Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிகாரப் பகிர்வுக்கு தயார்-ஆனால் ஒருநாட்டின் கீழ்தான்.....:: மகிந்த ராஜபக்ச [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 18:15 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா எனும் ஒரு நாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணுவதை நாம் கொள்கையாக வைத்துள்ளோம். ஆனால் ஒருநாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுதான் அளிப்போம். இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது. ஆனால் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம். ஓஸ்லோவில் முன்னர் எனது அரசாங்கக் குழுவினரை சந்திக்க விடுதலைப் புலிகள் மறுத்துவ…

    • 0 replies
    • 1.2k views
  2. வெறிச்சோடிக் கிடக்கும் "மூலோபாய" திருகோணமலை [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 09:02 ஈழம்] [ம.சேரமான்] தெற்காசியாவின் இராஜதந்திர மற்றும் யுத்த மூலோபாய நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இப்போது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. திருகோணமலை சந்தைப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா இராணுவத்தினரால் குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்களை வெட்டியும் குத்தியும் தீயிலிட்டும் வேட்டையாடப்பட்ட கோர நிகழ்வுக்குப் பின்னர் இன்னமும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. 100 மீற்றருக்கு ஒரு இராணுவ சோதனைச் சாவடி இருப்பதால் வசிக்கின்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். மக்கள் நடமாட்டமும் இல்லை. வெளியாட்க…

    • 0 replies
    • 929 views
  3. ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 செப்ரெம்பர் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 17ஆம் திகதி காலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தர்மகுல சிங்கம் பிரதீப்(வயது 25) என்ற இளை ஞரே இவ்வாறு கொலை செய்யப்பட் டுள்ளார்.தனது பெற்றோருடன் 5 வயதில் கனடாவில் குடியேறிய இவர் சம்பவ தினத்தன்று தனது காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இனந் தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய் யப்பட்டுள்ளதாக அங்கிருந்து உறவின ருக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப் பட்டது …

  4. மட்டக்களப்பில் படையினரின் இராணுவ நடவடிக்கை முறியடிப்பு சிறிலங்கா படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றர். இன்று ஞாhயிற்று கிழமை அதிகாலை கிரான் பாலத்தில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான புலிபாய்ந்தகல் பகுதிக்கு முன்னேற முயன்ற படையினர்க்கும் விடுதலை புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி படையினர்க்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சமரின் போது படையினர் பழைய இடங்களுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்து. இத்தாக்குதலின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலின் போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள பிரதேச செலயகத்தின் கட்டம் சேதமடைந்துள்…

  5. யாழ் நகரே பொழுது புலர்ந்தது பயத்தின் உச்சத்தில் உறைந்திருப்பதற்க்கு காரணமான வெள்ளைவான் கடத்தல் காரர்கள் மீது இளைஞர் குழு என்று நடாத்திய அதிரடி தாக்குதலில் வெள்ளைவான் கடத்தல் காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் வலிகாமம் மேற்க்கு பகுதியிலே வைத்த நேற்றிரவு இவர்கள் வெட்டி கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும். இன்று காலையே இவர்களது உயிரற்ற உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் யாழ் பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வலிகாமம் மேற்கு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் அளவெட்டி பகுதியில் வைத்து வெள்ளைவான் கும்பலோன்று இனம் …

    • 34 replies
    • 12.6k views
  6. பொத்துவில் கொலைகளுக்கு விசேட அதிரடிப்படையினர் தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு திரும்பவும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பினால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதென்கிறார் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல. இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; "விசேட அதிரடிப்படையினர் மீது குற்றங்களை சுமத்தும் ஹக்கீமின் பாதுகாப்பிற்கு அப்பிரிவினரையே வழங்குவது நல்லதொரு காரியமல்ல. ஏனென்றால், அவர்கள் மனதில் வேதனைகள் தோன்றலாம். பின்னர் அது பல்வேறு கோணங்களில் வெளிப்படலாம். அதனைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை…

  7. தமிழ் மக்களை சாகடிக்கவே யாழ். ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது: த.தே.கூ.. நடராஜா ரவிராஜ் குண்டுகளை வீசி தமிழ் மக்களைக் கொல்வதற்கு அப்பால் ஏ-9 வீதியை மூடியதன் மூலமும் தமிழ் மக்களை சாகடிக்க சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான் அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எனக்கு உறுதியான சந்தேகம் உள்ளது. நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயாராக இருப்பதாக நோர்வே அனுசரணையாளர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்முறை தெரிவித்துள்ளன…

  8. எம்.ஏ.எம்.நிலாம்- பொத்துவிலில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பதற்றநிலை இன்னமும் தணிந்தபாடாக இல்லை. சம்பவத்தையடுத்து முரண்பாடான தகவல்களே வெளியிடப்பட்டு வருகின்றன. இது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசு மீதான பலத்த சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தப் படுகொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும். யார் இதனைச் செய்தார்கள் என்பதைக் கண்டறிந்து முஸ்லிம் சமூகத்தின் சந்தேகத்தைப் போக்க வேண்டியதும் இதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கட்டாயக் கடப்பாடாகும். இந்தப் படுகொலைகள் தொடர்பாக அரசு தொடர்ந்து கூறிவரும் காரணங்களை முஸ்லிம் மக்கள் முற்று முழுதாகவே நிராகரித்துள்ளனர். ஆனால், அர…

  9. விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா. கூட்டத்துக்கு மகிந்தவுடன் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான செயலாளர் கொண்டலீசா றைசை நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, நோர்வே அனுசரணையுடனான அமைதிப் பேச்சுக்களை அமெரிக்கா உறுதியாக ஆதரிப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மங்களவிடம் கொண்டலீசா றைஸ் அறிவுறுத்தியுள்ளார். மூதூரில் பி…

  10. சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலே: கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாங்கேணி வழியாக இன்று வெள்ளிக்கிழமை வாகரை சென்றடைந்த லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலனை சந்தித்து கலந்துரையாடினார். லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க்கிடம் போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி எழிலன் விளக்கினார். மேலும் மக்களை இடம்பெயரச் செய்து அவர்கள் மீது அவலங்களை திணிக்கும் செய…

    • 14 replies
    • 2.5k views
  11. உணவுக்கையிருப்பானது சில வாரங்களுக்கு மட்டுமே: யாழ். அரச அதிபர் [சனிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2006, 17:38 ஈழம்] [தெ.சந்திரநாதன்] யாழ்ப்பாணத்துக்கு 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள யாழ். அரச அதிபர் கே.கணேஸ், சில வாரங்களுக்கு மட்டுமேதான் உணவு கையிருப்பு உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணத்துக்கு மாதாந்தம் 5,100 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் தேவை. தற்போது 6,399 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் 3 கப்பல்கள் மூலம் வந்தடைந்தன. இவை மொத்தம் 4 வாரங்களுக்குரியவைதான். 1,875 மெற்றிக் தொன்னுடனான லிவர்பூர்ல் கப்பலானது பருத்தித்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இ…

    • 0 replies
    • 617 views
  12. பாரிய சிக்கலின் விளிம்பில் குடாநாடு: அவலக்குரல் எழுப்புகிறது யாழ். ஐ.நா. அலுவலகம் [சனிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2006, 16:30 ஈழம்] [ம.சேரமான்] நாட்டின் தற்போதைய நிலைமையால் பாரிய சிக்கலின் விளிம்பில் யாழ்ப்பாணக் குடாநாடு நிற்கிறது என்று யாழ். ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. யுனிசெஃப் அமைப்பின் யாழ். பிரதிநிதி ஜூடித் ப்ரூனோ வெளியிட்டுள்ள அறிக்கை: உணவுப்பொருட்கள் விநியோகம் நிறுத்தம், 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 60 ஆயிரம் மக்கள் வெளியேற்றம், மின்சாரமின்மை, குடிநீர் இன்மை ஆகியவற்றால் யாழில் பாரிய ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது அலுவலகத்துக்கு கூட நாளாந்தம் ஒரு மணிநேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது. யாழில…

    • 0 replies
    • 794 views
  13. தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் சிறிலங்காவின் சதியே மூதூர் துண்டுப் பிரசுரம்: சி.எழிலன் சாடல் [சனிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2006, 19:14 ஈழம்] [திருமலை நிருபர்] மூதூரிலிருந்து முஸ்லிம்களை வெளியேறக் கோரி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரமானது தமிழ் மற்றும் முஸ்லிம் உறவைப்பிரிக்கும் சிறிலங்கா அரசின் சதிச் செயல் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சி.எழிலன் கூறியுள்ளதாவது: "மூதூரை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்" என தமிழீழ தாயக மீட்புப்படை என்ற பெயரில் பிரசுரம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அச்சமுற்று மூதூரிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறி வருகின்றனர். தமிழ் மற்றும…

    • 0 replies
    • 750 views
  14. ஞாயிறு 17-09-2006 18:03 மணி தமிழீழம் [நிலாமகன்] கிழக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர், விமானப் படையினரின் உதவியுடன் இக்கப்பலை தாக்கியழித்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இதனை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  15. :arrow: [url=http://www.thinakkural.com/news/2006/9/19/images/news/front-S.jpg]முகமாலை மோதல்களின் போது லொறிகள் சேதமடைந்த நிலையில்... கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முகமாலை பகுதியில் ஏற்பட்ட மோதல்களின் போது பொருட்களுடன் இராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ். வர்த்தகர்களுக்கு சொந்தமான லொறிகள் சேதமடைந்த நிலையிலும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையிலும் நிற்பதைக் காணலாம். ...

  16. மூதூர் மக்களின் நையப்புடைப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் விமல்வீரவன்ச இன்று காலை 11 மணியளவில் மூதூர் அல்ஹிலால் ஆண்கள் பாடசாலையில் ஜனாதிபதி செயலகத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் ஏற்பாடாகியிருந்தது. மாவிலாறு அணை மீட்புப் போரில் மூதூரில் பலியான 56 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் முகமாக ஜனாதிபதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ச தலைமையில் அமைச்சர் பௌசி, மேல்மாகாண ஆளுநர் அலரி மௌலானா, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிறேம்லால், மற்றும் அமீர் அலி, கூட்டுறவு அமைச்சர் மஜீத் ஏ மஜீத் மற்றும் விமல் வீரவன்ச, வடகிழக்கு மாகாண ஆளுனர் றியரத்ன றொஹான் விக்கிரம மற்றும் திருமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா ஆகியோர் சென்றிருந்தனர் அங்கு உரையாற்றிய விமல் …

  17. இலங்கை இராணுவ வீராங்கனையும் சகோதரியும் பலி! அவிசாவளையில் சம்பவம் அவிசாவளை, தெஹியோவிட்ட, தெபேகம பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தெஹியத்தக்கண்டி இராணுவ முகாமில் பணியாற்றும் பெண் இராணுவ வீரõங்கணையான நேகிலதா (வயது 28) மற்றும் அவரது சகோதரி சீதா பத்மினி (வயது 30) ஆகியோரே மேற்படி கைக்குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியானவர்களாவர். ஒரே அறையில் உறங்கிக்கொண்டிருந்த இவ்விருவர் மீதும் அங்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். கைக்குண்டு கட்டிலில் வீழ்ந்து வெடித்ததில் இர…

  18. சிவராம் எழுதிய கட்டுரை தற்காலத்திற்கும் பொருந்தும் இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபட…

  19. போர் தீவிரமாகப் போகும் நாளும் அதனை ஒத்திவைப்பதற்கான பிரயத்தனங்களும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலுமாக ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு முழுவதும் நாளாந்தம் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடையறாது நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் இந்த பயங்கரவாதத்தில் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களேயாவர். இதில் இருந்து இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் கண்டுவிட இயலும். இதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்கு எந்த விசாரணைக்குழுக்களும் தேவையில்லை. நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு பேர் என்ற கணக்கில் தமிழினக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது கடந்த திங்களன்று அம்பாறையில் பத்து முஸ்…

  20. சம்பூரில் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா திருகோணமலையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது தொடர்பாக சிறிலங்கா இராணுவ பேச்சாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப் படைத் தளபதி டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோர் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை சம்பூர் மற்றும் மாவிலாறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் திருகோணமலையின் தென்பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத்தினருடன் இக்குழு ஆராய்ந்தது. திருமலையின் பாதுகாப்பு நிலைமைகள் …

    • 0 replies
    • 1.3k views
  21. உயிர் பிழைத்த நபரை சந்தித்தனர் கண்காணிப்புக் குழுவினர் அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய படுகொலைச் சம்பவத்தில் உயிர்பிழைத்த நபரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் நேற்று சந்தித்தனர். அம்பாறை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரீம் மீரா மொகெய்தீன் என்கிற அந்நபருக்கு தொண்டையில் ஏற்பட்ட கடும் வெட்டுக்காயங்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் மீரா மொகெய்தீன் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியதையடுத்து கண்காணிப்புக் குழுவினர் அவரை கடந்த புதன்கிழமை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் அந்நபர…

    • 0 replies
    • 1.1k views
  22. மூதூரிலிருந்து முஸ்லிம்கள் உடன் வெளியேறுக - தாயக மண் மீட்புப் படை திருமலை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மூதூர் பகுதியிலிருந்து அனைத்து முஸ்லிம்களை வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை இன்று அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மூதூர்ப் பகுதிகளை கைப்பற்ற இருப்பதால் அனைத்து முஸ்லிங்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  23. லண்டனிலும் எல்லைமீறிய இலங்கை அரச பயங்கரவாதம் - பிரித்தானிய தமிழ் கவுன்சிலர் அமைப்பை தலமை தாங்கி தாயக பரப்புரையில் ஈடுபடும் பிரித்தானிய தமிழ் கவுன்சிலஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் தயா இடைக்காடருக்கும் இலங்கை அரசு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது. http://nitharsanam.com/

  24. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?

    • 9 replies
    • 2.6k views
  25. பொத்துவில் படுகொலை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாறை பொத்துவில் படுகொலை தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொள்கிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் நிகால் புஞ்சிகேவ கூறியதாவது: அம்பாறை மற்றும் கல்முனை பிரதேச மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் பொத்துவிலில் விசாரணைகளை நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு அலுவலகங்களுடன் இணைந்து முழு அளவில் விசாரணை நடத்தப்படும். இப்படுகொலை தொடர்பிலான சிறிலங்கா இராணுவம் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து வருகிறோம் http://www.eelampage.com/?cn=28916

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.