Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான். வெதுப்பியை வேகவைக்கும் அந்தப்…

  2. 'யாழ்ப்பாணத்துக்கான உணவுக் கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும்' யாழ் ஆயர் யாழ் குடாநாட்டு மக்களுக்கு இன்னும் 5 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லவுள்ள கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று யாழ் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுவதாகத் தெரிவித்துள்ள ஆயர், அங்கு கொழும்பில் இருந்து உணவுக் கப்பல் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சியின் வழித்துணை தேவை என்றும், அதற்கு விடு…

  3. திருகோணமலை செல்வநகர் இராணுவ முகாம் மீது மோட்டார், ஷெல்தாக்குதல் திருகோணமலை செல்வநகர் இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகளின் மோட்டர் மற்றும் ஷெல் தாகுதல்கள் இன்று காலை முதல் தொடர்வதாக, தேசியபாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் போது முன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன்; 8 பேர் காயயமடைந்தனர். அதேவேளை நேற்றைய தினம் ஸ்ரீலாங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட சம்பூர்ஸ் பகுதியில் தமது அதிகாரத்தை மேலும் உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் விடுதலைப்புலிகளால் சம்பூரில் எதுவித தாக்குதல்களும் மேற் கொள்ளப்படவில்லை என தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. சுட்டது லங்காசிறியிலிருந்த…

  4. யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடி…

  5. அம்பாறை ஆக்கிரமிப்பு முயற்சி புலிகளால் முறியடிப்பு- 12 இராணுவத்தினர் பலி அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம்முறியடிப்பு சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். திருக்கோவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் பாரிய அளவிலான எறிகணைத் தாக்குதல்களுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளா…

  6. கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச? சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புடழடியட நுடநஉவசழ-நேறளநெவ என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது. அச்செய்தி விவரம்: கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில்…

  7. தினக்குரல் வெளியிட்ட கண்காணிப்புக் குழுவுக்கு எதிராக அரசின் தீவிர பிரசாரம் ஆரம்பம் [05 - September - 2006] என்ற செய்தியின் தலைப்பின் கீழ்: .... மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்களின் கொலைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியதை தொடர்ந்தே இந்த பிரசாரம் தீவிரமாகியுள்ளது...... .... தமிழ் நெற்' இணையத்தளம் படுகொலைகள் இடம்பெற்ற வேளை மூதூர் அரச கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை என தெரிவித்ததாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. எனினும் படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் மூதூர் அரச கட்டுப்பாட்டில் இருந்ததாக `டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டமை குறித்து அரசாங்க சமாதான செயலகம் எதனையும் தெரிவிக்க…

  8. பருத்தித்துறை இறங்குதுறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று காணமால் போனதாக கூறப்பட்ட தனியார் சரக்கு கப்பல் மீண்டும் இறங்குதுறைக்கு திரும்பியுள்ளது. பருத்தித்துறை இறங்குத்துறையில் தனியார் ஒருவருக்கான சரக்குகளை இறக்கிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மோதல்களை அடுத்து இந்த கப்பல் காணாமல் போனது. எனினும் நேற்று இந்த கப்பல் சர்வதேச கடலில் தரித்திருந்த நிலையில் கடற்படையினரால் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் பருத்தித்துறை இறங்குத்துறைக்கு அழைத்து வரப்பட்டு தற்சமயம் பொருட்கள் இறக்கப்பட்;டு கொண்டிருக்கின்றன. http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&

  9. சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த யூன் 20 ஆம் நாள் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது எதிர்வரும் 30ஆம் நாள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விளம்பரங்கள் நாளிதழ்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சிறிலங்கா கடற்படைக்கு எதிர்வரும் 11 ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருகோணமலை, காலி, கற்பிட்டி மற்றும் கொழும்பில் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெறும். மேலும் இத்தினபுரி, மினுவங்கொட, களுத்துறை மற்றும் கம்பகா ஆகிய பகுதிகளில் கடற்படைக்கான ஆட்சேர்ப்புக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் பா…

  10. மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை குறித்து சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.இராமநாதன் கூறியதாவது: மூதூரில் அக்சன் பார்ம் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் கந்தளாய் பகுதிகளில் 4 நாட்கள் அக்குழுவினர் விசாரணைகளை நடத்தினர். தற்போதைய நிலைமைகளால் மூதூரில் விசாரணைகளை மேற்கொள்ளையலவில்லை. ஆகையால் இடைக்கால அறிக்கை ஒன்றை அக்குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். இருந்தபோதும் அத்தாக்குதலை நடத்தியோர் அடையாளம் காணப்படவில்லை என்றார் அவர். http://www.eelampage.co…

  11. யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது: சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன். "சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடு…

  12. கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற வேண்டும்: ஜே.வி.பி கிழக்கு மாகாணம் முழுவதிலிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெளியேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தாக்கல் செய்த சிறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பூர் வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் முழுமைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து அப்பாவி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய யுத்தமானது பயங்கரவாதத்துக்கு எதிரானது தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. யுத்த நிறுத்த ஒப…

  13. மகிந்த படையினரின் வீட்டு வாடகை சம்பளத்தில் இருந்து க்ளிக்கபடுவதை ந்றுத்துமாறு ஊத்தரவை பிறப்பித்து உள்ளார் அதுமட்டுமல்ல வீட்டு அலவின்ஸும் வழங்கபடுமாம் :?: :?: http://army.lk/morenews.php?id=2249

  14. பல நாட்களாக தொடர்ந்த மோதலையடுத்து சம்பூர் சிறிலங்கா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட செய்தி மகிழ்ச்சியை தருகின்றது என ஐக்கிய தேசியகட்சி தெரிவித்தது. எனினும் யுத்த நிறுத்த உடன் படிக்கை மீறியே இராணுவத்தினர் விடுதலைப்புலிகளிடமிருந்து சம்பூரினை மீட்டுள்ளனர் என ஐக்கிய தேசியகட்சியின் பிரதி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பி.பி.சி சிங்கள ஒலிபரப்புச் சேவைக்கு தெரிவித்தார். அதே வேளை அரசாங்கமும் ஜனாதிபதியும் மீண்டும் தாம் யுத்தத்தை தொடரவில்லை மாறாக விடுதலைப்புலிகளின் தாக்குதளிற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என கூறுகின்றது எவ்வாறு இருப்பினும் இன்று எழும்பியுள்ள இவ்வாறான தேசிய கேள்விகளிற்கு அரசாங்கம் சரியான முடிவுகளையும் , தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். வ…

  15. முழு அளவிலான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது என திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.எழிலன் தம்மிடம் விளக்கம் கேட்பதாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொட்பினூர் ஒமர்சன் தெரிவித்தார். எனினும் முழு அளவிலான யுத்தம் தொடர்பாக தற்போது உள்ள நிலையில் கூற முடியாது என தொர்பினூர் ஒமர்சன் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனிடம் தெரிவித்தார். எனினும் இருதரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லையென ஒமர்சன் மேலும் தெரிவித்தார். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  16. தெற்கை பிரிக்க ஜே.வி.பி.யும் வடக்கை பிரிப்பதற்குபுலிகளும் செய்த முயற்சியை நாம் முறியடித்தோம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதன்மூலம் சிறந்த நல்லாட்சியை உருவாக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒரு காலத்தில் நாட்டின் தெற்குப்பகுதியை ஜே.வி.பி.யினரும் வடகிழக்குப்பகுதியை விடுதலைப்புலிகளும் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி உயிர்தியாகங்களை செய்து அந்த முயற்சியை முறியடித்தது.…

  17. சிறப்புப் பார்வை மாவிலாறு தொடக்கம் மண்டைதீவு வரை ஒரு இராணுவ ஆய்வு. http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

  18. "" கவலை விடு வெற்றி நமக்கே...."" கடந்த தினம் இலங்கை படைகள் சம்புரை தம்மகப் படுத்தியதன் பின்னர் அவர்கள் தமது அணல் பறக்கும் பிரச்சாரத்தை அவர் சாந்த ஊடகங்கள் என வர்னிக்கப்படும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடக துறை ஊடாக தமது பரப்புரைகளை மிகவேகமாக பரப்பி வருகிறார்கள் . அத்தோடு அந்த அப்பாவி சிங்கள மக்களிடம் தனது அரசு வெற்றியை குவித்து வருவதாகவும் விடுதலைப் புலிகளைவிரட்டி வருவதாகவும் அவர்களின் ஆளுகைக்குள் உள்ள நிலப் பரப்புக்களை மீட்டு வருவதாகவும் அங்கு தமது படைகள் நிலை கொண்டுள்ள காட்சிகளை தொடராய் காட்டி தாம் வெற்றி பெற்று விட்டோம் தமது படைகள் அங்கே அகல கால் ஊன்றி விட்டன என்பதான மாயை கருத்தோற்றத்தை கட்டுத் தீபோல மூட்டி பற்ற வைத்துள்ளார்கள் . அவையும்…

  19. மகிந்த அவர்கள் சொன்ன மாதிரி அவர் அவர் மொழியில் அவர்களுடன் பேசுவது எப்போதும் சிறப்பானதுதான். சிலவேளை சிலபல அரசியல் காரணங்களால் அல்லது அழுத்தங்களால் விடுதலை புலிகள் சொல்வது போல் சில இராணுவ வெற்றிகைளை தக்க வைக்க முடியாமல் போயிருக்கலாம். மகிந்த அவர்கள் புலிகளுக்கு இராணுவ மொழிதான் புரியும் என்கிறார் அதே மொழியில்தான் பேசுவேன் என்று சொல்கிறார். ஆக புலிகளும் அதே மொழியில் பேசுவதை தவிர வேறு வழியில்லை. வெறும் அறிக்கைகளை விடுவதை விடுத்து பாரிய இராணுவ வெற்றி ஒன்றை சம்பாதிக்க வேண்டிய அவசரமான அவசியமான தேவை ஒன்று புலிகளுக்கு உண்டு. இராணுவ சமநிலை குழம்பிய நிலையில் சர்வதேச ஊடகங்களில் இலங்கை இராணுவத்தின் வெற்றிகள் பெரிதுபடுத்தி பிரசாரம் செய்யபடுகிறது. விடுதலை புலிகளின் பேரம் …

  20. ''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???'' மண்டைதீவை ஊடறுத்து விடுதலைப் புலிகள் அல்லை பிட்டியை கைப்பற்றி அங்கிருந்த இராணுவ நிலைகளை தகர்த்தெறிந்து அழித்தொழித்து சிங்கள படைகளிற்க்கு கடும் சேதத்தினை விளைவித்திருந்தனர் . அவர்களின் எதிர் பார்த்த இலக்கு நிறைவடைந்ததும் அவர்கள் மீள் களம் திரும்பினர் . அந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மீது பலாலி படை தளத்தில் இருந்தும் ஏனைய சில நிலைகளில் இருந்தும் சிங்கள படைகள் அந்த மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை வீசி அந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தனர் . ஏதும் அறியாத அந்த மக்கள் மீது தமது கையாலகத்தனத்தை கட்டியிருந்தனர் அங்கிருந்த சில பெண்களை மணபங்க படுத்தி படு பாதமாய் கொலை செய்து தமது வெறியாட்டத்தை…

  21. இவர்கள் மனிதர்களா மனிதவடிவில் பிறந்த மிருகங்களா??? இவ்வாறு சிறீலங்கா ஜனாதிபதி கேள்வி எளுப்பாதிருந்த போதும் பல நாட்டு மக்கள் கேட்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குத் தலைவணங்க முடியாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது வருட மாநாட்டில் அவர் பேசியதாவது: ஒருபுறம் எமது தாயகத்தை பிளவுபடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர். மறுபுறத்தில் நாம் புதிய சிறிலங்காவை கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம். அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நாம் தலைவணங்க மாட்டோம். தற்போது கூட விடுதலைப் புலிகளுடன் நாம் யுத்தம் நடத்தவில்லை. எமது பாதுகாப்புக்கான பதில் தாக்குதல் நடவடிக்கை. எமது இலக்கானது பு…

  22. திருமலைத்துறை முகத்தைப் பாதுகாக்க என்று சம்பூரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தற்போது மட்டக்களப்பு- திருமலையை இணைக்கும்..வாகரை நோக்கிய புதிய படைநகர்வுக்கு முஸ்தீவு செய்வதாகவும்..தாம் புதிதாகக் கைப்பற்றிய இடங்களில் இருந்து பல்குழல் எறிகணைத்தாக்குதல்களை கதிரவெளி மற்றும் வாகரை நோக்கி நடத்துவதாகவும்..இதில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே..சம்பூரையும் அதன் அண்டிய பிரதேசங்களையும் கைப்பற்றிய படையினர் திருமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இரு கூறாக்கி உள்ளது போல..வாகரையைக் கைப்பற்றி..புலிகளை மட்டக்களப்புக்குள்ளும்..திரு

    • 53 replies
    • 10.2k views
  23. "சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறிலங்கா இராணுவம் சிறிலங்காவின் இராணுவ-பொருளாதாரத்தை நிலை குலையவைக்கும் பலம் "சம்பூர்" விடுதலைப் புலிகளுக்கு இருந்தமையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன. 2006 ஆகஸ்ட் 01 ஆம் நாள் சம்பூரிலிருந்து பலமுறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சேதம் …

  24. JAFFNA ALLAIPITTY Tuesday, 05 September 2006 காணாமல் போன மதகுருவை கண்டு பிடித்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காணாமல் போனதாக கூறப்படும் வணக்கத்துக்குரிய ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றிய தகவலை எதிர்பார்த்து காத்திப்பதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். 11:51:04 கடந்த 15 நாட்களாக காணாமல் போயுள்ளள இவர்களின் நிலை குறித்து தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள ஆயர், கடந்த 20 ஆம் திகதி கடற்படையின…

  25. இனப்பிரச்சனைக்கான இறுதித் தொடர்பிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு அறிவிக்கப்படவில்லை. சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு மாநாட்டில் இறுத் தீர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் அம்முடிவு ஒத்திவைக்கப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இது தொடர்பில் விவாதிக்க சுதந்திரக் கட்சியில் துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் முடிவுக்கமைய இறுதித் தீர்வு தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுத் திரும்பிய முன்னர் இறுதித் தீர்வு தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்படலாம் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர். http://www.eelampage.com/?c…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.