ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???'' மண்டைதீவை ஊடறுத்து விடுதலைப் புலிகள் அல்லை பிட்டியை கைப்பற்றி அங்கிருந்த இராணுவ நிலைகளை தகர்த்தெறிந்து அழித்தொழித்து சிங்கள படைகளிற்க்கு கடும் சேதத்தினை விளைவித்திருந்தனர் . அவர்களின் எதிர் பார்த்த இலக்கு நிறைவடைந்ததும் அவர்கள் மீள் களம் திரும்பினர் . அந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மீது பலாலி படை தளத்தில் இருந்தும் ஏனைய சில நிலைகளில் இருந்தும் சிங்கள படைகள் அந்த மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை வீசி அந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தனர் . ஏதும் அறியாத அந்த மக்கள் மீது தமது கையாலகத்தனத்தை கட்டியிருந்தனர் அங்கிருந்த சில பெண்களை மணபங்க படுத்தி படு பாதமாய் கொலை செய்து தமது வெறியாட்டத்தை…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
நாங்கள் மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் தொடர்வதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வற்புறுத்தலே காரணம் எனத் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் இலங்கை அரசால் கோரப்பட்ட இராணுவ உதவி எதனையும் அன்றைய வாஜ்பாய் அரசால் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் ஆழம் தெரிந்தவர் என்றும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின்போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஜோர்ஜ் பெர்னாண் டஸ் தமிழக நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலே மேற்கண்ட தனது கருத்து களையும், தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அந்த செவ்வியின் முழு வடிவமும் வரு மாறு: …
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்னிக்கான தொலைபேசி இணைப்புக்கள் யாவும் துண்டிப்பு
-
- 0 replies
- 1.4k views
-
-
நோர்வே மற்றும் ஐஸ்லாந்தை சேர்ந்த 30 புதிய பேர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக அரசாங்க சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோஹோன தெரிவித்தார். கண்காணிப்பு குழுவில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் விலகிச் சென்றுள்ளதால் இந்த புதிய உறுப்பினர்கள் நியமனம் பெற உள்ளனர். கண்காணிப்பு குழுவில் இருந்து விலகிச் செல்லும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தமக்கு மீண்டும் அழைப்பு விடுத்தால் வடக்கு கிழக்கில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட தயார் என தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க சமாதான செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் …
-
- 1 reply
- 744 views
-
-
கொழும்பு தெமட்டகொட அருகாமை எண்ணெய் களஞ்சியம் சாலை சூழவுள்ள பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனத்தப்பட்டுள்ளது மக்களின் கவனத்திற்க்கு என பெரிய அளவில் அறிவித்தல்கள் வைக்கப்பட்டுள்ளது . இதே வேளை அந்த பகுதியில் உள்நுழைபவர்கள் தீவிர சோதனைக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டும் வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் களஞ்சியசாலை பகுதிமாத்திரம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திருந்தது . தற்போதைய பாதுகாப்பு நிலமைகாரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதாக தெமடகெட பொலிஸார் தெரிவித்தனர் இந்த பகுதியில் அதிகளவு படையினர் பொலிஸார் வைக்கப்பட்டுள்ளனர் http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&…
-
- 0 replies
- 708 views
-
-
நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் துண்டிக்கப்பட்டு ஒரு திறந்த சிறையாக யாழ். குடாநாடு இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து அனுமதியை வழங்க மறுப்பதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யாழ். குடாநாட்டிற்கு செல்லும் வழிகளை உத்தியோகபூர்வமாக திறக்க வேண்டும் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றிட்டோ மெயிர் அண்மையில் இலங்கைவந்து மீண்டும் ஜெனிவா திரும்பிய சில நாட்களிலேயே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது…
-
- 0 replies
- 852 views
-
-
செஞ்சோலை சிறார் படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசர கால சட்ட நீட்டிப்பு மசோதா மீதான விவாத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தி.மகேஸ்வரன் பேசியதாவது: கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் வர்த்தகர்களை சிறிலங்கா இராணுவத்தினரே கடத்துகின்றனர். துணை இராணுவக் குழுவினர் கடத்தியதாக கூறினாலும் அவர்களுக்கு அலுவலகம் திறக்க அனுமதித்த அரசாங்கமே அதற்குப் பொறுப்பு. சிறிலங்கா அரசாங்கம் இன்று காடைத்தனமான சர்வதிகார ஆட்சியை நடத்துகிறது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளனர். இதற்கான விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவு…
-
- 0 replies
- 850 views
-
-
சிறிலங்கா அரசியலில் இந்திய தூதுவர் நிருபமா ராவ் தலையிடுவதை சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: இனப்பிரச்சனைக்கு அரசியல் வழித்தீர்வுதான் காணப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கை தேவையில்லை. இப்போது புலியை காயப்படுத்திருயிருக்கிறீர்
-
- 0 replies
- 848 views
-
-
பலவந்தமாக வாங்கப்பட்ட வாக்குமூலத்தை இங்கு பாருங்கள் http://defence.lk/videos/20060904.wmv :shock: :shock:
-
- 2 replies
- 1.5k views
-
-
அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான். வெதுப்பியை வேகவைக்கும் அந்தப்…
-
- 0 replies
- 971 views
-
-
திருகோணமலை செல்வநகர் இராணுவ முகாம் மீது மோட்டார், ஷெல்தாக்குதல் திருகோணமலை செல்வநகர் இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகளின் மோட்டர் மற்றும் ஷெல் தாகுதல்கள் இன்று காலை முதல் தொடர்வதாக, தேசியபாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் போது முன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன்; 8 பேர் காயயமடைந்தனர். அதேவேளை நேற்றைய தினம் ஸ்ரீலாங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட சம்பூர்ஸ் பகுதியில் தமது அதிகாரத்தை மேலும் உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் விடுதலைப்புலிகளால் சம்பூரில் எதுவித தாக்குதல்களும் மேற் கொள்ளப்படவில்லை என தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. சுட்டது லங்காசிறியிலிருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச? சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புடழடியட நுடநஉவசழ-நேறளநெவ என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது. அச்செய்தி விவரம்: கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில்…
-
- 3 replies
- 1.8k views
-
-
தினக்குரல் வெளியிட்ட கண்காணிப்புக் குழுவுக்கு எதிராக அரசின் தீவிர பிரசாரம் ஆரம்பம் [05 - September - 2006] என்ற செய்தியின் தலைப்பின் கீழ்: .... மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்களின் கொலைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியதை தொடர்ந்தே இந்த பிரசாரம் தீவிரமாகியுள்ளது...... .... தமிழ் நெற்' இணையத்தளம் படுகொலைகள் இடம்பெற்ற வேளை மூதூர் அரச கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை என தெரிவித்ததாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. எனினும் படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் மூதூர் அரச கட்டுப்பாட்டில் இருந்ததாக `டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டமை குறித்து அரசாங்க சமாதான செயலகம் எதனையும் தெரிவிக்க…
-
- 9 replies
- 2.4k views
-
-
அம்பாறை ஆக்கிரமிப்பு முயற்சி புலிகளால் முறியடிப்பு- 12 இராணுவத்தினர் பலி அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம்முறியடிப்பு சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். திருக்கோவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் பாரிய அளவிலான எறிகணைத் தாக்குதல்களுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளா…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது…
-
- 11 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த யூன் 20 ஆம் நாள் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது எதிர்வரும் 30ஆம் நாள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விளம்பரங்கள் நாளிதழ்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சிறிலங்கா கடற்படைக்கு எதிர்வரும் 11 ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருகோணமலை, காலி, கற்பிட்டி மற்றும் கொழும்பில் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெறும். மேலும் இத்தினபுரி, மினுவங்கொட, களுத்துறை மற்றும் கம்பகா ஆகிய பகுதிகளில் கடற்படைக்கான ஆட்சேர்ப்புக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
பருத்தித்துறை இறங்குதுறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று காணமால் போனதாக கூறப்பட்ட தனியார் சரக்கு கப்பல் மீண்டும் இறங்குதுறைக்கு திரும்பியுள்ளது. பருத்தித்துறை இறங்குத்துறையில் தனியார் ஒருவருக்கான சரக்குகளை இறக்கிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மோதல்களை அடுத்து இந்த கப்பல் காணாமல் போனது. எனினும் நேற்று இந்த கப்பல் சர்வதேச கடலில் தரித்திருந்த நிலையில் கடற்படையினரால் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் பருத்தித்துறை இறங்குத்துறைக்கு அழைத்து வரப்பட்டு தற்சமயம் பொருட்கள் இறக்கப்பட்;டு கொண்டிருக்கின்றன. http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&
-
- 0 replies
- 857 views
-
-
மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை குறித்து சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.இராமநாதன் கூறியதாவது: மூதூரில் அக்சன் பார்ம் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் கந்தளாய் பகுதிகளில் 4 நாட்கள் அக்குழுவினர் விசாரணைகளை நடத்தினர். தற்போதைய நிலைமைகளால் மூதூரில் விசாரணைகளை மேற்கொள்ளையலவில்லை. ஆகையால் இடைக்கால அறிக்கை ஒன்றை அக்குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். இருந்தபோதும் அத்தாக்குதலை நடத்தியோர் அடையாளம் காணப்படவில்லை என்றார் அவர். http://www.eelampage.co…
-
- 0 replies
- 817 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது: சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன். "சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடு…
-
- 0 replies
- 797 views
-
-
கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற வேண்டும்: ஜே.வி.பி கிழக்கு மாகாணம் முழுவதிலிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெளியேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தாக்கல் செய்த சிறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பூர் வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் முழுமைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து அப்பாவி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய யுத்தமானது பயங்கரவாதத்துக்கு எதிரானது தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. யுத்த நிறுத்த ஒப…
-
- 0 replies
- 783 views
-
-
JAFFNA ALLAIPITTY Tuesday, 05 September 2006 காணாமல் போன மதகுருவை கண்டு பிடித்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காணாமல் போனதாக கூறப்படும் வணக்கத்துக்குரிய ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றிய தகவலை எதிர்பார்த்து காத்திப்பதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். 11:51:04 கடந்த 15 நாட்களாக காணாமல் போயுள்ளள இவர்களின் நிலை குறித்து தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள ஆயர், கடந்த 20 ஆம் திகதி கடற்படையின…
-
- 6 replies
- 2.1k views
-
-
மகிந்த படையினரின் வீட்டு வாடகை சம்பளத்தில் இருந்து க்ளிக்கபடுவதை ந்றுத்துமாறு ஊத்தரவை பிறப்பித்து உள்ளார் அதுமட்டுமல்ல வீட்டு அலவின்ஸும் வழங்கபடுமாம் :?: :?: http://army.lk/morenews.php?id=2249
-
- 0 replies
- 1.1k views
-
-
பல நாட்களாக தொடர்ந்த மோதலையடுத்து சம்பூர் சிறிலங்கா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட செய்தி மகிழ்ச்சியை தருகின்றது என ஐக்கிய தேசியகட்சி தெரிவித்தது. எனினும் யுத்த நிறுத்த உடன் படிக்கை மீறியே இராணுவத்தினர் விடுதலைப்புலிகளிடமிருந்து சம்பூரினை மீட்டுள்ளனர் என ஐக்கிய தேசியகட்சியின் பிரதி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பி.பி.சி சிங்கள ஒலிபரப்புச் சேவைக்கு தெரிவித்தார். அதே வேளை அரசாங்கமும் ஜனாதிபதியும் மீண்டும் தாம் யுத்தத்தை தொடரவில்லை மாறாக விடுதலைப்புலிகளின் தாக்குதளிற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என கூறுகின்றது எவ்வாறு இருப்பினும் இன்று எழும்பியுள்ள இவ்வாறான தேசிய கேள்விகளிற்கு அரசாங்கம் சரியான முடிவுகளையும் , தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். வ…
-
- 1 reply
- 1k views
-