிடம் அறிய விரும்பும் பதில்கள் சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பது தமிழகத்தின் பொறுப்பு. அதிலிருந்து நாம் விலகமாட்டோம். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னையில் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்னர், இலங்கைத் தமிழர் விடயத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது என்ற நியாயமான கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று அவர் கூறியிருந்தார். வாகரையில், நவம்பர் மாதம் எட்டாம் திகதி அகதிகள் ஐம்பது பேர் தமிழர்கள் ஐம்பது பேர் அரசாங்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கோர…

  21. மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு" - பழ.நெடுமாறனுடன் சந்திப்பு இந்திரா காந்திக்குப் பிறகு வந்த மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் குற்றம் சாட்டுகிறார். இலங்கைத் தமிழர்களுக்காக நீண்ட நெடுங்காலமாக சலிக்காமல் குரல் கொடுத்து, அயராமல் பாடுபட்டு வருபவர் நெடுமாறன். தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயே இவரை விட இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் யாரும் இருக்க முடியாது. பொடா சட்டத்தின் வாயில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர். அப்படியும் குரல் தளராமல், ஈழத் தமிழர்களுக்காக முழங்கி வரும் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான நெடுமாறன். ஈழத் தம…

  22. பாலா அண்ணைக்கு முதல்வர் கருணாநிதி வழங்கிய கௌரவம்: சு.ப.தமிழ்ச்செல்வன் நன்றி ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். லண்டனில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விள…

  23. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து துணை இராணுவக் குழுவான கருணா குழு பாதுகாப்பு கோரியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தாக்குதலில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அக்குழுவின் பேச்சாளர் எனக் கூறப்படும் அசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார். -puthinam-

    • 0 replies
    • 996 views
  24. தேசத்தின் குரலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையொன்றில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் "தேசத்தின் குரல்" பாலசிங்கத்தின் திருஉருவப்படத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தேசியத் தலைவரின் துணைவியார், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம், கேணல் துர்க்கா உள்ளிட்ட தளபதிகள், போராளிகள் எனப் பலரும் பங்கே…

  25. தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான். தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.