Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு பம்பலபிட்டியவில் சற்றுமுன் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. மேலதீக விபரம் தொடர்ந்து வரும்....

    • 12 replies
    • 3.3k views
  2. ஜேவிபியை அரசாங்கத்தில் இணைக்க இராணுவ நடவடிக்கை அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் புலிகளால் முறியடிப்பு. மாவிலாற்று பகுதியை கைப்பற்ற சிறீலங்கா அரசு மீண்டும் மேற் கொண்ட படை நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரிய மோதல்கள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் சிறீலங்கா அரசுடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பதிவு

  3. யுத்த நிறுத்த மீறல் குறித்த சிறீலங்கா அரசாங்கத்தின் ஒப்பிடு தவறானது-உல்வ் ஹென்றிக்சன். யுத்தநிறுத்தமீறல்சம்பந்தமா

  4. திருமலையில் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் இரு படையினர் பலி. திருமலையின் வடமுனை வெல்வேரி பகுதியில் இன்று காலை 8 மணியாவில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 படையினர் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  5. 'த(க)ண்ணீருக்கும் அப்பால்...!"-சபேசன் (அவுஸ்திரேலியா)- மாவிலாறு அணையைத் திறக்க வேண்டும் - என்ற ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்காவின் அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்கா அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மகிந்தபுர, செல்வநகர், 64 அவது மைல்கல் ஆகியவற்றில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மூதூர் இறங்குதுறைக் கடற்படை முகாம், கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மற்றும் பச்சன…

  6. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை மட்டுப்படுத்தப்படாத யுத்தமாக விரியும் ` அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு முழு யுத்தத்துக்குரிய அளவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்பினருமே தாங்கள் யுத்த நிறுத்த உடன் பாட்டைக் கடைப்பிடிக்க விரும்புகின்றார்கள் என்றே கூறி வருகின்றனர். அதுதான் அத்தரப்புகளின் ஒரே நிலைப்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள், நோர்வே அனு சரணைத் தரப்பினர் முதல் சர்வதேச சமூகத்தினர் வரை அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தரப்புகளின் செய்திகள், தகவல்கள், நம்பிக்கை கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விடுதலைப் புலி களின் நிலைப் பாட்டையும் இலங்கை அரசுத் தலைமை எடைபோடுகின்றது போலும். மோதல் நடைபெறு…

    • 0 replies
    • 1.9k views
  7. புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்கள அரசு மாவிலாறு அணையின் மதகுகளைத் திறக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இணக்கம் தெரிவித்திருந்ததை நிராகரித்து சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா அமைச்சரும் அரச பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு அளித்த நேர்காணல்: பயங்கரவாதிகள் அணையைத் திறப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீர்ப்பாசனத் திட்ட பொறியாளர்கள்தான் அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த வழியிலாவது நாங்கள் திறப்போம். நீர் ஒரு பேச்சுக்களுக்கான கருவியாக இருக்கக் கூடாது. நீர் விநியோதத் திட்டம் தொடர்பான எதனையும் நாங்கள் ஏற்கவில்லை என்றார் அவர். இராணுவப் பேச்ச…

  8. கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நன்றி : சங்கதி

    • 6 replies
    • 2.2k views
  9. BREAKING NEWS Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak [TamilNet, August 06, 2006 09:21 GMT] Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks. SLMM officials have taken cover on the ground from the attacks. Further details are not available at the moment h…

    • 55 replies
    • 7.7k views
  10. விமானத் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது: முன்னாள் சிறிலங்கா விமானப்படைத் தளபதி [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 21:09 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் விமானத் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மாவிலாறு நீருக்காகத்தான் இந்தத் தாக்குதல் என்பது உண்மையாக இருக்குமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உண்மையாக பேச்சு நடத்தி 48 மணிநேரத்தில் நீரைப் பெற்றிருக்க முடியும். நாம் இந்தப் போரைத் தவிர்த்திருகலாம். ஆனால் எதிர்பாரதவிதமாக இருதரப்பும் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தை போருக்குத் தள்ளியது ஜே.வி.பி.தான…

  11. நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் - உல்வ் ஹென்றிக்சன். நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. இன்று பி.பி.சி செய்தி சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிச்சன் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழித்துணையுடன் மாவிலாறு அணைக்கட்டைத் திறக்கச் சென்றபோது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டதன் மூலம் தவறான அணுமுறையை சிறீலங்கா அரசாங்கம் கையாண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குப் பதிலாக சிறிது நேரம் சிறீலங்கா அரசா…

  12. ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணும் விடயம் நேரத்தை வீணடிக்கும் செயல் - எரிக் சொல்ஹெய்ம். யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பும் பட்சத்தில் ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணுமாறு கூறுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சுமூகமான இணக்கப்பாடு காணப்பட்டதுடன் மாவிலாறு அணையைக் கைப்பற்றுவதற்கான வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்ததன் மூலம் சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் பெளயரின் பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் அர்த்தமற்றதாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தின…

  13. புலிகள் மீதான இந்தியத் தடை சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது: மு.கருணாநிதி [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 17:35 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடை விதிக்கப்பட்டது சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இது தொடர்பாக ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 1 ஆம் நாள் விடுதலைப் புலிகளை ஆதரித்து "புரட்சிகர இளைஞர் முன்னணி' என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியது. அந்த அமைப்பினர் விட…

  14. குடும்பம் குடும்பமாக தூக்கு - பெண்கள் கற்பளிப்பு - சிங்கள ராணுவம் அட்டகாசம் -குமுறும் அகதிகள்! http://thatstamil.oneindia.in/news/2006/08...8/06/lanka.html

    • 1 reply
    • 3.4k views
  15. திங்கள் 07-08-2006 18:06 மணி தமிழீழம் [நிலாமகன்] தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரும் ஹன்சன் பெளயரின் 2வது முயற்சியும் படுதோல்வி. மாவிலாற்று நீர்த் தடுப்பு விவகாரத்தை அடுத்து எழுந்துள்ள இராணுவ மோதல்கைள முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் நோர்வே எடுத்து இரண்டாவது முயற்றியும் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தங்கியிருந்த நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் இன்று காலை 10 மணியளவில் திருமலை சென்றுள்ளார். ஹன்சன் பெளயர் உலங்கு வானூர்த்தி மூலம் திருமலையில் சென்று இறங்கிய அடுத்த 5 நிமிடங்களில் சிறீலங்காப் படையினர் பல்குழல் எறிகணைத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நடத்தியுள்ளனர். சிறீலங்கா படையின் திருமலை…

    • 0 replies
    • 1k views
  16. [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [தாயக செய்தியாளர்] கண்டி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட உபுல் செனிவிரட்னவின் தீவிரமான செயற்பாடுகள் குறித்த ஒரு பார்வை: - அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கிளர்ச்சி முறியடிப்பு கொள்கைகளை கடைப்பிடித்து, பிரச்சனைக்குரிய மக்கள் மத்தியில் திகிலூட்டும் நாசகார செயல்களை கட்டவிழ்த்துவிடும் முகமாக சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார். - உளவியல் யுத்த முறையின் இன்னோர் பரிமாணத்தை செயற்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ள, பயங்கரவாத முறியடிப்பு யுத்த முறையில் கைதேர்ந்த சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் எனக் கூறப்படுப…

    • 0 replies
    • 746 views
  17. காட்டிக்கொடுப்பில் முஸ்லீம்கள் Witnesses told Reuters that local Muslims helped the military identify suspected rebel sympathizers. http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1

    • 0 replies
    • 1k views
  18. லண்டன் கருப்பு யூலை நிகழ்வினை கரும்புலிகள் தினம் எனப் பொய் சொல்லும் சிங்கள ஊடகம் ரீசேட்டுகளில் பின்லேடனின் பெயரை அனுமதியாத பிரிட்டன் பிரபாகரனின் பதாகை ஊர்வலத்துக்கு தாராள அனுமதி சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து அதனைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதி ஐக்கிய இராச்சியத்தில் அந்த அமைப்பைச் சட்டபூர்வமாக அந்நாட்டு அரசாங்கம் தடை செய்து சில வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்டநிலையிலும் அந்த நாட்டில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறைந்துவிடவில்லை. புலிகள் இயக்கத்தினர் தடை செய்யப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இயங்கி வந்தார்களோ அந்த முறையிலேயே இன்று வரை செயற்பட்டு வருவதுடன் அங்கு வாழும் தமிழ்மக்க…

  19. விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி! ஆகஸ்ட் 07, 2006 திரிகோணமலை: விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள் சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெ…

  20. புலிகளின் நிபந்தனையை ஏற்க ஹன்சன் பெளயருக்கு உரிமை இல்லை: சிறிலங்கா அரசாங்கம் puthinam Monday, 07 August 2006 தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயர் மற்றும் நோர்வேக் குழுவினருக்கு எதுவித உரிமையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் நோர்வே பிரதிநிதிகள் தெரிவித்திருக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவராமல் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு நோர்வேப் பிரதிநிதிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. நீர், அ…

  21. மாவிலாறு அணைக்கட்டை திறப்பதற்கு நாம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என புலிகள் தெரிவித்துள்ளனர். மனிதபிமான அடிப்படையிலேயே மாவிலாற்று நீரை திறந்து விட தேசியத் தலைவர் பணித்ததாகவும். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என நோர்வே தூதுவரே தெரிவித்தார் விடுதலைப் புலிகள் அணைக்கட்டை திறப்பதற்கு நிபந்தனைகள் விதித்ததாக பொய் பரப்புரை மேற் கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • 0 replies
    • 782 views
  22. மாவிலாறு பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கமே பொறுப்பு: கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு மாவிலாறு அணைக்கட்டு திறப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கம்தான் பொறுப்பு என்று இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலம் மாவிலாறு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது அல்லாத வேறு ஒரு திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்த நினைக்கிறது. ஆகையால் பேச்சுக்கள் முறிந்துள்ளன. அரசாங்கத்துக்கு நீர் பெறுவதில் விருப்பம் இல்லை. நாங்கள் அரசாங்கம் மீதுதான் குற்றம் சாட்டுகிறோம். விடுதலைப் புலிகளின் மனிதாபிமான நடவடிக்கையைச் சீர்குலைத்த பொறுப்பு …

  23. படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…

  24. கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.