ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
திருகோணமலை மாவட்டம், மூது}ரில் இன்று காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மூது}ர் கிழக்கிற்கான நுழைவாயில் பகுதியான செல்வநகர் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை திருமலையின் புறநகர் பகுதியான விஜிதபுரவில் உள்ள ஏகாம்பரம் வீதியில் சேதமடைந்த நிலையில் இராணுவ ஊர்தி ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை தகவல் : சங்கதி
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் உத்திகளும் விடைதேடும் சிறிலங்கா-சர்வதேச புலனாய்வு அமைப்புக்களும்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 27 ஓகஸ்ட் 2006, 08:11 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். "சண்டே ரைம்ஸ்" வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை …
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பு புறநகர் பமுனுகமவில் வெடிபொருட்கள் மீட்பு ; 17 பேர் கைது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்த பெருமளவிளான வெடிபொருட்கள் கிரனேட் குண்டுகள் , மறைத்து வைக்கப்பட்ட வீடு ஒன்றை இன்று நண்பகல் சிறிலங்கா பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர் . . கொழும்பு புறநகர் பகுதியான பமுனுகம என்ற இடத்தில் பெருமளவிளான பொலிஸார் சுற்றி வளைப்பு இன்று தேடுதல் நடத்தியுள்ளனர் தேடுதல் நடவெடிக்கையின் போது சந்தேகத்திற்க்கு இடமான வீடு ஒன்றினை சோதனையிட்ட பொழுது பொருமளவிளான ஆயுதங்கள் டிபொருட்கள் கைப்பற்றபட்டன என்றும் சந்தேகத்தின் பேரில் 17 பேர் வரை கைதுசெய்யப்பட்டு பொலிஸார் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளனர் . எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .. கைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலையில் குண்டுதாக்குதல் சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலை தொண்டு பகுதியில் புலிகளின் முகாம் என இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது இன்று பிற்பகல் முதல் தாக்குதல் நடத்தி வருவதாக பாதுகாப்பு ஊடக அமைச்சு தெரிவித்த்து .. இனங்காணப்பட்ட புலிகள் சிறிய முகாம்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து தான் மோட்டார் எறிகனை தாக்குதல் படையினர் மீது மேற்கொள்வதாகவும் பாதுகாப்பு ஊடக செய்தி தெரிவிக்கிறது.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக நீளும் குற்றச்சாட்டு ` இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி, அமைதிப் பேச் சுக்களை உடன் ஆரம்பியுங்கள் என்று அடிக்கடி வற்புறுத்தி வருகின்ற இணைத் தலைமை அமைப்புக்களில் ஐரோப் பிய ஒன்றியமும் பிரதானமானது. இலங்கையில் இன்று அமைதி கேள்விக் குறியாகி யுத் தம் நிதர்சனமாகும் சூழ்நிலையில் அந்நிலைமையை ஏற் படுத்தியதற்கான பொறுப்பு குற்றச்சாட்டு சம்பந்தப் பட்ட இரு தரப்புகளான விடுதலைப் புலிகள் மீதும், இலங்கை அரசு மீதும் இணைத் தலைமைகளால் சுமத்தப்பட்டு வருகையில் அதே குற்றச்சாட்டு இணைத் தலைமைகளில் இடம் பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக் கின்றது. http://www.uthayan.com/editor.html
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறீலங்கா சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை அடுத்து மைத்தானத்தில் நின்ற இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற படையினர்..அவர்களைப் புலிகள் என்று கூறுகின்றனர்..! மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் 5 இளைஞர்கள் அதிரடிப் படையிரால் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்ட பாலமீன்மடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் 5 தமிழ் இளைஞகள் நேற்று வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாலமீன்மடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் நின்ற போது இவர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா ஆனந்தராஜா வயது 28 மற்றும் மட்டக்கள்பபு புண்ணச்சோலையைச் சேர்ந்…
-
- 7 replies
- 4.5k views
-
-
இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளும் துரோகங்களும்" [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 16:03 ஈழம்] [ம.சேரமான்] இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். க…
-
- 4 replies
- 1.5k views
-
-
மூதூரில் விமானக் குண்டுத்தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 5 பேர் படுகாயம் [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 19:30 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் இன்று பிற்பகல் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப் படையினர் துறைமுகத்தில் இருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிமுதல் சரமாரியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர். மேலும் விமானப் படையின் கிபீர் விமானங்கள் பலமுறை குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் இலங்கைத் துறைமுகத்துவாரப் பகுதியில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். 5 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
-
- 0 replies
- 857 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா அளித்த நேர்காணல்: அம்பாறை திருக்கோவில் தம்புலுவில் வீதியில் சிறிலங்கா அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடத்திய தாக்குதலில் அரசியல்துறைப் போராளியான சுடர் (வயது 21) வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அரசியல் பணி தொடர்பாக சென்ற போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார் ஜெயா. இதனிடையே தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த எம். தர்மரட்ண (வயது 35) மற்றும் டபிள்யூ. அபயரட்ண (வயது 33) ஆகியோர் படுகாயமட…
-
- 0 replies
- 886 views
-
-
தென்மராட்சி பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாளுக்கும் முகமாலைக்கும் இடையேயான பகுதியில் வீதி சுற்றுக்காவல் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த 4 பேர் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 1k views
-
-
அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரண…
-
- 9 replies
- 2.3k views
-
-
தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு பேரினவாதிகளின் முன் அமைச்சுக்கு கை குலுக்கும்...அரசியல்வாதிகள்..! இவர்களிடம் மக்களின் நலன் என்பது கை உயருமா..தாழுமா..??! சிங்கள பேரினவாதக் கட்சிகளை உள்வாங்கிச் செயற்படும்..மகிந்த அரசில் இரண்டு பிரதான மலையகக் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதுடன் கட்சித் தலைவர்களுக்கு மகிந்த அரசு அமைச்சர் பதவிகளையும் இதர உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் மகிந்தவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கோடு மகிந்த இந்த நகர்வைச் செய்திருக்கலாம். இருந்தும் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்திரசேகரனை அமைச்சரவையில் உள்வாங்கி இருப்பது ஜேவிபி மற்றும் கெல உறுமய போன்ற பேரினவாதக் …
-
- 11 replies
- 2.2k views
-
-
INGOs leave Jaffna, ICRC UN Agencies stay [TamilNet, August 26, 2006 11:38 GMT] Several International Non Government Organizations (INGOs) are pulling out their staff from northern Jaffna peninsula following escalation of fighting between the Liberation Tigers and Sri Lankan government troops. Foreign staffs attached to Norwegian Refugee Council (NRC), World Vision, Caritas, PARCK, Danish De-Minning Group and Sewa Lanka staffs left Jaffna by boat flying ICRC flag, sources at the Jaffna Secratariat said. A convoy of vehicles carrying the INGO staffs left Jaffna town for Pt.Pedro, Saturday morning. They will travel to south of Sri Lanka by boat, sources said. …
-
- 0 replies
- 890 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம். ஜோஸப் அனுதாபப் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் எவருமில்லை இதனால் நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத் தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் இல் லாத காரணத்தால் நேற்று நாடாளுமன்றம் 20 நிமிடங்களே கூடியது. நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்புகளுக்குப் பின்னர் வாய்மூல விடைகளுக்கான கேள்வி நேரம் இடம்பெற்றது. கேள்விகளுக்கு எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுத்த எம்.பிக் கள் சபையிலிருக்கவில்லை. இதனால், அனைத்துப் பதில்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட் டன. …
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை விடுவிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளையதினம் விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்கப்படுகிறது. பந்துஜீவ போபிட்டிய என்ற காவல்துறை அதிகாரியே தமிழிழ விடுதலைப்புலிகளால் கடந்த வருடம்; செப்டம்பர் மாதம் தமிழிழ விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்ள்ளார். இவரும் ஏனைய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் பந்துஜீவவை தவிர்ந்த ஏனைய இருவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 75 replies
- 10k views
-
-
முகமாலையில் குண்டு தக்குதல். - 06 சிங்கள அரச பயங்கரவாதிகள் பலி. முகமாலையில் இண்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் 06 சிங்கள அரச பயங்கரவாதிகள் கொல்லபட்டுள்ளனர். மேலும் பல அரச சிங்கள படைப் பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். முகமாலைக்கும் எழுமட்டுவாள் பகுதிக்கும் இடையில் வீதி றோந்தில் ஈடுபட்ட சிங்கள கூலிப்படைகளின்மீதே தாக்குதல் நடாத்தபட்டதாக அறியமுடிகிறது. எனினும் விடுதலைப் புலிகள் புதைத்த குண்டில் சிங்கள சிப்பாய் காலை வைத்ததால் 06 படையினர் கொல்லப்பட்டதாக இலங்கை பயங்கரவாத அரசு தெரிவித்துள்ளது http://www.nitharsanam.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு பாக். விமானப் படையினர் வழிகாட்டுகின்றனர். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:16 தமிழீழம்] [நிதர்சனம்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு வழிகாட்டியாக பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பிலிருந்தும் செயற்பட்டு வருவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய வெளிவிவகார புலனாய்வுத்துறை முன்னாள் தலைமை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளதாக இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை உடைத்தழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்வதற்கும், பதுங்கு குழிகளை அழிப்பதற்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் பி.ராமனை மேற்கோள் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php
-
- 10 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே தேவை: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:47 ஈழம்] [காவலூர் கவிதன்] தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான…
-
- 28 replies
- 6.3k views
-
-
தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன். - மீண்டும் சந்திரசேகரனின் வங்குரோத்து அரசியல். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:21 தமிழீழம்] [எஸ்.கே] மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். இருவரும் மலையக மக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வான்பரப்பில் சிறிலங்கா படையினரின் மிக் போர் விமானம் மூன்று முறை இன்று வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தியது. புதுக்குடியிருப்பு பிரதேச அண்மித்த பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புக்களை மிக் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானிய உயர் அதிகாரிகளால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளி…
-
- 2 replies
- 1.4k views
-
-
வவுணதீவு முன்னரங்க காவலரணில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நெட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்: வவுணதீவு முன்னரங்க காவலரணுக்கு 80 மீற்றர் தொலைவில் துணை இராணுவக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் குண்டு வெடித்து இறந்தார். திமிலத்தீவு சந்தை வீதியைச் சேர்ந்த சத்தியசீலன் தர்சன் (வயது 19) என்று அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அவர் கடத்திச் செல்லப்பட்ட அப்பாவி இளைஞர். வவுணதீவு முன்னரங்க நிலையை நோக்கி உந்துருளியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சத்தியசீலன் வந்த போது குண்டுவெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணா குழுவினரால் இளைஞர்கள் கொல்லப்படுவதையிட்டு மக்கள் விசனம். கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர்களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர். மறுக்கும் இளைஞர்களை குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொடுத்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு முறை சென்ற தாக்குதல் நடாத்திவிட்டுவந்தால் உங்களை விடுதலை செய்வதாக கோரி இளைஞர்களை கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். நேற்று வியாழக்கிழமை வவுணதீவு விடுதலை புலிகளின் முன்னரங்குக்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட இளைஞனிடம் குண்டு பொருத்தி மோட்டார் சைக்கில் கொடுத்து அ…
-
- 6 replies
- 2.8k views
-
-
இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 20:59 ஈழம்] [ச.விமலராஜா] இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம…
-
- 1 reply
- 984 views
-