ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
-யாழின் மைந்தன்- http://www.thinakkural.com/news/2006/11/19...s_page15529.htm தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு ஒருவாரகாலம் கடந்துவிட்டது. தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென கால்நூற்றாண்டுகளுக்கு முன்னர், காங்கேசன்துறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபின்னர், தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறிய தீர்க்கதரிசனம் இன்றும் பொய்க்கவில்லையென்பதை ரவிராஜின் படுகொலை நிரூபணமாக்கியுள்ளது. தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் சுட்டுச் சரிக்கப்படுவது, திருகோணமலையில் நடராஜன் என்ற வீரமறவன், மணிக்கூட்டுக்கோபுரத்தில் கறுப்புக்கொடியைக் கட்டியபோது படைத்தரப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டது முதல் ஆரம்பித்து இன்றுவரை அரங்கே…
-
- 0 replies
- 781 views
-
-
வடகிழக்கு மக்களை பட்டினி போட்டுக் கொல்லும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த வைப்பிலிருக்கும் நெல்லை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் வடக்கு கிழக்கு மக்களிற்கு அரசு அத்தியாவசியப் பொருட்களை தடை செய்து மக்களை பட்டினியில் ஆழ்த்தி விட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிறிலங்கா அரசு அக்கறை காட்டிநிற்கின்றது. இந்த ஏற்றுமதி தொடர்பான உரிமையை கேரள மாநில நிறுவனம் ஒன்று வழங்க கமத்தொழில் சேவை மற்றும் கமத்தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் ஏற்றுமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளது. ஏற்றுமதி செய்யும் இந்த நெல் ஒரு கிலோ 12 ரூபாவுக்கு விற…
-
- 2 replies
- 1.3k views
-
-
யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்? சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி யின் இறுதிக் கிரியைகள் நேற்று தென்மராட்சியில், அவரது சொந்த ஊரான சாவகச்சேரியில் நடந்து முடிந்துள்ளதுடன், துடிப்புள்ள ஓர் இளம் தமிழ் ஜனநாயகப் போராளியின் சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது. ரவிராஜ் எம்.பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அவரின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்கள் ஆகியோர் யாழ்.வருவதற்கும், ரவிராஜின் பூதவுடலை இங்கு எடுத்து வரவும் தனியான விமானப்படை விமான வசதியை அரசு "தாராளமாக' பெருமனதுடன் வழங்கி உதவியிருக்கின்றது. அரசுத் தலைமை இந்த உபகாரத்தைச் செய்தாலும் "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என்பதுதான் உண்மை. தமிழர் தாயகமான வடக…
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...tus20061117.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
செஞ்சிலுவை ஊடாகவே இலங்கைக்கு உணவுப்பொருள்களை அனுப்புங்கள் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை இலங்கைத் தமிழருக்கு தேவையான உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துப்பொருள்கள் இலங்கை அரசு மூலம் அனுப்பாமல் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள் ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை இலங்கைத் துணைத் தூதரகம் முன் போராட்டம் நடத்த, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அரசிடம் அனுமதி கேட்டும் அதைத் தராமல் மறுத் ததும் வைகோவைக் கைது செய்ததும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற …
-
- 0 replies
- 941 views
-
-
கண்காணிப்புக்குழு வருவதற்கு மறுப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கவலை தெரிவிப்பு நாதன் Friday, 17 November 2006 மட்டக்களப்பு மாவட்டம் வி டுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு திக்கு மாவட்ட போர் நிறுத்தக் கண் காணிப்புக்குழுத் பிரதிநிதிகள் வருவ தற்கு கொழும்பிலுள்ள கண்காணிப்பு குழுத் தலைமைப் பணிமனை அனு மதி வழங்கவில்லை எனத் தெரிவிக் கப்படுகிறது. இதன் காரணமாக போரதீவு பகுதியில் அதிரடிப்படையினர் வியாழ க்கிழமை இரவு மேற்கொண்ட எறி கணைத் தாக்குதல் தொடர்பாக விடு தலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறை கண்காணிப்புக்குழுவிடம் மு றையிட்டபோதும் சம்பவம் நடந்த இ டங்களை வந்து பார்வையிட மறுத் து விட்டனர். இது தொடர்பாக கவலை தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகள் நோர்வே அரசு…
-
- 0 replies
- 1k views
-
-
ரவிராஜ் படுகொலை தொடர்பாக தமிழ்கட்சி மாகாணப் பொறுப்பாளர் மீது விசாரணை [18 - November - 2006] [Font Size - A - A - A] தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜின் படுகொலை தொடர்பாக தமிழ்க் கட்சியொன்றின் மாகாணப் பொறுப்பாளர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். ரவிராஜின் கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தமிழ்க் கட்சியொன்றின் மாகாணப் பொறுப்பாளர் விசாரணைக்குட்படுத்தப்படவுள
-
- 2 replies
- 1.9k views
-
-
நெல்லியடியில் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உணவுக்கு வழியின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி புலோலியைச் சேர்ந்த முத்தையா சந்திர பாலா (வயது 60) என்பவரே இவ்வாறு பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் பட்டினியால் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலத்தின் பிரேத பரிசோதனையை மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரியும் பதில் நீதிவானுமாகிய ந.தங்கராசா ஆகியோர் நடத்தினர். யாழ். குடாநாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் ஒரு வேளை உணவுக்க…
-
- 19 replies
- 3.1k views
-
-
இலங்கையின் வடமேற்கே தலைமன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கடற்புலிகளின் 3 படகுகளை மூழ்கடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விடத்தல்தீவை அண்டிய கடற்பகுதியில் கடற்புலிகளின் படகுகளைக் கண்டு அவற்றின் மீது தர்க்குதல் நடத்தியதாகவும் இதில் குறைந்தது 25 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தல் தீவு கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய தமது படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதா…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு உதவி இல்லை: வைகோவுக்கு இந்தியப் பிரதமர் கடிதம் [சனிக்கிழமை, 18 நவம்பர் 2006, 19:53 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான இராணுவ தளபாடங்களை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.06) திகதியிடப்பட்ட பிரதமரின் கடிதத்தை இன்று சனிக்கிழமை சென்னையில் ஊடகவியலாளர்களிடம் வழங்கினார். அக்கடிதத்தில் மன்மோகன் சிங்க் கூறியிருப்பதாவது: இலங்கையில் சமீபத்தில் நடந்த சம்பவங்களில் தமிழர் பகுதிகளில் பெண்களும் குழந்தைகளும் உயிரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
சமாதானத்தை உருவாக்குவதில் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இரு சவால்கள் [18 - November - 2006] தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் யாப்பு அல்லது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடியது. ஒரு அரசியலமைப்புச் சட்டம் தயாரிப்பதில் எங்கள் ஒருவருக்கும் முன் அனுபவமில்லை. கடந்த காலத்தில் எங்களுடைய நாட்டில் சட்ட நிபுணர்களும் ஒரு சில அரசியல்வாதிகளுமே சேர்ந்து எங்களுடைய யாப்பினைத் தயாரித்திருக்கிறார்கள். எம்மில் அனேகம் பேருக்கு அதில் என்ன எழுதியிருக்கின்றது என்றே தெரியாமல் இருக்கும். அதில் ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த ஆவணம் சட்டத் துறையினர் பாவிக்கும் கடும் சொற்களில் எங்களுக்கு விளங்கக் கஷ்டமான முறையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு நாட்டு …
-
- 0 replies
- 982 views
-
-
மேன்மாகாண மக்கள் முன்னணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஆட்கடத்தல் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கான மக்கள் கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினருமான மனோ கணேசன், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்புக் குழுவில் அண்மையில் கொல்லப்பட்ட மாமனிதர் ரவிராஜீம் ஒரு முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்தார். ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரிப்பதில் பங்களிப்பை வழங்குவதால், இந்த கொலை மிரட்டல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகரித்துவரும் ஆட்கடத்தல்கள், மிரட்டல், பணப்பறிப்பு மற்றும் கொலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த மக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டபோது, அதற்கு பிர…
-
- 5 replies
- 1.6k views
-
-
பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?…
-
- 18 replies
- 5.5k views
-
-
பேச்சளவில் மட்டுமின்றி செயல் வடிவிலும் மஹிந்த காட்டிய அக்கரை[i மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்கை;கை வரலாற்று நூலை எழுதிய மஹிந்த இளையப்பெரும அந்தக்காலகட்டத்தில் இமட்பெற்ற கொடூரப படுகொலைகள், ஆள்கடத்தல் காணாமற்போதல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவசங்களுடன் தொடர்புபட்ட குழுக்களது செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டடம் உருவான விதம் குறித்தக் கீழ்காணும் விதத்தில் தமது நூலில் விவரித்துள்ளார். “பகல் இரவு என்றில்லாது தமது இல்லத்தின் தகவுகளைத் தட்டிக் காணாமற்போன தமது பிள்ளைகள் குறித்த ஓப்பாரியிடும் - கதறியழும் பெற்றறோரின் ஓலதத்தை நிறுத்த வேண்டுமானால் பொது நலவாய நாடுகள் சபையின் கவனத்தை இலங்கையின் பக்கம் திரும்பவைத்தாக வேண்டுமமென மஹிந்த நம்பினார். இதனிடையே பொது நலவாய நாடுகள் சபையின் மனித உரிமை…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாமனிதர் ரவிராஜின் வெற்றிடத்திற்கு சட்டத்தரணி சிறீகாந்தா நியமனம் பெறலாம். நடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மறைவை அடுத்து, தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அடுத்த கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி சிறீகாந்தாவை ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்காக நியமிக்கப்படலாமென சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ,இருந்தும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு தீர்மானத்தினையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலை கடற்புலிகள் முறியடித்து தாக்கியதில் கடற்படையினரின் 2 ரோந்துக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 1 கடற்கலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3 கடற்கலங்கள் சேதமடைநதுள்ளன. 10-க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பயிற்சி நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் கடற்புலிகளின் படகுகள் ஈடுபட்டிருந்தன. அப்பகுதிக்கு காலை 6.05 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையின் வேகத்தாக்குதல் படகுகள், கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை தொடுத்தன. கடற்படைய…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒரு பக்கம் சமாதானப் பேச்சு - இன்னொரு பக்கம் தமிழர்கள் படுகொலை! இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தகிடுதத்தம்! முதல்வர் கலைஞர், பிரதமரிடம் வற்புறுத்தியதற் நற்பலன் கிடைத்துள்ளது முதல்வர் டில்லி செல்லும்போது பிரதமரிடமும், சோனியாவிடமும் வற்புறுத்த வேண்டும். சிங்கள இராணுவத்திற்கு விமானப்பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்தவேண்டும்! இப்பிரச்சினையில் அரசியல் வேண்டாம் - ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தற்காலச் சூழல்களை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- இலங்கையில் நடைபெற்றுவரும் ராஜபக்சே ஆட்சி ஓர் இரட்டை வேட ஆட்சி; அப்பட்டமான சிங்கள வெறித்தனத்தின் சிம்மாசனம்! முழுக்க முழுக்…
-
- 0 replies
- 647 views
-
-
(வெள்ளிக்கிழமை) 17 நவம்பர் 2006, 20:31 ஈழம், (காவலூர் கவிதன்) இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது. இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துh தரகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னரே அறிவித்திருந்தார். இருப்பினும்இ இதற்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கவில்லை. வைகோ அறிவிப்பையடுத்து, இலங்கை தூதரகம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் துhதரகத்துக்கு வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
*யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள். *கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது. *யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது. *ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00 ஒரு கிலோ பூண்டு ரூ2000.00 இப்படிப் பல! *கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இ…
-
- 7 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 18 ஆம் நாளில் அவரின் 56 வயதுடன் நிறைவுபெறுகின்றது. எனினும் மேலும் ஒருவருடம் பதவிநீடிப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கோத்தபாய ராஜபக்ச முலம் சிபார்சுக்கடிதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதவி நீடிப்புக்காக மகிந்தவின் அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை. இதற்கு இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் இருந்து பதவி நீடிப்பு வழங்குவதை எதிர்த்து மகிந்தவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முகமாலை சமரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை அண்மையில் சரத் பொன்சேகா ஏற்றிருந்தார். இந்தச்சமரில் நூற்றுக்கும் மேற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில திரும்பவும் அடி விழ தொடங்கப்போகுது போல: படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை
-
- 3 replies
- 2.5k views
-
-
-
இந்தியா - இலங்கை இராணுவத்துக்கு சண்டிகாரில் போர்ப் பயிற்சி. இராணுவத்தினால் பட்டினியாகும் தமிழர்களுக்கு உணவு. யாழில் பட்டினியுடன் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு அனுப்ப உள்ளதாக மன்மோகன் சிங் கலைஞ்சர் கருணானிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல் கட்டமாக 5200 மெட்ரிக் தொன் அரிசியும், 1500 மெட்ரிக் தொன் சீனியும், 3000 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பவுள்ளதாக மேலும் தெரிவித்தார். India to raise concerns of Tamils to Sri Lanka CHENNAI: Expressing concern over the recent developments in Sri Lanka and the Tamils' plight there, Prime Minister Manmohan Singh said he will convey India's concern to the Lankan President Mahinda Rajapakse in an appropri…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். யாழ். மனித அவலம், வலிந்த தாக்குதல்கள், ஏ-9 பாதை திறக்க மறுப்பு, யுத்த நிறுத்த மீறல்கள், கருணா குழுவுக்கு சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துக்கு நேரடித் தொடர்பு, ஆட்கடத்தல்கள், மாமனிதர் ரவிராஜ் படுகொலை போன்ற பல்வேறு அப்பட்டமான மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. இவற்றை சமாளிக்கும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு நேற்று மாலை கடிதம் மூலம் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்ப…
-
- 2 replies
- 1.1k views
-